10 TH STD TAMIL BOOK INSIDE 5 MARK QUESTION & ANSWER

 

10.ஆம் வகுப்பு தமிழ்

ஐந்து மதிப்பெண் கூடுதல் வினாவிடைகள்

1. நாம் பேசும் மொழியில் அதிகமான சொற்களை கையாள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து விவரித்து எழுதுக

நாம் பேசும் மொழியில் அதிகமான சொற்களை கையாள்வதனால் ஏற்படும் பயன்கள்:

1. தெளிவான தொடர்பு:

பல சொற்களைத் தெரிந்து வைத்திருப்பதன் மூலம், நம் எண்ணங்களை மிகவும் தெளிவாகவும், சரியாகவும் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க முடியும்.ஒரே கருத்தை பல்வேறு முறைகளில் கூற இயலும்.

2. உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்துதல்:

உணர்வுகளுக்கேற்ப சரியான சொற்களை பயன்படுத்த முடிவதால், உரையாடலில் நுணுக்கம் பெருகும்.இது மனநிலை, உணர்ச்சி ஆகியவற்றை மற்றவர்களுக்கு உணர்த்த உதவுகிறது.

3. படைப்பு திறன் மேம்பாடு:

·        கற்பனை மற்றும் படைப்பாற்றல் வளர்ச்சி பெறுகிறது.

·        கவிதை, கட்டுரை, நாடகம் போன்ற இலக்கிய வடிவங்களில் எழுதுவதற்கு வசதி ஏற்படுகிறது.

4. மற்றவர்களை ஈர்க்கும் திறன்:

சிறந்த சொற்களை பயன்படுத்தி உரையாடினால், அது மற்றவர்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தும்.

பேச்சுத் திறன் வளர்ந்து, நம்பிக்கை பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

5. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு துணை:

·        எந்தவொரு துறையிலும் விளக்கம் தருவதற்கு சரியான சொற்கள் தேவைப்படும்.

·        வசதியான சொல் தேர்வால், அதைப் புரிந்து கொள்வது எளிமையாகும்.

6. மொழிப் புலமை விரிவடைதல்:

·        சொற்கள் அதிகமாக தெரிந்தால், மொழியின் செம்மை, இசை மற்றும் வரலாற்றுத் தன்மையை விரிவாக அறியலாம்.

·        மொழியைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் இது துணையாகும்.

2. பசித்தவருக்கு உணவிடுதல் என்ற அறச்செயலையும் விருந்தினருக்கு உணவிடுதல் என்ற பண்பாட்டுச் செயலையும் ஒப்பிட்டு எழுதுக

. பசித்தவருக்கு உணவிடுதல் (அறச்செயல்)

·        இது ஒரு மனிதாபிமான அடிப்படையிலான செயல்.

·        ஒருவரின் அடிப்படைத் தேவையை (பசி) நிறைவு செய்வதே இதன் நோக்கம்.

·        பயனாளி: பசியால் வாடுபவர்கள், வறியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் உணவுக்கு வழியில்லாதவர்கள்.

·        நோக்கம்: "பசிப்பிணி" என்னும் நோயைத் தீர்ப்பது. இது "உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே" என்ற புறநானூற்று வரிகளுக்கேற்ப உயிரைக் காக்கும் செயலாகக் கருதப்படுகிறது.

·        மனநிலை: இதில் இரக்கம் மற்றும் ஈகை (கொடை) முதன்மையாக இருக்கும். கைம்மாறு கருதாத உயர்ந்த அறமாக இது போற்றப்படுகிறது.

. விருந்தினருக்கு உணவிடுதல் (பண்பாட்டுச் செயல்)

·        இது ஒரு சமூக உறவு மற்றும் ஒழுக்கம் சார்ந்த செயல்.

·        இது தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த அடையாளம்.

·        பயனாளி: உறவினர்கள் மட்டுமல்லாது, நம் இல்லம் தேடி வரும் புதியவர்கள் (அன்னியர்கள்). சங்க இலக்கியத்தில் "விருந்து" என்பது புதுமையைக் குறிக்கும்.

·        நோக்கம்: உறவை வளர்ப்பது, வந்தவரை மகிழ்விப்பது மற்றும் இல்லறக் கடமையை நிறைவேற்றுவது.

·        மனநிலை: இதில் மகிழ்ச்சி மற்றும் உபசரிப்பு முதன்மையாக இருக்கும். இன்முகத்துடன் (முகமலர்ச்சியுடன்) வரவேற்பது இதில் மிக முக்கியம்.

3. ஆள்வினை உடைமை பற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக

·        ஒரு செயல் முடிப்பதற்கு இயலாதது என்று எண்ணிச் சோறு சோர்வு அடையாதெ இருக்க வேண்டும் நற்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்

·        விடாமுயற்சி என்ற உயர் பண்பு கொண்டவர்களால் தான் பிறருக்கு உதவுதல் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்

·        முயற்சி செய்தால் ஒருவருக்கு செல்வம் பெருகும் முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்

·        ஐம்புலன்களில் ஏதேனும் குறை இருப்பினும் அது இழிவன்று: அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாததே இழிவாகும்.

·        சோர்விலாவது முயற்சி செய்வோர் செய்கின்ற செயலுக்கு இடையூறாக வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றி அடைவர்.

4. பண்டைத் தமிழரின் திணை நிலை வாழ்க்கை முறையையும், இன்றைய தமிழரின் வாழ்க்கை முறையும் ஒப்பிட்டு கட்டுரை வடிவில் எழுதுக

பண்டைத் தமிழரின் திணை நிலை வாழ்க்கை முறை:

பண்டைத் தமிழர்கள் நிலப்பரப்பை ஐந்து திணைகளாகப் பிரித்தனர். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன. இவ்வகைப்பாடு தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியம் ஆகிய நூல்களில் விளக்கப்பட்டுள்ளது.

·        குறிஞ்சி நிலத்தில் மலைப்பகுதி மக்கள் வேட்டையாடி வாழ்ந்தனர்.

·        முல்லை நிலத்தில் மாடுபிடிப்பு வாழ்க்கை நிலவியது.

·        மருத நிலத்தில் விவசாயம் செழித்தது.

·        நெய்தல் நிலத்தில் கடல் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ளப்பட்டன.

·        பாலை நிலத்தில் வறண்ட சூழலில் வாழ்வு அமைந்தது.

இவ்வாறு இயற்கைச் சூழலுக்கு ஏற்ப தொழில், உணவு, உடை, வழிபாடு, பண்பாடு அனைத்தும் அமைந்திருந்தன. இயற்கைத் தெய்வங்களை வணங்கினர். சமூக ஒற்றுமை, விருந்தோம்பல், வீர உணர்வு போன்ற பண்புகள் அவர்களின் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருந்தன.

இன்றைய தமிழரின் வாழ்க்கை முறை:

        இன்றைய தமிழர்கள் நகர வாழ்க்கையை அதிகம் மேற்கொள்கின்றனர். விவசாயம்  மட்டுமல்லாது கல்வி, தொழில், வணிகம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வாழ்க்கை எளிதாகியுள்ளது.

·        குடும்ப அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

·        கூட்டு குடும்ப முறை குறைந்து தனிக்குடும்ப முறை அதிகரித்துள்ளது.

·        இயற்கை சார்ந்த வாழ்க்கை முறை குறைந்து, இயந்திர வாழ்க்கை அதிகரித்துள்ளது.

·        ஆனால் கல்வி வளர்ச்சி, பெண்களின் முன்னேற்றம், உலகளாவிய தொடர்புகள் போன்ற பல நன்மைகளும் இன்றைய வாழ்க்கையில் காணப்படுகின்றன.

5. பொருள் செயல்வகை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துக்களை விளக்குக

·        ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை.

·        முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த பொருள் ஒருவருக்கு அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும்.

·        மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக்கொள்ளாமல் புறந்தள்ள வேண்டும்.

·        தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது, மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப்போரைக் காண்பது போன்றது.

·        ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும்; அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு இல்லை.

 பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்


You have to wait 10 seconds.

Generating Download Link...

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை