6 TH STD TAMIL QUESTION AND ANSWERS UNIT-1 25-26

 

6.ஆம் வகுப்பு-தமிழ்-முதல் பருவம்


வினா விடைகள்
 
இயல்-1

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்.

அ) சமூகம்  ஆ) நாடு   இ) வீடு  ஈ) தெரு

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ---- ஆக இருக்கும்

அ) மகிழ்ச்சி  ஆ) கோபம் இ) வருத்தம் ஈ) அசதி

3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) நிலயென்று  ஆ) நிலவென்று  இ) நிலவன்று  ஈ) நிலவுஎன்று

4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) தமிழங்கள்  ஆ) தமிழெங்கள்  இ) தமிழுங்கள்  ஈ) தமிழ்எங்கள்

5. 'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அமுது + தென்று  ஆ) அமுது + என்று  இ) அமுது + ஒன்று  ஈ) அமு + தென்று

6. 'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) செம்மை + பயிர் ஆ) செம் + பயிர் இ) செமை – பயிர்  ஈ) செம்பு + பயிர்

இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக

1. விளைவுக்கு  -  இ) நீர்

2. அறிவுக்கு  - (ஈ) தோள்

3. இளமைக்கு  - (அ) பால்

4. புலவருக்கு - (ஆ) வேல்

ஒத்த ஓசையில் முடியும் (இயைபு) சொற்களை எடுத்து எழுதுக

(எ.கா) பேர் நேர்

ü  பால் - வேல்

ü  வான் -தேன்

ü  பேர் - ஊர்

ü  தோள் வாள்

ü  பேர் - நீர்

குறு வினா

1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

விடை: அமுதம்  , நிலவு, மணம்

2. நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?

விடை: நாங்கள் தமிழை உயிரோடு ஒப்பிடுவோம்.

சிறுவினா

1. இன்பத்தமிழ்-பாடலில் உங்களுக்குப் பிடித்த அடிகள் இரண்டனை எழுதுக.

விடை:

"தமிழுக்கும் அமுதென்றுபேர் அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

2. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?

ü  நல்ல விளைச்சலைப் பெற நீர் அவசியம்.

ü  தமிழ், சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.

சிந்தனை வினா

வேல் என்பது ஓர் ஆயுதம். தமிழ் ஏன் வேலுடன் ஒப்பிடப்படுகிறது?

ü  வேல் ஒரு கூர்மையான ஆயுதமாகும்.

ü  நான்கு படைகளுள் ஒன்று வேற்படையாகும்.

ü  புலவர்கள் எழுத்தாணி கூர்மையான வேலுக்குச் சமம்

வளர்தமிழ்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. 'தொன்மை' என்னும் சொல்லின் பொருள்

அ) புதுமை  ஆ) பழமை  இ) பெருமை  ஈ) சீர்மை

2. 'இடப்புறம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இடன் + புறம்  ஆ) இடை + புறம்  இ) இடம் + புறம்  ஈ) இடப் + புறம்

3. 'சிரிளமை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) சிறு + இளமை  ஆ) சீர்மை + இளமை  இ) சிரி +இளமை  ஈ) சீற்+இளமை

4. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) சிலம்பதிகாரம்  ஆ) சிலப்பதிகாரம்  இ) சிலம்பதிகாரம்  ஈ) சில பதிகாரம்

5. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கணினிதமிழ்  ஆ) கணினித்தமிழ் இ) கணினிதமிழ்   ஈ) கனினிதமிழ்

6. தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடியவர்

அ) கண்ணதாசன்   ஆ) பாரதியார்   இ) பாரதிதாசன்  ஈ) வாணிதாசன்

7. 'மா' என்னும் சொல்லின் பொருள்

அ) மாடம்  ஆ) வானம்  இ) விலங்கு  ஈ) அம்மா

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது  மொழி

2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல்  தொல்காப்பியம்

3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில், அது எண்களின் அடிப்படையில்

வடிவமைக்கப்பட வேண்டும்.

சொற்களைச் சொந்தத் தொடரில் அமைத்து எழுதுக

1. தனிச்சிறப்பு  : நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

2. நாள்தோறும் : திருக்குறளை நாள்தோறும் படிக்க வேண்டும்.

குறு வினா

1. தமிழ் என் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது?

ü  தமிழின் மிகப்பழமையான இலக்க நூல் தொல்காப்பியம்

ü  இலக்கியம் தோன்றிய பிறகே இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும்.

ü  எனவே தமிழ் என் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது

2. நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக

1.     சிலப்பதிகாரம்

2.    மணிமேகலை

3.    சீவக சிந்தாமணி

4.    வளையாபதி

5.    குண்டலகேசி

சிறுவினா

1. அஃறிணை, பாகற்காய் என்னும் சொற்களின் பொருள் சிறப்பு யாது?

அஃறிணை:

ü  திணை இரண்டு. அவை, உயர்திணை, அஃறிணை.

ü  உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என்றுதான் அமைய வேண்டும்.

ü  தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயரிட்டனர்.

பாகற்காய்:

ü  பாகற்காய் கசப்புச் சுவையுடையது.

ü  கசப்புக்காய் என்று கூறாமல், இனிப்பு (பாகு), அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) எனக் கூறுகின்றனர்.

2. தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.

ü  தமிழ் இலக்கியம் பலவும் செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் ஆகிய இனிய ஓசைகளால் பாடப்படுகின்றன.

ü  மோனை, எதுகை, இயைபு போன்ற சொல் நயங்களாலும் பாடப்படுகின்றன.

ü  எனவே தமிழை இனியமொழி என்று அழைக்கிறோம்.

3. தமிழ் மொழியின் சிறப்பைக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.

ü  தமிழ்மொழி பேசவும் எழுதவும் படிக்கவும் எளிமையா மொழி.

ü  உலக மொழிகளுள் செம்மைமிக்க மொழி

ü  இலக்கண, இலக்கிய வளம் பெற்றுத் திகழும் மொழி

ü   அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் புதிய புதிய கலைச்சொற்கள் உருவாக்கி வருகின்றன.

சிந்தனை வினா

1. தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?

ü  தமிழ்மொழி பேசவும், எழுதவும், பழக்கவும் உகந்த மொழி

ü  உயிரும் மெய்யும் சேர்ந்து தோன்றுபவையே உயிர்மெய் ஒலிகளாகும்.

ü  எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழக்கூடும்.

2. தமிழ் மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.

ü  முத்தமிழ் மொழியானது எளிமையானது, இனிமையானது,

ü  உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கி வருகிறது.

ü  அறிவியல் தமிழ், கணினித்தமிழ் வழியாக தமிழ்மொழி வளர்ந்து கொண்டே வருகிறது.

ஒளி பிறந்தது

1. தமக்குப் பெருமகிழ்சிவை அளித்ததாக அப்துல்கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?

ü  போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைச் கால்களைப் பொருத்திக்கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன்.

ü  பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன.

ü  அதனை, அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் எனக்குப் பெருமகிழ்வை அளித்தது.

தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்

கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக.

1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல்  அணி

2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச்சொல்  பூ

3. ஆய்தஎழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல்  எஃகு

குறுவினா

4. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்.

அவை:

1. எழுத்து இலக்கணம்  2. சொல் இலக்கணம்  3. பொருள் இலக்கணம் 4. யாப்பு இலக்கணம்

5. அணி இலக்கணம்

5. மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.

1.     வல்லினம் - க், ச், ட், த், ப், ற்

2.    மெல்லினம் - ங், ஞ், ண், ந், ம், ன்

3.    இடையினம் - ய், ர், ல், வ், ழ், ள்

6. தமிழ் எழுத்துகளுக்குரிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக.

1.     குறில் எழுத்துகள் - 1 மாத்திரை

2.    நெடில் எழுத்துகள் 2 மாத்திரை

3.    மெய் எழுத்துகள் ½ மாத்திரை

4.    ஆய்த எழுத்து - ½ மாத்திரை

மொழியை ஆள்வோம்

கடிதம் எழுதுக : விடுப்பு விண்ணப்பம்

அனுப்புநர்

வா. நிறைமதி

ஆறாம் வகுப்பு '' பிரிவு,

அரசு மேல்நிலைப்பள்ளி,

திருத்தணி

பெறுநர்

வகுப்பாசிரியர் அவர்கள்,

ஆறாம் வகுப்பு '' பிரிவு,

அரசு மேல்நிலைப்பள்ளி,

திருத்தணி

ஐயா,

வணக்கம், எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எனக்கு 15.06.2025 மற்றும் 16.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,

இப்படிக்கு,

தங்கள் கீழ்ப்படிந்த மாணவி,

வா. நிறைமதி 

இடம் : திருத்தணி

நாள் : 14.06.2025

பெற்றோர் கையொப்பம்

க. வாசு

மொழியோடு விளையாடு

திரட்டுக

'மை' என்னும் எழுத்தில் முடியும் சொற்களின் பட்டியல் தயாரிக்க

இளமை, இனிமை, நுண்மை, ன்மை, வளமை, செம்மை, கருமை, வெண்மை

கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.

1.     கவிதை -கவி, கதை, விதை, தை

2.    பதிற்றுப்பத்து - பதி, பற்று, பத்து, பதித்து

3.    பரிபாடல் -பரி, பாடல், பால், பல், பா, படல்

இரண்டு சொற்களை இனையத்துப் புதிய சொற்களை உருவாக்குக

தமிழ்மொழி, நீதி நூல், தமிழ் நூல், நீதிமொழி, மணி மொழி, எழுதுகோல், மணிநீதி, நூல் எழுது, மாலை எழுது, மீன்கண், நூல் வெளி, வெளி மொழி, தமிழ்மணி, கண்மணி, மணிமாலை, தமிழ்மாலை, நூல்மாலை, விண்வெளி

பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக.

(அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல், ஈடு, இணை, உணர்வு, ஏடுகள், உரிமை, என்றும், எளிதாய், உவகை, அன்பு)

அன்பு தருவது தமிழ்

ஆற்றல் தருவது தமிழ்

இனிமை தருவது தமிழ்

ஈடு இல்லாதது தமிழ்

உணர்வு தருவது தமிழ்

ஊக்கம் தருவது தமிழ்

என்றும் வேண்டும் தமிழ்

ஏற்றம் தருவது தமிழ்

பதிவிறக்க

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை