6.ஆம் வகுப்பு-தமிழ்-முதல் பருவம்
வினா விடைகள்
இயல்-3
கல்வியைப்போற்று
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
கல்வியானது நமது------துணையாய் அமைகிறது.
அ)
ஆவிக்கு ஆ) கண்ணுக்குத் இ) உடலுக்குத் ஈ) செவிக்கு
2.
'அருந்துணை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-----
அ)
அருந்து துணை ஆ) அருமை + துணை இ) அரு + துணை ஈ) அருந் + துணை
3.
கல்வி + என்றே என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ)
கல்விஎன்றே ஆ) கல்வியன்றே இ) கல்வியின்றே ஈ) கல்வியென்றே
குறு வினா
1.
கல்வியை ஏன் போற்றிக் கற்க வேண்டும்?
·
கல்வி
அருளினை வளர்க்கிறது,
·
அறிவைச்
சீராக்குகிறது,
·
மயக்கத்தினை
அகற்றுகிறது,
·
அறிவுக்குத்
தெளிவு தருகிறது,
·
உயிருக்கு
அரிய துணையாகி இன்பம் சேர்க்கிறது
சிந்தனை வினா
1.
கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
·
கல்லாதவரால்
சிறந்த பணிகளில் பணிபுரிய இயலாது.
·
அடுத்தவரை
நம்பியே வாழும் சூழல் உள்ளது.
·
பிறருக்குக்
கொடுப்பதால் செல்வம் குறையும்: கல்வி மட்டுமே வளரும்.
·
கல்வி
கற்றோரே கண்ணுடையவர்.
துன்பத்தை
வெல்லும் கல்வி
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக
1.
மாணவர் பிறர்------ நடக்கக் கூடாது.
அ)
போற்றும்படி ஆ) தூற்றும்படி இ) பார்க்கும்படி ஈ) வியக்கும்படி
2.
நாம் ---- சொல்படி நடக்க வேண்டும்.
அ)
இளையோர் ஆ) ஊரார் இ) மூத்தோர் ஈ) வழிப்போக்கள்
3.
கைப்பொருள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
அ)
கையில்+ பொருள் ஆ)
கைப்+பொருள் இ) கை +பொருள் ஈ) கைப்பு பொருள்
4.
மானம் + இல்லா என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ)
மானம்இல்லா ஆ) மானமில்லா இ) மானமல்லா ஈ)
மானம்பில்லா
சொற்றொடரில் அமைத்து எழுதுக
1.
மனமாற்றம்: மணி, ஆசிரியரின்
அறிவுரையால் மனமாற்றம் அடைந்தான்.
2 ஏட்டுக் கல்வி: ஏட்டுக் கல்வியோடு அனுபவக் கல்வியும்
நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாகும்
3.
நல்லவர்கள்: நாம்
நல்லவர்களோடு நட்பு கொள்ள வேண்டும்
4.
சோம்பல்: சோம்பல் இன்றி
கடுமையாக உழைத்தால் வாழ்வில் வெற்றி உறுதியாகும்.
குறு வினா
1.
நாம் யாருடன் சேரக்கூடாது?
விடை: நாம் தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது.
2.
எதை நம்பி வாழக்கூடாது?
விடை: பிறர்
உழைப்பை நம்பி வாழக்கூடாது.
3.
நாம் எவ்வாறு வாழவேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?
விடை:
மேலான
அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழவேண்டும்.
4.
நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
·
நாம்
மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின் படி வாழ வேண்டும்.
·
அதன்மூலம்
வெற்றிகளையும் விருதுகளையும் பெருமைகளையும் பெறலாம்.
சிந்தனை விளா
1.
நீங்கள் படித்து என்னவாக விரும்புகிறீர்கள்? ஏன்?
நான் படித்து ஆசிரியராக விரும்புகிறேன்.ஏனெனில் , ஆசிரியருக்கு மட்டுமே அனைத்து
துறைகளிலும் வல்லுநர்களை உருவக்கும் வல்லமை கிடைக்கும்.
கல்விக்கண்
திறந்தவர்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக
1.
பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்
அ)
ஆடு மேய்க்க ஆள் இல்லை ஆ) ஊரில் பள்ளிக்கூடம்
இல்லை
இ)
சாப்பிட வழியில்லை ஈ) பேருந்து வசதியில்லை
2.
'பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ)
பசி + இன்றி ஆ) பசி + யின்றி இ) பசு + இன்றி ஈ) பசு + யின்றி
3.
'படிப்பறிவு' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக் கிடைப்பது
அ)
படி + அறிவு ஆ) படிப்பு + அறிவு இ) படி + வறிவு ஈ) படிப்பு + வறிவு
4.
காடு+ ஆறு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்
சொல்
அ)
காட்டாறு ஆ) காடாறு இ) காட்டு ஆறு ஈ) காடுஆறு
கோடிட்ட இடங்களை நிரப்புக
1.
குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க சீருடைத்
திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
2.
காமராசரைக் "கல்விக்கண் திறந்தவர்' என
மனதாரப் பாராட்டியவர் தந்தை பெரியார்
சொற்றொடரில் அமைத்து எழுதுக
1.
வகுப்பு-
எழிலன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்.
2.
உயர்கல்வி
- நான் மலைவாழ் மக்களின் குழந்தைகள் உயர்கல்வி பெற உதவி செய்வேன்.
3.
சீருடை - அனைத்து
மாணவர்களும் பள்ளிக்கு வரும்பொழுது சீருடையில் வரவேண்டும்.
குறு வினா
1. காமராஜர்
காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?
·
பொறியியல்
கல்லூரிகள்
·
கால்நடை
மருத்துவக் கல்லூரிகள்
·
மருத்துவக்
கல்லூரிகள்
·
ஆசிரியர்
பயிற்சி நிறுவனங்கள்.
2.
காமராஜர் முதல்வராக பொறுப்பேற்றதும் கல்விக்காகச் செய்த முதல் பணி
யாது?
·
ஏறக்குறைய
6000 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.
·
அவற்றை
உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
·
இலவசக்
கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றி தீவிரமாக
·
மதிய
உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
சிறுவினா
1.
காமராசரின் கல்விப்பணிகள் குறித்து எழுதுக.
·
ஏறக்குறைய
6000 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.
·
அவற்றை
உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
·
இலவசக்
கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றி தீவிரமாக
·
மதிய
உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
·
சீருடைத்
திட்டத்தை அறிமுகம் செய்தார்.
·
பள்ளிகளின்
வசதிகளைப் பெருக்கப் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்.
·
தமிழ்நாட்டில்
பல கிளைநூலகங்களைத் தொடங்கினார்.
·
பொறியியல்
கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக்
கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப்
புதிதாகத் தொடங்கினார்.
சிந்தனை வினா
1.
நீங்கள் முதலமைச்சரானால் கல்வி முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களைச்
செயல்படுத்துவீர்கள்?
·
அனைவருக்கும்
இலவச கல்வி அளிப்பேன்.
·
தமிழ்வழியில்
கற்போருக்கு முன்னுரிமை வழங்குவேன்.
·
மாற்றுத்திறனாளிகளுக்கு
என தனிப் பள்ளிகள் அமைப்பேன்.
·
அனைத்து
பள்ளிகளுக்கும் தேவையான ஆசிரியர்களை நியமிப்பேன்.
நூலகம்
நோக்கி
1.அண்ணா நூற்றாண்டு நூலக்த்தைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.
v
அண்ணா
நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமாகும்.
v
இந்த
நூலகம் தரைத்தளம் மற்றும் எட்டு அடுக்குகளைக் கொண்டது.
v
தரைத்தளத்தில்
பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது.இங்கு அவர்களுக்கான பிரெய்லி நூல்கள்
இருக்கும்.
v
முதல்
தளம் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி.இங்கு பிற நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள்
உள்ளன.
v
இரண்டாம் தளத்தில் சங்ககாலம் தொடங்கி இன்று வரை
உள்ள அனைத்து தமிழ் நூல்களும் உள்ளன.
v
மூன்றாம் தளத்தில் அரசியல் சார்ந்த நூல்களும், நான்காம் தளத்தில் பொருளியல், சட்டம்
சார்ந்த நூல்களும், ஐந்தாம் தளத்தில் கணிதம், அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட நூல்களும் உள்ளன.
v
ஆறாம் தளத்தில் பொறியியல், வேளாண்மை திரைப்படங்களைச் சார்ந்த நூல்களும் ஏழாம்
தளத்தில் பழமையான ஓலைச்சுவடிகள் காப்பகமும் எட்டாம்
தளத்தில் கூட்ட அரங்கு, கலையரங்கு உள்ளிட்டவையும் உள்ளன.
மொழி
முதல் எழுத்துகள்
1.
வகர வரிசையில் மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் யாவை?
விடை: வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ ஆகிய எழுத்துகள் மொழிக்கு முதலில் வரும்.
2.
மொழிக்கு முதலில் வாரா எழுத்துகள் யாவை?
விடை:
·
மெய்யெழுத்துகள்
பதினெட்டும் சொல்லின் முதலில் வராது.
·
ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய எட்டு உயிர்மெய்
எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.
·
ஆய்த
எழுத்து சொல்லின் முதலில் வராது.
கற்பவை
கற்றபின்
ரூ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்துகள் வரிசையில் மொழிமுதல் எழுத்துகளாக அமைபவை எவை?
அவ்வெழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களை அகராதியைப் பார்த்து
எழுதுக.
1.
ஞ
- ஞமலி, ஞாயிறு, ஞாலம், ஞெகிழி,
ஞொள்கல்
2.
ய
- யவனர், யாது? யுகாதி, யூகம், யோகம், யௌவனம்
3.
வ
- வளம், வாழ்க, விடை, வீடு, வெற்றி, வேர், வைகை, வெளவால்
தொடர்களை
நீட்டித்துப் புதிய தொடர்களை உருவாக்குக
·
மழை
பெய்தது.
·
நேற்று
கனமழை பெய்தது
·
நேற்று
காலையில் கனமழை பெய்தது.
·
நேற்று
காலை, மலையில் கனமழை பெய்தது.
·
நேற்று
காலை இடியுடன் மலையில் கனமழை பெய்தது.
கீழ்க்குறிப்பிட்டுள்ள
நம் தலைவர்களின் பிறந்தநாளுக்குரிய விழாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(குழந்தைகள் நாள், மாணவர் நாள், ஆசிரியர் நாள், தேசிய இளைஞர் நாள், கல்வி வளர்ச்சி நாள்.)
1.
காமராசர் - கல்வி வளர்ச்சி நாள்
2.
எஸ். இராதாகிருஷ்ணான் - ஆசிரியர்
தினம்
3.
அப்துல்கலாம் - மாணவர் தினம்
4.
விவேகானந்தர் - தேசிய இளைஞர் தினம்
5.
ஜவஹர்லால் நேரு - குழந்தைகள் தினம்
இரு
பொருள் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்கள் அமையுங்கள்
(நூல், மாலை, ஆறு, படி)
மாலை:
இறைவனுக்குச் சூட்டுவது பாமாலை.
நான் மாலையில் விளையாடுவேன்.
ஆறு:
மதுரையில் வைகை ஆறு ஓடுகிறது.
நான் ஆறுசுவை உணவையும் உண்டேன்.
படி:
நான் நல்ல நூல்களைப் படித்தேன்.
நான் படியேறி ஏழுமலையானை தரிசனம் செய்தேன்
பின்வரும்
பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும்
1.
காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள்
அ)
பெற்றோர் ஆ) சிறுவன், சிறுமி இ) மக்கள் ஈ) ஆசிரியர்கள்
2.
இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?
அ)
ஏழ்மை ஆ) நேர்மை இ) உழைப்பு ஈ) கல்லாமை
3.
மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் நெகிழ்ந்தார்
4.
சிறுவனும் சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?
அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட
அம்மாவிடம் வசதி இல்லை. எனவே,
பண உதவி கேட்டுக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்.
5.
காமராசர் செய்த உதவி யாது?
காமராசர்,
தன் வீட்டிற்கு வந்த சிறுவன், சிறுமிக்குப் பண
உதவி செய்தார்.
பின்வரும்
சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குங்கள்
விடை:
1.
ஆசிரியர்
கவிதை எழுதுகிறார்.
2.
ஆசிரியர்
கவிதை படிக்கிறார்.
3.
ஆசிரியர்
பாடம் கற்பிக்கிறார்.
4.
மாணவன்
கவிதை எழுதுகிறான்.
5.
மாணவன்
கவிதை படிக்கிறான்.
6.
மாணவன்
பாடம் எழுதுகிறான்.
7.
மாணவன்
பாடம் படிக்கிறான்.
கட்டுரை எழுதுக
நான் விரும்பும் தலைவர் காமராசர்
முன்னுரை:
கர்மவீரர், கறுப்பு காந்தி என்று அழைக்கப்படும் காமராசர் மிக உயர்ந்த தமிழகத்துக்கு
அடித்தளம் அமைத்தவர் ஆவார். அவரால் ஏழைகள் கல்விக்கண் திறந்தனர்.பல தலைவர்களை
உருவாக்கியதால் பெருந்தலைவர் என்றழைக்கப்பெற்ற காமராசரை அறிவது மாணவர் கடமைகளுள்
ஒன்றாகும்.
இளமைக்காலம்:
காமராசர்
விருதுநகரில் 15.07.1903 ஆம் ஆண்டு
குமாரசாமிக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.அவரது இயற்பெயர்
காமாட்சி என்பதாகும். தனது பள்ளிப் படிப்பைசத்ரிய வித்யாசாலா பள்ளியில்
தொடங்கினார். வறுமை காரணமாக ஆறாம் வகுப்பு வரையே கல்வியைக்
கற்க முடிந்தது.
தந்தை
இளமையிலேயே மறைந்ததால் தாய்மாமன் வீட்டிலேயே வளர்ந்தார். அங்கிருக்கும்போது தேசத்
தலைவர்களின் பேச்சால் கவரப்பட்டு அரசியலிலும், சுதந்திரப்
போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பின்னர்
காங்கிரசில் இணைந்தார் 1954 ஆம் ஆண்டு தமிழக
முதல்வரானார்
கல்விப்பணி:
பள்ளிகளில்
ஏற்றத் தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத்திட்டத்தை அறிமுகம் செய்தார் மாணவர்கள் உயர்கல்வி பெறப் பல கல்லூரிகளைப் புதிதாகத் தொடங்கினார்
நிறைவேற்றிய பிற திட்டங்கள்:
காமராசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் மூடப்பட்டிருந்த ஆறாயிரம்
தொடக்கப்பள்ளிகளை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.அனைவருக்கும் இலவசக் கட்டாயக்
கல்விக்கான சட்டத்தை இயற்றினார். மாணவர்கள்பசியின்றிப் படிக்க மதிய உணவுத்
திட்டத்தைக் கொண்டு வந்தார்.
ஒன்பது நீர்ப்பாசனத்திட்டங்களை நிறைவேற்றினார்.கிண்டி அம்பத்தூர், இராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்தார்.நெய்வேலி
நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத்
தொழிற்சாலைகளை நிறுவினார்.
முடிவுரை:
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"
என்ற குறளுக்கேற்ப தனது பன்னிரண்டாம் வயது முதல் 02.10.1975 ஆம் ஆண்டு மறையும் வரை உண்மையாய் உழைத்தார். தனக்கென எதையும் சேர்க்காமல்
மறைந்த காமராசரைப் போற்றுவோம்; நற்பணி ஆற்றுவோம்.
மொழியோடு விளையாடு
'கல்விக்கண் திறந்த காமராசர்' இத்தொடரிலுள்ள
எழுத்துகளை மட்டும் பயன்படுத்திப் புதிய சொற்களை உருவாக்குங்கள். (எ.கா.) கண்
விடை
:
கல்வி, கவி, காமராசர், கல், காக்க, கான், மண், திறந்த.
சொற்களை இடம்மாற்றிச் சரியான
தொடர்களை எழுதுக.
1.
கற்க போற்றிக் கல்வியைப் வேண்டும்
விடை: கல்வியைப்
போற்றிக் கற்க வேண்டும்.
2.
பயனை கூடாது கற்றதன் மறக்கக்
விடை: கற்றதன் பயனை
மறக்கக் கூடாது.
3.
ஒருவன் விழுந்தான் மாணவன் மயங்கி
விடை:
மாணவன்
ஒருவன் மயங்கி விழுந்தான்.
4.
நூலகம் இங்கு உள்ளது மின்
விடை: மின் நூலகம் இங்கு
உள்ளது.
5.
சொல்லின் ஆய்தஎழுத்து வராது முதலில்
விடை: ஆய்த எழுத்து
சொல்லின் முதலில் வராது.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி