9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON AUGUST WEEK-1

  9. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 28-07-2025 முதல்  01-08-2025    

மாதம்          ஆகஸ்டு       

வாரம்     :   முதல் வாரம்                                               

வகுப்பு  :  ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     : 1. மார்கழிப்பெருவிழா 

                                            2. தாய்மைக்கு வறட்சியில்லை

1.கற்றல் நோக்கங்கள்   :

      @ மனிதம் சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயப் பண் புடன் வாழ்தல்

@ விழாாக்கள் பண்பாட்டின் தொடர்ச்சியாாகக் கொண்டாாடப்பட்டு வருபவைை என்பதைை உணர்ந்து பங்கேேற்றல்.

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்



3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

     @ பனி மிகுந்த மாதம் எது? என்ற வினாவைக் கேட்டு,மாணவர்கள் கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்

      Ø தாயைப் பிடிக்காதவர்கள் இவ்வுலகில் யாரேனும் இருப்பார்களா? என்ற வினாவைக் கேட்டு,மாணவர்கள் கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :

  • திருப்பாவை - ஆண்டாள்- பன்னிரு ஆழ்வார்கள்
  • திருவெம்பாவை - மாணிக்க வாசகர்- நாயன்மார்கள்            
  • கர்நாடக மாநிலம், குல்பர்கா நகர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு வறுமையான குடும்பம் வாழ்ந்து வந்தது.
  • ஒருநாள் அங்கு வந்த அரசு அதிகாரி அந்த வறுமையான குடும்பத்திற்கு உணவளித்து உதவி செய்ய முற்பட்டார்.
  • ஆனால் பசியை விட மானம் பெரிது என்று எண்ணிய அந்த குடும்பத்தினர் இந்த உணவை வாங்குவதற்குத் தயங்கினர்.
  • ஒரு வழியாக அவர் அளித்த உணவை வாங்கியதும், அவர்களுடைய குழந்தைகளோடு வளர்ந்து வந்த நாய்க்குட்டிகளும் பசியால் ஒலியெழுப்பின.
  • அந்த ஏழைத் தாய் தன்னிடம் இருந்த உணவை அந்த நாய்க் குட்டிகளுக்கு ஊட்டிவிட்டாள். 
  • அவனது தட்டில் உணவு குறைய குறைய தாய்மை கூடிக்கொண்டே சென்றது. 

5.ஆசிரியர் செயல்பாடு :

   @ திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை இசையுடன் பாடுதல்

     #  ஆசிரியர், தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற இந்த சிறந்த கதையை உடல் மொழிகள் மூலமும் மெய்ப்பாடுகள் மூலமும் மாணவர்களுக்குப் பொருள் விளங்குமாறு எடுத்துக் கூறுதல்.

§  இக்கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மாணவர்களைத் தேர்வு செய்து தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற கதையை நாடகமாக நடித்துக் காட்டச் செய்தல்

6.கருத்துரு வரைபடம்:

7.மாணவர் செயல்பாடு:

   @ விழாக்கள் பண்பாட்டின் தொடர்ச்சி என உணர்தல்

Ø  மாணவர்கள் வறுமையை விடத் தன்மானம் பெரிது என உணர்தல்.

Ø   தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை அறிந்துகொள்ளுதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
Ø  திருப்பாவையை இயற்றியவர் யார் ?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

2. ஏழைத்தாய் ஏன் கோபம் கொண்டாள்?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

3. Ø   ”தாய்மைக்கு வறட்சி இல்லை” என்ற சிறுகதையை சுருக்கி எழுதுக

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

       9047- மனிதம் சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயம் பண்புகளைத் தக்க சூழலில் உணர்ந்து பின்பற்துதல்.

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை