முதல்
இடைப்பருவத்தேர்வு 2025, திருப்பத்தூர் மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
8X1=8
வி. எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது |
1 |
2. |
இ) எம்+தமிழ்+நா |
1 |
3. |
ஆ) மணிப்பெயர் வகை |
1 |
4. |
அ) வேற்றுமை உருபு |
1 |
5. |
இ) வான்வெளியில்,
பேரொலியும் (பேரொலியில் என வரவேண்டும்) |
1 |
6. |
இ)
பரிபாடல் அ) கருவளர் – உரு அறிவாரா |
1 |
7. |
இ)
வானம் |
1 |
8. |
ஈ)
அடுக்குத்தொடர் |
1 |
எவையேனும்
2 வினாக்களுக்கு விடையளி 2X2=4 |
||
9 |
சிலப்பதிகாரம், மனிமேகலை |
2 |
10 |
·
செந்நெல் ·
வெண்ணெல் ·
கார்நெல் ·
சம்பா மற்றும் உள்வகைகள் ·
மட்டை |
2 |
11 |
ü முதுகினால் சூரியனை
மறைக்கும்போது மேகங்கள் துணிச்சலானவை. ü தாகம் தீர்க்கும்போது
மேகங்கள் கருணை மிக்கவை |
2 |
எவையேனும்
3 வினாக்களுக்கு விடையளி 3X2=6 |
||
12 |
ü பல கை என்று வந்தபோது
கையைக் குறித்தது. ü பலகை என்று வந்தபோது
மரப்பலகையைக் குறித்தது. ü தனித்தும், தொடர்ந்தும் வெவ்வேறு
பொருளைக் குறித்ததால் பொதுமொழி ஆனது. |
2 |
13 |
அ.
செயற்கையை
விட இயற்கை சிறந்தது, ஆ) விதியால் வீதிக்கு வந்தான் |
2 |
14 |
அ. புதுமை ஆ. காடு |
2 |
15 |
அ. நிலக்காற்று ஆ) உயிரெழுத்து |
2 |
எவையேனும்
3 வினாக்களுக்கு விடையளிக்க
3X3=9 |
||
17 |
அ) நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது |
3 |
18 |
அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை ,
தெரிதல்-தெரியாமை , பிறத்தல்-பிறவாமை |
3 |
19 |
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே! |
3 |
எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்க 3X5=15 |
|||||||
20 |
மாநில
அளவில் நடைபெற்ற
‘கலைத்திருவிழா’ போட்டியில் பங்கேற்று
‘கலையரசன்’ பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல்
எழுதுக காந்தி தெரு, 29-06-2025 அன்புள்ள நண்பன் அமுதனுக்கு, நலம். நலமறிய ஆவல். மாநில அளவில் நடைபெற்ற ‘கலைத்திருவிழா’ போட்டியில் பங்கேற்று ‘கலையரசன்’ பட்டம் பெற்ற தோழனே உன்னை வாழ்த்துகிறேன். இதே போல்
பல வெற்றிகளைப்பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இப்படிக்கு, உன் அன்புள்ள நண்பன் மா.குறளரசன்.
|
5 |
|||||
21 |
படிவத்தை
உரிய விவரங்களுடன் சரியாக நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
|||||
22 |
காற்று மாசுபாட்டைத்
தடுக்கும் வழிமுறைகள் முன்னுரை: நாம் தினமும் சுவாசிக்கின்ற
காற்று சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது காற்று பல
இடங்களில் மாசுபடுகிறது. இதனால் மனிதர்களும், விலங்குகளும்,
மரங்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த
காற்று மாசுபாட்டை தடுக்க நாம் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம். பசுமை பரப்புகளை அதிகரித்தல்: மரங்கள் காற்றில் உள்ள
கார்பன் டை ஆக்ஸைடை இழுத்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன. ஆகையால், அதிகமாக மரங்களை நடுவது காற்று மாசுபாட்டை குறைக்கும் முக்கியமான
வழியாகும். மரங்களை வெட்டாமல், புதிய மரஞ்செடிகளை நட்டு வளர்ப்பதே
இதற்கான சிறந்த வழியாகும். பொதுப்
போக்குவரத்தை பயன்படுத்துதல்: ஒவ்வொருவரும் தனித்தனியாக
வாகனங்களை பயன்படுத்துவது காற்று மாசுபாட்டை அதிகரிக்கச் செய்யும். இதற்குப்
பதிலாக பேருந்து,
ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமாக
காற்று மாசுபாட்டைப் பெருமளவு குறைக்கலாம். மேலும் பள்ளி மாணவர்களிடையே இது குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம். எரிபொருள்
சிக்கனமுடைய வாகனங்கள்: மின்சார வாகனங்கள்
மற்றும் எரிபொருள் சிக்கனமான வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டைக்
கட்டுப்படுத்தலாம். பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றால் இயங்கும்
வாகனங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது தொழிற்சாலைகளில்
கட்டுப்பாடுகள்: ü தொழிற்சாலைகள்
வெளியிடும் வேதியியல் வாயுக்கள் மற்றும் புகையை சுத்திகரிக்கும் கருவிகள் (filter)
மூலம் வெளியிட வேண்டும். அரசு விதிகளை கடைப்பிடிக்கச்
செய்ய வேண்டும். ü மின்
உலைகள், பசுமை
தொழில்நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் தானாகவே காற்று மாசுபாடு
குறையும். குப்பைகளைச்
சரியாக நிர்வகித்தல்: குப்பைகளை திறந்தவெளியில்
எரிக்காமல்,
அதனை முறையாக மண்ணில் புதைக்கும் அல்லது செய்வது முக்கியம். மேலும் மட்கும் குப்பை,
மட்காத குப்பை என்ற வகைகளில் பிரித்து மறு சுழற்சி செய்வது காற்று
மாசுபாட்டைக் குறைக்கும். முடிவுரை: காற்று மாசுபாட்டைத்
தடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையுமாகும். இயற்கையைப் பாதுகாக்கும்
முயற்சியில் நாம் ஒட்டுமொத்தமாக செயல்பட்டால் மட்டுமே, சுத்தமான காற்றையும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும். இன்று செயல்
படுத்துங்கள், நாளைக்கு நலமாக இருப்போம்!
|
5 |
|||||
23 |
அ) ஒருவரிடம்
அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை
சென்றடைகிறது.அதுவே
அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது – நெல்சன்
மண்டேலா ஆ) மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே
அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே
செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் – ரீடா மேக் ப்ரெளன்
|
5 |
|||||
கட்டுரை
வடிவில் இரண்டு பக்க அளவில் விடையளி 1X8=8 |
|||||||
24 அ |
நாட்டுவளமும் சொல்வளமும் முன்னுரை: 'நாடும்
மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார்
மகாகவி பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ், என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக்
கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று. விடை
பகர்கிறது, தமிழ்ச்சொல்வளம். தேவநேயப்பாவாணர்: தமிழ்
மொழியின் பழமையும் செம்மையையும் ஆய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார்.
தமிழ்ச் சொல்வளம் பற்றிய அவரது கருத்துகளும் விளக்கங்களும் தமிழ் மொழி மீதான
பெருமிதத்தை மிகுதிப்படுத்துகின்றன. ஒரு நாட்டின் வளமும், அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் மொழி ஞாயிறு
தேவநேய பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது. சொல்வளத்திற்கான சில சான்றுகள்: ü ஆங்கிலத்தில்
இலையைக் குறிக்க “LEAF”
என்ற ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் தமிழிலோ இலையின் வன்மை,
மென்மையைக் கருத்தில் கொண்டு தாள்,
ஓலை தோகை ,இலை
என பலவகைப் பெயர்களாக அழைக்கப்படுகின்றன. ü விளை
பொருட்களின் மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு. ü பயிர்களின்
அடிப்பகுதி,
கிளைப் பகுதி,
காய், கனி,
தோல்,
மணி,
இளம் பயிர் முதலானவற்றை குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் உள்ளது
குறிப்பிடத்தக்கது. ü செந்நெல்,
வெண்ணெல்,
கார்நெல்,
சம்பா,
மட்டை என எண்ணற்ற நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன.
இவை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் விளையாதது குறிப்பிடத்தக்கது. ü தமிழ்நாட்டைத்
தவிர வேறு எங்கும் விளையாத சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி
இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும் முடிவுரை:
சொல்வளம் நிறைந்த மொழியானது
அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன்
பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும்
உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி
அறியலாம் |
8 |
|||||
ஆ |
பிரும்மம் முன்னுரை: இயற்கையோடு இணைந்து
வாழ்வதும் இயற்கையைப் பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப
உறுப்பினர்கள் இணைந்து நட்டு வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி
பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப் பிரபஞ்சனின் 'பிரும்மம்'
என்ற சிறுகதை அழகாகக் காட்சிப்படுத்துகிறது. புதிதாகக்
கட்டிய வீடு: இச்சிறுகதையில் வரும்
குடும்பத்தினர் புதிதாக வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால்
வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள்
அனைவரும் முடிவு செய்தனர். அதற்காக ஒவ்வொருவரும், என்ன
செய்யலாம்? என்று
தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர். குடும்ப
உறுப்பினர்களின் விருப்பம்: v குடும்பத்தின்
பெரியவரான பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு
ஏற்படும் நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார். v குடும்பத்தின்
அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து,
”வெண்டை,
கத்தரி,
தக்காளி போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு
உதவும்”
என்று கூறி தனது விருப்பத்தைத் தெரிவித்தார். v அக்குடும்பத்தில்
இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான
பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது
சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது. அப்பாவின்
முடிவு: அனைவரும் தங்களது
கருத்துக்களை தெரிவிக்க,
குடும்பத்தின் தலைவரான அப்பா ,காலியாக்க்
கிடக்கும் அந்த இடத்தில் முருங்கையை
நட்டு வளர்க்கலாம் என்று சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித
ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும் மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி,
இரண்டு நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக்
கிளை ஒன்றைக் கொண்டு வந்து அவர் நட்டார். முருங்கை
வீட்டின் அங்கமானது: v நாளுக்கு
நாள் முருங்கையின் வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக
கிளை, இலை,
காய் போன்றவற்றைத் தந்த போது அளவற்ற
மகிழ்ச்சி அடைந்தனர். v முருங்கைக்
காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது
வீட்டிற்கு வர தொடங்கினர்.
மேலும் காக்கை குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று.
முருங்கை அவர்களின் வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. மீண்டெழுந்த
முருங்கை: ஒரு நாள் காற்று பலமாக
வீசியதால் முருங்கை அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை
அடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து
முருங்கை துளிர்விடத் தொடங்கியது. அது
குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. முடிவுரை: முருங்கை என்பது வெறும்
மரமாக குடும்பத்தார் இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும்
வீடாகவும் திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கும் பண்பினை
விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல. |
8 |
|||||
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி