10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON OCTOBER WEEK-4

  10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  27-10-2025 முதல் 31-10-2025     

மாதம்          அக்டோபர்

வாரம்     :   நான்காம் வாரம்                                            

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                             

பாடத்தலைப்பு     :  1. சிலப்பதிகாரம் 2. முத்தொள்ளாயிரம்

1.கற்றல் நோக்கங்கள்  

க   @ காப்பியம்,மெய்க்கீர்த்தி ஆகிய இலக்கியங்களை அவற்றின் தனித்தன்மைகளுடன் படித்துச் சுவைத்தல்.

 Ø இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø  தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர் யார்?

      Ø  இரட்டைக் காப்பியங்கள் யாவை?

       ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

     Ø  சிலப்பதிகாரம் -புகார்க்காண்டம்-இந்திரவிழா ஊரெடுத்த காதை

      Ø  மரூவூர்ப்பாக்க வணிக வீதிகளின் நிலை

      @ சேர நாட்டு வளம் (கோக்கோதை நாடு)

@  சோழநாட்டு வளம் (கோக்கிள்ளி நாடு)

@  பாண்டிய நாட்டு வளம் (வெண்குடையான் நாடு)

5.ஆசிரியர் செயல்பாடு              :

     Ø  நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல்.

     Ø செய்யுட்பகுதியை இசையுடன் படித்தல்

     Ø  பகுபத உறுப்பிலக்கணம் கூறுதல்

     Ø  இலக்கணக்குறிப்பை விளக்குதல்

     Ø  செய்யுட்கருத்தை உரிய சான்றுகளுடன் விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:


சிலப்பதிகாரம்

முத்தொள்ளாயிரம்

7. மாணவர் செயல்பாடு:

    Ø செய்யுள் பகுதிகளை நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்
   Ø  செய்யுளில் காணும் அருஞ்சொற்களை அடையாளம் காணுதல்.
    Ø  பகுபத உறுப்பிலக்கணம்,இலக்கணக்குறிப்பு உள்ளிட்ட மொழித்திறன்களில் பயிற்சி பெறுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
    1. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
   2. சிலப்பதிகாரம் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
3. பறவை அஞ்சிய காரணம் குறித்து எழுதுக
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

க     @ 1037-முதல் காப்பியத்தின் மொழிநடை அறிதல்காப்பியம் வழி அக்காலச் சமூக வாழ்வையும் பயன்பாட்டு மொழியையும் படித்துச் சுவைத்தல்





Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை