7.ஆம் வகுப்பு - தமிழ் வினாவிடைகள்
7.ஆம் வகுப்பு-தமிழ்-முதல் பருவம்
வினா விடைகள்
இயல்-2
காடு
சரியான விடையை த் தேர்ந்தெ டுத்து
எழுதுக.
1. வாழை , கன்றை
________.
அ) ஈன்றது ஆ) வழங்கியது இ) கொடுத்தது ஈ) தந்தது
2. ‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
அ) காடு
+ டெல்லா ம் ஆ) காடு+எல்லாம் இ)
கா+டெல்லா ம் ஈ) கான்
+ எல்லாம்
3. ‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனை ச் சேர்த்தெ ழுதக் கிடைக்கும் சொல்
____
அ) கிழங்குஎடுக்கும் ஆ)கிழங்கெடுக்கும்
இ) கிழங்குடுக்கும் ஈ) கிழங்கொடுக்கும்
நயம் அறிக
பாடலிலுள்ள மோனை , எதுகை
, இயை புச் சொற்களை எடுத்து எழுதுக.
மோனை:
கார்த்திகை , காடெல்லாம்
பார்த்திட , பார்வை
காடு , காய்கனி
பச்சை , பன்றி
எதுகை:
கார்த்திகை , பார்த்திட
களித்திடவே , குளிர்ந்திடவே
குரங்கு , மரங்கள்
இயைபு:
ஈன்றெடுக்கும் , கொடுக்கும்
, பறிக்கும் ,இருக்கும்,
எடுக்கும்
குறுவினா
1. காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக்
கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
விடை: கார்த்திகை விளக்கு
2. காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா
கூறுவன யாவை ?
விடை:
ü
குளிர்ந்த
நிழல் தரும்
ü
உண்ணக்
கனி தரும்
சிறுவினா
‘காடு’ பாட
லில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
விடை:
ü பன்றிகள்
கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.
ü நரிக் கூட்டம்
ஊளையிடும்.
ü யானைகள் தழையை உண்ணும்
ü சிங்கம், புலி,
கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும்
அலைந்து திரியும்.
சிந்தனை
வினா
1.
காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறக் காரணம் என்ன?
விடை: உயிர்களுக்குத் தேவையான உறையுள் (தங்குமிடம்) , உணவு ஆகியன
காட்டில் இயற்கையாகவே உள்ளன. எனவே காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறுகிறார்
இயல்-2
அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது
அ)
பச்சை இலை ஆ)
கோலிக்குண்டு இ) பச்சைக்காய் ஈ) செங்காய்
2.
'சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடப்படுபவை
அ)
ஒட்டிய பழங்கள்
ஆ) சூடான பழங்கள்
இ)
வேகவைத்த பழங்கள் ஈ) சுடப்பட்ட பழங்கள்
3.
'பெயரறியா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
அ)
பெயர + றியா ஆ) பெயர் + ரறியா இ) பெயர் + அறியா ஈ) பெயர + அறியா
4.
'மனமில்லை' என்னும் சொல்லைப் பிரித்து
எழுதக்கிடைப்பது.
அ)
மன + மில்லை ஆ) மனமி + இல்லை
இ)
மனம் + மில்லை ஈ) மனம் + இல்லை
5.
'நேற்று + இரவு' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது
அ)
நேற்று இரவு ஆ) நேற்றிரவு இ) நேற்றுரவு ஈ) நேற்இரவு
குறுவினா
1.
நாவல் மரம் எத்தனை தலைமுறையாக அங்கு நின்றிருந்தது?
விடை: நாவல் மரம் இரண்டு தலைமுறையாக
அங்கு நின்றிருந்தது.
2.
சிறுவர்களுக்கு நாவல் பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
விடை: காக்கை ,குருவி,மைனா,பெயரறியாப் பவைகள்,அணில், காற்று
சிறுவினா
1.
நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
விடை:
ü
தாத்தா
நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கின்றது.
ü
அதில் பச்சைக்காய்கள் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.
ü
நாவற்பழங்கள்
கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.
ü
தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் நாவல்பழம்
பொறுக்குகின்றனர்.
சிந்தனை
வினா
1.
பெருங்காற்றில்
வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?
விடை: குன்றுகளின் நடுவே உள்ள பெரிய மலை போல அந்த
நாவல் மரம் கவிஞர் மனதில் நிற்பதால் பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தை அவர் பார்க்க
விரும்பவில்லை.
தமிழரின் கப்பற்கலை
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தமிழரின் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப்
பயன்படுத்தியது -
அ) கலம் ஆ) வங்கம் இ)நாவாய் ஈ) ஓடம்
2 . தொல்காப்பியம் கடற்பயணத்தை. வழக்கம் என்று
கூறுகின்றது.
அ) நன்னீர் ஆ) தண்ணீர் இ) முந்நீர் ஈ) கண்ணீர்
3. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப்
பயன்படும்.கருவி
அ) சுக்கான் ஆ) நங்கூரம் இ) கண்டை ஈ) சமுக்கு
கோடிட்ட
இடங்களை நிரப்புக.
1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் தொகுதி என அழைக்கப்படும்.
2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது நங்கூரம்
3. உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினைக் கொண்ட அமைப்பு
கலங்கரை விளக்கம்
பொருத்துக
விடை:
1. ஏரா - அடிமரம்
2.பருமல் -
குறுக்கு மரம்
3. மீகாமன்
- கப்பலைச் செலுத்துபவர்
4. காந்த ஊசி - திசைகாட்டும் கருவி
குறு
வினா
1. தோணி என்னும் சொல்லின்
பெயர்க்காரணத்தைக் கூறுக.
விடை: எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து
தோண்டப்பட்டவை. 'தோணி' எனப்பட்டன.
2. கப்பல்
கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் (அ)பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?
விடை: மரங்களையும்
பலகைகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைக்க இடையே தேங்காய் நார் (அல்லது) பஞ்சை வைத்தனர்
3. கப்பலின்உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.
விடை: எரா, பருமல்,
வங்கு, கூம்பு,நங்கூரம்
சிறு
வினா
1. சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய
ஊர்திகளின் பெயர்களை எழுதுக.
விடை: தோணி , ஓடம் , படகு
, மிதவை , தெப்பம் , கலம்
, நாவாய் , புணை , வங்கம்
2. பண்டைத்
தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றிக் கூறுக.
விடை:
ü
காற்றின் திசை அறிந்து கப்பல்கள் செலுத்தும் முறையைத் தமிழர் நன்கு
அறிந்திருந்தனர்.
ü
திசைகாட்டும் கருவி மற்றும் விண்மீன்களின் நிலையை வைத்து திசையை
அறிந்தனர்
ü
கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை தோன்றும்
காலங்களைக் கணித்தனர்
3. கப்பல்
பாதுகாப்பானதாக அமையத் தமிழர்கள் கையாண்ட வழிமுறைகள் யாவை?
விடை:
v
கப்பல் தண்ணீரிலேயே இருப்பவை என்பதால் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத மரங்களையே
பயன்படுத்தினர்.
v
மரங்களையும் பலகைகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைக்க இடையே தேங்காய்
நார் (அல்லது) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இருக்கி ஆணிகளை அறைந்தனர்.
v சுண்ணாம்பையும்
சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர்.
சிந்தனை
வினா
1. இக்காலத்தில்
மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாதது ஏன்
எனச் சிந்தித்து எழுதுக.
விடை:
ü
கப்பலில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தால் கால விரையம் ஏற்படும்.
ü அதிவிரைவுக்குக்
கடற்பயணம் பயன்படுவதில்லை.
விலங்குகள்
உலகம்
எவையேனும் மூன்று வனவிலங்குகள் பற்றி செய்திகளைத்
தொகுத்து எழுதுக
யானை
ü
உலகில்
ஆசிய மற்றும் ஆப்பிரிக்க என இரண்டு வகையான யானைகள் உள்ளன.
ü
ஆசிய
யானைகளில் ஆண்களுக்கு மட்டுமே தந்தம் உண்டு;
ஆனால் ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்கும் உண்டு.
ü
யானைகள்
கூட்டமாக வாழும்,
பெண்தான் தலைவி. அவை உணவு, தண்ணீர் தேடி இடம்
மாறும்.
ü
ஒரு
நாள் 250 கிலோ புல், 65 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
நினைவாற்றல் அதிகம்,
கரடி
ü
கரடி
அனைத்துண்ணி. பழங்கள்,
தேன், மலர்கள், காய்கள்,
புற்றீசல், கறையான் போன்றவை சாப்பிடும்.
ü
தேன்
சாப்பிடும்போது அதன் முடிகள் தேனீக்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
ü
வளர்ந்த
கரடி 160 கிலோ வரை எடையுடையது
புலி
ü புலிகள் தனியாக வாழும்.
ஒவ்வொரு புலிக்கும் தனி எல்லை உண்டு.
ü கருவற்ற புலி 90 நாளில் 2–3
குட்டிகளைப் பெற்று 2 ஆண்டுகள் வளர்க்கும்.
ü பின் அவற்றை தனியே
அனுப்பும். புலி வேட்டையாடிய பின் மற்ற விலங்குகளை வேட்டையாடாது.
ü புலி காட்டின்
வளத்தின் குறியீடு.
நால்வகைக்
குறுக்கங்கள்
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம்
பெறும் மாத்திரை அளவு.
அ) அரை ஆ) ஒன்று இ) ஒன்றரை ஈ) இரண்டு
2. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல்
அ) போன்ம் ஆ) மருணம் இ)
பழம் விழுந்தது ஈ) பணம் கிடைத்தது
3. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது
அ) ஐகாகரக்குறுக்கம் ஆ) ஔகாகரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம் ஈ) ஆய்தக்குறுக்கம்
குறு வினா
1. ஔகாரம் எப்போது
முழுமையாக ஒலிக்கும்?
விடை: தனித்து வரும் இடங்களில் முழுமையாக
ஒலிக்கும்.
2. சொல்லின் முதல், இடை,
கடை ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
விடை:
ஐகாரக்குறுக்கம் பெறும்
மாத்திரை
முதல்
– 1 1/2 மாத்திரை
இடை - 1 மாத்திரை
கடை
- 1 மாத்திரை
3. மகரக்குறுக்கத்திற்கு
இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை: 1. வலம் வந்தான் 2. போன்ம்
கற்பவை கற்றபின்
ஐகார, ஔகார,
மகர, ஆய்தக்குறுக்க ங்களுக்கு எடுத்துக்கா ட்டாக
அமையும் சொற்களைத் தொகுத்து எழுதுக.
விடை:
v
ஐகாரக்குறுக்கம் - ஐம்பது , மடையன்,
கடலை , ஐந்து, வடை
v
ஔகாரக்குறுக்கம் – ஔடதம்
, ஔவை, கௌதாரி
v
மகரக்குறுக்கம் – வரும் வண்டி,
மருண்ம், போன்ம்
v
ஆய்தக்
குறுக்கம் – கஃறீது , முஃடீது, பஃறொடை
கடிதம் எழுதுக.
நீங்கள் செ ன்று வந்த சுற்றுலா
குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
நண்பனுக்குக் கடிதம்
12, தமிழ்முகில் நகர்,
மதுரை-1,
20-06-2022.
அன்புள்ள நண்பா,
நலம்
நலமறிய ஆவல்.உனக்குக் கடிதம் எழுதி நீண்ட நாட்களாகி விட்டது. சென்ற வாரம் நான்
சென்று வந்த உதகமண்டலம் சுற்றுலாவில் நான் பெற்ற மகிழ்ச்சியான அனுபவங்களை உன்னுடன்
பகிர்ந்துகொள்ள இக்கடிதத்தை எழுதுகிறேன்.
முதலில் நீலகிரி விரைவு வண்டி மூலம் மேட்டுப்பளையம் சென்றடைந்தோம் .பிறகு
மலை இரயில் மூலம் உதகமண்டலம் சென்றோம்,இயற்கையை இரசித்தபடி
பயணித்தது மறக்கமுடியாத அனுபவம். உதகமண்டலத்தில் இருந்த காலநிலை எங்களை
மெய்ம்மறக்கச்செய்தது. நீயும் முடிந்தால் உதகமண்டலம் சென்று வரவும்.
இப்படிக்கு,
உனது அன்பு நண்பன்
த.கனியமுதன்
உறைமேல் முகவரி:
சு.இளமுருகு,
4, பாரதி தெரு,
வளர்புரம்-4.
மொழியோடு விளையாடு
விடை: புதையல், தையல், இயல், புல், கயல், கல், புயல், இல்லை, கடல் ,இயல்பு.
விடை: குருவிக்கூடு, விளையாட்டுத்திடல், தயிர்ச்சோறு, கொய்யாப்பழம், விளையாட்டுப் போட்டி, அவரைக்காய்
விடுகதைக்கு விடை எழுதுக.
1.
மரம் விட்டு மரம் தரவுவேன்; குரங்கு அல்ல.
வளைந்த
வாலுண்டு; புலி அல்ல
கொட்டைகளைக்
கொறிப்பேன்; கிளி அல்ல.
முதுகில்
மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?.................
விடை
: அணில்
3.
வெள்ளையாய் இருப்பேன். பால் அல்ல.
மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்?
விடை:
கொக்கு
படிப்போம் பயன்படுத்துவோம்
1. தீவு - Island
2. இயற்கை வளம் - Nature Resource
3. வன விலங்குகள் - Wild Animals
4. வனப்பாதுகாவலர் - Forest Conservator
5. உவமை - Parable
6. காடு - Jungle
7. வனவியல் - Forestry
8. பல்லுயிர் மண்டலம் - Bio Diversity
திருக்குறள்
சரியான விடையை த் தேர்ந்தெ டுத்து
எழுதுக.
1. வாய்மை எனப்ப டுவது
______.
அ) அன்பா கப் பேசுதல் ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்
இ) தமிழில் பேசுதல் ஈ) சத்தமாகப்
பேசுதல்
2. ______ செல்வம் சான்றோர்களால்
ஆராயப்ப டும்.
அ) மன்னன் ஆ) பொறாமை
இல்லாதவன்
இ) பொறாமை உள்ளவன் ஈ) செல்வந்தன்
3. ‘பொருட்செல்வ ம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
அ) பொரு
+ செல்வ ம் ஆ) பொருட் + செல்வ
ம்
இ) பொருள்
+ செல்வ ம் ஈ) பொரும்
+ செல்வ ம்
4. ‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
அ) யா+எனின் ஆ)
யாது+தெனின் இ) யா+தெனின் ஈ) யாது+எனின்
5. தன்+நெஞ்சு
என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
அ) தன்நெஞ்சு ஆ)
தன்னெஞ்சு இ) தானெஞ்சு ஈ) தனெஞ்சு
சொல்லினும் – சொல்லற்க ஈ) கண் அற - சொல்லற்க
குறு
வினா
1. எப்போது தன்நெஞ்சே தன்னை
வருத்தும்?
விடை: மனம்
அறிய பொய்சொல்லும்போது அவர் நெஞ்சே அவரை வருத்தும்.
2. வாழும் நெறி யாது?
விடை: ஒருவர் தன் மனத்தில் பொறாமை இல்லாது ஒழுக்க
நெறியோடு வாழ வேண்டும்.
3. உலகத்தார் உள்ளங்களில்
எல்லாம் இருப்பவன் யார்?
விடை: உள்ளத்தில் பொய்யில்லாமல்
வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவர்.
4.
சொற்பொருள் பின்வருநிலை அணி எவ்வாறு வரும்?
விடை:
ஒரே சொல் மீண்டும்
மீண்டும் வந்து ஒரே பொருளைத்தரும்
பின்வரும் பத்திக்குப்
பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.
அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு
வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் 'அரிச்சந்திரன்'
நாடகத்தைப் பார்த்தார். அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் 'பொய் பேசாமை' என்னும் அறத்தை எத்தகை சூழ்நிலையிலும்
தவறாமல் கடைப்பிடித்தார். இந்த நாடகத்தைக் கண்ட காந்தியடிகள் தாமும் பொய்
பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். அதனைத் தம் வாழ்நாள்
முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள் எல்லார் இதயத்திலும் இடம்
பிடிக்கக் காரணமாக அமைந்தது.
1.
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
2.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்
உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி