9.ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் இயல்-2

 

9.ஆம் வகுப்புதமிழ்  அலகுத்தேர்வு  இயல்-2

பலவுள் தெரிக.                                                                                                               9×1=9

I."மாடு" - என்பதன் பொருள் என்ன?

அ) கீழே  ஆ) மேலே  இ) பக்கம்  ஈ) தொலைவு

2. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

அ) அகழி  ஆ) ஆறு   இ)இஞ்சி  ஈ) புலரி

3. சரியான தொடரைத் தெரிவு செய்க.

அ. நீரின்று அமையாது உலகு - திருவள்ளுவர்

ஆ. நீரின்று அமையாது யாக்கை ஒளவையார்

இ. மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்

)    )   ) க உ  ஈ) க உ          

4. பகுதி ,விகுதி மட்டும் இடம்பெறும் சொல் எது?

அ) வென்றார்  ஆ) நடந்த  இ) வளர்க   ஈ) பொருந்திய

5.மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

அ) மறுமை   ஆ) பூவரசு மரம்   இ) வளம்   ஈ) பெரிய

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

வான் உட்கும் வடிநீண் மதில்,

மல்லல் மூதூர் வய வேந்தே!

செல்லும் உலகத்துச் செல்ம் வேண்டினும்

    ஞாலம் காலர்  தோள்லி முருக்கி

6. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ) நீதி நூல் திரட்டு ஆ) புறநானூறு இ) முக்கூடற்பள்ளு ஈ) முத்தொள்ளாயிரம்

7. மூதூர் இச்சொல்லிற்கான இலக்கண குறிப்பு

அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை

இ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் ஈ) அன் முடித்தொகை

8. பாடலில் இடம்பெற்ற எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடு

) வான்-மல்லல்  ) வான் – ட்புகும்  ) மல்லல் – செல்லும்  ) ஞாலம் - காவலர்

9. பாடலில் ”வயவேந்தே” எனக்குறிப்பிடப்பட்ட மன்னன்

) இமயவரம்பன்) இராசராசன்) பாண்டியன் நெடுஞ்செழியன்) புலிகேசி

குறுவினா                                                                                                                        7×2=14

10."கூவல்" என்று அழைக்கப்படுவது எது?

11. உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

12. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - குறிப்புத் தருக.

13. நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

14. பகுபத உறுப்பிலக்கணம் தருக: கொடுத்தோர்.

15. ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக.   விரிந்தன - விரித்தது

16. கலைச்சொல் தருக:  அ. CONICAL STONE ஆ. WATER MANAGEMENT

சிறுவினா (வினா எண்: 20 கட்டாய வினா)                                                                 3×3=9

17.அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவைஅதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

18. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

19. சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?   

20.அ. காடெல்லாம்..  எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.

(அல்லது)

 ஆ. நீரின்று… எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.

விரிவான விடையளி                                                                                                2×5=10

20. பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.

21. அ.அறிஞர்களின் பொன்மொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதுக:

1 .Every tower is a sout blossoming in nature-Gerant De Nerval

2. Sunset is still my favourite colour, and rainbow is second- Mattle Stepanek

3 An early moming walk is blessing for the whole day- Henry David Thoreau

4. Just living is not enough. One must have sunshine, freedom, and a little flower Hans Christian Anderso                                                                                            

(அல்லது)

ஆ. சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்து கொள்ளும்  மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.

23. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

நெடுவினா                                                                                                              1×8=8

24. . வேளாண்மை நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக

(அல்லது)

  . ‘தண்ணீர்கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

  பதிவிறக்க


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை