8.ஆம் வகுப்பு தமிழ்
வினா
விடைகள்
(2025-2026)
இயல்-6 |
சிங்கி பெற்ற
பரிசு
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. மனதில் தோன்றிய கருத்துகளை ---- பேச வேண்டும்.
அ) அஞ்சி ஆ) அஞ்சாமல் இ) அணிகலன்களாக ஈ) மகுடமாக
2. முறுக்குகள் நிறைந்த தண்டையைப் பரிசாக அளித்த நாடு
அ) கலிங்க நாடு ஆ) கண்டிய நாடு இ) சேலத்து நாடு ஈ)
பாண்டிய நாடு
3. 'பயமில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது.
அ) பய +
இல்லை ஆ) பய +
மில்லை இ) பயம்
+மில்லை ஈ) பயம் + இல்லை
4
கால் ஆழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ)
கால்ஆழி ஆ) காலா
ஆழி இ) காலாழி ஈ) கால ஆழி
5. சிங்கிக்குப் பலவகைப் பரிசுப் பொருள்கள் கிடைக்கக் காரணம்----
அ)
நடனமாடுதல் ஆ) பாட்டுப் பாடுதல் இ) குறி சொல்லுதல் ஈ) மருத்துவம் செய்தல்
பொருத்துக
1. பாம்பு - ஈ) சிலம்பு
2. மண்புழு - அ)
பாடகம்
3. தவளை - ஆ)
மணிக்கச்சம்
4. குண்டலப் பூச்சி - இ) கால் மோதிரம்
குறுவினா
1. சிங்கிக்குப் பரிசாகக் கிடைத்த அணிகலன்கள்
யாவை?
·
சிலம்பு
·
தண்டை
·
பாடகம்
·
மணிக்கச்சம்
· கால்மோதிரம்
2. சிங்கன் தான் எதனைக் கண்டு அஞ்சுவதாகக்
கூறினான்?
விடை: சிங்கியைப் பார்க்கும் போது அதிசயமாக இருந்ததைச் சொல்லுவதற்கு அஞ்சுவதாகச்
சிங்கன் கூறினான்.
சிறுவினா
1. கலிங்க நாட்டாரும் கண்டிய நாட்டாரும்
சிங்கிக்கு வழங்கிய பரிசுகள் யாவை?
கலிங்க நாட்டார் வழங்கிய பரிசு: முறுக்குகள் நிறைந்த தண்டை
கண்டிய நாட்டார் வழங்கிய பரிசு: கால்மோதிரம், பீலி
சிந்தனை
வினா
1.சிங்கனுக்கு அணிகலன்கள் பாப்பு, நாங்கூழு, தவளை போன்றவையாகத் தோன்றக் காரணம் யாது?
·
நீண்டும்
குறுகியும் நெளிவுகளுடனும் இருந்ததால் பாடகம் அவனுக்கு நாங்கூழுவாகத் தெரிந்தது.
·
பெண்கள்
அணிவித்த மணிக்கச்சத்தின் அழகு தவளையாகக் காட்சி தந்தது.
2. சிங்கலும் சிங்கியும் பேசிக்கொண்டதை உரையாடல்
வடிவில் எழுதுக.
சிங்கன்: என்னிடம் சொல்லாமல் இத்தனை நாள்கள் எங்கே சென்றாய் சிங்கி?
சிங்கி :
பூச்சூடிய பெண்களுக்குக் குறிசொல்லப் போனேன்.
சிங்கன் :உன்னைப்
பார்க்கும் போது அதிசயமாக உள்ளது. அதைச் சொல்லவும் அச்சமாக உள்ளது
சிங்கி: உனக்குத் தோன்றியதை அஞ்சாமல் சொல் சிங்கா.
சிங்கன்: உன்
காலில் விரியன் பாம்பு போலக் கடித்துக் கிடக்கிறதே என்ன அது?
சிங்கி: சேலத்து நாட்டில்
குறி சொல்லிப் பெற்ற சிலம்பு
சிங்கன்: சிறப்பு. அந்த சிலம்புக்கு மேலே திருகு முறுக்கலாக இருக்கிறதே அது என்ன?
சிங்கி :
கலிங்க நாட்டார் எனக்குத் தந்த முறுக்குகள் நிறைந்த தண்டை சிங்கா.
சிங்கன்: நீண்டும் குறுகியும் மண்புழுபோலத் தெரியுதே அது என்ன?
சிங்கி :
நான் குறி சொன்னதைக் கேட்டப் பாண்டியனின் மகள் எனக்குப் பரிசாக வழங்கிய பாடகம் சிங்கன்: இறந்து போன தவளையை உன் காலில்
கட்டி இருக்கிறாயே, அது ஏன் சிங்கி? அது
இறந்துபோன தவளை இல்லை. இறைவனாகிய குற்றாலநாதரின் கோவில் பெண்கள்
எனக்கு அணிவித்த மணிக்கச்சம்.
சிங்கன் :
உன் கால் சுண்டுவிரலில் குண்டலப் பூச்சி சுருண்டு கிடக்கிறதே.
சிங்கி :
முன் நான் கண்டிய நாட்டில் பரிசாகப் பெற்ற கால் மோதிரமும் பீலியும் சிங்கா அது.
சிங்கன்: அப்படியா?
பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1.
எம்.ஜி.ஆர். _____ என்னும் ஊரில் கல்வி
பயின்றார்.
அ)
கண்டி ஆ) கும்பகோணம் இ) சென்னை ஈ) மதுரை
2.
எம்.ஜி.ஆர். படிப்பைத்
தொடர முடியாமைக்குக் காரணம் _____ .
அ) நடிப்பு ஆர்வம் ஆ) பள்ளி இல்லாமை இ) குடும்பவறுமை ஈ)படிப்பில் ஆர்வமில்லாமை
3.
இந்திய அரசு சிறந்தநடிகருக்கான _____ எனும்
பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது.
அ)
புரட்சித்தலைவர் ஆ) பாரத் இ) பாரதமாமணி ஈ) புரட்சி நடிகர்
4.
ஐந்தாம் உலகத்தமிழ்மாநாடு நடைபெற்றஇடம் _____
அ)
திருச்சி ஆ) சென்னை இ) மதுரை ஈ) கோவை
5.
எம்.ஜி.ஆருக்கு அழியாதபுகழைத்தேடித்தந்ததிட்டம் _____.
அ) மதிய உணவுத்திட்டம் ஆ) வீட்டு
வசதித்திட்டம்
இ) மகளிர் நலன் திட்டம் ஈ) இலவசக் காலணித்திட்டம்
குறுவினா
1. எம்.ஜி.ஆர். நாடகத்துறையில்
ஈடுபடக் காரணம் என்ன?
விடை: எம்.ஜி.ஆர்.
நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் குடும்ப வறுமை ஆகும்.
2. திரைத்துறையில் எம்.ஜி.ஆரின்
பன்முகத்திறமைகள் யாவை?
விடை: நடிகர்
, தயாரிப்பாளர் ,இயக்குநர்
3. எம்.ஜி.ஆரின் சமூக
நலத்திட்டங்களுள் நான்கனைஎழுதுக.
v உழவர்களின் கடன்
தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்
v ஆதரவற்றமகளிருக்குத்திருமண
உதவித்திட்டம்
v தாய்சேய்நல
இல்லங்கள்
v நலிவடைந்தபிரிவைச்
சேர்ந்தமாணவர்களுக்குப் பாடநூல் வழங்கும் திட்டம்
v முதியோருக்கு
உதவித்தொகைவழங்கும் திட்டம்
சிறுவினா
1.
பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக
அமைந்த நிகழ்வை எழுதுக.
·
பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும்
திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தநிகழ்வை எழுதுக. எம்.ஜி.ஆரும் அவரது மனைவியும் ஒரு
முறை வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
ü அப்போது மூதாட்டி ஒருவரும், பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் யில் காலணி இல்லாமல் தலையில் புல்
கட்டுகளைச் கமந்தவாறு சென்று கொண்டிருந்தனர்.
ü சாலையின் சூடு தாங்காமல் மரநிழலில் நிற்பதும், ஓடுவதுமாக இருந்தனர்.உடனே எம்.ஜி.ஆர் தமது
மனைவியாரின் காலணியையும் உறவினப் பெண்ணின் காலணியையும் அவர்களுக்குக் கொடுத்துப்
பணம் கொடுத்தார். இந்த நிகழ்ச்சி அவரது மனதில் ஆழமாகப் பதிந்தது.
ü அதனால், பின்னர்
பள்ளிக்குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தினார்
2. தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக
எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் யாவை?
ü தந்தைப் பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்கள்
சிலவற்றை நடைமுறைப் படுத்தி தமிழ் எழுத்து முறையை எளிமைப்படுத்தினார்.
ü மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடடைச் சிறப்பாக நடத்தினார்.
ü தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை
நிறுவினார்.
நெடுவினா
எம்.ஜி.ஆரின் பண்புநலன்களைவிளக்கி
எழுதுக.
ü திரைப்படத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத்
திறமைகொண்டவர் எம்.ஜி.ஆர்.
ü தாம் நடித்த திரைப்படங்களின் பாடல்கள் மூலம் உயரிய
கருத்துக்களை மக்களிடம் விதைத்தார்.
ü வாழ்வின் உயர்நிலையை அடைந்த பின்னரும் எளிமையாக வாழ வேண்டும்
என்பதைத்தன் பாடல்களில் கூறினார். அப்பாடலுக்கு ஏற்ப தாமும் வாழ்ந்தார் ஏழை மக்கள்
காலில் காலணி கூட இல்லாமல் நடந்து செல்லும் நிகழ்ச்சி அவரது மனதை ஆழமாகப்
பாதித்தது.
ü அதனால் பின்னர் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு இலவச
காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
ü எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருந்தபோது ஏழை எளிய மக்களின்
வாழ்க்கைத்தரம் உயர அரும்பாடுபட்டார். உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டம், ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம், முதியோர்
உதவித்தொகை வழங்கும் திட்டம் முதலிய எண்ணற்ற திட்டங்களை ஏழைகளுக்காகக் கொண்டு
வந்தார்.
சிந்தனைவினா
சிறந்தஅரசியல் தலைவருக்கு இருக்கவேண்டிய
பண்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
ü
தன்னலமின்மை
ü
மக்கள்மீது
அளவற்ற அன்பு
ü
ஏழை
எளியோரைப் பற்றி சிந்தித்தல்
ü
அறிஞர்களது
ஆலோசனைகளைக் கேட்டல்
ஒருவன் இருக்கிறான்
குப்புசாமியை நினைத்து கண்ணீர் விட்ட நிகழ்வை எழுதுக.
முன்னுரை:
யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம்
உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி தனது “ ஒருவன்
இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன்,
ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப்
படைத்துள்ளார்.
குப்புசாமியின் குடும்ப நிலை:
காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள்.
நோயுற்ற குப்புசாமி:
சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று
ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.
ஆறுமுகம்:
வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு
அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த
செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி
பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம்
சேர்த்து விடச் சொன்னான்.
முடிவுரை:
“
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்”
பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.
இடைச்சொல்,
உரிச்சொல்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.
1. மொழிப் பயன்பாட்டை முழுமையாக்கும் சொல்
அ) பெயர்ச்சொல்
ஆ) வினைச்சொல்
இ) இடைச்சொல் ஈ) உரிச்சொல்
2 'உறுபசி' என்னும்
சொல்லில் 'உறு' என்பதன் பொருள்
அ) குறைவு
ஆ) காவல் இ) மிகுதி ஈ) கூர்மை
3. 'கடிநகர்' என்பதன்
பொருள்
அ) மணமிக்க நகர்
ஆ) காவல்மிக்க நகர் இ) செல்வம் மிக்க நகர் ஈ) கல்வி மிக்க நகர்
சிறுவினா
1. சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
சொற்கள் நான்கு வகைப்படும்.
அவை:
1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல்
2. இடைச்சொல் என்றால் என்ன? இடைச்சொற்களின் வகைகளை எழுதுக.
பெயர், வினை என்னும் இரண்டு
வகைச் சொற்களுக்கும் முன்னாலோ பின்னாலோ இணைந்து நின்று அச்சொற்களின் பொருளைத்
தெளிவுபடுத்துவது இடைச்சொல் ஆகும்.
வகைகள்:
·
வேற்றுமை உருபுகள் - ஐ, ஆல், கு, இன், அது, கண்.
·
விகுதிகள் - என், ஆன், ஆள், ஆர், தல்
·
சாரியைகள் - அத்து, அற்று, அம்
·
உவம உருபுகள் - போல, போன்ற
·
சொல்லுருபுகள் - மூலம், கொண்டு, இருந்து, பற்றி, வரை.
3. உரிச்சொல் என்றால் என்ன?
பெயர்ச்சொல், வினைச்சொல்
ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும். இது பெயருக்கும்
வினைக்கும் அடையாக வரும்.
எ.கா.
சால - சாலச்சிறந்தது
4. ஒரு சொல் பல பொருள்களில் வருவதை
எடுத்துக்காட்டுடன் விளக்குக.
உரிச்சொற்களில் ஒரு சொல் பல பொருள்களுக்கு உரியதாய் வருவது
உண்டு.
எ-டு : கடிமலர் - மணம் மிக்க மலர்
கடிநகர் - காவல் மிக்க நகர்
கடிவிடுதும் - விரைவாக விடுவோம்
கடிநுனி - கூர்மையான நுனி
மொழியை ஆள்வோம்
பின்வரும்
தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
1.
அதைச் செய்தது நான் அன்று.
விடை: அதைச்
செய்தது நான் அல்லேன்
2.
பானையைஉடைத்தது கண்ணன் அல்ல.
விடை: பானையைஉடைத்தது
கண்ணன் அல்லன்
3.
மல்லிகைகுளத்தில் பூக்கும் மலர் அல்லை.
விடை: மல்லிகைகுளத்தில்
பூக்கும் மலர் அன்று
4.
சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.
விடை: சித்தர்கள்
செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்
5. பகைவர்
நீவீர் அல்லர்.
விடை: பகைவர் நீவீர் அல்லீர்
கட்டுரை எழுதுக.
நாட்டின்
வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு.
முன்னுரை:
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்குஇனிவரும் காலம்
இளைஞர்கள் காலம். எனவேநான் இளைஞர்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்காகத் தங்களை
முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.
இளைஞர்களின் சிறப்புகள்:
இன்றைய இளைஞர்கள் திறமையிலும் அறிவிலும் சிறப்பு
வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். எனவே தான் அன்று விவேகானந்தர் என்னிடம் நூறு
இளைஞர்களைக் கொடுங்கள். இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் டாக்டர் அப்துல்
கலாம் அவர்களும் நம் நாட்டு இளைஞர்களின் கையில்தான் நம் நாட்டின் எதிர்காலம்
உள்ளது என்று கூறினார்.
நாட்டு வளர்ச்சி:
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வி, பொருளாதாரம்,
தொழில்துறை முன்னேற்றம் ஆகியவற்றைச் சார்ந்து அமைகிறது. ஒரு
நாட்டினுடைய வளர்ச்சி என்பது அந்த நாட்டு இளைஞர்களின் வளர்ச்சி என்றே கூறலாம்.
இளைஞர்களின் பங்கு:
நன்கு கல்வி கற்ற இளைஞர்களால் தான் ஒருநாடு வளர்ச்சியில்
மேலோங்கும். அத்தகைய வகையில் நன்கு கல்விகற்று இளைஞர்கள் பலர் நம் நாட்டின்
வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டுள்ளனர். எண்ணற்ற தொழில்துறைகளில் நம் இளைஞர்கள்
சிறந்து விளங்கி வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நம் நாட்டின்
இளைஞர்கள் எண்ணற்ற புரட்சியினை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பொருளாதார
முன்னேற்றம் அடைந்து நாட்டின் வளர்ச்சி மேலோங்கி நிற்கிறது.
முடிவுரை:
"ஒரு நாட்டின் முதுசெலும்பு அந்த நாட்டு இளைஞர்கள்" என்றார் மகாத்னா காந்தி, அது முற்றிலும் உண்பையே! நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக செயல்பட்டு வருபவர்கள் இளைஞர்களே! என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
மொழியோடு விளையாடு
வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.
சொற்களை
வரிசைப்படுத்திச் சரியான தொடரை எழுதுக.
1. பார்க்கும்
பொழுது உள்ளது அதிசயமாக உன்னை சிங்கி
விடை : உன்னைப் பார்க்கும்
பொழுது அதிசயமாக உள்ளது சிங்கி
2. சிறுசிறு
எம்.ஜி.ஆர் நாடகங்களில் தொடங்கினார் வேடங்களில் நடிக்கத்
விடை : நாடகங்களில் சிறு சிறு
வேடங்களின் நடிக்கத் தொடங்கினர் எம்.ஜி.ஆர்
3. வேலையை
நோய் குப்புசாமி இழந்து இருந்தார் காரணமாக
விடை : நோய் காரணமாக
குப்புசாமி வேலையை இழந்து இருந்தார்
5. இயல்பு
மாற்றமும் எவ்வித இணைவது புணர்ச்சி இன்றி
விடை : எவ்வித மாற்றமும்
இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி