9.ஆம் வகுப்பு தமிழ்
வினா
விடைகள்
(2025-2026)
இயல்-5
பலவுள் தெரிக
1.
பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று.
அ) மாமல்லபுரம் ஆ) பிள்ளையார்பட்டி இ)
திரிபுவளயீரேசுவரம் ஈ) தாடிக்கொம்பு
2.
'பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும்' நிலப்
பகுதி
அ) குறிஞ்சி ஆ) நெய்தல் இ) முல்லை ஈ) பாலை
3.
இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும் என்பதற்கான
எடுத்துக்காட்டு -
அ) தளிக சிறப்பு ஆ) தைத்திங்கள் இ) வடக்குப் பக்கம்
4.
திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை
அ) விலங்கு உருவங்கள் ஆ) தீர்த்தங்கரர்
உருவங்கள்
இ) தெய்வ உருவங்கள் ஈ) நாட்டியம் ஆடும் பாவை
உருவங்கள்
5.
"வசிபட முதுநீர் புக்கு
மலையெனத் துவரை
நன்னீர்"பாடல் அடிகளில் முதுநீர் என்பது எது?
அ) மழை நீர் ஆ) கடல் நீர் இ) ஆற்று நீர் ஈ) நிலத்தடி நீர்
குறுவினா
1.
நடுகள் என்றால் என்ன?
விடை: போரில்
விழுப்புண் பட்டு இறந்த வீரர்களுக்கு நடப்படுவது நடுகல்.
2.
இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?
விடை: இசைத்தூண்கள்
விஜயநகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டன.
3.
இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகுந்து
வருவதைச் சான்றுடன் விளக்குக.
விடை:
கதவைத் திற இதில் ஐ என்ற இரண்டாம் வேற்றுமை
உருபு வெளிப்பட்டு வந்தால் வல்லினம் மிகுந்தது
4.
உரிய இடங்களில் வல்லின மெய்களைச் சேர்த்து எழுதுக.
விடை:
பிறநாட்டுச்
சிற்பங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டுச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன.
யோகக்கலை, நாட்டியக்கவைக் கூறுகளும் தமிழ்நாட்டுச் சிற்பக்கலையில் இடம் பெற்றுள்ளன.
பிறநாட்டுச் சிற்பங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டுச் சிற்பங்கள்
தனித்தன்மையுடன் திகழ்கின்றன. யோகக்கலை, நாட்டியக்கலைக்
கூறுகளும் தமிழ்நாட்டுச் சிற்பக்கலையில் இடம் பெற்றுள்ளன.
5.
பூக்கும் - பகுபத உறுப்பிலக்கணம் தருக
பூக்கும் - பூ
+க் +க் +உம்
பூ - பகுதி
க் - சந்தி
க் - எதிர்கால
இடைநிலை
உம் - வினைமுற்று
விகுதி
சிறுவினா
I.
முழு உருவச் சிற்பங்கள் - புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள
வேறுபாடு யாது?
விடை:
முழு
உருவச் சிற்பம்: உருவத்தின் முன் பகுதியும்,
பின் பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு
உருவத்துடன் அமைந்து இருக்கும்.
புடைப்புச்
சிற்பம்: புடைப்புச் சிற்பத்தில் முன்பகுதி
மட்டுமே தெரியும் படி அமைந்து இருக்கும்.
2.
நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?
விடை:
·
பேரூர்
சிவன் கோயிலில் உள்ள சிற்பங்கள் நுட்பத்தின் உச்சநிலைப் படைப்பு
·
விழியோட்டம், புருவநெளிவு,
நக அமைப்பு என கலைநயத்துடன் அவை அமைக்கப்பட்டுள்ளன.
·
திருநெல்வேலி, இராமேஸ்வரம்
கோயில் சிற்பங்களும் கலைநயம் மிக்கவை.
3.
எண்ணுப்பெயர், திசைப்பெயர்களில் வல்லினம் மிகுந்து
வருவதைச் சான்றுடன் எழுதுக
விடை:
அ.
எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களில்
வல்லினம் மிகும்.
எ-டு : எட்டுத்தொகை 'பத்துப்பாட்டு'
ஆ.
திசைப்பெயர்களில் வல்லினம் மிகும்.
எ-டு : கிழக்குப்
பகுதி 'வடக்குப் பக்கம்
4.
குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
·
தீயில்
இட்ட சந்தன மரக்குச்சிகள்
·
அகில்
கட்டை எரிவதால் எழும் மணம்
·
உலையிலிட்ட
மலை நெல்லரிசிச் சோற்றின் மணம்
·
காந்தள்
மலரின் மணம் ஆகியவற்றால் குறிஞ்சி நிலம் மணக்கிறது.
5.
இராவண காவியத்தின் வழியே மருத நிலத்தின் அழகைப் புலவர் குழந்தை
எங்ஙனம் காட்சிப்படுத்துகிறார்?
·
மலையிடையே
தோன்றும் ஆறும் கரையை மோதித்ததும்பும்
·
குளத்துநீரும்
முல்லை நிலத்தின் அழகிய காட்டாறும் மருத நிலத்தில் பாய்ந்தோடும்.
·
அங்கு
நெற்பயிரினைக் காக்கும் வகையில் கரும்பு வளர்ந்து நிற்கும்.
நெடுவினா
1.
தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப்
பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக முன்னுரை:
தமிழ்நாட்டுச் சிற்பங்கள்
கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை இக்கட்டுரையில் காண்போம்
பல்லவர் காலச் சிற்பங்கள்:
·
சுதையினாலும், கருங்கற்களினாலும்
சிற்பங்கள் அமைக்கப்பட்டன. கோவில்களின் கட்டடங்கள், பல்லவர்கள்
குடைவரைக் கோவில்களை அமைத்தனர்.
·
அதற்கு
மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி கோவில்களே சான்று
பாண்டியர் காலச்
சிற்பங்கள்:
·
பாண்டியர்
கால குகைக் கோவில்களில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன.
·
அவற்றைத்
திருமயம், பிள்ளையார்பட்டி, திருப்பரங்குன்றம், கழுகுமலை முதலிய இடங்களில் காணலாம்
சோழர்காலச் சிற்பங்கள்:
·
சோழர்
காலம் சிற்பக்கலையின் கருவூலமாகத் திகழ்கிறது. தஞ்சைப் பெரியகோவிலின் வேலைப்பாடுகள் சோழர்காலச் சிற்பத்திறனுக்குச் சான்றுகளாக விளங்குகின்றன.
·
சிற்பங்களில்
காணப்படும் நடன முத்திரையும்,
முக பாவனைகளும், சோழர்களின் கலை நுட்பத்தை
விளக்குகின்றன.
விஜயநகர மன்னர்காலச்
சிற்பங்கள்:
·
கோவில்களில்
மிக உயர்ந்த கோபுரங்கள் எழுப்பப்பட்டன
·
தெலுங்கு, கன்னட
நாட்டுச் சிற்பங்களின் தாக்கம் இங்கு ஏற்பட்டது.
·
ஆடை, அணிகலன்கள்
அணிந்த நிலையில் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன.
நாயக்கர் காலச்சிற்பங்கள்:
·
பல
இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தனர்.
·
சிற்பங்களை
ஆடை ஆபரணங்களுடன் கூடிய கலை நயத்துடன் அமைத்துள்ளனர்
·
பேரூர்
சிவன் கோவில் சிற்பங்கள் விழியோட்டம்,
புருவ நெளிவு, தக அமைப்பு என மிக மிக
நுட்பமாகப் படைக்கப்பட்டுள்ளன.
முடிவுரை:
இதன்மூலம் தமிழ்நாட்டுச்
சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை அறியலாம்
2.
இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.
குறிஞ்சி :
சந்தனம், அகில்,
மலை நெல்லரிசி சோற்றின் மணம், காந்தள் மணம்
ஆகியவை குறிஞ்சி நிலம்
முழுதும் பரவியிருந்தது.
முல்லை :
முதிரை, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி
ஆகியவற்றை கதிரடிக்கும் அதிர் குரல் கேட்டு மான்கள் அஞ்சி ஓடின
பாலை
·
வெப்பத்தை
தாங்க முடியாமல் செண்ணாய் குட்டியின் நா உலர்ந்தது
·
தாய்
தந்த நிழலில் இளைப்பாறச் செய்தது
மருதம்
·
மலையில்
தோன்றிய ஆற்று நீரும் கரையை மோதியது
·
நீர்வளம் மருத நில வயல்களையும் கரும்பையும் வளப்படுத்தியது
நெய்தல்
·
பசியால்
வாடுவோரைக் கண்டு வருந்தும் சான்றோர் தான் வாழும் இடம் கடலில் மூழ்கினாலும் பவளங்களை
முத்துக்களையும் கடற்கரையில் கொண்டு வந்து குவிப்பர்
3. இசைக்கு நாடு, மொழி, இனம்
தேவையில்லை என்பதைச் 'செய்தி' கதையின்
மூலமாக விளக்குஉ
முன்னுரை:
இக்கதையில் இசையின் அற்புத
சக்தி, அதன் மூலம் எவ்வாறு அமைதி, உணர்வு மற்றும் உலகத்தோடு
இணைப்பு ஏற்படுகிறது என்பதை விளக்குகிறது.
தொடக்கம்:
கதையின் ஆரம்பத்தில், இசை மொழியின் எல்லைகளை தாண்டி அமைதியின் நாக்காக அனைவரையும் செருமைப்படுத்தும்
பாணியை எடுத்துரைக்கின்றது. இதில், சொற்களின் ஊடுருவலின்றி
இசை தன்னுடைய செய்தியைச் சொல்லுகின்றது.
இசை
உணர்வு:
வித்துவான் ஒரு
ஆலாபனத்துடன் கீர்த்தனத்தைத் தொடங்குகிறார். அப்போது வெளிப்படையான இசை உணர்வு
தோன்றி,
போல்ஸ்கா தனது தனிப்பட்ட அனுபவங்களை வெளிப்படுத்தும் விதமாக இசையின்
ஒலியை அனுபவிப்பதைக் காணலாம்.
போல்ஸ்காவின் முகத்தில்
நாதத்தின் அற்புத அனுபவம் வெளிப்படுகிறது. அவர் இசையின் ஒலியில் தன் உள்ளத்தின்
தகவலை உணர்ந்து,
அந்த இசையின் மூலம் உலகிற்கு ஒரு தனி செய்தியைப் பெறுகின்றார்.
செய்தி:
இங்கு, போல்ஸ்கா ஒருவித “செய்தி” பாரம்பரிய
கலையின் மூலம் அனுபவிக்கிறார். அது எந்த உலகத்திலிருந்தோ வந்த சின்னம் அல்லது
அறிவிப்பு என்று உணர்ந்து, தனது உள்ளம் அதன்போல திரும்பி,
இசையின் மூலம் ஒரு புதிய அறிவை பெறுகிறது.
முடிவுரை:
கதையின் இறுதியில், போல்ஸ்கா இசையின் மூலம் தன்னுள் அமைதியைக் கண்டுபிடிக்கிறார். அவர் எந்த
எதிர்ப்பு சத்தமும் இல்லாமல், முழு அமைதியையும் அனுபவித்து,
அந்த அமைதியினை முழுக்க ஏறி, இறைவனிடம் வணங்கி,
அன்பும் பக்தியும் வெளிப்படுத்துகிறார்.
மொழி பெயர்க்க:
( எட்டாக்கனி,உடும்புப்பிடி, கிணற்றுத்தவளை, ஆகாயத்தாமரை, எடுப்பார் கைப்பிள்ளை, மேளதாளத்துடன்)
கிணற்றுத் தவளை : கிணற்றுத் தவளை போல்
உன் வாழ்வை ஒரு குறுகிய எல்லைக்குள் சுருக்கிக்
கொள்ளாதே!.
ஆகாயத்தாமரை : ஆகாயத் தாமரையைப் பறிக்க
விரும்புவது போல் இல்லாத ஒன்றை விரும்பி ஏற்காதே.
எடுப்பார் கைப்பிள்ளை : என் நண்பன் எடுப்பார்
கைப்பிள்ளை போல் யார் எதனைச் சொன்னாலும்
ஏற்றுக்கொள்வான்.
மேளதாளத்துடன் : எம் பள்ளிக்கு வருகை தந்த
அமைச்சரை மேளதாளத்துடன் வரவேற்றோம்.
மரபுப்
பிழைகளை நீக்கி எழுதுக
1. இல்லத்தின் அருகே புதிதாகக்
கூரை போட்டனர்
விடை: இல்லத்தின் அருகே
புதிதாகக் கூரை வேய்ந்தனர்,
2. கயல்பானை செய்யக்
கற்றுக் கொண்டாள்.
விடை: கயல் பானை வனையக்
கற்றுக் கொண்டாள்.
3, நேற்று தென்றல்
காற்று அடித்தது.
விடை: நேற்று தென்றல்
வீசியது
4. தென்னை
மட்டையிலிருந்து நார் எடுத்தார்.
விடை: தென்னங்கீற்றில்
இருந்து நார் கிழித்தனர் (கிழித்தார்)
5. அணில் பழம்
சாப்பிட்டது
விடை: அணில் பழம் தின்றது.
கவிதை படைக்க
புவியைப்போற்று
புவியைப்போற்ற
நீரைச்சேமி
புவியைப்போற்ற
மரங்களை நடு
புவியைப்
போற்ற நீர்நிலை பெருக்கு
புவியைப்போற்ற
சுற்றுச்சூழல் பேணு.
அன்பின்
வழி
அன்பின்
வழியே அனைத்தும் சாத்தியம்
அறம்
பெருக்கி மனிதம் காப்பாய்
உயிரிரக்கம்
கொண்டு வாழ்
பிறர்
துன்பம் தன் துன்பமாய் நினை
அன்பின்
வழியே அனைத்தும் சாத்தியம்
கண்டுபிடிக்க
1. எண்ணும் எழுத்தும் கண் -
இத்தொடரை ஒருவர் 1, 2, 3, 4, 1, 5, 6, 7, 4, 8, 2 என்று
குறிப்பிடுகிறார். இதே முறையைப் பின்பற்றி கீழ்க்காணும் சொற்களை எப்படிக்
குறிப்பிடுவார்.
விடை:
அ) எழுது → 1,5, 7
ஆ) கண்ணும் → 8, 2, 3, 4
இ) கழுத்து → 8, 5, 6, 7
ஈ) சுத்து → 8,
6, 7
2. என் வகுப்பில்
படிக்கும் அனைவரும் புதிய புத்தகம் வைத்திருந்தனர். இராமனும் புதிய புத்தகம்
வைத்திருந்தான். எனவே, இராமன் என் வகுப்பு மாணவன் -
இக்கூற்று.
அ)
உண்மை
ஆ) பொய் இ) உறுதியாகக் கூறமுடியாது
விடை:
இ) உறுதியாகக்
கூறமுடியாது
காரணம்: அனைவரும் என்று
கூறிய பின் இராமன் வேறு வகுப்பு மாணவனாகக் கூடஇருக்கலாம்.
அகராதியில் காண்க:
ஏங்கல், கிடுகு, தாமம்,
பான்மை, பொறி
அ) ஏங்கல் - ஓசை, மயிற்குரல்,
அழுதல், குழந்தைகளுக்கு
ஆ) கிடுகு - கேடகம், முடைந்த
ஓலைக் கீற்று. சட்டப்பலகை வரும் ஒருவகை நோய்
இ) தாமம் - பூமாலை, வடம்,
புகழ், ஒளி, பரமபதம்
ஈ) பான்மை குணம், தகுதி,
முறைமை, சிறப்பு
உ)பொறி -
புள்ளி, தழும்பு, எந்திரம், ஒளி, ஐம்பொறி
உவமைத் தொடர்களை உருவகத்
தொடர்களாக மாற்றுக.
1. மலர்விழி வீணை
வாசித்தாள்: கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்.
விடை: மலர்விழி
வீணை வாசித்தாள், கேட்டவர் இன்ப
வெள்ளத்தில் நீந்தினர்.
2. குழலியின் இசையைச்
சுவைத்தவர், கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர்.
விடை: குழலியின்
இசையைச் சுவைத்தவர் கவலைக்கடலில் இருந்து நீங்கினர்.
3.தேன் போன்ற மொழியைப்
பவள வாய் திறந்து படித்தாள்
விடை: பவளவாய்
திறந்து மொழித்தேளைப் படித்தாள்.
4. முத்துநகை
தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.
விடை: முத்துநகை தன்
புகுவவில்லில் மை தீட்டினாள்
வாழ்வியல் இலக்கியம் - திருக்குறள்
1. படத்திற்கு ஏற்ற குறளைத்
தேர்வு செய்க.
அ) இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
ஆ) ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்.
இ) சுழன்றும்ஏர்ப் பின்னது
உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
2. பொருளுக்கேற்ற அடியைக்
கண்டுபிடித்துப் பொருத்துக.
விடை:
1. பகைவரையும் நட்பாக்கும்
கருவி - மாற்றாரை மாற்றும் படை
2. தெரிந்த அளவில்
அறிவுடையவனாகத் தோன்றுவான் -
கண்டானாம் தான்கண்ட வாறு
3. அறம் வெட்கப்பட்டு
அவனை விட்டு விலகிப்போகும் -
அறம்நாணத் தக்கது உடைத்து
3.
ஐந்து சால்புகளில் இரண்டு
அ) வானமும் நாணமும் ஆ) நாணமும்
இணக்கமும்
இ) இணக்கமும் சுணக்கமும் ஈ) இணக்கமும்
பிணக்கமும்
4. கோடிட்ட இடங்களுக்கான
விடையைக் கட்டத்துள் கண்டறிந்து வட்டமிடுக.
அ) அனைவரிடமும் இணக்கம் என்பதன் பொருள் ஒப்பரவு.
ஆ) உலகத்துக்கு அச்சாணி போன்றவர் உழவர்.
இ) தான் நாணாள் ஆயின் அறம்
நாணத் தக்கது.
ஈ) ஆழி என்பதன் பொருள் கடல்.
உ) மாற்றாரை மாற்றும் படை
ஊ) ஒழுக்கமான குடியில் பிறந்தவர் தவறு
செய்வதில்லை.
5.
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்.
குன்றுவ செய்தல் இலர்.
இக்குறளின் கருத்தை
அடிப்படையாகக் கொண்டு ஒரு பக்கக்கதை ஒன்றை எழுதுக.
"விசாரணை நடத்த வந்தவர்"
தஞ்சை மாவட்டம், பழைய குடிசை ஒன்று.
கூரை துளைக்கும், தரை வெடிக்கும் அந்த வீட்டில் வசிப்பவர்
வேதநாயகம். வயது அறுபத்தை நெருங்கினாலும், நேர்மை, அன்பு, பண்பு ஆகியவற்றால் கிராமமே மதிக்கும்
மூதாட்டி அந்த ஆள்.
ஒருநாள் காலை, திடீரென கார்களில்
யாரோ வந்தனர். அரசின் ஊழியர்கள். அந்த இடத்துக்கருகே ஒரு புதிய தொழிற்சாலை
அமைக்கப்பட இருப்பதால், நிலத்தைப் பதிவு செய்ய வந்ததாம்.
அங்கு பத்தாயிரம் ரூபாய்க்கு ஏராளமான நிலங்களை வாங்கிக் கொண்டனர்.
வேதநாயகத்திடமும் வந்தனர்.
"இந்த மண் உங்களுக்குச் சொந்தமா?"
"ஆம்... என்
பாட்டனார் காலத்திலிருந்தே. ஆனால் இது விற்பனைக்கல்ல. நாங்கள் நடனவாசல் வீதி
குடும்பம். குடிப்பிறந்தோர். பணத்திற்காக நம்ம தர்மத்தையும் மரபையும் விற்கக்
கூடாது என்பதே எங்கள் நெறி."
"ஆனால் நீங்கள்
விற்றால் உங்கள் குடும்பம் இன்னும் நலமாக இருக்கும். உங்கள் மகனுக்கு வேலை,
உங்களுக்குச் சிகிச்சை."
வேதநாயகம் சிரித்தார். "கோடிக்
கோடி விலைக்கு என் மரபை விற்க முடியாது. இங்கு என் அப்பாவின் சாமி சிலை
இருக்கிறது. என் தாத்தாவின் பூமி இது. இதிலே சாமி உறங்குறார். நாங்கள்
பணத்திற்குப் பிறவாதவர்கள்."
அந்த அதிகாரி நிலம் விற்க மறுக்கும்
அவரை புரிந்து கொண்டு மரியாதையுடன் வணங்கினார். "இந்த நாட்டுக்கே இப்படி
நேர்மையானவர்கள் இருக்கிறார்கள் என்பதே பெருமை."
அந்த நாள் முதல், வேதநாயகம் பெயர் "நாட்டின் மரபு காப்பாளர்" என்று ஊரில்
அழைக்கப்பட்டது.
வினாக்கள்.
1.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ(டு)
ஐந்துசால்பு ஊன்றிய தூண். -
இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்கி எழுதுக.
-
இக்குறட்பாவில்
பயின்று வரும் அணி 'ஏகதேச உருவக அணி',
ஏகதேச உருவக அணி:
தொடர்புடைய இரு பொருள்களுள்
ஒன்றை உருவகப்படுத்திவிட்டு,
மற்றொன்றை உருவகப்படுத்தாது விடுவது ஏகதேச உருவக அணி' ஆகும்.
விளக்கம்:
அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை எனும் ஐந்து குணங்களைத் தூண்களாக உருவகப்படுத்தியவர் சால்பு என்னும் குணத்தை உருவகம் செய்யவில்லை. ஆகவே இது "ஏகதேச உருவக அணி" ஆகும்.
2.
உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?
விடை:
பிற
தொழில்கள் செய்வாரையும் பாதுகாத்தலால்,
உழவர் உலகத்திற்கு அச்சாணி போன்றவர் ஆவார்
3.
காணாதான் காட்டுவான் தான்காணாள் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு. இக்குறட்பாவில் பயின்று வரும் தொடைநயத்தை
எழுதுக.
சீர் மோனை: காணாதான், காட்டுவான்
சீர் எதுகை: காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் னார்
- சீர் எதுகை
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி