சென்னை & செங்கல்பட்டு மாவட்டம் - முதல் இடைப் பருவத்தேர்வு
ஜூலை
, 2024-2025
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
விடைக்
குறிப்புகள்
பகுதி – 1 6×1=6 |
||||
வினா.எண் |
விடைக் குறிப்பு |
மதிப்பெண் |
||
1. |
ஆ.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
1 |
||
2. |
இ. சிற்றிலக்கியம் |
1 |
||
3. |
ஈ.
புலரி |
1 |
||
4. |
ஈ.
ஓடி வா ஓடி வா |
1 |
||
5. |
அ.
வினையெச்சம் |
1 |
||
6. |
இ. ஈரோடு தமிழன்பன் |
1 |
||
பகுதி – II பிரிவு-1 3×2=6 |
||||
7. |
மணிபோல் தெளிவான நீரும், வெட்ட வெளியான நிலமும், ஓங்கி உயர்ந்த மலையும் நிழல் தருகிற காடும் ஆகிய நான்கும் அமைந்து இருப்பதே
ஒரு நாட்டின் அரண் ஆகும். |
2 |
||
8. |
இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும்
மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு
கண்ணி என்று பெயர். |
2 |
||
9. |
வானவில் |
2 |
||
10 |
தமிழ், மலையாளம், கன்னடம், குடகு,
துளு |
2 |
||
11 |
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை |
2 |
||
பிரிவு-2 3×2=6 |
||||
12 |
·
அளபெடை இரண்டு வகைப்படும். ·
அவை: உயிரளபெடை, ஒற்றளபெடை. |
2 |
||
13 |
அ, பேரகராதி ஆ. நீர் மேலாண்மை |
2 |
||
14 |
அ. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும்
வாழப் பெருந்துணை புரிகின்றது ஆ. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில்
உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான் |
2 |
||
15 |
2
வகை – பகுபதம், பகாப்பதம் |
2 |
||
16 |
அ. சித்திரமும்
கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
|
2 |
||
பகுதி – III பிரிவு-1 3×3=9 |
||
17. |
1.
மூன்று - தமிழ் 2.
மூணு – மலையாளம் 3.
மூடு
– தெலுங்கு 4.
மூரு – கன்னடம் 5.
மூஜி - துளு |
3 |
18. |
செய்யுளில் மெய்யெழுத்துகளான ங், ஞ்,ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகியபத்தும், ஃ என்னும்
ஆய்தஎழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடைஆகும். எங்ங் கிறைவன் எஃஃ கிலங்கியகையராய் இன்னுயிர் |
3 |
19. |
·
நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். ·
நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தோர்
மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர். |
3 |
20 |
·
புதுப்பொலிவுடன்
தமிழ் வளர்ப்பேன். ·
மொழிபெயர்ப்புகளை
நிறைய செய்வேன் ·
அறிவியல்
தமிழாய், கணினித் தமிழாய் புதுவடிவில்
வளர்த்தெடுப்பேன். |
3 |
21 |
1. திருமஞ்சனம் ஆடல்
2. குளிர வைத்தல் 3. குள்ளக் குளிரக்
குடைந்து நீராடி |
3 |
பிரிவு-2 1×3=3 |
||
22 அ |
தித்திக்கும்
தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக்
கனியேஎன் முத்தமிழே –
புத்திக்குள் உண்ணப்
படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும் விண்ணப்பம்
உண்டு விளம்பக்கேள் –
மண்ணில் குறம்என்றும்
பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு உறவுஎன்று
மூன்றுஇனத்தும் உண்டோ - திறம்எல்லாம் வந்துஎன்றும் சிந்தா
மணியாய் இருந்தஉனைச் சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே
|
3 |
ஆ |
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம்
குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளைவயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம் |
3 |
பகுதி – IV 2×4=8 |
||
23 |
வள்ளுவன்
வாக்கில் ஒன்றைச் சொன்னது! காலம்
யாவும் கடந்து நின்றது! சிந்தனைச்
சிறகை விரித்துப்பார் என்றது! அறிவு
சிறக்க அறிந்துகொள் என்றது! என்னையும்
கவிஞனாக்க துணிந்து நின்றது! இது
வெறும் காட்சி மட்டுமன்று! என்
மனதைக் கவினுற மாற்றிய மந்திரக்கோல்! |
4 |
24 |
உங்கள் நண்பர், பிறந்த நாள்
பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின்,
‘கால் முளைத்த கதைகள்’ என்னும் நூல் குறித்த
கருத்துகளைக் கடிதமாக எழுதுக. அன்புள்ள
நண்பன் எழிலனுக்கு,
அன்புடன்,
முகிலன்.
உறைமேல்
முகவரி: த/பெ மதியரசன், மதுரை.
|
4 |
25 |
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண்
வழங்குக |
4 |
பகுதி – V 2×6=12 |
||
26 |
முன்னுரை: ஆறாம் திணை என்ற சிறுகதை
புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை அனுபவங்களை எடுத்துக் கூறுகிறது இதை ஆ
முத்துலிங்கம் அவர்கள் இயற்றியுள்ளார் அதைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம். இலங்கைக்குப்
புலம்பெயர்தல்: ஆசிரியரது குடும்பம்
இலங்கையில் ஒரு சிங்களர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தது அங்கு கலவரம் வளர
தொடங்கியது வீட்டு முதலாளி பிரீஸ் என்பவர் ஆசிரியர் குடும்பத்தை
கலவரத்திலிருந்து பாதுகாத்தது அகதிகளாக
இருந்த அவலம்: அங்கிருந்த பல தமிழ்
குடும்பங்களை அகதிகள் முகாமுக்கு அழைத்துச் சென்றனர் அங்கு ஒரு தொண்டு நிறுவனம்
அவர்களுக்கு இலவசமாக உணவு உடை வழங்கியது அவர்கள் அங்கே கைதிகளைப் போல
நடத்தப்பட்டனர் இது ஆசிரியரின் மனதில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது புலம்பெயர்தலின்
பாதிப்புகள்: புலம் பெயர்ந்தவர்கள்
தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை தங்களுடையது என்று உணர முடியாமல் தன்னுடைய தாய்
நாட்டையும் பிழைக்கும் நாட்டையும் எண்ணி அடையாளக்குழப்பத்துடனே வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். முடிவுரை: புலம்பெயர்ந்தவர்கள்
தளிமை, ஏக்கம், அடையாளக் குழப்பம்
போன்ற அக மாற்றங்களாலும் மொழி கலாச்சாரம், சமூகம், இனம் போன்ற புற மாற்றங்களாலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆறாம் திணை
மிக ஆழமாக விளக்குகிறது.
|
6 |
27 |
முன்னுரை : நீர் இன்றி அமையாது என்னும்
கருத்தைத் திருவள்ளுவர் தம் குறள்கள் வாயிலாக தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
அவருடைய கருத்துகளைக்
காண்போம். வான் சிறப்பு : உணவு உற்பத்திக்கு அடிப்படை
நீரே அது மட்டுமின்றி நீரே உணவாகவும் இருக்கிறது என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "துப்பார்க்கு
துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்
மழை" என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார் மழையே ஆதாரம் : மழை நீரே மண்ணை வளம் பெறச்
செய்கிறது. பயிர்களை விளைவிக்கிறது. எரி, குளங்கள்,
வாய்க்கால் வழியாகப் பாசன வசதியை ஏற்படுத்தி வேளாண்மையை வளமடையச் செய்கிறது. நீரே ஆதாரம் : நீர் இல்லாமல்
எத்தகையோர்க்கும் உலக வாழ்க்கை அமையாது. அது போல மழையில்லையானால் ஒழுக்கமும்
நிலைபெறாது. வானத்திலிருந்து மழைத்துளி மண்ணில் வீழ்ந்தால் அன்றி, உலகில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. முடிவுரை: தண்ணீரின் முக்கியத்துவத்தை
உணர்ந்த நாம் எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக, தண்ணீரைச்
சிக்கனமாகப் பயன்படுத்துவோம். |
6 |
28 |
முன்னுரை : குடிநீரற்ற ஊரின் நிலை : எங்காவது கிணறு தோண்டினாலும்
கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே
உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே
இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை. இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் : அந்த இரயிலில் வரும் நீருக்காக
ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும்
முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள். இந்திராவின் கனவு : இந்திரா தண்ணீர் பிடித்தல் : இந்திரா எங்கே? : சற்று நேரத்தில் தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! ”பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்த” என்று
தந்தை கேட்டார்.”பின்ன! நாளைக்கு வரைக்கும்
குடிக்க என்ன செய்ய?” என்று இந்திரா சொன்னாள். முடிவுரை : |
|
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி