10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON OCTOBER WEEK-2

       10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  06-10-2025முதல் 10-10-2025   

மாதம்          அக்டோபர்  

வாரம்     :  இரண்டாம் வாரம்                                            

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.கம்பராமாயணம்    2. பாய்ச்சல்          

1.கற்றல் நோக்கங்கள்   :

   # இயற்கையழகை நுகர்ந்து அதனைப் பாதுகாத்தல்.


   #  கலையைப் போற்றுதல் 

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

கம்பராமாயணம்


பாய்ச்சல்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        # தழுவல் இலக்கியம் குறித்துக் கூறுதல்.


        #  நிகழ்கலைகளைப் பற்றிக்கூறுதல்

4.பாடச் சுருக்கம்  :             

   @ சரயுநதி பாய்தல்- மருதமும் இயற்கை அழகும்-கோசல நாட்டின் இருப்பும் இல்லாமையும்- இராமனின் அழகு- குகனின் பண்பு- கும்பகருணனை எழுப்புதல்.


   @ அனுமன் வேடம்- தெருமுனை -சிறுவன் செயல் -கலைஞனின் பண்பு .

5.ஆசிரியர் செயல்பாடு              :

      #  கம்பன் பற்றிய சிறப்புகள், படைப்புகள் குறித்துக் கூறுதல்.


    #    கம்பராமாயணம் பாடலைப் பொருள் விளங்க பாடுதல்.

     #  அரிய சொற்களுக்குப் பொருள் கூறுதல்.

     #  பாய்ச்சல் விரிவானத்திற்குக் குறிப்புகள் அளித்தல்.

6.கருத்துரு வரைபடம்:

கம்பராமாயணம்


பாய்ச்சல்


7.மாணவர் செயல்பாடு:

  #  கடினச் சொற்களுக்கு அடிக்கோடல்.

  # பொருள் விளக்கம் அறிதல்.

  # இராமன், குகன், அனுமன் குறித்துத் தெரிந்து கொள்ளுதல்.

  # கலைகளைப் போற்றுதலின் அவசியம் உணர்தல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1. உயிரென உலவும் நதி_____________.
2. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் __________.
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
3. கும்பகர்ணனை எழுப்பும் விதம் குறித்துக் கூறுக.
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
4 வண்மையில்லை யோர் வறுமை  யின்மையால் - இடைஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

*  1030-அழகியலும் ,கலைநயமும் இலக்கியத்தில் காட்சிப்படுத்தியுள்ளமையை அறிந்து, செய்யுளைப்படித்தல் ,ஓசை நயங்களை உணர்தல்.
# 1031- கதைகளைப் படித்து மையக்கருத்துணர்தல்


       

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை