TNTET 8 TH STD TAMIL QUESTION BANK UNIT-4

  8. ஆம் வகுப்பு - தமிழ்

ஒரு மதிப்பெண் வினாவிடைகள்

இயல்-4  

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக

1. முரலும் என்ற சொல்லின் பொருள்

அ) பயம் தரும் ஆ) ஓடும் இ) முழங்கும் ஈ) அதிரும்

2. பழவேய் என்ற சொல்லின் பொருள்

அ) பழ மூங்கில் ஆ) இனிய மூங்கில் இ) வளைந்த மூங்கில் ஈ) முதிர்ந்த மூங்கில்

3. திருக்கேதாரத்தில் சுந்தரர் குறிப்பிடும் இசைக்கருவி

அ) யாழ் ஆ) பறை இ) முகவீணை ஈ) முழவு

4. தேவாரம் பாடியவர்கள் எத்தனை பேர்?

அ) 3 ஆ) 4 இ) 5 ஈ) 6

5. திருக்கேதாரம் என்று அழைக்கப்படும் தலம்

அ) திருக்கோட்டியூர் ஆ) திருவண்ணாமலை இ) ஸ்ரீ சைலம் ஈ) கேதார்நாத்

6. நம்பியாரூரார், தம்பிரான் தோழர் என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர்

அ) அப்பர் ஆ) ஞானசம்பந்தர் இ)  மாணிக்கவாசகர் ஈ) சுந்தரர்

7. திருமுறைகள் மொத்தம் எத்தனை?

அ) 3 ஆ) 4 இ) 12 ஈ) 6

8. சுந்தரர் பாடிய தேவாரம் எந்த திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?

அ) நான்காம் ஆ) ஐந்தாம் இ) ஆறாம் ஈ) ஏழாம்

9. திருத்தொண்டத் தொகையை இயற்றியவர்

அ) அப்பர் ஆ) ஞானசம்பந்தர் இ)  மாணிக்கவாசகர் ஈ) சுந்தரர்

10. பெரிய புராணத்தை இயற்றியவர்

அ) அப்பர் ஆ) சேக்கிழார் இ)  மாணிக்கவாசகர் ஈ) சுந்தரர்

11. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு

அ) மூவருலா ஆ) நாலாயிரத் திவ்ய பிரபந்தம் இ) தேவாரம் ஈ)  திருவாசகம்

12. பன்னிரு திருமுறைகளை தொகுத்தவர் யார்?

அ) நாதமுனி அடிகள் ஆ) சேக்கிழார் இ)  நம்பியாண்டார் நம்பி ஈ) கம்பர்

13. நான்கு சீர்களைக் கொண்ட அடி --------எனப்படும்.

அ) குறளடி ஆ) சிந்தடி இ) அளவடி ஈ) நெடிலடி

14. தமிழ்நாட்டில் எந்த ஊரில் அகழாய்வின்போது முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன?

அ) சின்னமனூர் ஆ) ஆதிச்சநல்லூர் இ)  செம்பியன் கண்டியூர் ஈ) கீழடி

15. தமிழ்நாட்டில் கலை அழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்

அ) சின்னமனூர் ஆ) ஆதிச்சநல்லூர் இ)  செம்பியன் கண்டியூர் ஈ) கீழடி

16. தமிழ்நாட்டில் ஏராளமான சுடுமண் பொருட்கள் கிடைத்துள்ள இடம்

அ) சின்னமனூர் ஆ) ஆதிச்சநல்லூர் இ)  செம்பியன் கண்டியூர் ஈ) கீழடி

17. மண்பாண்டக் கலையின் இன்னொரு வளர்ச்சி நிலை

அ) பொம்மை செய்தல் ஆ) விவசாயம் இ) பானை செய்தல் ஈ) சுடுமண் சிற்பக்கலை

18. டெரகோட்டா என்று அழைக்கப்படுவது

அ) பொம்மை செய்தல் ஆ) விவசாயம் இ) பானை செய்தல் ஈ) சுடுமண் சிற்பக்கலை

19. கைவினைப் பொருட்கள் செய்ய ஏற்ற மூங்கில் வகை

அ) கல் மூங்கில் ஆ) மலை மூங்கில் இ) கூட்டு மூங்கில் ஈ) தனி மூங்கில்

20. குழந்தைகளை படுக்க வைக்க பயன்படும் பாய்வகை

அ) பட்டுப்பாய் ஆ)  திண்ணைப்பாய் இ) தடுக்குப்பாய் ஈ)  தொழுகைப் பாய்

21. திருமணத்துக்கு பயன்படுத்தப்படும் காய் வகை

அ) பட்டுப்பாய் ஆ)  திண்ணைப்பாய் இ) தடுக்குப்பாய் ஈ)  தொழுகைப் பாய்

22. பாயின் பயன்பாட்டைப்  பற்றி கூறிய சங்க இலக்கியம்

அ) கலித்தொகை ஆ) அகநானூறு இ)  புறநானூறு ஈ) நற்றிணை

23. "கூம்போடு மீப்பாய் களையாது" என்று குறிப்பிடும் நூல்

அ) கலித்தொகை ஆ) அகநானூறு இ)  புறநானூறு ஈ) நற்றிணை

24. பிரம்பு என்பது -----வகை தாவரம்

அ) செடி ஆ) கொடி இ) மூங்கில் ஈ) கட்டை

25. இசைக்கருவிகளே இசைத்து பாடல் பாடுவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

அ) கூத்தர் ஆ) விரலியர் இ) பாணர் ஈ) பொருநர்

26. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்க படுபவை எக்கருவிகள்?

அ) தோல் கருவிகள் ஆ) தொலைத்தருவிகள் இ) நரம்புக் கருவிகள் ஈ) கஞ்சக் கருவிகள்

27. இடை சுருங்கிய ஒரு கைப்பறையே ------ஆகும்

அ) பறை ஆ) உடுக்கை இ) முரசு ஈ) யாழ்

28. பெரிய உடுக்கையை-----என்றும், சிறிய உடுக்கையை-----என்றும் அழைப்பர்

அ) தவண்டை, குடுகுடுப்பை ஆ) குடுகுடுப்பை, தவண்டை

இ) தவண்டை, மேளம் ஈ) மேளம், தவண்டை

29. ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச் சேர்ந்தது

அ) உடுக்கை ஆ) மணமுழா இ) துடிமுழா ஈ) குடமுழா

30. பஞ்ச மகா சத்தம் என்று அழைக்கப்படும் இசைக்கருவி

அ) உடுக்கை ஆ) மணமுழா இ) துடிமுழா ஈ) குடமுழா

31. மூங்கில் மட்டுமின்றி சந்தனம் செங்காளி கருங்காலி ஆகிய மரங்களாலும் செய்யப்படுவது

அ) உடுக்கை ஆ) நாகசுரம் இ) குழல் ஈ) குடமுழா

32. கொம்பு ஒரு---- கருவி

அ) துளை ஆ) காற்று இ) நரம்பு ஈ) தந்தி

33. சிங்க நாதம் எக்காலம் துத்தரி போன்றன------ கருவிகள்

அ) துளை ஆ) காற்று இ) நரம்பு ஈ) தந்தி

34. இலக்கியங்களில் பணிலம் என்று குறிப்பிடப்படும் இசைக்கருவி

அ) பறை ஆ) யாழ் இ) சங்கு ஈ) தவில்

35. சாலரா என்ற இசைக்கருவி -------எனவும் அழைக்கப்படுகிறது

அ) தூண்டில் ஆ) பாண்டில் இ) துஞ்ச கருவி ஈ) தோல் கருவி

36. கோவில் வழிபாட்டின் போதும் இறுதி ஊர்வலத்தின் போதும் இசைக்கப்படும் இசைக்கருவி

அ) யாகண்டி ஆ) சோகண்டி இ) சேகண்டி ஈ)  பாகண்டி

37. பலாமரத்தினால் செய்யப்பட்டு விலங்கு தோலினால் கட்டப்படும் கருவி

அ) மிதிலை ஆ) மழலை இ) கயிலை ஈ) திமிலை

38. பொருந்தாத கருத்தைத் தேர்ந்தெடுக்க

அ) திமிலை என்ற இசைக் கருவி பாணி என்று அழைக்கப்படும்

ஆ) சேகண்டி என்பது ஒரு தோல் கருவியாகும்

இ) சாலரா பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்படும்

ஈ) பறை ஒரு தோல் கருவியாகும்

39. முதற்கருவி என்று அழைக்கப்படும் இசைக்கருவி

அ) பறை ஆ) முரசு இ) முழவு ஈ) மத்தளம்

40. தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டில் எக்கருவி இசைக்கப்பட்டதற்கான சான்று உள்ளது?

அ) பறை ஆ) முரசு இ) முழவு ஈ) மத்தளம்

41. எத்தனை வகை முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது

அ) 12 ஆ) 24 இ) 36 ஈ) 48

42. எந்த இசைக் கருவியின் வடிவமே மெல்ல மெல்ல உருமாறி வீணையாக ஆனது என்பர்?

அ) யாழ் ஆ) முழவு இ) பறை ஈ) சாலரா

43. பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வடக்கத்தில் இருந்ததாக கூறப்படும் வீணை

அ) பரிவாதினி ஆ)  மதிவதனி இ)  பரிவர்த்தனி ஈ)  முகதவாதினி

44. சொல்லில் பொருள் முற்றுப்பெறுவது

அ) முற்றெச்சம் ஆ)  வினைமுற்று இ) வினையெச்சம் ஈ) பெயரெச்சம்

45. எச்சம் எத்தனை வகைப்படும்?

அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஐந்து

46. படித்த மாணவன் என்பது.....

அ) முற்றெச்சம் ஆ)  வினைமுற்று இ) வினையெச்சம் ஈ) பெயரெச்சம்

47. எழுதிய கடிதம் என்பது ----

அ) வினைமுற்று ஆ) தெரிநிலை பெயரெச்சம்

இ) குறிப்பு பெயரெச்சம் ஈ) குறிப்பு வினையெச்சம்

48. வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சம்

அ) முற்றெச்சம் ஆ)  வினையெச்சம் இ) பெயரெச்சம் ஈ)  குறிப்பெச்சம்

49. மெல்ல வந்தான் , எழுதி வந்தான் என்பன முறையே

அ) தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம்

ஆ) குறிப்பு வினையெச்சம், தெரிநிலை வினையெச்சம்

இ)  தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம்

ஈ) குறிப்புப் பெயரெச்சம்,  தெரிலைப் பெயரெச்சம்

50. பின்வருவனவற்றுள் முற்றெச்சத்தை தேர்ந்தெடுக்க

அ) பாடி முடித்தான் ஆ) பாடிய பாடகர் இ) படித்தாள் தேர்ச்சி பெற்றாள் ஈ) படித்து வந்தாள்

51. Rite என்பதன் தமிழாக்கம்

அ) உரிமை ஆ) புரட்சி இ) சடங்கு ஈ) நிகழ்ச்சி

52. காட்டிலிருந்து வந்த_____ கரும்பைத்தின்றன.

அ) முகில்கள்   ஆ) முழவுகள்  இ) வேழங்கள்   ஈ) வேய்கள்

53. ‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) கனகச் + சுனை ஆ) கனக + சுனை இ) கனகம் + சுனை  )கனம் + சுனை

54. முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) முழவுதிர   ஆ) முழவுதிரை   இ) முழவதிர   ஈ) முழவுஅதிர

55. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை______.

அ) கல்வெட்டுகள்  ஆ) செப்பேடுகள்   இ) பனையோலைகள்   ஈ) மண்பாண்டங்கள்

56. பானை______ ஒரு சிறந்தகலையாகும்.

அ) செய்தல்   ஆ) வனைதல்   இ) முடைதல்   ஈ) சுடுதல்

57. ‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) மட்டு + மல்ல  ஆ) மட்டம் + அல்ல  இ) மட்டு + அல்ல  ஈ) மட்டும் + அல்ல

58. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) கயிற்றுக்கட்டில்  ஆ) கயிர்க்கட்டில் இ) கயிறுக்கட்டில் ஈ) கயிற்றுகட்டில்

59. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும்.

அ) முற்று ஆ) எச்சம் இ) முற்றெச்சம் ஈ) வினையெச்சம்

60. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் _____.

அ) படித்து ஆ) எழுதி இ) வந்து ஈ) பார்த்த

61. குறிப்பு வினையெச்சம் _____ வெளிப்படை யாகக் காட்டாது.

 அ) காலத்தை ஆ) வினையை இ) பண்பினை ஈ) பெயரை

பதிவிறக்கம் செய்ய

வினாக்களை மட்டும் அறிய

👉 இயல்-1 வினா விடைகள்

👉 இயல்-2 வினா விடைகள்

👉 இயல்-3 வினா விடைகள்

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை