10.ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் இயல்-1

 

10.ஆம் வகுப்பு – தமிழ்  அலகுத்தேர்வு  இயல்-1

பலவுள் தெரிக.                                                                                                                 10×1=10

1. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?

அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது  ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது

இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்  ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால்

2. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது

அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும்  இ) தாளும் ஓலையும்   ஈ) சருகும் சண்டும்

3. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-

அ) எந்+தமிழ்+நா  ஆ) எந்த + தமிழ் +நா   இ) எம் + தமிழ் +நா   ஈ) எந்தம் + தமிழ் +நா

4. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - தொழிற்பெயரும் விளையாலணையும் பெயரும் முறையே -

அ) பாடிய கேட்டவர்   ஆ) பாடல் பாடிய  இ) கேட்டவர்; பாடிய   ஈ) பாடல் : கேட்டவர்

5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது -

அ) குலைப்பெயர் வகை  ஆ) மணிப்பெயர் வகை  இ) கிளைப்பெயர் வகை ஈ) இலைப்பெயர் வகை

6. உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு

அ) இந்தியா   ஆ) இலங்கை   இ) மலேசியா  ஈ) சிங்கப்பூர்

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க.

"உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்

 செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த

அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி

முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!"         

7. பாடலின் ஆசிரியர் 

அ) பாரதியார் ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் இ) பாரதிதாசன் ஈ) தமிழழகனார்

8. பண்புத்தொகையைத் தேர்ந்தெடுக்க. 

அ) செந்தாமரை  ஆ) வீசுதென்றல்  இ) உணர்வெழுப்ப  ஈ) சிறகார்ந்த

9. தும்பி என்னும் சொல்லுக்கான பொருளைத் தேர்க.  

அ) கனல்  ஆ) உந்தி  இ) யாண்டும்   ஈ) வண்டு

10. பாடல் இடம்பெற்றுள்ள நூல்   

அ) உலகியல் நூறு  ஆ) பாவியக் கொத்து  இ) கனிச்சாறு  ஈ) எண்சுவை

குறுவினா                                                                                                                        7×2=14

11. பலகை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

12. மன்னுஞ் சிலம்பேர் மணிமே கவைவடிவே!

   முன்னும் தினைவால் முடிதாழ வாழ்த்துவமே! - இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக

13. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

14. சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:-

தேணிலே ஊரிய செந்தமிழின்சுவை   தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும்நிதம்   ஓதி யுனர்ந்தின் புருவோமே

15. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.   ( குவியல், குலை,மந்தை,கட்டு )

16. எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.

அ. ஐந்து சால்பு ஊன்றிய தூண்  ஆ. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

17. கலைச்சொல்  தருக   . Vowel   ஆ.Consonant இ. Homograph ஈ. Monolingual  

சிறுவினா                                                                                                                   3×3=9

18. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

19. புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.

    இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க

20. ”அன்னை மொழியே” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக                        

விரிவான விடையளி                                                                                                  2×5=10

21. தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.

22. மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் கலையரசன் பட்டம் பெற்ற  தோழனை வாழ்த்தி மடல் எழுதுக

23. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

நெடுவினா                                                                                                              1×7=7

1. அ. நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.

(அல்லது)

  ஆ. புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

 பதிவிறக்க

   

 


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை