9 TH STD TAMIL FIRST MID TERM TEST QUESTION PAPER & ANSWER KEY


வினாத்தாளைப் பதிவிறக்க

இராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம்,நாகை, திருவாரூர், மயிலாடுதுறை,கடலூர்

9.ஆம் வகுப்பு தமிழ்-உத்தேச விடைக்குறிப்புகள்

சரியான விடையைத் தேர்வு செய்க                                                                                                            6X1=6

வி. எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.         

) சிற்றிலக்கியம்

1

2.        

) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1

3.        

இ) மலையாளம்

1

4.        

ஈ) ஓடி வா ஓடி வா

1

5.        

) பக்கம்

1

6.        

ஈ) புலரி

1

                                                                                  

ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                                                                          5X2=10

7

இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு கண்ணி என்று பெயர்.

2

8

தென் திராவிட மொழிக்குடும்பம்

2

9

தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு

2

10

''காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக்

 காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!"

2

11

·        அளபெடை இரண்டு வகைப்படும். 

·        அவை: உயிரளபெடை, ஒற்றளபெடை.

2

12

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

2

13

நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.

2

 

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க                                                                                         5X2=10

14

அ) மொழி ஆராய்ச்சி ஆ) பன்மொழியாளர்கள்

2

15

அ) முதுமையில் இன்பம்   ஆ) இடமெல்லாம் சிறப்பு

2

16

 அ) விரும்பாமை  ஆ) சங்கு, வானம்பாடி

2

17

) சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

) மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.

2

18

அ) திகழ்கிறது  ஆ) சென்றனர் , செல்கின்றனர்

2

             

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி                                                                             2X3=6

19

·        திராவிட மொழிகளைத் தென் திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்றாகப் பிரிப்பர்.

·        அவற்றுள் சிறந்த மொழிகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு, குடகு, கூவி (குவி). கோண்டா போன்றவை.

3

20

  • ஏரியில் உள்ள நீரையும் சேறையும் வெறியேற்றுவதற்காகப் பயன்படுத்தப் பட்டது.
  • நீர்நிரம்பி நிற்கும் ஏரிக்குள் நீந்தி குமிழித் தூம்பைத் தூக்கி விடுவார்கள்.
  • நீர் வெளியேறவும், சேற்றைத் தூர்வாரவும் பயன்படுத்தினர்.

3

21

·         திருநாட்டில் உள்ள நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கின.

·        அதைக் கண்டு அஞ்சிய வாளை மீன்கள் துள்ளிக்குதித்தன

·        இக்காட்சியானது வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்றுள்ளது.

3

 

அடிமாறாமல் எழுதுக                                                                                                                             1X3=3

22. அ

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்

3

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்

3

 

காட்சியைக்கண்டு கவினுற எழுதுக                                                                                                      1X3=3

23

வள்ளுவன் வாக்கில் ஒன்றைச் சொன்னது!

காலம் யாவும் கடந்து நின்றது!

சிந்தனைச் சிறகை விரித்துப்பார் என்றது!

அறிவு சிறக்க அறிந்துகொள் என்றது!

என்னையும் கவிஞனாக்க துணிந்து நின்றது!

இது வெறும் காட்சி மட்டுமன்று!

என் மனதைக் கவினுற மாற்றிய மந்திரக்கோல்!

3

                                                                         பகுதி-7                                                           

24

உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின், ‘கால் முளைத்த கதைகள்என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
                                                                                                                                           திருத்தணி,
                                                                                                                 09-06-2025

அன்புள்ள  நண்பன் எழிலனுக்கு,
      முகிலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், நலம் நலமறிய ஆவல். என் பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதியகால் முளைத்த கதைகள்புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இந்நூலைக் கற்று நான் பல அறிவியல் உண்மைகளை அறிந்துகொண்டேன். சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!

                                                                                                                                       அன்புடன்,                                                                                                                                                      

                                                                                                                                         முகிலன்.

 

உறைமேல் முகவரி:
          . எழிலன்,

          /பெ மதியரசன்,
          1/3, தெற்குமாட வீதி,

          மதுரை.

5

25

முன்னுரை:

ஆறாம் திணை என்ற சிறுகதை புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை அனுபவங்களை எடுத்துக் கூறுகிறது இதை ஆ முத்துலிங்கம் அவர்கள் இயற்றியுள்ளார் அதைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இலங்கைக்குப் புலம்பெயர்தல்:

ஆசிரியரது குடும்பம் இலங்கையில் ஒரு சிங்களர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தது அங்கு கலவரம் வளர தொடங்கியது வீட்டு முதலாளி பிரீஸ் என்பவர் ஆசிரியர் குடும்பத்தை கலவரத்திலிருந்து பாதுகாத்தது

அகதிகளாக இருந்த அவலம்:

அங்கிருந்த பல தமிழ் குடும்பங்களை அகதிகள் முகாமுக்கு அழைத்துச் சென்றனர் அங்கு ஒரு தொண்டு நிறுவனம் அவர்களுக்கு இலவசமாக உணவு உடை வழங்கியது அவர்கள் அங்கே கைதிகளைப் போல நடத்தப்பட்டனர் இது ஆசிரியரின் மனதில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது

புலம்பெயர்தலின் பாதிப்புகள்:

புலம் பெயர்ந்தவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை தங்களுடையது என்று உணர முடியாமல் தன்னுடைய தாய் நாட்டையும் பிழைக்கும் நாட்டையும் எண்ணி அடையாளக்குழப்பத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முடிவுரை:                                                                                                                                         

              புலம்பெயர்ந்தவர்கள் தளிமை, ஏக்கம், அடையாளக் குழப்பம் போன்ற அக மாற்றங்களாலும் மொழி கலாச்சாரம், சமூகம், இனம் போன்ற புற மாற்றங்களாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆறாம் திணை மிக ஆழமாக விளக்குகிறது.

5

                                                                         பகுதி-8                                                          

26

ü  தமிழ் மொழி தொன்மையும் சிறந்த இலக்கண இலக்கிய வளமும் உடையது.

ü  தமிழ் மொழி உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.

ü  திராவிட மொழிகளில் பிற மொழி தாக்கம் குறைந்த மொழி தமிழாகும்.

ü  பிற திராவிட மொழிகளின் தாயாகக் கருதப்படுகிறது.

ü  ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன.

ü  இந்திய நாட்டின் பல பழங்கால கல்வெட்டுகளில் தமிழ் மொழியே இடம் பெற்றுள்ளது.

ü  இவ்வாறு தனித்தன்மை மாறாமல் காலம் தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகத் தமிழ் மொழி விளங்குகிறது

7

25

·        திருநாட்டில் காவிரி வளத்தைத் தருவதற்காக கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.

·         வயல்களில் களை எடுக்கும் உடைத்தியரின் கால்கள் சங்குகளால் இடருகின்றன.

·         குளங்களே கடல் போன்று காட்சியளிக்கின்றன

·        நீர்நிலைகளில் எருமைகள் விழுந்ததால் அச்சத்தில் வாளை மீன்கள் துள்ளி எழுந்து பாய்ந்தன

·        திருநாட்டில் நெற்கட்டுகளும் மீன்களும் முத்துக்களும் மலைபோல் குவிந்துள்ளன

·         பலவகை மரங்கள் திருநாடெங்கும் செழித்து வளர்ந்துள்ளன

7

 

 

 

 

 

 

 

 


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை