10.ஆம் வகுப்பு தமிழ்
வினாக்கள் மட்டும் (2025-2026)
இயல்
– 1
மதிப்பீடு
பலவுள் தெரிக.
1.
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
அ)
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து
விடாது
இ)
இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம் ஈ) என்மனம் இறந்து விடாது
இகழ்ந்தால்
2.
'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்.
இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
அ)
இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
3.
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-
அ)
எந்+தமிழ்+நா ஆ) எந்த + தமிழ் +நா இ) எம் + தமிழ் +நா ஈ)
எந்தம் + தமிழ் +நா
4.
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது தொடரில் இடம்பெற்றுள்ள
தொழிற்பெயரும் விளையாலணையும் பெயரும் முறையே -
அ)
பாடிய கேட்டவர் ஆ) பாடல் பாடிய இ) கேட்டவர்; பாடிய ஈ)
பாடல் : கேட்டவர்
5.
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது -
அ)
குலைப்பெயர் வகை ஆ) மணிப்பெயர் வகை இ) கிளைப்பெயர் வகை ஈ)
இலைப்பெயர் வகை
குறுவினா
1.
பலகை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக்
காட்டுக.
2.
மன்னுஞ் சிலம்பேர் மணிமே கவைவடிவே!
முன்னும் தினைவால் முடிதாழ
வாழ்த்துவமே! -இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக
3.
ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு
வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள்
உள்ளன.
மேற்கண்ட
தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய தொடரிலுள்ள பிழைக்கான
காரணத்தை எழுதுக.
4.
"கொள்வோர் கொள்சு: குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு
தொடாது
பாடல்
அடிகளில் உள்ள மோனை. எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
5.
சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக
சிறுவினா
1.
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
2.
புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.
இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின்
பெயர்களைத் தொடர்களில் அமைக்க
3. அறிந்தது, அறிந்தது, புரிந்தது.
புரியாதது. தெரிந்தது, தெரியாதது, பிறந்தது,
பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம். அடிக்கோடிட்ட சொற்களைத் தொழிற்பெயர்களாக
மாற்றுக
நெடுவினா
1.
நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று
விளக்குக.
2.
காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக
களிஞன் யானோர்
காலக் கணிகும்.
கருப்படு பொருளை
உருப்பட வைப்பேன்!
நாலோசர் புகழுடைத்
தெய்வம்
பொன்னிலும்
விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால்
இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின்
எதிர்ப்பதென் வேவை!
ஆக்கள் அளித்தல்
அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே
அறிந்தவை;
அறிக! - கண்ணதாசன்
3.
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்
தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில், தோணி
படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
கற்பவை கற்றபின்
(பக்க எண்:7)
2.
நாம் பேசும் மொழியில் அதிகமான சொற்களை ஆள்வதால் ஏற்படும் பயன்கள்
(பக்க எண்: 14)
1.
தேன், நூல், பை, மலர், வா - இத்தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத்
தொடர் மொழிகளாக்குக.
2.
வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.
(காண், சிரி,
படி, தடு)
3.
தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு
உரையாடலைத் தொடர்க.
4. மலை என்னை
அடிக்கடி அழைக்கும். மலை மீது ஏறுவேன்; ஓரிடத்தில் அமர்வேன்;
மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும்
பார்ப்பேன். மனம் அமைதி எய்தும். இத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக
மாற்றுக.
5.
கட்டு, சொட்டு, வழிபாடு,
கேடு, கோறல் - இத்தொழிற்பெயர்களை
வகைப்படுத்துக.
மொழியை ஆள்வோம்
மொழி
பெயர்ப்பு:-
1.If
you talk to a man in a language he understand,thats goes to his head. If you
talk to him in his own language that goes to his heart – Nelson Mendela
2.
Language is the road map of a culture. It tells you where its people come from
and where they are going – Rita Mae Brown
ஆ) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:-
“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை தேரும்
சிலப்பதி காறமதை ஊனிலே
எம்முயிர் உல்லலவும் – நிதம் ஓதி
யுனர்ந்தின் புருவோமே” கவிமணி தேசிக விநாயகனார்
|
|
இ) கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
( குவியல், குலை,மந்தை,கட்டு )
சொல் |
கூட்டப்பெயர் |
சொல் |
கூட்டப்பெயர் |
கல் |
புல் |
||
பழம் |
ஆடு |
ஈ) வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக
1. கலையரங்கத்தில்
எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.
2. ஊட்டமிகு
உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
3. நேற்று
என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.
4.பொது
அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.
ஈ) தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே
பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.
1. உலகில் வாழும் மக்களில் சிலர்
கனியிருக்கக் காய் புசித்தலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.
2. வள்ளல் குமணன் வறுமையால்
வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து
மங்காப் புகழ் பெற்றான்.
3. நளனும் அவனது துணைவியும்
நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழை முகில்
கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.
4. சோலையிற்
பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப்
பண்பாடி மதுவுண்டன.
5. பசுப்போல்
சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.
பொதுக்கட்டுரை
1. குமரிக்கடல்
முனையையும், வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர்
திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச்
சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ்
பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி,
கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப்
பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு
“ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கட்டுரை
வரைக.
நயம் பாராட்டுக:-
தேனினும்
இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும்
ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
வானினும்
ஓங்கிய வண்டமிழ் மொழியே
தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி
தோங்குவாய் தண்டமிழ் மொழியே
மொழியோடு விளையாடு
சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-
தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ
எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.
செய்யுள் அடி |
எண்ணுப்பெயர் |
தமிழ்
எண் |
நாற்றிசையும் செல்லாத நாடில்லை |
||
எறும்புந்தன் கையால் எண் சாண் |
||
ஐந்து சால்பு ஊன்றிய தூண் |
||
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி |
||
ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி |
அகராதியில் காண்க. (அடவி,
அவல், சுவல், செறு,
பழனம், புறவு)
இன்சொல்
வழி |
தீய
சொல் வழி |
பிறர் மனம் மகிழும் அறம் வளரும் புகழ் பெருகும் நல்ல நண்பர்கள் சேருவர் அன்பு நிறையும் |
பிறர் மனம் வாடும் அறம் தேயும் இகழ் பெருகும் நல்ல நண்பர்கள் விலகுவர் பகைமை நிறையும் |
இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
கலைச்சொல் அறிவோம்
1.
Vowel
–
2.
Consonant
–
3.
Homograph
–
4.
Monolingual
–
5.
Conversation
-
6. Discussion –
இயல்
– 2
திறன் அறிவோம்
பலவுள் தெரிக.
1.
பரிபாடல் அடியில் விசும்பில், இசையில்'
ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
அ)
வானத்தையும் பாட்டையும் ஆ) வான்வெளியில்,
பேரொலியில்
இ)
வானத்தில், பூமியையும் ஈ) வானத்தையும் பேரொலியையும்
2.
செய்தி 1- ஒவ்வோர் ஆண்டும் சூன் 3 ஐ உலகக் காற்று நாளாகக்
கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில்
இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 - இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத்
தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.
அ)
செய்தி 1 மட்டும் சரி ஆ) செய்தி 1.2 ஆகியன சரி
இ)
செய்தி 3 மட்டும் சரி ஈ) செய்தி 1.3 ஆகியன சரி
3. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ)
கொண்டல் - 1. மேற்கு
ஆ)
கோடை - 2. தெற்கு
இ)
வாடை - 3. கிழக்கு
ஈ) தென்றல் – 4. வடக்கு
அ) 1.2.3.4 ஆ) 3.1.4.2 இ) 4.3.2.1 ஈ) 3,4,1,2
4.
மகிழுந்து வருமா?' என்பது -------
அ)
விளித்தொடர் ஆ) எழுவாய்ந்தொடர் இ) வினையெச்சத்தொடர் ஈ) பெயரெச்சத்தொடர்
5.
அறிஞகுக்கு நூல், அறிஞரது நூய் ஆகிய
சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது -
அ)
வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
குறுவினா
1.
நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் - மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்
இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக
2.
எழுது என்றான்' என்பது விரைவு காரணமாக,
'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு
அடுக்குத்தொடராகும்?
3.
கட்டுரை படித்த -இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப்
பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக
4.
மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும்
கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
5
.தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு
காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
சிறுவினா
1.
உயிராக நான், பல பெயர்களில் நாள். நான்கு
திசையிலும் நான். இலக்கியத்தில் நான், முத்தீர் தாவாய்
ஓட்டியாக நாள். முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு
தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
2.
உயிர்கள் உருவாகி வரை ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி
அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
3.
வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப்
பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட
பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள்
கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும்
ஆசிரியர் கூறினார்.-வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக
நெடுவினா
1.
காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
2.
பிரும்மம் கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க
3.
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து
விடித்தும் விடியாத காலைப்
பொழுதாக
வினைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில்
தலைசீவி
துந்த இனந் தென்றலே
- வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர்
கண்டு
பொலிந்த தமிழ்
மன்றமே
-கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும்
பாராட்டி உரைசெய்க
கற்பவை கற்றபின்
(பக்க எண்:27)
காற்று
பேசியதைப்போல
, நிலம் பேசுவதாக எண்ணிக்கொண்டு பேசுக
(பக்க எண் : 36)
2.
வண்ணச் சொற்களின் தொடர் வகைகளை எழுதுக.
·
பழகப்
பழகப் பாலும் புளிக்கும்
·
வடித்த
கஞ்சியில் சேலையை அலசினேன்
·
மேடையில்
நன்றாகப் பேசினான்
·
வந்தார்
அண்ணன்
·
அரிய
கவிதைகளின் தொகுப்பு இது
2.
கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.
மாடியிலிருந்து
இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப்
பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட
குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.
மொழியை ஆள்வோம்:
கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப்
பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:-
அ) இயற்கை
– செயற்கை |
|
ஆ) கொடு
- கோடு |
|
இ) கொள்
- கோள் |
|
ஈ) சிறு
- சீறு |
|
உ) தான்
- தாம் |
|
ஊ) விதி
- வீதி |
|
மொழிபெயர்க்க:
The Golden sun gets up early in the morning and starts
its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The
colourful birds start twitting their morning melodies in percussion.The cute
butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze.
The breeze gently blows everywhere and makes everything pleasant.
வாழ்த்து
மடல் எழுதுக:
மரம் இயற்கையின் வரம் என்னும்
தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை
வாழ்த்தி மடல் எழுதுக.
மொழியோடு விளையாடு:
சொல்லைக்
கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-
முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும். |
|
பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும் |
|
இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை. |
|
நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும். |
|
ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம் |
|
நயமிகு
தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.
1.
கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக்
காற்று வீசியது.
2.
புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு
மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப்
பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.
3.
சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள்
அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில்
வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.
4.
இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட
வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப்
பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.
5.
நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச்
சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச்
சிலிர்க்கும் உயிரினம்.
6.
குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும்.
இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்.
வனத்தின்
நடனம்,
மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு.
அகராதியில் காண்க.
அகன்சுடர், ஆர்கலி,
கட்புள், கொடுவாய், திருவில்
நிற்க அதற்குத்
தக:
புயல் முன்னெசரிக்கை
கலைச்சொற்கள்
1.
Storm
-
2.
Land
Breeze -
3.
Tornado
–
4.
Sea
Breeze -
5.
Tempest
–
6. Whirlwind -
இயல்-3
திறன் அறிவோம்
பலவுள்
தெரிக.
1.
பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?
அ)
தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ)
தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ)
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு
இடமுண்டு.
2.
காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது
அ)
சுட்டி ஆ) கிண்கிணி இ) குழை ஈ) சூழி
3.
காசிக்காண்டம் என்பது
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் ஆ) காசி நகரத்தைக் குறிக்கும்
மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் ஈ) கரசி நகரத்திற்கு
வழிப்படுத்தும் நூல்
4.
விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது
புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-
அ)
நிலத்திற்கேற்ற விருந்து ஆ) இன்மையிலும் விருந்து
இ)
அல்லிலும் விருந்து ஈ) உற்றாரின் விருந்து.
5.
நன்மொழி என்பது
அ)
பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை (ஈ) உம்மைத்தொகை
குறுவினா
1.
விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
2.
தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த கினையை உரலில்
இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே
இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
3.
செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?
4.
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள். விருந்தும்
ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். - அடிக்கோடிட்ட சொற்களை
உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.
5.
தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத்
தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.
சிறுவினா
1.
'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப்
புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.
2,
வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன்
செங்கீரை ஆடிய
நயத்தை
விளக்குக.
3.
'தனித்து உண்ணாமை' என்பது தமிழரின்
விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள
மாற்றங்களைப் பட்டியலிடுக.
4.
மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி
மேற்கொண்டனர்.சிலர்மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த விட்டின் மதிலை
ஒட்டிச் செங்காந்தன் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப்
பார்த்தபடியே விடு சென்றேன்.
பத்தியைப்
படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.
நெடுவினா
1.
சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன்
விளக்குக.
2.
அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் கோபல்வபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
3.
உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை
அழகுற விவரித்து எழுதுக.
கற்பவை
கற்றபின்:
(பக்க எண்: 51)
நெடுநாளாகப்
பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு
வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக ஒரு
பத்தியளவில் எழுதிப் படித்துக் காட்டுக.
வண்ணமிட்ட
தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக. (பக்க எண்:
60)
1. அன்புச்செல்வன், திறன்பேசியின் தொடுதிரையில்
படித்துக்கொண்டிருந்தார்.
2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர்
கொடுக்கவும்.
3. வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப்
பொருத்தமாக இருக்கும்.
4. தங்கமீன்கள் தண்ணீர்த்தொட்டியில்
விளையாடு கின்றன.
தங்கமீன்கள் -உவமைத்தொகை.
மொழியை
ஆள்வோம்:
மொழி பெயர்க்க:
Respected ladies and gentleman. I am Ilangaovan studying
tenth standard. I have come here to say a few words about our Tamil culture.
Sangam literature shows that Tamils were best in culture and civilization about
two thousand years ago. Tamils who have defined grammer for language have also
defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils
throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though
our culture is very old,it has been updates consistently. We should feel proud
about our culture. Thank you one and all.
1 |
உப்பில்லாப் |
|
2. |
ஒரு பானை |
|
3 |
உப்பிட்டவரை |
|
4 |
விருந்தும் |
|
5 |
அளவுக்கு |
|
கதையாக்குக.
மனித வாழ்வில் ஒவ்வொருவரும்
நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம்;
புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகிற கருப்பொருள்களைத்
திரட்டி, கற்பனை நயம் கூட்டிக் கதையாக்குவது ஒரு கலை. அது
சிறுகதையாக இருக்கலாம். புதினமாக இருக்கலாம். அன்பை எதிர்பார்த்திருப்பவராக,
யாருமற்றவராக.... இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த
நிகழ்வினைக் கதையாக்குக.
கடிதம்
எழுதுக
உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு
தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவு
பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.
மொழியோடு
விளையாடு
விடுபட்ட
எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக்
கண்டுபிடிக்க:-
வினா |
குறிப்பு |
விடுபட்ட
எழுத்து |
நூலின் பெயர் |
இ____கு |
பறவையிடம் இருப்பது |
|
|
கு____தி |
சிவப்பு நிறத்தில் இருக்கும் |
|
|
வா____ |
மன்னரிடம் இருப்பது |
|
|
அ____கா |
தங்கைக்கு மூத்தவள் |
|
|
ம_____ |
அறிவின் மறுபெயர் |
|
|
பட_____ |
நீரில் செல்வது |
|
இரு சொற்களையும் ஒரே
தொடரில் அமைத்து எழுதுக:-
1 |
சிலை - சீலை |
|
2. |
தொடு - தோடு |
|
3 |
மடு - மாடு |
|
4 |
மலை - மாலை |
|
5 |
வளி - வாளி |
|
6 |
விடு - வீடு |
|
கலைச்சொற்கள்
1.
Hospitality
–
2.
Wealth
–
3.
Baby
shower -
4. House warming
நிற்க அதற்குத்தக
"தம்பி..
உனக்குப் பிடிச்ச காய் சொல்லு?"
- "கேரட்"
"பிடிச்ச
பழம்?" - "ஆப்பிள்"
”பிடிச்ச
காலை உணவு? - "நூடுல்ஸ்"
"மத்தியானத்துக்கு"
- "ஃப்ரைடு ரைஸ்" ,
” ராத்திரி” - "பீட்ஸா அல்லது
பாஸ்தா"
இது ஏதோ
ஆங்கிலப்படத்தின் வசனம் அல்ல." சரியா சாப்பிட மாட்டேங்கிறான் டாக்டர்"
என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல். ஒட்டுமொத்த இளைய
தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும்
சாம்பார் சாதமும் கத்தரிக்காய்ப் பொரியலும் இனிக் காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில், 'ஆம், காணாமல்
போய்விடும்'! உங்கள் குழந்தைகள், "ஆடு, மாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச்
சாப்பிடுவாங்களா அம்மா? என எதிர்காலத்தில் கேட்கக்கூடும்!
இக்கருத்திற்குச் சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?
குறுவினா
1.
'நச்சப் படாதவன்' செல்வம் இத்தொடரில்
வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
2.
இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய
வேண்டியதை எழுதுக.
3.
பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.
4.
செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர்
உரைக்கின்றார்?
சிறுவினா
1.
வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு - குறளில் பயின்றுவரும் அணியை
விளக்குக.
2.
ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று
விளக்குக
|
3. கவிதையைத் தொடர்க. பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
அ) திருக்குறன் ஆ)
கம்பராமாயணம் இ) கலித்தொகை ஈ) சிலப்பதிகாரம்
2. இடைக்காடனாரின்
பாடலை இகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு வைந்தவர்
அ) அமைச்சர்.மன்னன் ஆ) அமைச்சர், இறைவன் இ)
இறைவன், மன்னன்
ஈ) மன்னன்,
இறைவன்
3. உவப்பின்
காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது
அ) இட வழுவமைதி ஆ) பால் வழுவமைதி இ) திணை வழுவமைதி ஈ) கால
வழுவமைதி
4. இரவிந்திரநாத
தாகூர் ------ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான
கீதாஞ்சலியை --==----மொழியில், மொழிபெயர்த்த
பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.
அ) ஆங்கில வங்காளம் ஆ) வங்காள,
ஆங்கில இ) வங்காள, தெலுங்கு ஈ) தெலுங்கு,
ஆங்கில
5. படர்க்கைப்
பெயரைக் குறிப்பது எது?
அ) யாம் ஆ) நீவிர் இ) அவர் ஈ) நாம்
குறுவினா
1.
கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன்
பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்"
-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினால் யார்? காதல்மிகு
கேண்மையினான் யார்?
2.
மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.
3.
அமர்ந்தான் பகுபத உறுப்பிலக்கணம் தருக
4.
வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை தேரில்
காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செய்கிறேன் இந்தொடர் கால வழுவமைதிக்கு
எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
5.
சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப்
பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு
நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் -இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருந்தி
எழுதுக
சிறுவினா
1.
மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்தது என்?
விளக்கம் தருக
2.
பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
3.
ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு.
ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால்
அவரவர் மொழிகளில் புரித்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (cranslati) என்பது
எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது: ஆனாய் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது
(Interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர்
பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு
இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில்
உள்ள பார்வையாளர்கள் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது
மொழியில் புரிந்துகொள்வர்.
இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக
4.
நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத்
தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை
என்னிடம், 'இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப்
பார்" என்றார். 'இதோ சென்றுவிட்டேன்' என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, 'என்னடா விளையாடவேண்டுமா?" என்று கேட்டேன். என்
தங்கையும் அங்கே வந்தாள். அவனிடம், "நீயும் இவனும்
விளையாடுங்கள்' என்று கூறிவேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி
தொட்டியிலிருந்த நீரைக் குடித்தான்.
இப்பத்தியிலுள்ள
வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
ஏதேனும்
இரண்டு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக
நெடுவினா
1.
இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச்
செவிசாய்ந்த நிகழ்வை நயத்துடன் எழுதுக
2.
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே'
என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து
பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்
சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
3.
தமிழின் இலக்கிய வளம் கல்வி மொழி பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்
அறிவியல் கருத்துகள் பிற துறைக் கருத்துகள் தமிழுக்குச் செழுமை. மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு
செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற
தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி