9.ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் இயல்-1

 

9.ஆம் வகுப்புதமிழ்  அலகுத்தேர்வு  இயல்-1

பலவுள் தெரிக.                                                                                                               9×1=9

1. திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிடமொழி எது?

அ) தமிழ்  ஆ) தெலுங்கு   இ) மலையாளம்   ஈ) கள்ளடம்

2. தமிழ்விடு தூது ------ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

அ) தொடர்நிலைச் செய்யுள்  ஆ) புதுக்கவிதை  இ) சிற்றிலக்கியம்  ஈ) தனிப்பாடல்

3. பின்வருவனவற்றில் அளபெடை இடம்பெறாத தொடர் எது?

அ) குக்கூஉ எனக் குயில் கூவியது  ஆ) கொக்கரக்கோ எனச் சேவல் கூவியது.

இ) அண்ணா.அ என அழைத்தான்   (ஈ) ஓடி வா ஓடி வா

4. "காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! - எந்தக்

     காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!'இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் -

அ) முரண், எதுகை, இரட்டைத் தொடை  ஆ) இயைபு, அளபெடை, செந்தொடை

இ) மோனை, எதுகை, இயைபு     ஈ) மோனை, முரண், அந்தாதி

5. சிந்தா மணி என்பதன் இலக்கணக்குறிப்பு.

அ) வேற்றுமைத்தொகை  ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

இ) பண்புத்தொகை  ஈ) வினைத்தொகை

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ - திறம்எல்லாம்

வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்

சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே

6. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ) நீதி நூல் திரட்டு ஆ) தமிழ்விடு தூது இ) முக்கூடற்பள்ளு ஈ) முத்தொள்ளாயிரம்

7. சிந்தாமணி இச்சொல்லிற்கான இலக்கண குறிப்பு

அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை

இ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் ஈ) அன் முடித்தொகை

8. பாடலில் இடம்பெற்ற எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடு

அ) குறம்-பள்ளு  ஆ) குறம் – உறவு  இ) உறவு – வந்து  ஈ) திறம் - எல்லாம்

9. பாடலில் இடம்பெற்ற காப்பியத்தின் பெயர்

) சிலப்பதிகாரம் ஆ) மணிமேகலை இ) சீவக சிந்தாமணி இ) வளையாபதி

குறுவினா                                                                                                                        7×2=14

10. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

11. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

12. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

13. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் அவை

    அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் - இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன  யாவை?

14. தென்திராவிட மொழிகள் ஏதேனும் நான்கினை எழுதுக.

15. அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

16. தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க:

             1. இளமையில் கல்வி ----  2. சித்திரமும் கைப்பழக்கம் ------

சிறுவினா                                                                                                                   3×3=9

17. தமிழ்விடு தூது உணர்த்தும் தமிழின் சிறப்புகளை எழுதுக.

18. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிடமொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?

19. ”தித்திக்கும்” எனத்தொடங்கி “விளம்பக்கேள்” என முடியும் பாடலை அடிமாறாமல் எழுதுக          

விரிவான விடையளி                                                                                                2×5=10

20. காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக

21. உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின், ‘கால் முளைத்த கதைகள்என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.
23. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

நெடுவினா                                                                                                              1×8=8

1. . புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்புத் தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.

(அல்லது)

  . உங்கள் பள்ளி இலக்கிய மன்ற விழா சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள்  (பிப்ரவரி 21) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றிளை வடிவமைக்க,

 பதிவிறக்க

 


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை