அரையாண்டுத்தேர்வு -
2025 மாதிரி வினாத்தாள்
8.ஆம் வகுப்பு தமிழ் மதிப்பெண்கள்
: 100 கால அளவு : 2.30 மணி
பகுதி - 1
சரியான விடையினை
தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடை இணையும் சேர்த்து எழுதுக 7X1=7
1. இயற்கையைப் போற்றுதல் தமிழர்-------
அ) மரபு ஆ) பொழுது இ) வரவு ஈ) தகவு
2. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
அ) வைப்பு ஆ) கடல் இ) பரவை ஈ) ஆழி
3. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ----
அ) கோட்டெழுத்து ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து
4. மெல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____
அ) தலை ஆ) மார்பு இ) மூக்கு ஈ) கழுத்து
5. இனிமை+ சொல் என்பதனைச் சேர்தெழுதககிடைக்கும் சொல்
அ) இனிசொல் ஆ) இன்மைசொல்
இ) இன்சொல் ஈ) நெடுமைதேர்
6. திருக்குறளில் விடுபட்ட சீர்களுள் சரியானவற்றைத் தேர்வு
வருமுன்னர் ------ வாழ்க்கை எரிமுன்னர் ------ போலக் கெடும்
7. அடித்தான்- இச்சொல்லுக்கான வேர்ச்சொல்லைத் தேர்க
அ) அடித்து ஆ) அடிக்க இ) அடி ஈ) அடித்த
பிரித்து எழுதுக 2X1=2 8. என்றென்றும் 9. கனகச்சுனை
சேர்த்து எழுதுக 2X1=2 10. என்று+ஆய்ந்து 11. பருத்தி+எல்லாம்
பொருள் தருக 2X1=2 12. பண் 13. தடம்
சொற்றொடரில் அமைத்து எழுதுக 2X1=2
14. முழுவதும் 15. அழகுக்காக
கோடிட்ட
இடங்களை நிரப்புக 4X1=4
16. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் -------
17. இயற்கைத்தவம்
என்றழைக்கப்படும் நூல்---- 18.
‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் -
19. வினைமுற்று------
வகைப்படும்
பகுதி - II பிரிவு-1
எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடை தருக 6X2=12
20. பழியின்றி
வாழும் வழியாகத்திருக்குறள் கூறுவது யாது?
21. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை
யாவை?
22. ஓவிய எழுத்து என்றால் என்ன? 23. பகைவர்களிடம்
நாம் நடந்துகொள்ள வேண்டிய முறையாது?
24. தமிழ் இசையோடு இணைந்து
இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?
25. பட்டமரம் எதனை
நினைத்துக் கவலை அடைந்தது?
26. எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள்
எனக் கூறுகிறோம்? 27.'தமிழ்நாட்டின்
ஹாலந்து'எது? ஏன்?
பிரிவு-1
எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடை தருக 6X2=12
28. ஒரு சொல் ஒரே தொடரில்
பல பொருள் தருமாறு எழுதுக - அணி
29. சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
அ. சிரம்
என்பது ----- (தலை
/ தழை) ஆ.
இலைக்கு வேறு பெயர்--- (தளை / தழை)
30. கலைச்சொல் எழுதுக அ. Reform ஆ. Consonant
31. பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில்
நிறுத்தக்குறிகளை இடுக.
அ. பூக்கள் நிறைந்த
இடம் சோலை ஆகும்
ஆ. திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும்
முப்பால் பகுப்பு கொண்டது
32. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
33. தன்வினை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக 34. எழுத்துகளின்
பிறப்பு என்றால் என்ன?
35.
ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள
வேறுபாடுகள் யாவை?
பகுதி - III பிரிவு-1
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக 2X3=6
36. புத்தியைத்தீட்டி
வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
37. தமிழையும்
கடலையும் ஒப்பிட்டுத் தமிழழகனார் கூறுவன யாவை?
38. திருக்கேதாரத்தைச்
சுந்தரர் எவ்வாறு வருணனைசெய்கிறார்?
பகுதி - III பிரிவு-2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக 2X3=6
39. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க
கவிமணி எனப் போற்றப்படும் தேசிக விநாயகனார்,குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்;
முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர்,
ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம்,
கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல கவிதை நூல்களையும் உமர்கய்யாம்
பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்.
அ.கவிமணி எனப்போற்றப்படுபவர்
யார்? ஆ.கவிமணி எங்கு பிறந்தார்? இ.கவிமணி படைத்த நூல்கள் யாவை?
40. நோய்கள் பெருகக் காரணம் என்ன? 41. கரூர் மாவட்டம் பற்றிய
செய்திகளைச் கருக்கி எழுதுக
பகுதி - III பிரிவு-3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக 2X3=6
42. செய்வினை, செயப்பாட்டு வினையாக
மாறும்போது நிகழும் மாற்றங்கள் யாவை?
43. வினையெச்சத்தின்
வகைகளை விளக்குக 44. பிறிது மொழிதல் அணி-விளக்குக.
பகுதி - IV
அடிபிறழாமல் எழுதுக 2+3=5
45. “விலங்கொடு” எனத்தொடங்கும்
குறளை அடிமாறாமல் எழுதுக.
46. “ மாமழை” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல்
எழுதுக (அல்லது)
“ வாழ்க நிரந்தரம்” எனத்தொடங்கும்
பாடலை அடிமாறாமல் எழுதுக
பகுதி - V
பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக. 3X6=18
47. அ . இருப்பிடச் சான்று வேண்டி
வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக. (அல்லது)
ஆ. குடிநீர்
தட்டுப்பாட்டைச் சரிசெய்து தருமாறு நகராட்சித்தலைவருக்கு விண்ணப்பம் எழுதுக.
48. அ. வாழ்க்கையில்
கடைபிடிக்கவேண்டிய நற்பண்புகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக. (அல்லது)
ஆ. உழவுத்தொழில்
சிறக்கஇன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?
49. அ. தமிழ்வழிக் கல்வி குறித்து திரு.வி.க கூறுவன
யாவை? (அல்லது)
ஆ. எழுத்துகளின்
தோற்றம் குறித்து எழுதுக.
பகுதி - VI
பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக. 2X8=16
50. அ. ”வெட்டுக்கிளியும் சருகுமானும்” என்ற கதையைச் சுருக்கி
எழுதுக (அல்லது)
ஆ.”காலம் உடன் வரும்” என்ற கதையைச் சுருக்கி
எழுதுக
51. அ கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக:
முன்னுரை - நூலகத்தின் தேவை- வகைகள்-
நூலகத்தில் உள்ளவை- படிக்கும் முறை- முடிவுரை (அல்லது)
ஆ. ” உழவே உயர்வு” என்ற தலைப்பில் கட்டுரை
எழுதுக