9.ஆம் வகுப்பு தமிழ்
வினா
விடைகள்
(2025-2026)
இயல்-4 |
திறன்
அறிவோம்
பலவுள் தெரிக
1.
கல்வி இல்லாப் பெண்கள் எவ்வகை நிலத்திற்கு ஒப்பானவர்கள்?
அ)
நஞ்சை நிலம் ஆ) களர் நிலம் இ) உவர் நிலம் ஈ) புஞ்சை நிலம்
2.
கீழ்க்காண்பனவற்றுள் சங்ககாலப் பெண்பாற்புலவர்களின் சரியான
குழுவினைக் கண்டறிக
அ)
நக்கண்ணையார்,
ஒக்கூர் மாசாத்தியார், நப்பசலையார், பண்டித ரமாபாய்
ஆ)
நப்பசலையார், பொன்முடியார். நீலாம்பிகை அம்மையார். ஔவையார்
இ)
நக்கண்ணையார்,
ஒக்கூர் மாசாத்தியார், பொன்முடியார், ஒளவையார்
ஈ)
நக்கண்ணையார்,
ஒக்கூர் மாசாத்தியார், நப்பசலையார், மூவலூர் இராமாமிர்தம்
3.
'இரு' என்பது துணைவினையாக உள்ள தொடர் எது?
அ)
பட்டம் இருக்கிறது. ஆ) பட்டம் செய்திருக்கிறேன்.
இ)
எங்கே இருக்கிறது? ஈ) வானில் மேகம் இருக்கிறது.
4.
சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
அ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்
ஆ) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
முத்துலெட்சுமி
1.
அ மட்டும் சரி 2.அ.ஆ இரண்டும் சரி 3. அ. ஆ இரண்டும் தவறு 4.
ஆ மட்டும் சரி
5.
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது
எதைக் குறிக்கிறது?
அ)
நுகர்தல் ஆ) தொடு உணர்வு இ) கேட்டல் ஈ) காணல்
குறுவினா
1.
சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?
விடை: குழந்தைத் திருமணத்தைத் தடுக்க 1929 ல் சாரதா
சட்டம் இயற்றப்பட்டது.
2.
துணைவினைகளின் பண்புகள் இரண்டினை எழுதுக.
விடை:
·
பேசுவோரின்
மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன.
·
பேச்சு
மொழியிலேயே துணை வினைகளின் ஆக்கம் அதிகமாக உள்ளது.
3.
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே
அவற்றொடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
இவ்வடிகளில்
தொல்காப்பியர் குறிப்பிடும்,
மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு
உயிர்கள் யாவை?
·
கரையான், எறும்பு
போன்றவை மூவறிவு உயிர்களாகும்.
·
நண்டு, தும்பி
ஆகியவை நான்கறிவு உயிர்களாகும்.
·
பறவைகள், விலங்குகள்
ஆகியவை ஐந்தறிவு உயிர்களாகும்.
4.
பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும் என்பதைக் 'குடும்ப விளக்கு' கருத்தின் வழி எழுதுக.
·
கல்வியறிவு
பெற்ற பெண்கள் நன்செய் நிலத்தினைப் போன்றவர்கள்.
·
அவர்கள்
மூலம் சிறந்த அறிவுடைய மக்கள் உருவாகின்றனர்.
·
எனவே
பெண்களுக்குக் கல்வி அவசியம்
5.
'கொடு' என்பது முதல்வினையாகவும்
துணைவினையாகவும் அமையுமாறு தொடர்கள் எழுதுக.
முதன்மை
வினை:
நான் அவனுக்குப் பணம் கொடுத்தேன். அவன் உயிரைக்
கொடுத்து வேலை செய்கிறான்.
துணை
வினை
வேலை செய்து கொடுத்தான். பாடம்
சொல்லிக் கொடுப்பேன்.
சிறுவினா
1.
சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.
1.
ஔவையார்
2.
வெண்ணிக்
குயத்தியார்
3.
வெள்ளி
வீதியார்
4.
ஒக்கூர்
மாசாத்தியார்
5.
அள்ளூர்
நன்முல்லையார்
6.
காவற்பெண்டு
2.
சமைப்பது தாழ்வா? இன்பம்
சமைக்கின்றார் சமையல் செய்வார்.
அ)
இன்பம் சமைப்பவர் யார்? - பெண்
ஆ)
பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?
– சமைப்பது தாழ்வல்ல
3. மருத்துவர்
முத்துலெட்சுமியின் சாதனைகளைக்குறிப்பிடுக.
- தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.
- இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராகவும்,
சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
- அடையாற்றில் 1930-ல் அவ்வை இல்லம்,
1952ல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
4. நீலாம்பிகை அம்மையாரது
தமிழ்ப்பணியின் சிறப்பைக்குறித்து எழுதுக.
- நீலாம்பிகை அம்மையார் மறைமலையடிகளின் மகள் ஆவார். தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்.
- இவரது தனித்தமிழ் கட்டுரை,
வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தடிகள் பாராட்டிய
மூவர் ஆகிய நூல்களை எழுதி தமிழ்ப் பணியாற்றியுள்ளார்.
- மேலும், இவருடைய நூல்கள்
தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.
நெடுவினா:
1. நீங்கள்அறிந்தசாதனைப்பெண்கள்குறித்தசெய்திகளைவிவரிக்க.
பண்டித ரமாபாய்:
·
இவர் சமூகத் தன்னார்வலர்.
·
பல தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர்.
·
பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர்,
ஐடாஸ் சோபியா:
·
தடைகளைத் தாண்டி மருத்துவம் கற்றார்,
·
தமிழகத்தில் வேலூர் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையை
நிறுவியவர்.
மூவலூர் இராமாமிர்தம் :
·
தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி
·
தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற துணைநின்றவர்.
·
தமிழக அரசு மகளிர் திருமண உதவித் தொகையை
இவரின் பெயரில் வழங்கி வருகிறது.
சாவித்திரிபாய் பூலே :
இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர் ஆவார்.
முடிவுரை :
இன்று பல்துறைகளிலும் சிறப்புற்று விளங்க, முன்பே வழிகாட்டிய இவர்கள் அனைவருமே சாதனைப் பெண்மணிகளே.
2.
குடும்பவிளக்கு நூலில்தலைவி பேச்சில்வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.
·
கல்வி
இல்லாத பெண்கள் பண்படாத உவர்நிலம் போன்றவர்கள்.
·
கல்வியறிவு
பெற்ற பெண்கள்,
பண்பட்ட தன்செய் நிலம் போன்றவர்கள்
·
இன்றைய சூழலில் கல்வி கற்ற பெண் குடும்பத்தலைவியாய் இருப்பதால்,
நிறைய நன்மைகள் உண்டு
·
அனைத்துத்
துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்ணும் இடம்பெறுகிறாள்,
·
குடும்ப
விளக்கு தலைபேசும் கால கட்டத்தை விட பெண்கல்வி இன்று பல மடங்கு வளர்ந்திருக்கிறது..
3.
நூலகம், நூல்கள்ஆகியன குறித்து அண்ணாவின்
வானொலி உரையில்வெளிப்படுகின்ற கருத்துகள்யாவை?
நூலகம்:
·
ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்நாட்டு
மக்களின் மனவளத்தைக் கண்டே ஆகும்.
·
நல்ல மனவளம் தருவது நூலகமே
.
·
நூலகத்தால் நாடும் நலமும்
வளமும் பெறும்.
·
ஒவ்வொரு வீடுகளிலும் புத்தகசாலைக்கு இடம்
தரப்பட வேண்டும்.
·
உணவும் உடையைப் போலவே, நூலகமும் அடிப்படைத்
தேவையாகும்.
நூல்கள் :
·
நாட்டை அறிய, உலகை அறிய, ஏன் ஒருவன் தன்னை
அறிய ஏடுகள் (நூல்) வேண்டும்.
·
அடிப்படை அறிவை, உண்மையை உணர்த்தும் நூல்களையாவது கற்க முனையுங்கள்.
·
பூகோள, சரித ஏடுகள் இருத்தல் வேண்டும்.
·
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய
முக்கியமான தரவுகளைத் தரும் நூல்கள் படித்திடல் வேண்டும்.
- நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள் நூல்களைப் படிக்க வேண்டும்
மொழியை ஆள்வோம்
மொழிபெயர்க்க.
Akbar said, "How many crows are there in
this city?"
Without even a moment's thought, Birbal
replied "There
are fifty thousand five hundred and eighty nine crows, my lord".
"How can you be so sure?" asked
Akbar.
Birbal said, "Make your men count, My
lord. If you find more crows it means some have come to visit their relatives
here. If you find less number of crows it means some have gone to visit their
relatives elsewhere".
Akbar
was pleased very much by Birbal's wit.
விடை:
பீர்பாலின்
நகைச்சுவையுணர்வு
இந்த நகரத்தில் எத்தனை
காகங்கள் இருக்கின்றன?
என்று அக்பர் கேட்டார்,
பீர்பால் ஒரு கணம் கூட
யோசிக்காமல் ஐம்பதாயிரத்து ஐநூற்று எண்பத்தொன்பது காகங்கள் இருக்கின்றன அரசே என்று
பதிலளித்தார்.
எப்படி உங்களால் உறுதியாகச்
சொல்ல முடிகிறது என்றார் அக்பர், உங்களது ஆட்களை வைத்து
எண்ணுங்கள் அரசே என்றார். இதை விட அதிகமான காகங்கள் இருந்தால் சில இங்குள்ள
தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வந்திருக்கும். நான் கூறியதைவிடக் குறைவாக
இருந்தால், வேறு இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக் காணச்
சென்றிருக்கும் என்று அர்த்தம் என்றார் பீர்பால்,
பீர்பாலுடைய நகைச்சுவையையும்,
நகைச்சுவை உணர்வையும் எண்ணி அக்பர், திருப்தியும்,
மன மகிழ்வும் அடைந்தார்.
பிழை நீக்கி எழுதுக
:
1 மதீனா
சிறந்த இசைவல்லுநர் வேண்டும்
விடை: மதீனா
சிறந்த இசைவல்லுநராக வேண்டும்
2. நல்ல
தமிழுக்கு எழுதுவோம்
விடை : நல்ல தமிழில்
எழுதுவோம்
3. பவள
விழிதான் பரிசு உரியவள்,
விடை: பவளவிழிதான்
பரிசுக்கு உரியவள்.
4.துன்பத்தால்
பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்
விடை : துன்பத்தைப்
பொறுத்துக் கொள்பவன் தான் வெற்றியைப் பெறுவான்.
5. குழலியும்
பாடத் தெரியும்
விடை : குழலிக்கும் பாடத்
தெரியும்
பொருத்தமான துணைவினைகளைப்
பயன்படுத்துக.
அ) மனிதனையும் விலங்குகளையும் (வேறு) வேறுபடுத்துவது
மொழியாகும்.
ஆ) திராவிட மொழிகள் சில, பொதுப்பண்புகளை (பெறு) பெற்றிருக்கின்றன.
இ) காலந்தோறும் தன்னைப்
(புதுப்பித்து) புதுப்பித்துக்கொள்ளும் மொழி தமிழ்.
ஈ) என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு) தேடிக்
கொண்டிருக்கிறேன்.
நிகழ்வினைப் படித்து
வினாக்களுக்கு விடையளி.
1.
மகிழுத்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி
அறிந்தார்?
விடை: மகிழுந்தின்
பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள் வாழ்த்து
மடல்கள்
இருந்தன. அவற்றைப் பார்த்த
பிறகுதான் வந்திருப்பது அண்ணா என வருவாய் அலுவலர் அறிந்து கொண்டார்.
2.
அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்?
விடை: முதலமைச்சர்
என்று தெரியாமல் சோதனைச்சாவடியில் மகிழுந்தை திறந்து காட்டச் சொன்னதால், என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டு, தெரியாமல்
நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
3,
அண்ணா வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்?
விடை: சட்டங்களைச்
சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்றவர்கள் கையில்தான்
இருக்கிறது. உங்களைப் போன்றவர்களே உயர்பதவிக்கு வரவேண்டும் என்று பாராட்டினார்.
4.
பத்தியில் இடம்பெறும் இடைச் சொற்களைக் கொண்டு இரு புதிய
சொற்றொடர்களை உருவாக்குக?
விடை:
தான் : பதவி உயர்வு
வழங்கத்தான் உம் பெயரைக் கேடடேன்.
இன் : சட்டத்தைக் காக்கும்
பொறுப்பு அலுவலரின் கையில்தான் உள்ளது
கள்:
பொறுப்புணர்வுடன் செயல்படும் அலுவலர்கள் நாடடிற்குத் தேவை.
5.
நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பிடுக:
விடை: "பொறுப்புணர்வு" (அல்லது) "கடமையுணர்வு"-
விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றியமைக்க
செய்தி
புத்தகத் திருவிழா
செப் - 16. தஞ்சாவூர்
தஞ்சாவூரில் உள்ள சரசுவதி
மகால் நூலக வளாகத்தில் செப்டம்பர் 19 முதல் 26 வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
நாள்தோறும் காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி முடிய புத்தகங்கள்
விற்பனைக்கும், படிப்பதற்கும் வைக்கப்படுகின்றன. இப்புத்தகத்
திருவிழாவிளை முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி
அமைச்சர் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் மாலை 6 மணிக்கு
புதிய புத்தகங்கள் வெளியீடும் புகழ்பெற்ற பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் இடம்
பெறுகின்றன. அனைவரும் வருகை தந்து அறிவுத்திறம் பெற்றுச் செல்லுமாறு
விழாக்குழவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மொழியோடு விளையாடு
சொற்களைப் பயன்படுத்தி தொடர்களை.
உருவாக்குக,
மாணவர்கள் , புத்தகம், அறை , ஆசிரியர் ,பாடவேளை,
கரும்பலகை, வழிபாட்டுக் கூட்டம் , சீருடை , எழுதுகோல்,அழிப்பான் ,
கல்லூரி, உயர்நிலை ,மடிக்கணினி
1. வழிபாட்டுக்கூட்டத்தில்
மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.
2. மாணவர்கள் உயர்நிலை
அடைய வேண்டும் என்றார் ஆசிரியர்,
3. மாணவர்களே!
எழுதுகோலும் அழிப்பானும் கொண்டு வாருங்கள் என்றார் ஆசிரியர்
4. பாடவேளையின் பொழுது
ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார்.
5. மாணவர்கள்
பாடவேளைக்குரிய புத்தகங்களைக் கொண்டுவரவில்லை.
6. வழிபாட்டுக்
கூட்டத்தில் மடிக்கணினி வழங்கப்பட்டது.
7. ஆசிரியர்
அறையிலிருந்து புத்தகம் எடுத்து வா
8. கல்லூரி
மாணவர்களுக்கு மடிக்கணினி தேவை.
9. கரும்பலகையை
அழிப்பானால் சுத்தம் செய்தான்.
10. சீருடையும்,
மடிக்கணினியும் அரசு விலையின்றிக் கொடுக்கிறது.
அகராதியில் காண்க.
(அரங்கு,ஓடபம், கான்,
நசை, பொருநர்)
1. அரங்கு
- அரங்கம், உள்வீடு
2. ஓட்பம்
- அறிவு, அழகு, நன்மை,
மேன்மை
3. கான் - காடு, மணம், வாய்க்கால், இசை
4.
நசை - ஆசை,குற்றம்,
எள்ளல், ஈரம்
5. பொருநர் - படைவீரன், தலைவன். போர்க்களத்து சென்று பாடும் கூத்தன்
படங்களை இணைத்தால் கிடைக்கும்
நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(ஒரு கிராமத்து நதி, கிழவனும் கடலும்,
கருப்பு மலர்கள், சாக்ரட்டீஸின் சிவப்பு
நூலகம். தண்ணீர் தண்ணீர்)
1. நா. காமராசனின்
கவிதை நூல் - கருப்பு மலர்கள்
2. திரைப்படமாக வெளிவந்த கோமல்
சுவாமிநாதனின் நாடகநூல் - தண்ணீர்
தண்ணீர்
3.
நோபல் பரிசு பெற்றஎர்னஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல் - கிழவனும் கடலும்
4.
சாகித்திய அகாதெமி பரிசுபெற்றசிற்பியின் கவிதைநூல் - ஒரு கிராமத்து நதி
5.
எஸ். ராமகிருஷ்ணனின் சிறார் நாவல் - சாக்ரட்டீஸின்
சிவப்பு நூலகம்
கடிதம் எழுதுக.
பதிப்பகத்தாருக்குக் கடிதம்
தணிகைப்போளூர்,
27.09.21.
அனுப்புநர்
க. இளவேந்தன்
மாணவச்செயலர்,
12ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,
அரசினர் மேனிலைப்பள்ளி,
தணிகைப்போளூர்,
பெறுநர்
மேலாளர்,
நெய்தல் பதிப்பகம்,
சென்னை-600 001.
பெருந்தகையீர்,
வணக்கம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும் தமிழ்மொழியில் உள்ளஅருஞ்சொற்களின்
பொருளை
அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம்
அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
தங்கள் உண்மையுள்ள,
க. இளவேந்தன்,
(மாணவச் செயலர்)
உறைமேல் முகவரி:
மேலாளர்,
நெய்தல் பதிப்பகம்,
சென்னை-600 001.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி