6 TH STD TAMIL QUESTION AND ANSWERS UNIT-2 25-26

 

6.ஆம் வகுப்பு-தமிழ்-முதல் பருவம்

வினா விடைகள்

இயல்-2

ஏதிலிக்குருவிகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கூடு கட்டுவதற்கு மரம் கிடைக்காத பறவைகள்------- வேறிடம் சென்றன

அ) பதிலிகளாக   ஆ) ஏதிலிகளாக  இ) விருந்தாளிகளாக  ஈ) பயணிகளாக

2. 'முன்பென்றால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்

அ) முன் + பென்றால்  ஆ) முன்பு + அன்றால் இ) முன்பு + என்றால்   ஈ) முன்பு + பென்றால்

3. 'சுழித்தோடும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) சுழித்து + ஓடும்  ஆ) சுழி + தோடும்  இ) சுழி + ஓடும்   ஈ) சுழித் + தோடும்

4.வழி எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) வழிஎல்லாம்  ஆ) வழியியெல்லான்  இ) வழில்லாம்  ஈ) வழியெல்லாம்

குறுவினா

1. முன்பெல்லாம் மழைக்காலம் எவ்வாறு இருக்கும்?

விடை: ஓடும் ஆற்றில் நீர் புரண்டோடும்

2. தூக்கணாங்குருவியின் கூடுகளைக் கயிஞர் ஏன் புல் வீடுகள் என்று குறிப்பிடுகிறார்?

விடை: புல்லினால் கட்டப்பட்டிருப்பதால் புல்  வீடுகள் என்று குறிப்பிடுகிறார்.

சிறுவினா

1. குருவிகள் ஏதிலிகளாக ஆனதற்குக் காரணம் என்ன?

·        மரங்கள் வெட்டப்பட்டன.

·        வான் மழை பொய்த்தது.

·        மரங்கள் இல்லை, அண்டி வாழும் குருவிகள் இல்லை.

·        அவை இருப்பிடம் இழந்தன

சிந்தனை வினா

பறவைகள் ஏதிலிகளாகப் போகாமல் இருப்பதற்கு நாம் எள செய்யவேண்டுமென நீங்கள்கருதுகிறீர்கள்?

·        பறவைகளின் வாழிடமான மரங்களை அதிகம் நட வேண்டும்.

·        பறவைகளுக்கு நீர் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

·        பறவைகளுக்கு இருப்பிடமும் உணவும் கிடைக்கும் போது அவைகள் ஏதிலிகளாகப் போகாது.

சிறகின் ஓசை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. 'தட்பவெப்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) தட்பம் - வெப்பம் ஆ) தட்ப வெப்பம் இ) தட் + வெப்பம்  (ஈ) தட்பு + வெப்பம்

2. வேதியுரங்கள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) வேதி+ யுரங்கள்  ஆ) வேதி+ உரங்கள் இ) வேத் + உரங்கள்  ஈ) வேதியு + ரங்கள்

3. தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) தரையிறங்கும்  ஆ) தரை இறங்கும் இ) தரையுறங்கும் ஈ) தரைய்றங்கும்

4. வழி + தடம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) வழிதடம்  ஆ) வழித்தடம்   இ) வழிதிடம்   ஈ) வழித்திடம்

5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி

அ) துருவப்பகுதி ஆ) இமயமலை  இ) இந்தியா   ஈ) தமிழ்நாடு

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை ஆர்டிக் ஆலா

2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர்  சத்திமுத்தப்புலவர்

3. பறவைகள் இடம்பெயர்வதற்கு என்று பெயர் வலசை போதல்

4. இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி

5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று  உணவு

சொற்றொடர் அமைத்து எழுதுக

1. வெளிநாடு - என் நண்பர் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டான்.

2. வாழ்நாள் - சிட்டுக்குருவியின் வாழ்நாள் 10 முதல் 13 ஆண்டுகள் ஆகும்.

3. செயற்கை  - நாம் வயல்களுக்கு செயற்கை உரங்களை இடக்கூடாது

பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக

1 . மரங்களை வளர்த்து இயற்கை யைக் காப்போம்; செயற்கை உரங்களை தவிர்த்து நிலவளம்

2. தமிழகத்தில் வலசைப் பறவைகளின் வருகை மிகுந்துள்ளது  தற்போது சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது

குறு வினா

1. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?

விடை:  உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் போன்றவைகளுக்காக பறவைகள் இடம்பெறுகின்றன.

2. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?

·        தலையில் சிறகு வளர்தல்,

·        இறகுகளின் நிறம் மாறுதல்,

·        உடலில் கற்றையாக முடி வளர்தல்,

சிறுவினா

1. சிட்டுக்குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக.

·        சிட்டுக்குருவி கூடு கட்டி வாழும் பறவை இனத்தைச் சேர்ந்ததாகும்.

·        கூடு கட்டிய பிள் 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்

·        துருவப் பகுதிகளைத் தவிர மனிதன் வாழும் இடங்களிலெல்லாம் சிட்டுக் குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம்.

·        சிட்டுக்குருவிகளின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு பூச்சிகளை உட்கொள்ளும்.

·        சிட்டுக்குருவி தன்மை கொண்டதாகும்

2. வலசைப் பறவைகளின் பயனம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?

·        புறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்லும்.

·        அவை பெருங்கடலையும் மலைகளையும் கடந்து போகின்றன.

·        தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து அந்தப் பாதையிலேயே பறக்கின்றன.

·        இடையில் எங்கும் நிற்காமல் பரந்து வாழும் பறவைகளும் உண்டு.

·        வலசையின்போது பறவைகளின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவதும் உண்டு.

சிந்தனை வினா

1. புறவை இளங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.

·        பறவைகள் உண்ணக்கூடிய பழங்கள், விதைகள் உடைய மரங்களையும் செடிகளையும் கொடிகளையும் வளர்க்க வேண்டும்.

·        இயற்கை உரங்களை நாம் வயல்களில் பயன்படுத்த வேண்டும்.

·        அதிக ஓசை தரக்கூடிய வெடி பொருட்களைத் தவிர்த்திடல் வேண்டும்.

கற்பவை கற்றபின்

1. உங்கள் பகுதியில் காணப்படும் பறவைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.

·        குயில்

·        காகம்

·        ஆந்தை

·        கோழி

·        கொக்கு

·        புறா

·        கிளி

·        மயில்

·        மைனா

·        கூகை

·        சிட்டுக்குருவி


2. உங்கள் வீட்டுக்கு அருகில் பறவைகள் வருவதற்கு என்ளெள்ள வழிவகைகள் செய்யலாம் என்பது பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக

அன்பரசி:

நான் முதலில் அமைதியான சூழலை ஏற்படுத்துவேன். நிறைய மரங்களை வளர்ப்பேன். பறவைகளை அன்போடும் கருணையோடும் பார்த்து அவைகளுக்குத் தேவையான தானியங்களையும் நீரிளையும் வைப்பேன்.

இளவரசி:

நான் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் சிறு சிறு தானியங்களைத் தூவியும் சிறு கிண்ணத்தில் தண்ணீரும் வைத்பேன். பறவைகளுக்குத் தேவையான களி தரும் மரங்களையும் வளர்ப்பேன். கோடை காலங்களில் அவைகளுக்குத் தேவையான பழங்களை கடையில் வாங்கி வந்து நருக்கி வைப்பேன்.

3. பறவைகள் தொடர்பான பழமொழிகளைத் தொகுத்து எழுதுக

1.     காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

2.    உயர் உயர பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது.

3.    இனம் இனத்தோடு சேரும்.

4.    இலவு காத்த கிளி போல.

5.    எச்சில் கையால் காக்கா விரட்ட மாட்டாள்.

6.    கோழி மிதித்து குஞ்சு சாகுமா?

7.    கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போனாளாம்.

8.    சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை.

4. இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் முழக்கத் தொடர்களை எழுதுக.

v  வளர்ப்போம் வளர்ப்போம் மரங்களை வளர்ப்போம்.

v  நீக்குவோம் நீக்குவோம் நெகிழிகளை நீக்குவோம்.

v  அழிக்காதே அழிக்காதே காடுகளைஅழிக்காதே

v  வெட்டாதே வெட்டாதே மரங்களை வெட்டாதே.

v  படுத்தாதே படுத்தாதே காற்றை மாசுபடுத்தாதே.

v  கெடுக்காதே கெடுக்காதே இயற்கையைக் கெடுக்காதே.

v  மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.

கிழவனும் கடலும்

கிழவனும் கடலும் என்னும் பட கதையை உங்கள் சொந்த நடையில் கதையாக எழுதுக.

ü  சாண்டியாகோ என்ற வயது முதிர்ந்த மீனவர், கடலுக்கு சென்று மீன் பிடிக்க 84 நாட்களாக வெற்றியின்றி திரும்புகிறார்.

ü  மனோலின் எனும் சிறுவன், அவரிடம் மீன் பிடிக்க கற்றுக்கொள்ள விரும்புகிறான்.

ü  ஆரம்பத்தில் அவனும் சாண்டியாகோவுடன் சென்றான், ஆனால் மீன் கிடைக்கவில்லை என்பதால் அவனை விட்டுவிட்டு விட்டான்.

ü  85வது நாளில் சாண்டியாகோ தனியாக கடலுக்குச் சென்று, நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு மிகப் பெரிய மீனை பிடிக்கிறார்.

ü  ஆனால், கரை திரும்பும் போது பல சுறாக்கள் அந்த மீனைத் தாக்கி, அதன் எலும்புகள் மட்டுமே மீதமிருக்கும்.

ü  சாண்டியாகோவின் முயற்சியும் தீரமும் வெற்றியாக அமைந்தது.

ü  இதைப் பார்த்த மனோலின், மீண்டும் அவருடன் மீன்பிடிக்க வர விரும்புகிறான். இது சாண்டியாகோவிற்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது

முதலெழுத்தும், சார்பெழுத்தும்

1 . முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?.

·        உயிரெழுத்துகள் 12 மெய்யெழுத்துகள் 18 ஆகிய முப்பது எழுத்துகள் ஆகும்.

·        பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமான எழுத்தாகையால் இவற்றை முதல் எழுத்துகள் என்று கூறுகிறோம்.

2. சார்பெழுத்துகள் எத்தனை ? அவை யாவை?

சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.

அவை,

1.     உயிர்மெய்

2.    ஆய்தம்

3.    உயிரளபெடை

4.    ற்றளைபெடை

5.    குற்றியலிகரம்

6.    குற்றியலுகரம்

7.    ஐகாரக்குறுக்கம்

8.    ஔகாரக்குறுக்கம்,

9.    மகரக்குறுக்கம்

10.  ஆய்தக்குறுக்கம்.

3. சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?

ஆய்த எழுத்து தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப் பின் ஒரு வல்லின உயிர்மெய்

எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

கற்பவை கற்றபின்

1. முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் தொடர்பைப் பற்றி விவாதிக்க

முதல் எழுத்துகள் உயிரும் மெய்யும் ஆகிய முப்பது எழுத்துகளும் ஒரு குடும்பத்தில் பெற்றோர் போன்றவையாகும். இவை பிற எழுத்துகள் தோன்ற, இயங்கக் காரணமாக அமைகின்றன.

சார்பெழுத்துகள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளைப் போன்றவையாகும். இவை முதல் எழுத்துகளைச் சார்ந்தே வருபவை ஆகும்.

2. முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொற்களை எழுதுக

விடை: அன், ஆண், ஏன், என், உன், உண், ஊர்,ஏர், ஓர் ஊழ், எண்.

3. முதல் எழுத்துகள் இடம்பெறாத சொற்களை எழுதுக

விடை: கருவி, கவிதை, காலை, மாலை, கதை, காடை, பாதை, தேனி, யானை, புலி, கரடி, ஞாயிறு, நிலா, பெருமை, சிறுமை, பாரதி, கவிமணி, சுரதா, நாடு, மாடு, செடி, கொடி, மாடு, விடு, பூனை, நரி, பாரி, நிலா.

கட்டுரை எழுதுக : இயற்கையைக் காப்போம்

முன்னுரை:

இயற்கை என்பது இயல்பாகவே உருவானது. இயற்கையாய் உருவான நிலம், நி, நீ, காற்று, வானம் என ஐம்பூதங்களால் ஆனது. இவ்வுலகம் இத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என இக்கட்டுரையில் காண்போம்.

இயற்கைச்சூழல்:

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுமே இயற்கையைச் சார்ந்தே வாழ்கின்றன. எனவே, இயற்கையைக் காப்பது மிக அவசியமாகும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என வாழவேண்டும்.

இயற்கை மாசுபாடு:

இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் இயற்கை மாற்றமடைகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் காடுகளையும், விளைநிலங்களையும் அழித்து வீடுகளாக்கினோம். தொழிற்சாலைக் கழிவுகளினால் நீரை மாசுபடுத்தினோம். நெகிழிப் பொருட்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தி நிலத்தை மாகபடுத்தினோம். வளரும் பிள்ளைகள் நோய்களோடு வளர்வதற்கு நாமே காரணமாகின்றோம்.

இயற்கையை நேசியுங்கள்:

நாம் அனைவரும் நாட்டை வளமாக்கப் பாடுபடுவோம். காடுகளை அழிக்காமல் மலைகளைத் தகர்க்காமல், மணிவளத்தைச் சுரண்டாமல் நிநிலைகளைப் பாதுகாத்து வேளான் தொழிலைக் காப்போம். இயற்கையை நேசிப்போம்.

முடிவுரை:

இயற்கையின் பயனையும், இவர்பத்தை எதிர்காலத் தலைமுறையினர் கண்டு அனுபவிக்கவும் நாம்  உறுதுணையாக இருப்போம். இயற்கையைக் காப்போம்! எதிர்காலம் சிறக்க வழிசெய்வோம்

மொழியோடு விளையாடு

தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக

1. கபிலர் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்.

2. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.

விடை:

1. கபின் வேலை செய்தான். கபிலன் களைப்பாக இருக்கிறான்.

2. இலக்கியா இனிமையாகப் பாடினாள். இலக்கியா பரிசு பெற்றாள்.

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் -----என்று பெயர். (பறவை / பரவை)

2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக---- ஆற்றினார். (உரை / உறை)

3. முத்து தம்---- காரணமாக வருக்குச் சென்றார். (பனி / பணி)

4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை அழைத்தாள்/ அவைத்தான்

வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக

விடை:

1. பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.

2. சாண்டியாகோ மிகப் பெரிய மீனைப் பிடித்தார்.

3. இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலிம் அலிகட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக

1. அகதி என்னும் பொருள் தரும் சொல்  ஏதிலி

2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை  முப்பது

3. பறவைகள் இடம்பெயர்தலை வலசை போதல் என்பர்

4. சத்திமுத்தப்புலவரால் பாடப்பட்ட பறவை செங்கால் நாரை

5. ஆய்த எழுத்தின் வேறுபெயர்  தனிநிலை

திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது

அ) ஊக்கமின்மை  ஆ) அறிவுடைய மக்கள் இ) வன்சொல்  ஈ) சிறிய சொல்

2. ஒருவர்க்குச் சிறந்த அணி

அ) மாலை  ஆ) காதணி  இ) இன்சொல்  ஈ) வன்சொல்

பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக

1. இனிய உளவாக  இன்னாத கூறல்

   கனியிருப்பக் காய் கவர்ந் தற்று

2. அன்பிலார்   எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

     என்பும் உரியர் பிறர்க்கு

நயம் அறிக

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்.

செயற்கரிய செய்கலா தார்

இந்த குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

எதுகை சொற்கள் :   செயற்கரிய - செயற்கரிய

மோனைச் சொற்கள் :    செயற்கரிய செய்வார்

பின்வரும் செய்திக்குப் பொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக

விடை:

(ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

        சான்றோன் எனக்கேட்ட தாய்.

பதிவிறக்க

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை