9 TH STD TAMIL THIRD MID TERM MODEL QUESTION PAPER

 

மூன்றாம் இடைப்பருவத் தேர்வு – 2025 மாதிரி வினாத்தாள்

9. ஆம் வகுப்பு             தமிழ்                   மதிப்பெண்கள்: 50         கால அளவு: 1.30 மணி நேரம்

பகுதி-1 (மதிப்பெண்கள்:8)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                               8×1=8                         

1) விடைக்கேற்றவினாவைத்தேர்க.     விடை – பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.    

அ) பானையின் எப்பகுதி நமக்குப்பயன்படுகிறது?   

ஆ) பானை எப்படி நமக்குப்பயன்படுகிறது?

இ) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?        

ஈ) பானை எங்கு நமக்குப்பயன்படுகிறது?                            

2) ஞானம்’ என்பதன் பொருள்யாது?         அ) தானம்    ஆ) தெளிவு   இ) சினம்    ஈ) அறிவு

3) ”யாதும் ஊரே: யாவருங் கேளிர்” என்று கூறியவர்

அ) பாரதியார் ஆ) திருவள்ளுவர் இ) கணியன் பூங்குன்றனார்  ஈ) கம்பர்

4) தமிழ்ப்புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை

அ) நிலையற்றவாழ்க்கை  ஆ) பிறருக்காகவாழ்தல்  இ) இம்மைமறுமை   ஈ) ஒன்றேஉலகம்

5) வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத்தந்த நூல்

அ) ஒரு சிறு இசை  ஆ) முன்பின்   இ) அந்நியமற்ற நதி   ஈ) உயரப்பறத்தல்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

பெருமரத்துடன் சிறு கமுகு போட்டியிடுகிறது

அதுவே வாழ்க்கைப் போர்

முண்டி மோதும் துணிவே இன்பம்

உயிரின் முற்சியே வாழ்வின் மர்ச்சி.

6) இப்பாடலை இயற்றியவர் யார்? 

அ. வண்ணதாசன் ஆ. பாரதிதாசன்   இ. ந.பிச்ச மூர்த்தி  . அயோத்திதாசர்

7)கமுகு” என்ற சொல்லின் பொருள் யாது? 

அ) பாக்கு மரம் ஆ) சந்திரன் இ) கதிரவன் ஈ) தென்னை மரம்

8) சீர் எதுகையைத் தேர்ந்தெடுக்க   

) முண்டி - மோதும்  ) உயிரின் -  முயற்சியே ) துணிவே - உயிரின்  ) துளைத்து - வெறுத்து 

                              பகுதி-2  (மதிப்பெண்கள்: 12)                பிரிவு-1                             3×2=6

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

9) விடைக்கேற்ற வினாத்தொடர் அமைக்க:

            . இராவண காவியத்தின் பாட்டுடைத் தலைவன் இராவணன் ஆவார்

            . சார்பெழுத்துகள் மொத்தம் பத்து வகைப்படும்.

10) கமுகுமரம் எதைத்தேடியது?  

11) பகுத்தறிவு- விளக்குக. 

12) யசோதரகாவியத்தின் பாட்டுடைத்தலைவன் யார்?

13) தாவோதேஜிங் ‘இன்னொரு பக்கம்’ என்று எதைக் குறிப்பிடுகின்றது?                                                     

                                                     பிரிவு-2                                                    3×2=6

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:                                                      14) சீர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?                                                                                           

15) ஒலி மரபுப் பிழைகளை திருத்துக அ. அலறும் மயிலும், கூவும் ஆந்தையும்                                 

16) பகுபத உறுப்பிலக்கணம் தருக:  மலர்ச்சி

17)இலக்கணக்குறிப்பு தருக: .ஒளியமுது .வாயிலும் சன்னலும்                      

18)கலைச்சொல் எழுதுக  .Philosophy . Rhyme 

                                                  பகுதி-3   (மதிப்பெண்:12)    பிரிவு-1                           2×3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:   (21 கட்டாயவினா)

19) பிறமொழி இலக்கியங்களைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களைக் குறிப்பிடுக.                                   20) பழங்களைவிடவும் நசுங்கிப்போனது – இடம் சுட்டிப் பொருள்விளக்கம் தருக.

21) அ. ஆக்குவது- எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக     (அல்லது)

ஆ. சைக்கிளில் - எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

                                                                    பிரிவு-2                                                          2×3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க                             

22) அலகிட்டு வாய்பாடு எழுதுக      

   ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்

   இழுக்கார் குடிப்பிறந் தார்.                               

 23) தளையின் வகைகளை எழுதுக.

24) பொருத்தமான வாய்பாடுகளை தேர்ந்தெடுக்க

1. தாவோவியம் - தேமாங்கனி/ தேமா/ பிறப்பு  

2. வெற்றிடம் - நாள்/ கூவிளம் / புளிமா

பகுதி-4 (மதிப்பெண்:10)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                  2×5=10

25) ) நாம் கடைப்பிடிக்கவேண்டிய வாழ்க்கை நெறிகளாக யசோதர காவியம் குறிப்பிடுவன யாவை? (அல்லது)

) வாழ்க்கைப் போரில் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் கமுகுமரம் வாயிலாகஆசிரியர் எவ்வாறு உணர்த்துகிறார்?                                                                                                                                                  26) . மொழி பெயர்க்க.                                                                                                                                      Once Buddha and his disciples were thirsty. They reached a lake. But it was muddy because somebody just finished washing their clothes. Buddha asked his disciples to take a little rest there by the tree. After half an hour the disciples noticed that the water was very clear. Buddha said to them,”You let the water and the mud be settled down on its own. Your mind is also like that. When it is disturbed, just let it be. Give a little time. It will settle down on its own.   We can judge and take best decisions of our life when we stay calm.”             (அல்லது)                                                                                                        

ஆ. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக



பகுதி-5 (மதிப்பெண்:8)

விரிவான விடையளிக்க:                                                                                                 1×8=8

27) ) மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்டசீரமைப்புகளை விளக்குக.   (அல்லது)

   ) மொழியின் விரல்பிடித்து நடக்கப்பழகிக் கொண்டிருக்கும் தன்மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

பதிவிறக்கம் செய்ய

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை