10 TH STD TAMIL SLIP TEST QUESTION PAPER UNIT-2

 

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-1 (இயல்-2)

பலவுள் தெரிக.                                                                                                                     5×1=5

1. பரிபாடல் அடியில் விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

அ) வானத்தையும் பாட்டையும் ஆ) வான்வெளியில், பேரொலியில்

இ) வானத்தில், பூமியையும்   ஈ) வானத்தையும் பேரொலியையும்

2. செய்தி 1-   ஒவ்வோர் ஆண்டும் சூன் 3 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

   செய்தி 2 -  காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

   செய்தி 3 - இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.

அ) செய்தி 1 மட்டும் சரி  ஆ) செய்தி 1.2 ஆகியன சரி

இ) செய்தி 3 மட்டும் சரி  ஈ) செய்தி 1.3 ஆகியன சரி

3. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல் - 1. மேற்கு

ஆ) கோடை - 2. தெற்கு

இ) வாடை - 3. கிழக்கு

ஈ) தென்றல் – 4. வடக்கு

) 1.2.3.4  ) 3.1.4.2   ) 4.3.2.1   ) 3,4,1,2

4. மகிழுந்து வருமா?' என்பது -------

அ) விளித்தொடர்  ஆ) எழுவாய்ந்தொடர்  இ) வினையெச்சத்தொடர்   ஈ) பெயரெச்சத்தொடர்

5. அறிஞகுக்கு நூல், அறிஞரது நூய் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது -

அ) வேற்றுமை உருபு  ஆ) எழுவாய் இ) உவம உருபு    ஈ) உரிச்சொல்

குறுவினா.                                                                                                                            4×2=8

1. நமக்கு உயிர் காற்று

   காற்றுக்கு வரம் மரம் - மரங்களை

  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக

2. எழுது என்றான்' என்பது விரைவு காரணமாக, 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

3. கட்டுரை படித்த -இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக

4. மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.           

நெடுவினா                                                                                                                       1×7=7

1. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-2 (இயல்-2)

சிறுவினா                                                                                                                          4×3=12

1. உயிராக நான், பல பெயர்களில் நாள். நான்கு திசையிலும் நான். இலக்கியத்தில் நான், முத்தீர் தாவாய் ஓட்டியாக நாள். முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

2. உயிர்கள் உருவாகி வரை ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

3. வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப் பாடிக் காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர். மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார். இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப் பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார்.-வண்ணமிட்ட சொற்களுக்கான தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக

4. தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

குறுவினா                                                                                                                          4×2=8                                                                                                    

1. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க

          ) இயற்கைசெயற்கை  ஆ) கொடு - கோடு

2. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க

1. பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்

2. ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்

3. தொடர் வகைகளை எழுதுக.

அ. பழகப் பழகப் பாலும் புளிக்கும் ஆ. வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன் -

4. கலைச்சொல் அறிவோம்

1. STORM  2. LAND BREEZE  3. TORNADO 4. TEMPEST

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-3 (இயல்-2)

5 மதிப்பெண் வினா                                                                                                        2×5=10                                                                                                   

1. மொழிபெயர்க்க:

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

2. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

நெடுவினா                                                                                                                  1×10=10

3. 'பிரும்மம் கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும்  பண்பினை விவரிக்க.

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-4 (இயல்-1)

5 மதிப்பெண் வினா                                                                                                                          2×5=10

1. தட்டச்சர் பணி வேண்டி தன்விவரப் பட்டியலை நிரப்புக.

2. மரம் இயற்கையின் வரம்  என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

நெடுவினா                                                                                                                  1×10=10

3. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

வளரும் விழி வண்ணமே வந்து

   விடித்தும் விடியாத காலைப் பொழுதாக

வினைந்த கலை அன்னமே

   நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

துந்த இனந் தென்றலே - வளர்

    பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே

-கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரைசெய்

பதிவிறக்க

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை