9 TH STD TAMIL FIRST MID TERM QUESTION PAPER & ANSWER KEY CHENNAI DISTRICT

 


சென்னை & செங்கல்பட்டு மாவட்டம் - முதல் இடைப் பருவத்தேர்வு

ஜூலை , 2024-2025

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம்தமிழ்

விடைக் குறிப்புகள்

                                                                    பகுதி – 1                                                     6×1=6

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1

2.

. சிற்றிலக்கியம்

1

3.

ஈ. புலரி

1

4.

ஈ. ஓடி வா ஓடி வா

1

5.

அ. வினையெச்சம்

1

6.

இ. ஈரோடு தமிழன்பன்

1

                                                             பகுதி – II  பிரிவு-1                                   3×2=6

7.

மணிபோல் தெளிவான நீரும், வெட்ட வெளியான நிலமும், ஓங்கி உயர்ந்த மலையும் நிழல் தருகிற காடும் ஆகிய நான்கும் அமைந்து இருப்பதே ஒரு நாட்டின் அரண் ஆகும்.

2

8.

இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு கண்ணி என்று பெயர்.

2

9.

வானவில்

2

10

தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு

2

11

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை

2

                                                                     பிரிவு-2                                                  3×2=6

12

·        அளபெடை இரண்டு வகைப்படும். 

·        அவை: உயிரளபெடை, ஒற்றளபெடை.

2

13

அ, பேரகராதி  ஆ. நீர் மேலாண்மை

2

14

அ. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது

ஆ. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்

2

15

2 வகை – பகுபதம், பகாப்பதம்

2

16

அ. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
ஆ. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

 

2

 

                                                             பகுதி – III  பிரிவு-1                                   3×3=9

17.

1.     மூன்று -  தமிழ்

2.    மூணுமலையாளம்

3.    மூடு தெலுங்கு

4.    மூருகன்னடம்

5.    மூஜிதுளு

3

18.

செய்யுளில் மெய்யெழுத்துகளான ங், ஞ்,ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகியபத்தும், ஃ என்னும் ஆய்தஎழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடைஆகும்.

எங்ங் கிறைவன்

எஃஃ கிலங்கியகையராய் இன்னுயிர்

3

19.

·        நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.

·        நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.

3

20

·        புதுப்பொலிவுடன் தமிழ் வளர்ப்பேன்.

·        மொழிபெயர்ப்புகளை நிறைய செய்வேன்

·        அறிவியல் தமிழாய், கணினித் தமிழாய் புதுவடிவில் வளர்த்தெடுப்பேன்.

3

21

1. திருமஞ்சனம் ஆடல்  2. குளிர வைத்தல்  3. குள்ளக் குளிரக் குடைந்து நீராடி

3

                                                                          பிரிவு-2                                              1×3=3

22

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் மண்ணில்

குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ - திறம்எல்லாம்

வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்

சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே

3

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளைவயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்

3

                                                                              பகுதி – IV                                                     2×4=8

23

வள்ளுவன் வாக்கில் ஒன்றைச் சொன்னது!

காலம் யாவும் கடந்து நின்றது!

சிந்தனைச் சிறகை விரித்துப்பார் என்றது!

அறிவு சிறக்க அறிந்துகொள் என்றது!

என்னையும் கவிஞனாக்க துணிந்து நின்றது!

இது வெறும் காட்சி மட்டுமன்று!

என் மனதைக் கவினுற மாற்றிய மந்திரக்கோல்!

4

24

உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின், ‘கால் முளைத்த கதைகள்என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
                                                                                                                                           திருத்தணி,
                                                                                                                 09-06-2025

அன்புள்ள  நண்பன் எழிலனுக்கு,
      முகிலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், நலம் நலமறிய ஆவல். என் பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதியகால் முளைத்த கதைகள்புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி டைந்தேன். இந்நூலைக் கற்று நான் பல அறிவியல் உண்மைகளை அறிந்துகொண்டேன். சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!

                                                                                                                                       அன்புடன்,                                                                                                                                                     

                                                                                                                                         முகிலன்.

 

உறைமேல் முகவரி:
          . எழிலன்,

          /பெ மதியரசன்,
          1/3, தெற்குமாட வீதி,

          மதுரை.

 

4

25

பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

4

                                                                              பகுதி – V                                                     2×6=12

26

முன்னுரை:

ஆறாம் திணை என்ற சிறுகதை புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை அனுபவங்களை எடுத்துக் கூறுகிறது இதை ஆ முத்துலிங்கம் அவர்கள் இயற்றியுள்ளார் அதைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இலங்கைக்குப் புலம்பெயர்தல்:

ஆசிரியரது குடும்பம் இலங்கையில் ஒரு சிங்களர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தது அங்கு கலவரம் வளர தொடங்கியது வீட்டு முதலாளி பிரீஸ் என்பவர் ஆசிரியர் குடும்பத்தை கலவரத்திலிருந்து பாதுகாத்தது

அகதிகளாக இருந்த அவலம்:

அங்கிருந்த பல தமிழ் குடும்பங்களை அகதிகள் முகாமுக்கு அழைத்துச் சென்றனர் அங்கு ஒரு தொண்டு நிறுவனம் அவர்களுக்கு இலவசமாக உணவு உடை வழங்கியது அவர்கள் அங்கே கைதிகளைப் போல நடத்தப்பட்டனர் இது ஆசிரியரின் மனதில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது

புலம்பெயர்தலின் பாதிப்புகள்:

புலம் பெயர்ந்தவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை தங்களுடையது என்று உணர முடியாமல் தன்னுடைய தாய் நாட்டையும் பிழைக்கும் நாட்டையும் எண்ணி அடையாளக்குழப்பத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முடிவுரை:                                                                                                                                       

            புலம்பெயர்ந்தவர்கள் தளிமை, ஏக்கம், அடையாளக் குழப்பம் போன்ற அக மாற்றங்களாலும் மொழி கலாச்சாரம், சமூகம், இனம் போன்ற புற மாற்றங்களாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆறாம் திணை மிக ஆழமாக விளக்குகிறது.

 

6

27

முன்னுரை :

    நீர் இன்றி அமையாது என்னும் கருத்தைத் திருவள்ளுவர் தம் குறள்கள் வாயிலாக தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.  அவருடைய கருத்துகளைக் காண்போம்.

வான் சிறப்பு :

   உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே அது மட்டுமின்றி நீரே உணவாகவும் இருக்கிறது என்பதை இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே

         "துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

          துப்பாய தூஉம் மழை"

என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார்

மழையே ஆதாரம் :

     மழை நீரே மண்ணை வளம் பெறச் செய்கிறது. பயிர்களை விளைவிக்கிறது. எரி, குளங்கள், வாய்க்கால் வழியாகப் பாசன வசதியை ஏற்படுத்தி வேளாண்மையை வளமடையச்  செய்கிறது.

நீரே ஆதாரம் :

   நீர் இல்லாமல் எத்தகையோர்க்கும் உலக வாழ்க்கை அமையாது. அது போல மழையில்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாது. வானத்திலிருந்து மழைத்துளி மண்ணில் வீழ்ந்தால் அன்றி, உலகில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

முடிவுரை:

   தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாம் எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.

6

28

முன்னுரை :
            “நாகலிங்கம்என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “தண்ணீர்சிறுகதை சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.

குடிநீரற்ற ஊரின் நிலை :
           பெண்கள் தலையிலும், இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.

           எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவேதண்ணீர்கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.

இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் :
         இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது. இரயில் 3 கி.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.

         அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள்.

இந்திராவின் கனவு :
     அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.

இந்திரா தண்ணீர் பிடித்தல் :
            பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள்,தொடர்ந்து  பிடித்துக் கொண்டே இருந்தாள் இரயில் நகர்ந்தது.

இந்திரா எங்கே? :
        எல்லாம் பதற்றத்துடன் அண்ணான் வீடு, தம்பி வீடு, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சென்றபோது இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் ஈ, எறும்பு கூட இல்லை . குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடம் பூராவும் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.

சற்று நேரத்தில் தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! ”பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்தஎன்று தந்தை கேட்டார்.”பின்ன! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்ய?” என்று இந்திரா சொன்னாள்.

முடிவுரை :
       “உயிர் நீர்எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,  “நீர் மேலாண்மையை கட்டமைப்போம்  மழைநீர் சேகரிப்போம்.”

 

 பதிவிறக்கம் செய்ய


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை