மூன்றாம் திருப்புதல் தேர்வு-2025
- சென்னை மாவட்டம்
மூன்றாம் திருப்புதல் தேர்வு-2025,
சென்னை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வி.எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
|
அ. கைமாறு
கருதாமல் அறம் செய்வது |
1 |
|
ஆ. இன்மையிலும்
விருந்து |
1 |
|
ஆ. அருமை.
முயற்சி |
1 |
|
அ. கட்டு |
1 |
|
அ. அறியா
வினா, சுட்டு விடை (வினா எனத் தவறாகத் தரப்பட்டுள்ளது) |
1 |
|
ஈ. இலா |
1 |
|
அ. தாமதப்படுத்துதல் |
1 |
|
இ. இடையறாது
அறப்பணி செய்தல் |
1 |
|
அ. கூவிளம்
தேமா மலர் |
1 |
|
ஆ. மோனை,
எதுகை |
1 |
|
ஆ. வினைத்தொகை |
1 |
|
அ. வீரமாமுனிவர் |
1 |
|
ஆ. தேம்பாவணி |
1 |
|
இ. பூக்கையை,
சேக்கையை |
1 |
|
ஆ. படுக்கை |
1 |
பகுதி-2
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ.
உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவராக இருந்தவர் யார்? ஆ.
ம.பொ.சி எவ்வாறு இலக்கிய அறிவு பெற்றார்?
(மாதிரிகள்) |
2 |
17 |
போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும் நூல்களையே வாங்குபவர்
ம.பொ.சி. |
2 |
18 |
அவையம்=மன்றம் அல்லது சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும்
நீதின்மன்றம். |
2 |
19 |
ü பூ தொடுப்பவரின் எண்ணங்களை விளக்குகிறது. ü மலரை உலகமாக உருவகம் செய்துள்ளனர். ü உலகத்தைக் கவனமாக கையாள வேண்டும் என்று பாடலில் கூறப்பட்டுள்ளது |
2 |
20 |
இடையறாது
அறப்பணி செய்தல் |
2 |
21 |
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை அறிந்து செயல். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
அ. காப்பியச்சுவையை உணர்ந்து திளைக்காத தமிழர் உளரோ? ஆ. விடுமுறை
நாள் வந்தால் மாணவருக்கு மகிழ்ச்சிதானே? |
2 |
23 |
மயங்கிய
- மயங்கு + இ(ன்) + ய் + அ மயங்கு - பகுதி இ(ன்) - இறந்தகால இடைநிலை; 'ன்' புணர்ந்து கெட்டது. ய் -உடம்படுமெய் அ - பெயரெச்ச விகுதி |
2 |
24 |
அ. பசும் ,
மஞ்சள் ஆ. கருக்கத் |
2 |
25 |
அ.
அமிழ்தமும் நஞ்சு ஆ.
ஒருசோறு பதம் |
2 |
26 |
இன்னிசையளபெடை
– ஓசை குறையாதபோதும் இனிய ஓசைக்காக நெடில்கள் அளபெடுப்பது. |
2 |
27 |
·
தண்ணீரைக் குடி: நீ தண்ணீரைக் குடி. ·
தயிரை உடைய குடம்: தயிரை உடைய குடம் பார் |
2 |
28 |
அ. சின்னம் ஆ. கடல் காற்று செவிமாற்றுத்
திறனாளர் வினா: “தேனிலே ஊறிய செந்தமிழின்
– சுவை தேரும்
சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர்
உள்ளளவும் – நிதம் ஓதி
யுணர்ந்தின் புறுவோமே. |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
# மறைகாணி எல்லாப் பக்கமும் திரும்பி காட்சிகளைப் பதிவு செய்கிறது. # செயற்கைக் கோள் ஏவுதலில் அறிவியல் புதுமைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. #
மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. |
3 |
30 |
அ)
நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ)
கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ)
பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ)
வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ)
பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. |
3 |
31 |
அ.
தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், இதழ்கள் ஆ. அனைத்துலக அறிவு பெறுதல் இ. அனைத்துலக அறிவு
பெறுதல் , ஊடக
வளர்ச்சி |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான் ü ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின்
நாட்டை அடைக. ü அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள். ü அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள் என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது. |
3 |
|
33 |
இடம்: நாகூர்
ரூமியால் எழுதப்பட்ட “சித்தாளு”
கவிதையின் வரிகள் இவை பொருள்: சித்தாளு
அனுபவிக்கும் துன்பங்கள் செங்கற்களுக்குத் தெரியாது விளக்கம்: உடலுக்கு
ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல் உழைக்கும் சித்தாளின் மனச்சுமை யாருக்கும்
புரியாது. |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
ü வஞ்சித்திணை:
மண்ணாசை
கருதிப் போருக்குச் செல்வது. ü காஞ்சித்திணை:
எதிர்த்துப் போரிடுவது. |
3 |
||||||||||||||||||||||||
36 |
ஆற்றுநீர்ப்
பொருள்கோள் – தொடக்கம் முதல் இறுதிவரை ஆற்றின்
நீரோட்டம் போல ஒரே சீராகச் செல்வது. |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||
38 அ. |
விருந்தினரை
வரவேற்றல்: என்னுடைய இல்லத்திற்கு
வருகை தந்த உறவினரை அகமும் முகமும் மலர்ந்து வரவேற்று நலம் விசாரித்து அவர்
குடிப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தேன். உணவுண்ண
அழைப்பு: உணவு உண்ண அழைத்து, கைகழுவ தண்ணீர் கொடுத்தும் அமர வைத்தேன். வாழை
இலையில் விருந்து: தலைவாழை இலை விருந்து என்பது தமிழ் மரபு. அந்த வகையில் தலைவாழை இலையில்
உறவினருக்கு உணவிட்டேன். உணவை உண்ணும் உறவினரின் இடப்பக்கம் வாழை இலையின்
குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை
விரித்திருந்தேன். உறவினரின் மனமறிந்து,
அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன்
பரிமாறினேன். வெற்றிலை
பாக்கு: உணவு உண்ட உறவினரை ஒரு
பாத்திரத்தில் கைகளைக் கழுவுமாறு தண்ணீர் ஊற்றினேன். கைக்குட்டை போன்ற துணியைத்
தந்து கைகளைத் துடைத்துக்கொள்ள வைத்தேன். பிறகு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பினை
ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார். வழியனுப்புதல்: உணவு உண்ட உறவினரிடம்
திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து வீட்டுத்
தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் வீட்டிலிருந்த இனிப்புகளையும் கொடுத்து அவரது
வீட்டில் உள்ளவர்களிடம் கொடுக்கும்படி அன்புடன் கூறி, வாயில்வரை
சென்று வழியனுப்பி வைத்தேன். ஆ) ·
தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும்
முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார். ·
மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய
ஐந்தும் சிறப்பாக அமைந்தவரேஅமைச்சராவார். |
5 |
||||||||||
39 |
அ) முறையீட்டுக் கடிதம் அனுப்புநர் அ.எழில்வேந்தன், 12,கம்பர் தெரு, அரக்கோணம். பெறுநர் உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர் அலுவலகம், அரக்கோணம். ஐயா, பொருள்: தரமற்ற பொருள் வழங்கிய பல்பொருள்
அங்காடி மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக. வணக்கம். நான் அரக்கோணத்தில்
உள்ள அறுசுவை பல்பொருள் அங்காடிக்கு நேற்று பொருட்கள்
வாங்கச் சென்றிருந்தேன். அங்கு நான் வாங்கிய
உணவுப்பொருள் தரமற்றதாகவும், கெடுநாள்
தாண்டியதாகவும் இருந்தது. அந்த பல்பொருள் அங்காடி மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள்
உண்மையுள்ள அ.எழில்வேந்தன். இடம்: அரக்கோணம், நாள்: 08-01-2022. உறைமேல்
முகவரி: உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர் அலுவலகம், அரக்கோணம். ஆ) வாழ்த்து
மடல் நெல்லை, 26-12-2021. அன்புள்ள
நண்பா/தோழி, நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில்
நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும்
தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப்
பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு, உனது
அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல்
முகவரி: க. இளவேந்தன், 86, மருத்துவர் நகர், சேலம்-2. |
5 |
||||||||||
40 |
(மாதிரி) சிந்திக்கத்
தூண்டும் காட்சி! சிந்தையில்
நின்ற காட்சி! எதிர்காலத்தேவை
இக்காட்சி! உண்மையை
உணர்த்தும் காட்சி! மனதில்
வைத்தால் நமக்கு நன்மையை அளிக்கும் காட்சி! என்
கவிதைக்கு இரையான காட்சி! |
5 |
||||||||||
41 |
படிவங்களைச்
சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
||||||||||
42
அ. |
(
மாதிரி விடை)
ஆ) மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு வா. தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும். மலர்: நம்முடைய
தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தை செலவிடுகிறது. தேவி: யாருக்கு
தெரியும்?
எதிர்காலத்தில் இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவையும் படைக்கலாம். மலர்: நான் படித்திருக்கிறேன். சில நாடுகள் செயற்கைக்கோள்
வழியாக செயற்கை நிலவை உருவாக்கி வெளிச்சம் பரப்புகிறார்கள் தேவி: அருமையான
செய்தி.
நாமும் இது போல் செயற்கை நிலவை உருவாக்கி, வாழும்
பகுதியில் வெளிச்சத்தை ஏற்படுத்தித் தந்தோமானால்,நிறைய மின்சக்தி
செலவாவதைத் தடுக்க இயலும். |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) நாட்டு விழாக்கள்: நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற
நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும்,
குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும் சிறந்தவையாகும். விடுதலைப்
போராட்ட வரலாறு: பதினைந்தாம்
நூற்றாண்டு காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தினர்.எனவே
மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்
தூண்டினர். நாட்டு
முன்னேற்றத்தில் மாணவர் பங்கு: நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள்,
தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல் ஆகிய
பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு. மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்: மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய
பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆ. முன்னுரை: பன்முகக் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைப் பற்றி இக்கட்டுரையில்
காண்போம். போராட்டக் கலைஞர்: தனது 14.ஆம் வயதில் இந்திஎதிர்ப்புக்காக மாணவர்களை
ஒன்று திரட்டி, போராட்டம் நடத்தினார். பேச்சுக் கலைஞர்: பல தமிழறிஞர்களின் பேச்சைக் கேட்டு, தனது பேச்சாற்றலை
வளர்த்துக் கொண்டார். சிறுவர்களுக்கு பேச்சுப்பயிற்சி வழங்க
சிறுவர் சீர்திருத்தச் சங்கத்தை உருவாக்கினார். நாடகக் கலைஞர்: கலைஞர் சீர்திருத்த நாடகங்களை இயற்றினார். தூக்குமேடை
எனும் புகழ்பெற்ற நாடகத்தை இயற்றினார். இந்நாடகத்தின் பாராட்டு
விழாவில் “ கலைஞர் ” என்ற பட்டம் வழ்ங்கப்பட்டது. திரைக்கலைஞர்: எம்.ஜி.ஆரின் இராஜகுமாரி படத்துக்காக
வசனம் எழுதியுள்ளார். புரட்சிகரமான வசனங்களை எழுதி புகழ்பெற்று
விளங்கினார். இயற்றமிழ்க் கலைஞர்: கலைஞர் பல சிறுகதைகள், புதினங்கள் மூலம் தன்னுடைய இலக்கிய
ஆளுமையை வெளிப்படுத்தினார். முடிவுரை: தமிழின்
மெருமிதங்களையும், விழுமியங்களையும் மீட்டெடுத்தவர் கலைஞர்
கருணாநிதி. |
8 |
44 |
அ.
வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம்
உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி தனது “ ஒருவன்
இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன்,
ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப்
படைத்துள்ளார். குப்புசாமியின் குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். நோயுற்ற
குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று
ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். ஆறுமுகம்: வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு
அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த
செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி
பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து
குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக்
கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த
சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். ஆ. முன்னுரை: அறிவியல் வளர்ச்சி
மனிதனின் அறிவை விரிவாக்குகிறது ஐயங்களை நீக்குகிறது எண்ணங்களை மாற்றுகிறது
அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் உடன்
விண்வெளிப் பயணம் மேற்கொள்ள எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. அந்த
பயண அனுபவத்தை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி. பேரண்டம் பற்றிய
விளக்கம்: பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள்
பற்றியதான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உண்டானது என்பதற்கான சான்றுகளைக்
கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு அவர் விளக்கினார். இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார்
என்பதை மறுத்தார். பிரபஞ்சத்தை இயக்க வைக்கும்
ஆற்றலாக கடவுள் என்ற ஒருவரை கட்டமைக்க வேண்டியதில்லை என்றார். பால் வீதி – விண்மீன்கள்: விண்வெளியில்
பால்வீதியில் எங்கள் விண்வெளி ஓடம் சுற்றிக் கொண்டிருந்தது அப்போது ஹாக்கிங், ”நமது
பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் ஞாயிறும் ஒன்று. ஒரு விண்மீனின்
ஆயுள் காலம் முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது விண்மீன் சுருங்க சுருங்க அதன்
ஈர்ப்பு ஆற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றது ஆகிறது என்று விளக்கினார். கருந்துளை விளக்கம்: கருந்துளை என்பது ஒரு
படைப்பின் ஆற்றல் கழிந்து கருந்துளையில் செல்லக்கூடிய எந்த ஒன்றும் வெளியில்
வரவே முடியாது கருந்துளையின் ஈர்ப்பு பகுதியில் இருந்து கதிர்வீச்சுகள்
வெளிப்பட்டு கொண்டே இருந்தன கருந்துளை கருப்பாக இருக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் நேரில் பார்த்த போது தான் அறிந்து கொண்டேன் அண்டவெளியில் காணப்படும்
கருந்துளை படைப்பின் ஆற்றலை என்பதை நான் உணர்ந்தேன். முடிவுரை: நாங்கள் விண்வெளியில் பயணம் மேற்கொண்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. புதுமையான அனுபவமாகவும் இருந்தது. எனக்குத்
தெரியாத நிகழ்வுகளை நன்கு பார்த்து, கேட்டு தெரிந்து
கொண்டேன். மனமகிழ்வோடு பூமிக்கு வந்து சேர்ந்தோம். எங்களை அனைவரும் வரவேற்று, பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வு என்
வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். |
8 |
45 |
அ. கலைத்திருவிழா கட்டுரை முன்னுரை: கடந்த மாதம் எனது
குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச்
சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத்
தந்திருக்கிறேன். அறிவிப்பு: நுழைவாயிலின் வழியாக
நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள்
எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன? அந்தந்த அரங்குகளின் திசை
உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அமைப்பு: ஓரிடத்தில்
அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின்
எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. சிறு அங்காடிகள்: கலைத்திருவிழா நிகழிடத்தில்
விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள்
மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும்
அமைக்கப்பட்டிருந்தது நிகழ்த்தப்பட்ட கலைகள்: அங்கே
மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம்,தெருக்கூத்து
உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில்
நிகழ்த்தப்பட்டன. முடிவுரை: .கூட்ட நெரிசல் மிக
அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது.
ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச்
சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு
அமைந்தது. ஆ. இயற்கையைப் போற்று (சுற்றுச்சூழல் பாதுகாப்பு) முன்னுரை: நமது
சுற்றுச்சூழல் உயிருள்ள காரணிகளையும் உயிரற்ற காரணிகளையும் உள்ளடக்கியது.
மழையும் காற்றும் மரமும் வளமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை அல்லவா?
அத்தகைய வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும்,வளங்களின் தற்போதைய நிலையையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம். விசும்பின்
துளியும் பசும்புல் தலையும்: ”விசும்பின்
துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண் பரிது" என்கிறார் வள்ளுவர் .மாதம் மும்மாரி பொழிந்தது
இந்நாடு.வளம்மிக்க இந்நாட்டில் தற்போது நீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது..
வெப்பமயமாதலும் நெகிழிப் பயன்பாடும் தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை
பெருக்குவதில் பெருந்தடையாக உள்ளன.அதோடன்றி, மரங்கள் அதிக
அளவில் வெட்டப் படுவதும் மழைப்பொழிவு குறைவதற்குப் பெருங்காரணியாக அமைந்துள்ளது
குறிப்பிடத்தக்கது. காற்று மாசு: ”உங்கள்
சுவாசத்தை நிறுத்தும் முன் காற்று
மாசுபாட்டை நிறுத்துங்கள்” மக்கள் தொகைப் பெருக்கம்,
மக்கள் நெருக்கம், தொழிற்சாலைக் கழிவு,
வாகனப்புகை போன்றவற்றால் நிலம், நீர்,காற்று அனைத்தும் மாசடைகிறது. இதனால் தாவரங்கள், விலங்குகள்,
பறவைகள் போன்றவை சமநிலை பாதிப்புக்கு உள்ளாகி, மனித இனம் பல நோய்களுக்கு ஆட்பட்டு, அழியும்
நிலைக்குத் தள்ளப்படுகிறது. இயன்றவரை மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி,
காற்றுமாசுபாட்டைக் குறைக்கலாம். பசுமையைக்
காப்போம்: ”மரம்
தான் மரம் தான் எல்லாம் மரம்தான் மறந்தான்
மறந்தான் மனிதன் மறந்தான்” சூரிய ஒளி, மழை, தாவரம், காற்று
இந்நான்கும் பசுமையை நிலைநாட்டுவன. உலக வெப்பமயமாதல், | குளிர்சாதனப்பெட்டி
பயன்பாடு போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பசுமையை மீட்டுக் கொணர்வது நமது
ஒவ்வொருவரின் கடமையாகும் வீட்டிற்கு ஒரு தோட்டம், பொதுவிடங்களில்
மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
நடத்துதல் போன்ற செயல்களை மேற்கொண்டு நாம் பசுமையை காக்க வேண்டும். மரமும்
மழையும் வரமும் உயிரும்: 'விண்ணின்று
பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி' ஒவ்வொரு மரமும் பல்லாயிரம்
உயிர்களுக்குப் புகலிடம் ஆகும். மரமும் காற்றும் மழைக்கு ஆதாரம் 'ஆகையால், பசி யின்றி வாழவும், தானம் தவம் இரண்டும் தொடர்ந்து நிலைபெறவும் மழைநீர்
அவசியமாகிறது.காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதும்,நீர்
நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் நீர்வளம் பெருக நாம் செய்ய வேண்டிய
வழிமுறைகளாகும். முடிவுரை: இயற்கைவளங்கள் தொடர்ந்து
மாசுபடுத்தப் படுவது எதிர்காலத்தில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என
அறிவியல் அறிஞ்சர்கள் எச்சரிக்கின்றனர்.மாசில்லா உலகம்; நோயில்லா
பெருவாழ்வு. விண்ணின் மழைத்துளி; மண்ணின் உயிர்த்துளி.
மனதில் நிறுத்துவோம் மானுடம் திருத்துவோம். |
|
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி