6 TH STD ANNUAL EXAM TAMIL ANSWER KEY RANIPET DIST

 

(இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,வேலூர்,நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் என்பதால் இதே விடைக்குறிப்பைப் பயன்படுத்தலாம்)


மூன்றாம் பருவத் தொகுத்தறி தேர்வு-2026 , இராணிப்பேட்டை மாவட்டம்

                                               6. ஆம் வகுப்பு தமிழ்- விடைக்குறிப்புகள்

அ)  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                                         6X1=6

வி.எண்

விடைகள்

மதிப்பெண்

1

. காவிரிக்கரை 

1

2

. வாரணம்

1

3

. உ.வே.சா

1

4

அ. தாயாக

1

5

ஆ. ஆசிய ஜோதி

1

6

ஈ. அமைதி

1

ஆ) பொருத்து                                                                                                                          4X1=4

7

வள்ளலார் – பசிப்பிணி போக்கியவர்

1

8

தமிழ்நாட்டுக்கவிஞர் - பாரதியார்

1

9

சிங்காரம்- அழகு

1

10

பொக்கிஷம் - செல்வம்

1

இ)  சொற்றொடரில் அமைத்து எழுதுக                                                                                        2X1=2

11

உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

12

உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

ஈ)  குறுகிய விடையளி(எவையேனும் ஐந்து மட்டும்)                                                                   5X2=10

13

ü  பாஞ்சாலங்குறிச்சி நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும்.

ü  அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாக இருக்கும்.

2

14

    ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடும்,திருக்குறளும் காந்தியடிகளுக்குத் தமிழ்கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தின.

2

15

    இந்தப் பூமியை எப்பொழுதும் செவ்விந்தியர்கள் மறப்பதேயில்லை. ஏனெனில் பூமியே அவர்களுக்குத் தாயாகும். அவர்கள் அந்த மண்ணுக்கு உரியவர்கள் அந்த மண்ணும் அவர்களுக்குரியதாகும்.

 

16

ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருமாயின் அது சொல் எனப்படும். 6 வகைப்படும்.அவை: பெயர்,வினை,இடை,உரி

 

17

எறும்பு தன் உயிரைக் காத்துக்கொள்ள பாடுபடுகிறது

 

18

     நம் முன்னோர் சில பொருள்களுக்கு காரணம் கருதாமல் சில பெயர்களை இட்டு வழங்கினார். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப் பெயர்கள் ஆகும்.

 

19

ஒன்றைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துகளுககுச் சுட்டு எழுத்துகள் என்று பெயர். அ, , உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்.

 

20

நெய்யாகவும் , திரியாகவும் நாம் மாறும்போது தோல்வி தூண்டுகோலாகும்

 

21

இல்லாதவர்க்குத் தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச்     செய்பவை ஆகும்.

 

 

உ.  அடிபிறழாமல் எழுதுக                                                                                                           4+2=6

22

1. தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்

செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே !

2. எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே !

4

23

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

2

ஊ.  எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி                                                 2X5=10

24

ü  ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடும்,திருக்குறளும் காந்தியடிகளுக்குத் தமிழ்கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார்.

ü  1937ல் சென்னையில் நடந்த இலக்கியவிழா ஒன்றில் உ.வே.சாவிடம் தமிழ் கற்க விரும்புவதாகக் கூறினார்.

5

25

ü  தீய செயல்களைச் செய்யக்கூடாது.

ü  பிற உயிர்களைக் கொல்லக் கூடாது.

ü  இப்பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றும் எண்ணங்களை விடுதல் வேண்டும்.

5

26

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை:

1. பொருட்பெயர்

2. இடப்பெயர்

3. காலப்பெயர்

4. சினைப்பெயர்

5. பண்புப் பெயர்

6. தொழிற்பெயர்

5

27

அ. ஆறு – எண், நதி   ஆ. திங்கள் – நிலா, மாதம்  இ. ஓடு – ஓடுதல், தேங்காய் ஓடு(மாதிரி)

ஈ. நகை – சிரிப்பு , அணிகலன்  உ. நூல் – புத்தகம், இழை

5

எ.  ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளி                                                                                 1X6=6

28

முன்னுரை

     மாரி என்பவர் திரையரங்கு வாசலில் காலணி தைக்கும் ஏழை மனிதர். தினமும் கிடைக்கும் சிறிய வருமானத்தால் வாழ்க்கையை நடத்தி வந்தார். ஒரு நாள் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் அவரது வாழ்க்கையை மாற்றியது. அந்தக் கதையை இப்போது காண்போம்.

மாரி

     மாரி திரையரங்கு வாசலில் அமர்ந்து காலணி தைத்து கொண்டிருந்தார். அன்றைய நாள் பலத்த மழை பெய்தது. தேநீர் குடிக்க கூட அவரிடம் பணம் இல்லை. மிகவும் கவலையுடன் இருந்த அந்த நாளில்தான் ஒரு அதிசயம் நடந்தது.

சிறுமியின் காலணி

     திரையரங்கின் பக்கச் சந்திலிருந்து ஒரு சிறுமி மாரியின் அருகே வந்தாள். அவள் ஒரு காலணியை கொடுத்து, தைத்து வைக்கச் சொல்லிவிட்டு சென்றாள். ஆனால் மாலை ஆனபோதும் அந்தச் சிறுமி திரும்பி வரவில்லை.

மாரியின் கவலை

      அடுத்த நாளும் மாரி அந்தக் காலணியை எடுத்துக்கொண்டு திரையரங்கு வாசலுக்கு வந்தார். அன்று கூட சிறுமி வரவில்லை. பல நாட்கள் கடந்ததால் மாரி மிகவும் கவலைப்பட்டார்.

மாரியின் மனைவி

     ஒருநாள் மாரியின் மனைவி அந்தக் காலணியை அணிந்து பார்த்தார். அது அளவில் சிறியதாக இருந்தாலும், அவளது கால்களுக்கு நன்றாகப் பொருந்தியது. இதைக் கண்டு மாரி மிகவும் ஆச்சரியமடைந்தார்.

விசித்திரமான காலணி

     அந்தக் காலணியை அணிந்தபோது மனம் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த செய்தி ஊரெங்கும் பரவியது. பலர் அந்தக் காலணியை அணிந்து பார்க்க வந்தனர். சிலர் பணமும் கொடுத்தனர். இவ்வாறு மாரியின் வாழ்க்கை மெதுவாக நல்ல நிலையில் மாறியது.

சிறுமி மீண்டும் வந்தாள்

     ஒருநாள் அந்தச் சிறுமி சற்று வளர்ந்த நிலையில் மாரியிடம் வந்தாள். அவள் தன் காலணியை கேட்டாள். மாரி மகிழ்ச்சியுடன் அதைத் திருப்பிக் கொடுத்தார். ஆனால் அந்த காலணி அவளது மற்றொரு பாதத்திற்குப் பொருந்தவில்லை.

முடிவுரை

     நாம் நல்ல எண்ணங்களுடன் வாழ்ந்தால் வாழ்க்கையும் நல்லதாக இருக்கும். கவலைப்படாமல், மகிழ்ச்சியுடன் இருந்தால் வெற்றியும் செல்வமும் நம்மைத் தேடி வரும்.

6

29

உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

6

ஏ.  கடிதம்/ கதை எழுதுக                                                                                                             1X6=6

30

பதிப்பகத்தாருக்குக் கடிதம்

அனுப்புநர்

   வா. வெண்மதி,

   மாணவர் செயலர்,

   அரசினர் உயர்நிலைப் பள்ளி,

   தணிகைப்போளூர்,

   இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

பெறுநர்

   தமிழ்நிலா பதிப்பகம்,

   4, வள்ளுவர் தெரு,

   மதுரை-2.

ஐயா,

   பொருள் : தமிழ்-தமிழ் அகராதிகள் அனுப்பக்கோருதல் சார்பாக.

               வணக்கம். எங்கள் பள்ளி நூலகத்திற்காக தமிழ்-தமிழ் அகராதிகள் பத்துப் படிகள் தேவைப்படுகின்றன. எனவே மேற்கண்ட முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அகராதிகளை அனுப்புமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி ஐயா!!

இணைப்பு:

  1.வங்கியில் பணம் செலுத்தியதற்கான வரைவோலை நகல்.

                                                                                                                       இப்படிக்கு,

                                                                                                     தங்கள் பனிவுடைய

                                                                                                              வா. வெண்மதி,

                                                                                                                (மாணவர் செயலர்).

இடம் : தணிகைப்போளூர்,

நாள் : 09-03-2023.

Text Box: உறைமேல் முகவரி:
தமிழ்நிலா பதிப்பகம்,
4, வள்ளுவர் தெரு,
மதுரை-2.

 

 

 

 

 


தலைப்பு: அன்பு

       அன்று ஒரு நாள் மாலைப் பொழுதில் முகிலன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தான். அங்கு  ஒரு நாய்க்குட்டி கத்தும் சத்தம் கேட்டது. அவன் சுற்று முற்றும் பார்த்தான் ஆனால், அவன் கண்ணில் நாய்க்குட்டி படவே இல்லை. ஆனாலும், சத்தம் கேட்டது. அவன் அருகில் உள்ள குழிக்குள் எட்டிப் பார்த்தான். கத்தும் சத்தம் அங்கிருந்துதான் வந்தது. அதில் ஒரு நாய்க்குட்டி விழுந்து கிடந்தது. அதன் மேல் சிறிது அடிபட்டிருந்தது. அதனைக் கண்ட முகிலன் அந்தக் குட்டியை வெளியே எடுத்து அதற்கு முதலுதவி செய்தான் அந்தக் குட்டிக்கு உரிமையாளர் யாரும் அருகில் இல்லாமையால் அந்தக் குட்டியைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று பால் ஊற்றினான். அந்த நாய்க்குட்டியும் வயிறாரக் குடித்த பின் அங்கேயே தூங்கியது. சிறு நேரத்திற்குப் பின் எழுந்து தன்னைப் பாதுகாத்த முகிலனைப் பார்த்து வாலாட்டியது.

6

பகுதி - VIII

31

அ. பாலைவனம்  ஆ. சரக்குந்து

2

32

அ. அவன் வீடு எங்கே உள்ளது? ஆ. ஏன் நேற்று பள்ளிக்கு வரவில்லை?

இ. திருக்குறளை இயற்றியவர் யார்?    (மாதிரி விடைகள்)

3

33

அ. இரக்கம்  ஆ. பயம்

2

34

மாலையில் விளையாடுவோம், பிறருக்கு உதவுவோம், உடற்பயிற்சி செய்வோம்

3

 


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை