முதல்
இடைப்பருவத்தேர்வு 2026,
இராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம்,நாகை, திருவாரூர்,
மயிலாடுதுறை,கடலூர்
10.ஆம் வகுப்பு தமிழ்-உத்தேச விடைக்குறிப்புகள்
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 7X1=7
|
வி. எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1.
|
ஈ) சருகும் சண்டும் |
1 |
|
2.
|
ஆ)
எழுவாய்த்தொடர் |
1 |
|
3.
|
இ)
எம்+தமிழ்+நா |
1 |
|
4.
|
ஆ)
மணிப்பெயர் வகை |
1 |
|
5.
|
அ) வேற்றுமை உருபு |
1 |
|
6.
|
ஈ)
பாடல் , கேட்டவர் |
1 |
|
7.
|
முத்தையா |
1 |
|
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு விடையளி 4X2=8 |
||
|
8 |
சிலப்பதிகாரம்,
மணிமேகலை |
2 |
|
9 |
அ. கொடுப்பதற்கு கோடு இடக் கூடாது ஆ, விதியால் வீதிக்கு வந்தான் |
2 |
|
10 |
'சிரித்துச் சிரித்துப் பேசினார்' என்பது
அடுக்குத்தொடராகும் |
2 |
|
11 |
·
பல கை என்று வந்தபோது
கையைக் குறித்தது. ·
பலகை என்று வந்தபோது மரப்பலகையைக்
குறித்தது. ·
தனித்தும், தொடர்ந்தும்
வெவ்வேறு பொருளைக் குறித்ததால் பொதுமொழி ஆனது. |
2 |
|
12 |
·
செந்நெல் ·
வெண்ணெல் ·
கார்நெல் ·
சம்பா மற்றும்
உள்வகைகள் ·
மட்டை |
2 |
|
13 |
அ.
மெய்யெழுத்து ஆ. புயல் |
2 |
|
மனப்பாடப்பாடல் 1X3=3 |
||
|
14 |
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே! |
2 |
|
எவையேனும் 3 வினாக்களுக்கு
விடையளிக்க
3X3=9 |
||
|
15 |
ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழி |
3 |
|
16 |
ü வானமும்,
உருவமில்லாக் காற்றும்,
பூமியும், நெருப்பும்,
நீரும் ஆகிய ஐம்பூதங்களும் உயிர்கள் உருவாகி வளர
முதன்மையானவை ஆகும். ü பூமி
உருவாகி, ஊழிக்காலம்
தொடர்ந்த பின்னர்ப் இப்பூமி குளிரும்படியாகத் தொடர்ந்த மழையால் வெள்ளத்தில்
மூழ்கியது. ü மீண்டும்
மீண்டும் வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில்,
உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றி,
அவை நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது |
3 |
|
17 |
அ) நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன் உ)
பைங்கூழ்-பைங்கூழ் அழகானது |
3 |
|
18 |
அ. ஒருவரிடம்
அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை
சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய
இதயத்தைச் சென்றடைகிறது – நெல்சன் மண்டேலா ஆ. மொழி
என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே
அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே
செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் – ரீடா
மேக் ப்ரெளன் |
3 |
|
பகுதி-4
|
|||
|
19 |
வள்ளுவன்
வாக்கில் ஒன்றைச் சொன்னது! காலம்
யாவும் கடந்து நின்றது! சிந்தனைச்
சிறகை விரித்துப்பார் என்றது! அறிவு
சிறக்க அறிந்துகொள் என்றது! என்னையும்
கவிஞனாக்க துணிந்து நின்றது! இது
வெறும் காட்சி மட்டுமன்று! என்
மனதைக் கவினுற மாற்றிய மந்திரக்கோல்! ( மாதிரி
கவிதை) |
5 |
|
|
20 |
(மாதிரி) தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்
சேர்க்கை
விண்ணப்பப் படிவம் 1. மாணவரின் பெயர் : த. கந்திற்பாவை 2. பாலினம் : பெண் 3. பிறந்த நாள் : XX – XX - XXXX 4. தேசிய இனம் : இந்தியன் 5. இரத்த வகை : ஓ+ 6. உயரம் மற்றும் எடை : 150 செ.மீ & 50 கி.கி 7. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : தமிழ்க்கோ 8. வீட்டு முகவரி :
22 , பாரதியார் தெரு,
காஞ்சிபுரம்-1 9. தொலைபேசி / அலைபேசி எண் : XXXX XXXX12 10. இறுதியாகப் படித்து முடித்த வகுப்பு : பத்தாம் வகுப்பு 11. பள்ளியின் முகவரி :
அரசு மேனிலைப்பள்ளி,
காஞ்சிபுரம் 12. சேர விரும்பும் விளையாட்டு : வளைகோல் பந்தாட்டம் த. கந்திற்பாவை
மாணவரின் கையெழுத்து
தமிழ்க்கோ பெற்றோர்/பாதுகாவலர் கையெழுத்து இடம்:
காஞ்சிபுரம் நாள்:
20-03-2026 |
5 |
|
|
21 அ |
வாழ்த்து மடல் நெல்லை, 26-12-2021. அன்புள்ள
நண்பா/தோழி,
நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் மாவட்ட அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத்
தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி
அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு, உனது அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல்
முகவரி: க. இளவேந்தன், 86, மருத்துவர் நகர், சேலம்-2. |
5 |
|
|
ஆ |
பொது நூலகத்துறை
இயக்குநருக்குக் கடிதம் பூம்பாறை. 10.07.2025 அனுப்புநர் செ.தமிழரசன், 50,
அன்னை இல்லம், காந்தி தெரு, பூம்பாறை, திண்டுக்கல் மாவட்டம் - 625 001. பெறுநர் பொது நூலக இயக்குநர் அவர்கள், தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம், சென்னை 600 002. ஐயா, பொருள்:
நூலக வசதி வேண்டுதல் சார்பு. வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தை
உருவாக்கும் தங்கள் நூலகத்துறைக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் 1000 குடும்பங்களும் 2800 மக்களும் வசித்து
வருகின்றனர். மேலும், எங்கள் கிராமத்தில் உயர்கல்வி
முடித்து அரசு போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர்.
நாங்கள் தேர்விற்குப் படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் சென்று
வருகின்றோம். எங்கள் கிராமத்தில் கிளை நூலகம்
அமைத்தால் எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப் போன்று தேர்வுகளுக்குப்
படிப்பவர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும். எனவே, எங்கள்
கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன்
கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள, செ.தமிழரசன். உறைமேல்
முகவரி பெறுநர் பொது
நூலக இயக்குநர் அவர்கள், தமிழ்நாடு
பொது நூலக இயக்குநரகம், சென்னை
600
002 |
5 |
|
|
ஏதேனும் ஒரு வினாவிற்கு
மட்டும் விடையளிக்க 1X8=8 |
|||
|
24 அ |
தலைப்பு : சான்றோர் வளர்த்த தமிழ் முன்னுரை: “தமிழே!
நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே!" என்று கூறும் வண்ணம் பல
செந்தமிழ்ப் புலவர்கள் பலவகை இலக்கியங்களை,பல்வேறு
வடிவங்களில் படைத்து, தமிழன்னைக்கு அணியாகச்
சூட்டியுள்ளனர்.தமிழ் இன்றளவிலும் கன்னித்தமிழாய் திகழ்வதற்கு அதுவும் ஒரு
பெருங்காரணமாகும்.சான்றோர்களாலும், புலவர்களாலும் வளர்ந்த
விதம் பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம். பிள்ளைத்தமிழ்: குழவி மருங்கினும் கிழவதாகும் - தொல்காப்பியர் கடவுளையோ, அரசனையோ அல்லது மக்களில் சிறந்தவர் ஒருவரையோ குழந்தையாக எண்ணி, பத்துப் பருவங்கள் அமையப் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும்.
பருவத்திற்கு பத்து பாடல்களாக, 100 பாடல்கள் அமையப்
பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் குலோத்துங்கன்
பிள்ளைத்தமிழ் காலத்தால் முற்பட்டது. சதகம்: நூறு பாடல்கள் கொண்ட
நூலுக்குச் சதகம் என்று பெயர்.மாணிக்கவாசகர் பாடிய திருச்சதகமே முதல் சதக
நூலாகும். இது உள்ளத்தை உருக்கும் பக்தி பாக்களால் அமைந்தது. பழமொழிகள், நீதி நெறி முறைகள், இறைவனை போற்றிப் பாடும்
கருத்துக்கள் போன்றவை சதகத்தில் சிறப்புகளாகும். பரணி: "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி" என்று இலக்கண விளக்கப்
பாட்டியல் என்ற நூல் பரணிக்கு இலக்கணம் தருகிறது.போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து
பாடுவதே பரணி ஆகும். போரில் தோற்றவர் பெயர் அல்லது அவரது நாட்டின் பெயர்
நூலுக்குச் சூட்டப்படும். செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி காலத்தால்
முற்பட்டதாகும். அந்தாதி: அந்தம்+ ஆதி = அந்தாதி. ஒரு
பாடலில் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று, அடுத்த பாடலில் முதலில் வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி
எனப்படும்.அந்தாதி விருத்தம் என்னும் யாப்பு வடிவில் பாடப்படும். காரைக்கால்
அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி முதல் அந்தாதி நூலாகும். கோவை: பாடலுக்கும், அடுத்த பாடலுக்கும் நிகழ்ச்சி வரிசை அமையும் கதை போல அமைத்து எழுதுவது
கோவை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாண்டிக்கோவை எனும் நூலே முதல் கோவை
நூலாகும். முடிவுரை: "வீறுடை செம்மொழி
தமிழ்மொழி" என்ற பெருஞ்சித்திரனாரின் கூற்று முற்றிலும் உண்மையாகும். மேற்கூறியவாறு,
பல்வகை இலக்கியங்கள் சான்றோர் பலரால் பாங்காய் வளர்ந்தன.
சான்றோர்கள் தமிழை வளர்ப்பதில் தனி ஈடுபாடு கொண்டு செயல்பட்டனர். இத்தகைய
சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியைக் காப்பது நம் தலையாய கடமையாகும் |
8 |
|
|
ஆ |
நாட்டுவளமும் சொல்வளமும் முன்னுரை: 'நாடும்
மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார்
மகாகவி பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ், என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு
சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும்
உண்டென்று. விடை பகர்கிறது, தமிழ்ச்சொல்வளம். தேவநேயப்பாவாணர்: தமிழ்
மொழியின் பழமையும் செம்மையையும் ஆய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார்.
தமிழ்ச் சொல்வளம் பற்றிய அவரது கருத்துகளும் விளக்கங்களும் தமிழ் மொழி மீதான
பெருமிதத்தை மிகுதிப்படுத்துகின்றன. ஒரு நாட்டின் வளமும், அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் மொழி ஞாயிறு
தேவநேய பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது. சொல்வளத்திற்கான சில சான்றுகள்: ü ஆங்கிலத்தில்
இலையைக் குறிக்க “LEAF”
என்ற ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் தமிழிலோ இலையின் வன்மை,
மென்மையைக் கருத்தில் கொண்டு தாள்,
ஓலை தோகை ,இலை
என பலவகைப் பெயர்களாக அழைக்கப்படுகின்றன. ü விளை
பொருட்களின் மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு. ü பயிர்களின்
அடிப்பகுதி,
கிளைப் பகுதி,
காய், கனி,
தோல்,
மணி,
இளம் பயிர் முதலானவற்றை குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் உள்ளது
குறிப்பிடத்தக்கது. ü செந்நெல்,
வெண்ணெல்,
கார்நெல்,
சம்பா,
மட்டை என எண்ணற்ற நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன.
இவை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் விளையாதது குறிப்பிடத்தக்கது. ü தமிழ்நாட்டைத்
தவிர வேறு எங்கும் விளையாத சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி
இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும் முடிவுரை:
சொல்வளம் நிறைந்த மொழியானது அது பயன்படுத்தப்படும் நாட்டின்
பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன் பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு
செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும் உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல்
வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி அறியலாம் |
8 |
|
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி