8 TH STD TAMIL QUESTION AND ANSWERS UNIT-7 25-26

 

8.ஆம் வகுப்பு தமிழ்

வினா விடைகள் (2025-2026)


இயல்-7

ஒன்றே குலம்

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _____ க் கண்டு அஞ்சமாட்டார்கள்.

அ) புலனை   ஆ) அறனை    இ) நமனை   ஈ) பலனை

2. ‘நமனில்லை‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) நம் + இல்லை  ஆ) நமது + இல்லை   இ) நமன் + நில்லை   ஈ) நமன் + இல்லை

3. நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) நம்பரங்கு  ஆ) நம்மார்க்கு   இ) நம்பர்க்கங்கு  ஈ) நம்பங்கு

நயம் அறிக

'ஒன்றே குலம்' பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனை சொற்களை எடுத்து எழுதுக

எதுகை:

·        ன்றே -நன்றே

·        சென்றே - நின்றே

·        மாட -  நமாடக்

மோனை:

·        ன்றே - ருவனே

·        ன்றே - மனில்லை

·        நின்றே - நிலைபெற

·        படமாட -கவற்கு

குறுவினா                                           

1. யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?

ü  மனிதர் அனையரும் ஒரே இனத்தவர். உலகைக்காக்கும் இறைவனும் ஒருவனே.

ü  இக்கருத்துகளை நன்றாக மளத்தில் நிறுத்துபவர்களுக்குளமனைப் பற்றிய அச்சம் இல்லை.

2. மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்யவேண்டியது யாது?

விடை: மனிதர் அனைவரும் ஒரே இனத்தவர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனதில் நிறுத்த வேண்டும்."

சிறுவினா

மக்களுக்குச் செய்யவேண்டிய தொண்டு குறித்துத்திருமூலர் கூறுவது யாது?

ü  படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒருபொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது

ü  அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும், என்று திருமூலர் கூறுகிறார்.

சிந்தனைவினா

அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய உதவிகளைச் செய்யலாம்?

ü  நம்மால் முடிந்த அளவு ஏழை மக்களுக்கு உணவிடலாம்.

ü  சாலைனயக் கடக்க மாற்றுத்திறனாளிகளுக்கோ,முதியோர்களுக்கோ உதவலாம்.

ü  பேருந்துகளில் செல்லும்போது முதியோர்களுக்கு எழுத்து இடம் தரலாம்.

ü  விபத்துகள் ஏற்பட்டால், ஓடி ஒதுங்காமல் முன்னால் சென்று முதலுதவி மேற்கொள்ளலாம்

கற்பவை கற்றபின்

பிறர் துன்பம் கண்டு வருந்தி அவர்களுக்குத் தொண்டுசெய்த சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.

1.     இராமலிங்க அடிகளார்

2.    காந்தியடிகள்

3.    சுப்பிரமணிய பாரதியார்

4.    பாரதிதாசன்

5.    அயோத்திதாச பண்டிதர்

6.    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

7.    விவேகானந்தர்

8.    சர்தார் வல்லபாய்படேல்

9.    காமராஜர்

10.  எம்.ஜி.ராமச்சந்திரன்

11.   ராஜாராம் மோகன்ராய்.

மெய்ஞ்ஞான ஒளி

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஞானியர் சிறந்தகருத்துகளைமக்களிடம் _____.

அ) பகர்ந்தனர்   ஆ) நுகர்ந்தனர்   இ) சிறந்தனர்   ஈ) துறந்தனர்

2. ‘ஆனந்தவெள்ளம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) ஆனந்த+ வெள்ளம்  ஆ) ஆனந்தன் +வெள்ளம்  இ) ஆனந்தம் + வெள்ளம் ஈ)ஆனந்தர் + வெள்ளம்

3. உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) உள்ளேயிருக்கும் ஆ) உள்ளிருக்கும் இ) உளிருக்கும் ஈ) உளருக்கும்

குறுவினா

1. உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் நிகழ்வது யாது?

விடை: உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்துக்குள் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக இறைவன் விளங்குகின்றார்

2. மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?

விடை:  இறைவன் திருவடிகளின்மேல் பற்று வைக்காமல், பணத்தின்மீது ஆசை வைத்ததால் மனிதன் மனம் கலங்கி அலைகின்றான்.

சிறுவினா

குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?

ü  மேலான பொருளே! தம் தீய எண்ணங்களை அடியோடு அழித்தவர்கள் மனத்துள்ளேஎழுந்தருளி இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே!

ü  உன் திருவடிகளின்மேல் பற்று வைக்காமல், பணத்தின்மீது ஆசை வைத்ததால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்.

ü  நீ உண்மைஅறிவினைஉணர்ந்தவர்களின் உள்ளத்துக்குள் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றாய்.

ü  மேலான பொருளே! ஐம்பொறிகளைஅடக்கி ஆள்வது மிகவும் அரியசெயலாகும். அப்பொறிகளின் இயல்பைஉணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினைஎனக்குத்தந்து அருள்செய்வாயாக.

சிந்தனைவினா

ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்யவேண்டிய நற்செயல்கள் யாவை?  

1.     கண்நல்லவற்றையே பார்த்தல்

2.    காதுநல்லவற்றையே கேட்டல்

3.    வாய்நல்லவற்றையே பேசுதல்

4.    மூக்குநல்ல காற்றைச் சுவாசித்தல்

5.    மெய்நல்லுணர்வினை வெளிப்படுத்துதல்

அயோத்திதாசர் சிந்தனைகள்

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அயோத்திதாசர்_____சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

அ) தமிழக  ஆ) இந்திய  இ) தென்னிந்திய  ஈ) ஆசிய

2. அயோத்திதாசர் நடத்திய இதழ்_____.

அ) ஒருபைசாத்தமிழன்  ஆ) காலணாத்தமிழன்   இ) அரைப்பைசாத்தமிழன் ஈ) அரையணாத்தமிழன்

3. கல்வியோடு _____ கற்கவேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.

அ) சிலம்பமும்   ஆ) கைத்தொழிலும்   இ) கணிப்பொறியும்   ஈ) போர்த்தொழிலும்

4. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது ________.

அ) ஆழ்ந்தபடிப்பு  ஆ) வெளிநாட்டுப்பயணம்   இ) இதழியல் பட்டறிவு   ஈ) மொழிப்புலமை

5. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ________.

அ) வானம்   ஆ) கடல்   இ) மழை  ஈ) கதிரவன்

குறுவினா

1. அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?


1. நல்ல சிந்தனை

2. சிறப்பான செயல்

3.உலப்பான எழுத்து

4.உயர்வான பேச்சு

5.பாராட்டத்தக்க உழைப்பு

2. ஒரு சிறந்தவழிகாட்டி எவ்வாறு இருக்கவேண்டும் என அயோத்திதாசர் கூறுகிறார்?

விடை: ஒரு சிறந்த வழிகாட்டி மக்களுள் மாமனிதராக, அறிவாற்றல் பெற்றவராக, நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்கவேண்டும் என அயோத்திதாசர் கூறுகிறார்.

3. திராவிட மகாஜன சங்கம் எவற்றுக்காகப் போராடியது?

ü  சாலைகள் அமைத்தல்

ü  கால்வாய்கள் பராமரித்தல்

ü  குடிகளின்பாதுகாப்புக்குக் காவல்துறையினரை நியமித்தல்

ü  பொது மருத்துவமனைகள் அமைத்தல்

ü  சிற்றூர்கள் தோறும் கல்விக்கூடங்கள் ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காக போராடியது.

சிறுவினா

1. அயோத்திதாசரின் இதழ்ப்பணி பற்றி எழுதுக.

விடை:

ü  அயோத்திதாசர் 1907 ஆம் ஆண்டு சென்னையில் ஒருபைசாத் தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்.

ü  ஓர் ஆண்டிற்குப் பின் அவ்விதழின் பெயரைத் தமிழன் என மாற்றினார். * உயர்நிலையையும் இடைநிலையையும் கடைநிலையையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றைத் தெளிவுபடுத்துவதே இவ்விதழின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

ü  இவர் தமிழன் இதழ் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி மைசூர், கோலார், ஐதராபாத் இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, போன்ற நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் பகுத்தறிவுச் சிந்தனை, இன உணர்வு சமூகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினார்.

2. அரசியல் விடுதலைபற்றிய அயோத்திதாசரின் கருத்துகள் யாவை?

ü  விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமன்று. அது மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்

ü  நல்ல சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக்கூடாது; மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அஃது அமையவேண்டும்.

ü  மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது.

நெடுவினா

வாழும் முறை, சமத்துவம் ஆகியன பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக.

) வாழும் முறை பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள்:

v  மக்கள் அனைவரும் அன்புகொண்டு வாழவேண்டும்.

v  கோபம்,பொறாமை, பொய், களவு போன்றவற்றைத் தம் வாழ்வில் இருந்து நீக்கி வாழவேண்டும்.

v  பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யக்கூடாது.

v  ஒரு குடும்பத்தில் அன்பும் ஆறுதலும் நிறைந்தால், அக்குடும்பம் யாழும் ஊர் முழுவதும் அன்பும் ஆறுதலும் பெறும்.

v  ஊர்கள் அன்பும் ஆறுதலும் பெறுமானால் நாடு முழுவதும் அன்பும் ஆறுதலும் பெற்றுத்திகழும் இத்தகைய நாட்டில் புலியும் பகவும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும் என்பவை அயோத்திதாசர் கருத்துகள்,

ஆ) சமத்துவம் பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள்:

v  மக்கள் அனைவரும் சம உரிமைபெற்றுச் சமத்துவமாக வாழவேண்டும். கல்வி, வேளான்மை, காவல்துறை போன்ற அனைத்துத் துறைகளிலும் மக்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கவேண்டும்.

v  ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் போன்றவற்றிலும் எல்லா வகுப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

v  இவற்றில் இந்து, பௌத்தர், கிறித்துவர், இசுலாமியர், ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர் போன்ற

v  அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனத்தொடர்ந்து வலியுறுத்திவந்தார் அயோத்திதாசர்.

சிந்தனைவினா                                                           

ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்கவேண்டிய உயர்பண்புகள் யாவை?      

ü  நல்ல சிந்தனை உடையவராக இருத்தல்வேண்டும்.

ü  சமத்துவச் சிந்தனை உடையவராக இருத்தல்வேண்டும்.

ü  பகுத்தறிவுச் சிந்தனைவாதியாக இருக்கவேண்டும்.

ü  நேர்மையான செயல்களைப் பெற்றவராக இருத்தல் வேண்டும்

மனித யந்திரம்

மனித யந்திரம் கதையை மீனாட்சி சுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக

"ஐயா, இந்தக் கதை என் வாழ்க்கையே! நானே தான் அந்த மனித யந்திரம். 45 ஆண்டுகளாக ஒரே ஸ்டோரில் குமாஸ்தாவா வேலை பார்த்தேன். கடையும் நானும் வளர்ந்தோம், ஆனா நம்ம வாழ்க்கையோ ஒரே சுழற்சி. சாப்பாடு, கணக்கு, வேலை இதைவிட என்ன வாழ்க்கை இருக்க முடியுமா?

எனக்கும் ஆசைகள் இருந்தது ஐயா! ஒரு மாடும் கன்றும் வாங்கணும், நிலம் திருப்பணும், ஸ்டோரே நம்ம கைக்கு வந்தா நல்லது. ஒரு தடவையாவது கொழும்பு போயி, ரொக்கம் கையில், கலர் சட்டையுடன் வரணும். எல்லாரும் அணிார் சௌக்கியமா?”னு வணக்கம் சொல்லணும். அந்த ஆசையில ஒரு நாள் ரயிலேற எண்ணினேன்.

பணத்தையும் பெட்டியையும் எடுத்தேன். ஸ்டேஷனுக்கு ஓடினேன். டிக்கெட் வாங்கி ரயிலில் ஏறினேன். ஆனா என் நெஞ்சம் சொன்னது – ‘பாஸ் இல்லாம எங்க போறே?’ உடம்பு நடுங்கிச்சு. உடனே ரயிலிலிருந்து இறங்கி, மீண்டும் ஸ்டோருக்கு வந்து, பணத்தை பெட்டியில் போட்டு, என் கணக்குப் புத்தகத்தில் பற்று: பதினொன்று காலணானு எழுதிட்டு வீட்டுக்குத் திரும்பினேன்.

அந்த நாள் என் மனசு ஒரு பெரிய பாடம் கற்றது, ஐயா. மனிதர் யந்திரமாவதைத் தவிர்க்க முடியாத சில தருணங்கள் இருக்கின்றன."

வேற்றுமை 

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _________ ஆகும்.

அ) எழுவாய்   ஆ) செயப்படுபொருள்   இ) பயனிலை   ஈ) வேற்றுமை

2. எட்டாம் வேற்றுமை___________ வேற்றுமைஎன்று அழைக்கப்படுகிறது.

அ) எழுவாய்   ஆ) செயப்படுபொருள்   இ) விளி   ஈ) பயனிலை

3. உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமைவரும்.

அ) மூன்றாம்   ஆ) நான்காம்   இ) ஐந்தாம்   ஈ) ஆறாம்

4. ‘அறத்தான் வருவதேஇன்பம்’ - இத்தொடரில் ________ வேற்றுமைபயின்று வந்துள்ளது.

அ) இரண்டாம்   ஆ) மூன்றாம்   இ) ஆறாம்   ஈ) ஏழாம்

5. ‘மலர் பானையைவனைந்தாள்’ – இத்தொடர் ________ பொருளைக் குறிக்கிறது.

அ) ஆக்கல்   ஆ) அழித்தல்   இ) கொடை  ஈ) அடைதல்

பொருத்துக.

1. மூன்றாம் வேற்றுமை– இராமனுக்குத்தம்பி இலக்குவன்.

2. நான்காம் வேற்றுமை– பாரியினது தேர்.

3. ஐந்தாம் வேற்றுமை- மண்ணால் குதிரைசெய்தான்.

4. ஆறாம் வேற்றுமை - ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.

விடை: 1 - , 2 - ,  3 -  , 4 –

சிறுவினா.

1. எழுவாய் வேற்றுமையை விளக்குக.

விடை:

   எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல், எழுவாய் தனித்து நின்று, இயல்பான பொருளைத் தருவது எழுவாய் வேற்றுமை என்பர்.இதனை 'முதல் வேற்றுமை' என்றும் கூறுவர்.     எடுத்துக்காட்டு: பாவை வந்தாள்,

2. நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?

விடை:    கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை.

3. உடனிகழ்ச்சிப் பொருளில் என்றால் என்ன?

விடை:

    வினை கொண்டு முடிகிற பொருளைத் தன்னிடத்தும் உடன் நிகழ்கிறதாக உடையது உடனிகழ்ச்சி ஆகும்.

    ஓடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.

எடுத்துக்காட்டு :

   தாயோடு குழந்தை சென்றது.

   அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.

மொழியை ஆள்வோம் 

இரண்டு தொடர்களை ஒரே தொடராக்குக

எ.கா: முத்து நன்கு படித்தான். முத்து வாழ்வில் உயர்ந்தான்.

           முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்.

1. மழை நன்கு பெய்தது எங்களால் விளையாட முடியவில்லை.

விடை: மழை நன்கு பெய்ததால் விளையாட முடியவில்லை.

2. எனக்குப் பால் வேண்டும். எனக்குப் பழம் வேண்டும்.

விடை: எனக்கு பாலும் பழமும் வேண்டும்.

3. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.அவர் பதினெண் சித்தர்களில் ஒருவராக கருதப்படுபவர்.

விடை: திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.

4.அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்க வேண்டும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்ற வேண்டும்.

விடை: அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்று பின்பற்ற வேண்டும்.

5. குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார்

நந்தீசுவரக்கண்ணி நூலை இயற்றியுள்ளார்.

விடை: குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

அறிந்து பயன்படுத்துவோம்

பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

வினாக்கள்

1.விபத்துகளை எவ்வாறு தவிர்க்கலாம்?

விடை: சாலை விதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

2. கண்டிப்பாக வழிவிட வேண்டிய வாகனங்கள் யாவை?

விடை: தீயணைப்பு வாகனம், அவசர சிகிச்சை ஊரதி

3. சாலைச் சந்திப்புகளில் எவற்றுக்கு முதலிடம் தர வேண்டும்?

விடை: சாலைச் சந்திப்பில் நுழையும்போது அந்தச் சாலையில் ஏற்கனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

4.மலைச்சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறை யாது?

விடை: கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேல் நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.

5.வாகனம் செலுத்தும் முறையை எழுதுக.

விடை: வாகனத்தைச் சாலையின் இடது புறத்தில் செலுத்துவதுடன் எதிரே வரும் வாகனத்துக்கு வலப்புறமாகக் கடந்து செல்ல போதிய இடம் விட வேண்டும்.

கடிதம் எழுதுக.

புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

12,தென்றல் நகர்,

திருத்தணி-1.

12-03-2022.

அன்புள்ள அண்ணனுக்கு,

       தங்கள் அன்பு தம்பி தமிழ்வேந்தன் எழுதும் மடல்.நலம், நலமறிய ஆவல்.தங்களைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகியிருப்பினும்,தங்களை அவ்வப்போது நினைவு கூர்வதுண்டு.எனது தமிழ் தேடலுக்காகச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி ஒன்று தேவைப்படுகிறது.எங்கள் ஊரில் அது கிடைக்கவில்லை. தாங்கள் வசிக்கும் திருவல்லிக்கேணி வள்ளுவர் பதிப்பகத்தில் கிடைப்பதாக அறிந்தேன்.ஒரு பிரதியை வாங்கி தூதஞ்சல் மூலம் அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

                                                                                                                                                 இப்படிக்கு,

தங்கள் அன்பு தம்பி,

கா.கொற்றவன்.

உறைமேல் முகவரி:

    பூ.சொற்கோ

    54,மறவன் வீதி,

    திருவல்லிக்கேணி,

    சென்னை-14

மொழியோடு விளையாடு

படத்தைப் பார்த்து எழுதுக.

திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வறுமை வந்த காலத்தில் ----- குறையாமல் வாழவேண்டும்.

அ) இன்பம் ஆ) தூக்கம் இ) க்கம் ஈ) ஏக்கம்

2. ஆண்மையின் கூர்மை

அ) வறியவருக்கு உதவுதல் ஆ) பகைவருக்கு உதவுதல்

 இ) நண்பனுக்கு உதவுதல் ஈ) உறவினருக்கு உதவுதல்

3. 'பெருஞ்செல்வம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பெரிய + செல்வம் ஆ) பெருஞ் + செல்வம் இ) பெரு – செல்வம் ஈ) பெருமை + செல்வம்

4. 'ஊராண்மை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) ஊர் + ஆண்மை ஆ) ஊரார் + மை இ) ஊ+ஆண்மை ஈ) ஊரு + ஆண்மை

5. திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) திரிந்தது.அற்று  ஆ) திரிந்தற்று இ) திரிந்துற்று ஈ) திரிவுற்று

பொருத்துக

1. இன்பம் தருவது - பண்புடையவர் நட்பு

2. நட்பு என்பது  - சிரித்து மகிழ மட்டுமன்று

3. பெருமையை அழிப்பது - குன்றிமணியளவு தவறு

4. பணிவு கொள்ளும் காலம் - சிரித்து மகிழ மட்டுமன்று

5. பயனின்றி அழிவது - நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்

பொருத்தமான சொற்களை எடுத்து எழுதுக.

(உவமை, உவமேயம், உவம உருபு)

1. நவில்தொறும் நூல்நயம் - உவமை

2. போலும் - உவமஉருபு

3. பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு - உவமேயம்

குறுவினா

1. எது பெருமையைத் தரும்?

விடை:  காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதை விட, யானைக்குக் குறிவைத்து தவறிய வேலை ஏந்துவது பெருமையைத் தரும்.

2. நண்பர்களின் இயல்பை அளந்து காட்டும் அளவுகோல் எது?

விடை:  நமக்கு வரும் துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் அளவுகோலாகும்.

3. இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது?

விடை: ண்பு உடைய சான்றோர்களின் வழியில் நடப்பதால்தான் இவ்வுலகம் இார்னும் இயங்குவதாய்த் திருக்குறள் கூறுகிறது.

4. நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

விடை:  நட்பு சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியது அன்று.  நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.

5. பிறிதுமொழிதல் அணி என்பது யாது?

அணி இலக்கணம்:

உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.

எ.கா.  கான முயல்ாய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

விளக்கம்:

காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட, யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும் (பெரிய முயற்சியே பெருமை தரும்).

பொருத்தம்:

முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட, யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும் என்பது உவமை. இந்த உவமைமூலம் பெரிய முயற்சியே பெருமை தரும் என்பது பெறப்படுகிறது. எனவே, இக்குறளில் அமைந்தது பிறிதுமொழிதல் அணி ஆகும்.

படத்திற்கு பொருத்தமான திருக்குறளை எழுதுக

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

பதிவிறக்க

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை