8 TH STD TAMIL QUESTION AND ANSWERS UNIT-8 25-26

 

8.ஆம் வகுப்பு தமிழ்

வினா விடைகள் (2025-2026)

இயல்-8

நோயும் மருந்தும்

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. உடல்நலம் என்பது _______ இல்லாமல் வாழ்தல் ஆகும்.

அ) அணி   ஆ) பணி   இ) பிணி   ஈ) மணி

2. ‘இவையுண்டார்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

அ) இ + யுண்டார் ஆ) இவ் + உண்டார்   இ) இவை+ உண்டார்   ஈ) இவை+ யுண்டார்

3. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.

அ) தாம்இனி   ஆ) தாம்மினி   இ) தாமினி   ஈ) தாமனி

குறுவினா

1. நோயின் மூன்று வகைகள் யாவை?

ü   மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.

ü   எதனாலும் தீராததன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.

ü  அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.

2. நீலகேசியில் பிறவித்துன்பத்தைத்தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?

விடை: நல்லறிவு , நற்காட்சி ,நல்லொழுக்கம்

சிறுவினா

நோயின் வகைகள், அவற்றைத்தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?

ü  நோய் மூன்று வகைப்படும்.

ü   மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.

ü   எதனாலும் தீராததன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.

ü  அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.

ü  அகற்றுவதற்கு அரியவைபிறவித்துன்பங்கள் ஆகும். இவற்றைத்தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையேஅம்மருந்துகள். இவற்றை ஏற்றோர் பிறவித்துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

சிந்தனைவினா

துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ளவேண்டிய நற்பண்புகள் யாவை?

விடை:

v  பொய்கூறாமை

v  புறம்பேசாமை

v  பிறர்பொருள் விரும்பாமை

v  சான்றாண்மையுடன் இருத்தல்

 

கற்பவை கற்றபின்

ஐம்பெருங்காப்பியங்கள் , ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகியவற்றின் பெயர்களை தொகுத்து எழுதுக

ஐம்பெருங்காப்பியங்கள்:

1.     சிலப்பதிகாரம்

2.    மணிமேகலை

3.    சீவக சிந்தாமணி

4.    வளையாபதி

5.    குண்டலகேசி

ஐஞ்சிறு காப்பியங்கள்:

1.     உதயண குமார காவியம்

2.    நாககுமார காவியம்

3.    யசோதர காவியம்

4.    சூளாமணி

5.    நீலகேசி

சட்டமேதை அம்பேத்கர் 

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இந்தியாவின் முதல் சட்டஅமைச்சர் ___________.

) இராதாகிருட்டிணன் ) அம்பேத்கர்  ) நௌரோஜி ஈ) ஜவஹர்லால் நேரு

2. பூனாஒப்பந்தம் __________ மாற்ற ஏற்படுத்தப்பட்டது.

) சொத்துரிமையை ஆ) பேச்சுரிமையை  ) எழுத்துரிமையை  ) இரட்டைவாக்குரிமையை

3. சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் ________.

) சமாஜ் சமாத சங்கம்) சமாதசமாஜ பேரவை இ) தீண்டாமை ஒழிப்புப் பேரவை ஈ) மக்கள் நல இயக்கம்

4. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ______ விருது வழங்கியது.

) பத்மஸ்ரீ    ) பாரதரத்னா  ) பத்மவிபூசண்  ) பத்மபூசன்

கோடிட்டஇடத்தை நிரப்புக.     

1. புத்தசமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் புத்தரும் அவரின் தம்மமும்

2. அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் சுதந்திர தொழிலாளர் கட்சி

3. பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் இலண்டன் சென்றார்.

குறுவினா

1. அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் குறித்து எழுதுக

·        அம்பேத்கர் இந்தியாவில் சாதிகளில் தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பில் ஆய்வு கட்டுரை ஒன்றைப் படைத்தார்

·        அதைச் சிறு புத்தகமாகவும் வெளியிட்டார்

·       அச்சில் வெளிவந்த அவரின் முதல் நூல் இதுவே ஆகும்.                  

2. தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கொண்டபணிகள் இரண்டினைஎழுதுக.

ü  ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழை 1927 ஆம் ஆண்டு துவங்கினார்.

ü  சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் இவர் சமாஜ் சமாதசங்கம் என்னும் அமைப்பைஉருவாக்கினார்.

3. வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?

விடை:  ஒடுக்கப்பட்டோருக்குத்தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்

சிறுவினா

1. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?

ü  ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்தஅரசில் அம்பேத்கர் சட்டஅமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ü  1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29 ஆம் நாள் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதஅம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்டஅரசியலமைப்புச் சட்டவரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.

2. அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி குறித்து எழுதுக.

விடை:  ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனைப் பாதுகாக்கத்தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார்; சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கித்தேர்தலில் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் பதினைந்து பேரும் வெற்றிபெற்றனர்.

நெடுவினா

பூனாஒப்பந்தம் பற்றி எழுதுக.

v  ஒடுக்கப்பட்டோருக்குத்தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

v  இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத்தேர்ந்தெடுக்கஒரு வாக்கும் ஒடுக்கப்பட்டசமூக வேட்பாளரைத்தேர்ந்தெடுக்கஒரு வாக்கும் அளிக்கும் இரட்டைவாக்குரிமைவழங்கப்பட்டது. ஆனால், இதைஏற்கமறுத்தகாந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

v  இதன் விளைவாக 1931 ஆம் ஆண்டு செப்டம்பர்த்திங்கள் இருபத்து நான்காம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி ஒடுக்கப்பட்டோருக்குத்தனி வாக்குரிமைஎன்பதற்குப் பதிலாகப் பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்தஒப்பந்தமேபூனாஒப்பந்தம் எனப்பட்டது.

சிந்தனைவினா

பாகுபாடில்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

ü  மதம், ஜாதி ஆகியவற்றை நினைக்காமல் அனைவரிடமும் சமத்துவமாக பழக வேண்டும்.

ü  நான் இந்த மதத்திற்கு உரியவன், இன்ன சாதிக்குரியவன் என்ற எண்ணத்தை முற்றிலும் தவிர்த்து, நான் ஒரு இந்தியன் என்றும் நினைப்பை உருவாக்க வேண்டும். சமத்துவம், ஒருமைப்பாட்டு உணர்வு சகிப்புத்தன்மை ஆகியவை ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.

பால் மனம்             

முன்னுரை:

    ''பால் மனம்' எனும் இக்கதை அ. வெண்ணிலா என்பவர் தொகுத்த 'மீதமிருக்கும் சொற்கள் என்னும் நூலில் இடம் பெறுகின்றது. குழந்தை கிருஷ்ணாவின் பண்புகளை இனி காண்போம்.

கிருஷ்ணாவின் செயல்கள்:

·        ஒருநாள் தெரு நாயைப் பார்த்து பரிதாபப்படுகின்றாள்.அம்மா அதைத் தொடக்கூடாது, அப்பா திட்டுவார்கள் என்றாள். அப்பா சொன்னால் தொடலாமா? என்றாள் கிருஷ்ணா.

·        தெருவில் கீரை கொண்டு வரும் பாட்டியைக் கண்டதும், அவளைத் தொடப் போகிறாள், அவள் உடம்பு சரியில்லாததால் அவளைத் தொடக்கூடாது என்றாள் அம்மா, சித்தப்பா, அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத போது நீங்கள் மட்டும் தொடலாமா? என்றாள்.

·        கிருஷ்ணா அடுத்து கைவண்டி இழுத்து வரும் ஒருவரைப் பார்த்து, அவரிடம் செருப்பு இல்லை உங்கள் செருப்பைக் கொடுங்கள் சித்தப்பா என்றாள்.

·        ன் தம்பிக்காக வைத்திருந்த பாலை எடுத்து கிருஷ்ணா ஆட்டுக்குட்டிக்குப் புகட்டுகிறாள். அம்மா என்ன மகள்? இப்படி இருக்கிறாளே! என்று புலம்புகிறார். ராமு, கிருஷ்ணாவின் மனிதநேயத்தைக் கண்டு வியக்கிறார்.

மனமாற்றம்:                                   

·        ராமு படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று, ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் திரும்புகிறார்.

·        இப்போது கிருஷ்ணாவிற்கு எட்டு வயது. அண்ணன் அண்ணியால் கிருஷ்ணா முற்றிலுமாக மாறி விட்டாள்.

·        சித்தப்பா, தம்பி தெரு நாய்க்குப் பால் சாதத்தைப் போடுகிறான் பாருங்க, டாமிக்கு தான் போடனும் என்கிறது, பிறகு ஆட்டுக்குட்டி மீது கல்லெடுத்து வீசுகிறாள்.

·        சாலை வேலை செய்யும் கூலியாள் தண்ணீர் கேட்டவுடன் கொடுக்க மறுக்கிறாள். கிருஷ்ணாவின் மன மாற்றத்தை ராமு உணர்கிறார்.

முடிவுரை:                                                  

   கடவுளின் உறுப்பினராக குழந்தை பூமியில் பிறக்கிறது. ஆனால் மனித நேயம் இல்லாத மனிதனின் உறுப்பினனாக உலகத்தை விட்டு நீங்குகிறது.

புணர்ச்சி 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.விகாரப் புணர்ச்சி _ வகைப்படும்

அ)ஐந்து   ஆ) நான்கு  இ)மூன்று  ஈ) இரண்டு

2.'பாலாடை - இச்சொல்லுக்குரிய புணர்ச்சி

அ) இயல்பு   இ) திரிதல்  ஆ) தோன்றல் ஈ) கெடுதல்

பொருத்துக,

1. மடபாண்டம்        -  அ) தோன்றல் விகாரம்

2. மரவேர்                  - ஆ) இயல்புப் புனர்ச்சி

3. மணிமுடி              - இ) கெடுதல் விகாரம்

4. கடைத்தெரு         - ஈ) திரிதல் விகாரம்

விடை:   1.    2.    3.   4.

சிறுவினா.             

1. இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக,

விடை:  நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.

    சான்று: தாய் மொழி

2. மரக்கட்டில் இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.

விடை:    மரம்+ கட்டில் - திரிதல் விகாரப்புணர்ச்சியின் படி 'ம்' என்பது 'க்' ஆகத் திரிந்து மரக்கட்டில் எனப் புணர்ந்தது. இரண்டு சொற்கள் இணையும்போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வது உண்டு, கெடுதல் விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்தது தோன்றல் விகாரத்தின் படி'க்' என்ற மெய்யெழுத்து தோன்றியது

மொழியை ஆள்வோம்

கோடிட்ட இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக.

1. சிறுமி ______ (தனது/தமது) கையில் மலர்களைவைத்திருந்தாள்.

2. அம்பேத்கர் ஒடுக்கப்பட்டமக்களின் உயர்வுக்காகத்______ ( தனது/தமது) உழைப்பைநல்கினார்.

3. உயர்ந்தோர் ________ (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ள மாட்டார்கள்.

4. இவை______ (தான்/தாம்) எனக்குப் பிடித்தநூல்கள்.

5. குழந்தைகள் ________ (தன்னால்/தம்மால்) இயன்றஉதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.

தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக

விடை:

    முதியவர் ஒருவர் தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச் சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தன்னுடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக் கொடுக்குமாறு கூறினான். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்தான் இருந்தன. எனவே, தமது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.

கட்டுரை எழுதுக. : உழைப்பேஉயர்வு.

முன்னுரை:

            ஒருவரை வாழ்வில் உயர்த்துவது அவரது உழைப்பு தான். உழைப்பு தன்னையும் தன் நாட்டையும் உயர்த்தும். உழைப்பின் சிறப்பினைக் காண்போம்.

உழைப்பின் பயன்:

    நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும். இறைவனால் முடியாத காரியம் கூட உழைப்பாலும் முயற்சியாலும் செய்ய முடியும் என்கிறது திருக்குறள். உழைப்பால் உடலும் உள்ளமும் வலுப்பெறுகிறது.

உழைப்பின் சிறப்பு:

             உழைப்பே உயர்வு தரும் என்பது பழமொழி. உழைப்பால் வரும் பொருளே என்றும் நிலைத்து நிற்கும். விலங்குகளும் பறவைகளும் தமக்குத் தேவையான உணவைத் தாமே உழைத்து தேடிப் பெற்றுக் கொள்கின்றன. உழைப்பில்லாமல் வரும் செல்வத்தை விட்டுவிட்டு உண்மையான உழைப்பால் வரும் செல்வத்தை நாம் அனுபவிக்க வேண்டும்

உழைப்பால் உயர்ந்தவர்கள்:

            தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டின், ஜி.டி. நாயுடு, டாக்டர் அப்துல் கலாம் ஆகிய எண்ணற்ற அறிஞர்கள் தம்முடைய கடின உழைப்பால் வாழ்வில் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

முடிவுரை:

     உழைப்பின் உயர்வினை உணர்ந்து, நாம் அனைவரும் நல்வழியில் கடின உழைப்பு செய்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

மொழியை ஆள்வோம்

பொருத்துக.

1.     காக்கைஉட்காரப் பனம்பழம் விழுந்தது போல - ஒற்றுமையின்மை

2.    கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – பயனற்றசெயல்

3.    பசு மரத்து ஆணி போல – தற்செயல் நிகழ்வு

4.    விழலுக்கு இறைத்தநீர் போல – எதிர்பாராநிகழ்வு

5.    நெல்லிக்காய்மூட்டையைக் கொட்டினாற் போல – எளிதில் மனத்தில் பதிதல்

விடை: 1- , 2- , 3- , 4- , 5-

உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.

1. குன்றின் மேலிட்டவிளக்கைப் போல

குன்றின் மேலிட்ட விளக்கைப்போல திருக்குறளின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது

2. வேலியேபயிரைமேய்ந்தது போல

வேலியே பயிரை மேய்ந்தது போல நாட்டைக் காப்பாற்ற வேண்டிய தலைவர்களே மக்களைத் துன்புறுத்துகின்றனர்.

3. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல

பழம் தழுவிப் பாலில் விழுந்தது போல பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல பரிசுத் தொகையாக இலட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனுக்குக் கோடி கிடைத்தது.

4. உடலும் உயிரும் போல

உடலும் உயிரும் போல கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் நட்புடன் திகழ்ந்தனர்.

5. கிணற்றுத்தவளை போல

கினாற்றுத் தவளை போல மூடர்கள் தம் பேச்சினாலேயே தம் அறியாமையை   வெளிப்படுத்துவர்

வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக.

1.            முயற்சி திருவினை ஆக்கும்.

2.           அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

3.           சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.

4.           அறிவே ஆற்றல்.

5.           கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

6.           நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

7.            சுத்தம் சோறு போடும்.

8.           வருமுன் காப்போம்.

9.           பருவத்தே பயிர் செய்.

10.          பசித்து புசி.

 பதிவிறக்க

 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை