10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-1
(இயல்-1)
பலவுள்
தெரிக. 5×1=5
1. காலக்கணிதம்
கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
அ) இகழ்ந்தால் என்மனம்
இறந்து விடாது ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து
விடாது
இ) இகழ்ந்தால் இறந்து
விடாது என்மனம் ஈ) என்மனம் இறந்து விடாது
இகழ்ந்தால்
2. 'காய்ந்த
இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். அடிக்கோடிட்ட பகுதி
குறிப்பிடுவது
அ) இலையும் சருகும் ஆ)
தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
3. எந்தமிழ்நா
என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-
அ) எந்+தமிழ்+நா ஆ) எந்த + தமிழ் +நா இ) எம் + தமிழ் +நா ஈ)
எந்தம் + தமிழ் +நா
4. கேட்டவர்
மகிழப் பாடிய பாடல் தொடரில் இடம்பெற்ற தொழிற்பெயரும் வினையாலணையும்
பெயரும் முறையே
அ) பாடிய கேட்டவர் ஆ) பாடல் பாடிய இ) கேட்டவர்; பாடிய ஈ)
பாடல் : கேட்டவர்
5. வேர்க்கடலை,
மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக்
குறிப்பது
அ) குலைப்பெயர் வகை ஆ) மணிப்பெயர் வகை இ) கிளைப்பெயர் வகை ஈ)
இலைப்பெயர் வகை
குறுவினா. 4×2=8
1.
பலகை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக்
காட்டுக.
2.
மன்னுஞ் சிலம்பேர் மணிமே கவைவடிவே!
முன்னும் தினைவால் முடிதாழ
வாழ்த்துவமே! - இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக
3.
சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக
4. சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக
“தேணிலே ஊரிய செந்தமிழின் –
சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் –
நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே”
நெடுவினா
1.
நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று
விளக்குக.
10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-2
(இயல்-1)
சிறுவினா
1.
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
2.
புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.
இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின்
பெயர்களைத் தொடர்களில் அமைக்க
3.
அறிந்தது, அறிந்தது,
புரிந்தது. புரியாதது. தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது இவை அனைத்தையும் யாம் அறிவோம். அடிக்கோடிட்ட
சொற்களைத் தொழிற்பெயர்களாக மாற்றுக
4.
”அன்னை மொழியே…”
என்ற பாடலை அடிபிறழாமல் எழுதுக
குறுவினா
1. கீழ்க்காணும்
சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
( குவியல், குலை,மந்தை,கட்டு )
2. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை
இணைத்து எழுதுக
1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை
அழைத்து வாருங்கள்.
2.
ஊட்டமிகு உணவு உண்டார்.அவர்
நீண்ட வாழ்நாள் பெற்றார்.
3.
எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.
அ. நாற்றிசையும்
செல்லாத நாடில்லை ஆ. எறும்புந்தன் கையால் எண் சாண்
இ. ஐந்து சால்பு ஊன்றிய தூண் ஈ. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
4. கலைச்சொல் அறிவோம்
1. Vowel 2. Consonant 3. Homograph 4. Monolingual
10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-3 (இயல்-1)
5 மதிப்பெண் வினா
2×5=10
1. மொழி பெயர்ப்பு:-
1. If you talk to a man in a language he
understand,thats goes to his head. If you talk to him in his own language that
goes to his heart – Nelson Mendela
2. Language is the road map of a culture. It tells you
where its people come from and where they are going – Rita Mae Brown
2. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
நெடுவினா
1×10=10
3.
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்
தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில், தோணி
படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-4 (இயல்-1)
5 மதிப்பெண் வினா 2×5=10
1. தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.
2.
மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் கலையரசன் பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக
நெடுவினா
1×10=10
3. குமரிக்கடல்
முனையையும், வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர்
திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச்
சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ்
பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி,
கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப்
பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு
“ சான்றோர் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கட்டுரை
வரைக.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி