9 TH STD TAMIL HALF YEARLY QUESTION PAPER & ANSWER KEY RANIPET

 


(இராணிப்பேட்டை, வேலூர்,காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை,திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது)

இராணிப்பேட்டை மாவட்டம்அரையாண்டுத்தேர்வு விடைக்குறிப்புகள், 2025

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம்தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                       மதிப்பெண் : 100

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வி.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

. மலையாளம்

1

 

2.

. சிற்றிலக்கியம்

1

 

3.

ஈ. பிலரி

1

 

4.

இ, வளர்க

1

 

5.

இ. எந்த ஓவியம்

1

 

6.

இ. திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள்

1

 

7.

ஆ. களர்நிலம்

1

 

8.

ஆ மட்டும் சரி

1

 

9.

. முல்லை

1

 

10.

. நாணமும் இணக்கமும் 

1

 

11.

இ. செய்தித்தொடர்

1

 

12.

. பாரதிதாசன்

1

 

13.

ஆ. குடும்ப விளக்கு

1

 

14.

இ. உலகம்

1

 

15.

இ. உரிச்சொல் தொடர்

1

 

பகுதி – 2 / பிரிவு - 1

16

. மதுரைக்கு அருகே எங்கு அகழாய்வு நடைபெறிகிறது?

. தொன்மையானவை எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்ட்வை எனக் கண்டறியப்பட்டுள்ளன?

1

1

 

17

இரண்டிரண்டு அடிகளில் எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.

2

 

18

ஏரி , குளம், குட்டை, கண்மாய்

2

 

19

·        கலித்தொகை ஏறுதழுவுதல்  

·        புறப்பொருள் வெண்பாமாலை எருதுகோள்

·       பள்ளு எருதுகட்டி

2

 

20

போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரர்களுக்கு நடப்படுவது நடுகல்.

2

 

21

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை

2

 

பகுதி – 2 / பிரிவு - 2

22

சென்றனர் (அ) செல்கின்றனர் (அ) செல்வர்

2

 

23

தப்பினான்

2

 

24

அ. வாழ்க்கை மேடும் பள்ளமும் நிறைந்தது

ஆ. நண்பர்கள் இருவரும் நகமும் சதயும் போல இருந்தனர்    (மாதிரி விடைகள்)

2

 

25.

. நடுகல்.   . நீர் மேலாண்மை

2

 

26.

கால்

2

 

27.

கொடுத்த = கொடு + த் + த் +அ

கொடு- பகுதி , த்- சந்தி, த் –இறந்தகால இடைநிலை, அ- பெயரெச்ச விகுதி

2

 

28.

எட்டு, எடு,கால், எல்,பூச்சி

2

 

பகுதி – 3    பிரிவு - 1

29

1.     மூன்று -  தமிழ்

2.    மூணுமலையாளம்

3.    மூடு தெலுங்கு

4.    மூருகன்னடம்

5.    மூஜிதுளு

3

 

30

·        நீரை அளவோடு பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.

  • நீர்நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.
  • மழைநீரைப் பயன்படுத்தும் முறை அறியவேண்டும்.
  • இளம் தலைமுறையினர்க்கு நீர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும்.

3

 

31.

. காங்கேயம் மாடுகள் அ. சிவப்பு  இ. காங்கேயம் மாடுகள்

3

 

பகுதி – 3   பிரிவு - 2

32

·        முத்தமிழாய் பிறந்தது

·        மூன்று பாவினங்களால் வளர்ந்தது

·        சிற்றிலக்கியங்களைத் தந்தது

·        தெளிந்த அறிவினால் முத்திக் கனியைத் தந்தது

·        நாளும் நலமுடன் வளர்ந்தது

3

 

33.

முழு உருவச் சிற்பம்:   உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு 

                                   உருவத்துடன் அமைந்து இருக்கும்.

புடைப்புச் சிற்பம்:      புடைப்புச் சிற்பத்தில் முன்பகுதி மட்டுமே தெரியும் படி அமைந்து இருக்கும்.

3

 

34.

.

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்-அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனை ஒவ்வா நலமெல்லாம்

                          (அல்லது)

.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவேஅவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மன னே

    நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே                                               

    விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்

3

 

பகுதி – 3   பிரிவு - 3

35

    I.      எண்ணலளவை ஆகுபெயர்:

                                                       "ஒன்று பெற்றார் ஒளிமயம்"

            ஒன்று என்னும் எண்ணுப்பெயர் அவ்வெண்ணுக்கு தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.

   II.      எடுத்தலளவை ஆகுபெயர்:

                                                       "இரண்டு கிலோ கொடு"

       நிறுத்து அளக்கும் எடுத்தல் அளவைப் பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது

 

  III.      முகத்தலளவை ஆகுபெயர்:

                                                       "அரை லிட்டர் வாங்கு"

        முகந்து அளக்கும் முகத்தல் அளவைப் பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

  IV.      நீட்டலளவை ஆகுபெயர்:

                                                       "ஐந்து மீட்டர் வெட்டினார்"

         நீட்டி அளக்கும் நீட்டலளவைப் பெயர் அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆகி வந்தது.

3

 

36.

. எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களில் வல்லினம் மிகும்.

-டு  : எட்டுத்தொகை 'பத்துப்பாட்டு'

. திசைப்பெயர்களில் வல்லினம் மிகும்.

-டு : கிழக்குப் பகுதி 'வடக்குப் பக்கம்

3

 

37

சீர்

அசை

வாய்பாடு

பிறர்நாணத்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

தக்கது

நேர்+நிரை

கூவிளம்

தான்நாணான்

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

ஆயின்

நேர்+நேர்

தேமா

அறம்நாணத்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

தக்கது

நேர்+நிரை

கூவிளம்

உடைத்து

நிரைபு

பிறப்பு

3

 

பகுதி – 4

38

.

·        திருநாட்டில் உள்ள நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கின.

·        அதைக் கண்டு அஞ்சிய வாளை மீன்கள் துள்ளிக்குதித்தன

·        இக்காட்சியானது வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்றுள்ளது.

5

 

38

.

சொற்பொருள் பின்வருநிலை அணி:

ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொற்பொருள் பின்வருநிலை அணி ஆகும்.

சான்று:

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை.

அணிப்பொருத்தம்:

    ‘செல்வம்என்னும் சொல் ஒரே பொருளில் பின்னரும் பலமுறை வருவதால் இக்குறளில் சொற்பொருள் பின்வருநிலை அணி பயின்று வந்துள்ளது.

5

 

39

.

5

 

39

. வரவேற்பு மடல்

இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி, தணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம்.

நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை

"சுத்தம் சோறு போடும்"

"கந்தையானாலும் கசக்கிக் கட்டு"

"கூழானாலும் குறித்துக் குடி"

 

        என்னும் பழமொழிக்கு ஏற்ப எங்கள் பள்ளி சிறப்பாக அமைந்துள்ளது. தூய்மையே எங்களின் தாரக மந்திரம். நெகிழிப் பயன்பாடு எங்கள் பள்ளியில் தடைசெய்யப்பட்டுள்ளது. மட்கும் குப்பை, மட்கா குப்பைகளுக்கு என தனித் தனி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகளுக்கும் தனித் தொட்டிகள் உள்ளன இயற்கை உரம் தயாரித்து எங்கள் பள்ளியில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்கிறோம். மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக எம் பள்ளியைத் தேர்ந்தெடுத்து விருது பெற்றுள்ள இப்பெரு விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே!

   நேரிய பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே! கடமை உணர்வுடன், உழைப்பைத் தன் உடைமை ஆக்கியவரே! மாவட்டம் கல்வியில் சிறந்தோங்கிட இராப்பகலாய் உழைத்தவரே! குப்பைகளைப் பக்குவமாய் பிரித்துப் பயன்படுத்த நல்வழி காட்டிய அன்னப் பறவையே! I

    ஏழை மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் வாழ்விலும் ஒளி ஏற்றிட, சிகரம் தொட்டிட சீரிய வழி சமைத்தவரே! எம் மாவட்டக் கல்வி அலுவலரே! உம்மை எங்கள் பள்ளியின் சார்பில் வருக! வருக! என உளம் மகிழ வரவேற்கிறோம்.

                                                                                                                                    நன்றி.

                                                                                                                                  இவண்,இரா மணிமாறன்,(மாணவர் செயலர்)

5

 

40

)

ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

      என்னை எழுது என்று

      சொன்னது இந்த காட்சி

      இது அர்த்தமுள்ள காட்சி

      விழிப்புணர்வுக்கான காட்சி

5

 

41

உரிய விவரங்களுடன் சரியாக நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

 

42

அ. உரிய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

ஆ. 1. ஒவ்வொரு மாரும் இயற்கையாக மலரும்போது சிறப்பினைப் பெறுகிறது.

      2. சூரியன் மறைவு நிறம் எனக்கு மிகவும்பிடித்த நிறமாகும்.வானவில்லின் அழகு இரண்டாவதாகப் பிடிக்கும்.   

5

 

 

பகுதி – 5

 

 

43 .

ü  தமிழ் மொழி தொன்மையும் சிறந்த இலக்கண இலக்கிய வளமும் உடையது.

ü  தமிழ் மொழி உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது.

ü  திராவிட மொழிகளில் பிற மொழி தாக்கம் குறைந்த மொழி தமிழாகும்.

ü  பிற திராவிட மொழிகளின் தாயாகக் கருதப்படுகிறது.

ü  ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன.

ü  இந்திய நாட்டின் பல பழங்கால கல்வெட்டுகளில் தமிழ் மொழியே இடம் பெற்றுள்ளது.

ü  இவ்வாறு தனித்தன்மை மாறாமல் காலம் தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகத் தமிழ் மொழி விளங்குகிறது

8

 

·        திருநாட்டில் காவிரி வளத்தைத் தருவதற்காக கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.

·         வயல்களில் களை எடுக்கும் உடைத்தியரின் கால்கள் சங்குகளால் இடருகின்றன.

·         குளங்களே கடல் போன்று காட்சியளிக்கின்றன

·        நீர்நிலைகளில் எருமைகள் விழுந்ததால் அச்சத்தில் வாளை மீன்கள் துள்ளி எழுந்து பாய்ந்தன

·        திருநாட்டில் நெற்கட்டுகளும் மீன்களும் முத்துக்களும் மலைபோல் குவிந்துள்ளன

·         பலவகை மரங்கள் திருநாடெங்கும் செழித்து வளர்ந்துள்ளன

8

 

44.

.

முன்னுரை :

    நீர் இன்றி அமையாது என்னும் கருத்தைத் திருவள்ளுவர் தம் குறள்கள் வாயிலாக தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.  அவருடைய கருத்துகளைக் காண்போம்.

வான் சிறப்பு :

   உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே அது மட்டுமின்றி நீரே உணவாகவும் இருக்கிறது என்பதை இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே

         "துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

          துப்பாய தூஉம் மழை"

என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார்

மழையே ஆதாரம் :

     மழை நீரே மண்ணை வளம் பெறச் செய்கிறது. பயிர்களை விளைவிக்கிறது. எரி, குளங்கள், வாய்க்கால் வழியாகப் பாசன வசதியை ஏற்படுத்தி வேளாண்மையை வளமடையச்  செய்கிறது.

நீரே ஆதாரம் :

 நீர் இல்லாமல் எத்தகையோர்க்கும் உலக வாழ்க்கை அமையாது. அது போல

மழையில்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாது. வானத்திலிருந்து மழைத்துளி மண்ணில் வீழ்ந்தால் அன்றி, உலகில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

முடிவுரை:

   தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாம் எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.

8

 

v  சு. சமுத்திரம் எழுதிய இக்கதையில், வறுமையிலும் தன் அன்பும் தன்னலமற்ற தன்மையும் குறையாத ஒரு ஏழைத்தாயின் உயர்ந்த மனிதநேயம் கதையின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

v  மரண அபாயம் வந்தபோதும் கணவனை காப்பாற்றும் அவள், பசிக்குட்டிகளுக்குள் உணவை பகிரும் போது அன்பும் கண்டிப்பும் கலந்த தாயாக இருக்கிறார்.

v  அவளது தாய்மை உணவுப் பகிர்விலும், நாய்க்குட்டிகளையும் பராமரிப்பதிலும் வெளிப்படுகிறது.

v  தன்னால் பெற்றவரல்லாதவர்களையும் தாயன்புடன் பராமரிக்கும் அவளின் செய்கைகள் மனிதநேயத்தின் உச்சக்கட்டமாகக் கூறப்படுகிறது.

v  தாய்மை என்பது வறுமையைக் கடந்து மகத்துவமடைகிறது என்பதை இந்தக் கதை வலியுறுத்துகிறது.

8

 

45 .

நண்பனுக்குக் கடிதம்                                                                                                                                           

திருத்தணி,                                                                                                                                       09-06-2025

அன்புள்ள  நண்பன் எழிலனுக்கு,


       முகிலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், நலம் நலமறிய ஆவல். என் பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதியகால் முளைத்த கதைகள்புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இந்நூலைக் கற்று நான் பல அறிவியல் உண்மைகளை அறிந்துகொண்டேன். சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!

                                                                                                                                       அன்புடன்,                                                                                                                                                                                                                                                                                               முகிலன்.

 

உறைமேல் முகவரி:
          . எழிலன்,

          /பெ மதியரசன்,
          1/3, தெற்குமாட வீதி,     

          மதுரை.

8

 

45. .

நீர் மாசுபாடு மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள்

முன்னுரை :

      நீர் மனித வாழ்வின் அடிப்படை ஆதாரம் ஆகும். குடிநீர், விவசாயம், தொழில், சுகாதாரம் என வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் நீர் இன்றியமையாதது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் அத்துமீறிய செயல்களால் நீர் மாசுபட்டு, உயிர்களின் வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. எனவே நீர் மாசுபாடு என்ன, அதற்கான காரணங்கள் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து அறிதல் அவசியமாகிறது.

நீர் மாசுபாடு பொருள் :

    ஆறுகள், ஏரிகள், குளங்கள், நிலத்தடி நீர் மற்றும் கடல் நீர் போன்ற நீர்நிலைகளில் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் கலந்து, நீரின் இயற்கைத் தன்மையை கெடுப்பதே நீர் மாசுபாடு ஆகும்.

நீர் மாசுபாட்டின் காரணங்கள் :

     தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள், நகரங்களின் கழிவுநீர், பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் நீர்நிலைகளில் கொட்டப்படுதல், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், மதச் சடங்குகள் பெயரில் சிலை கரைப்பு போன்றவை நீர் மாசுபாட்டின் முக்கிய காரணங்களாகும்.

நீர் மாசுபாட்டின் விளைவுகள் :

      நீர் மாசுபாடு மனிதர்களுக்கு பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது. காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவுகின்றன. மேலும் நீர்வாழ் உயிரினங்கள் அழிவடைகின்றன. விவசாய உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் சமநிலை குலைகிறது.

நீர் மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள் :

      தொழிற்சாலைக் கழிவுகளை சுத்திகரித்த பின் மட்டுமே நீர்நிலைகளில் வெளியேற்ற வேண்டும். நகர கழிவுநீரை முறையாக சுத்திகரிக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, குப்பைகளை நீர்நிலைகளில் கொட்டாத பழக்கத்தை வளர்க்க வேண்டும். விவசாயத்தில் இயற்கை உரங்கள் மற்றும் உயிரியல் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். நீர்நிலைகளின் அருகே மரங்கள் நடுதல் மற்றும் நீர் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் அவசியம்.

முடிவுரை :

     நீர் மாசுபாடு மனிதகுலத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாகும். நீரைக் காக்கும் மனிதன் வாழ்வைக் காக்கிறான்என்ற உண்மையை உணர்ந்து, ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே நீர் வளங்களை பாதுகாக்க முடியும். தூய்மையான நீர் ஆரோக்கியமான வாழ்க்கை என்பதே நமது இலட்சியமாக இருக்க வேண்டும்.

8

 

 விடைக்குறிப்பைப் பதிவிறக்க


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை