மூன்றாம்
திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள்- 2025
மொழிப்பாடம்
- பகுதி I - தமிழ்
கால அளவு : 3.00 மணி நேரம் மொத்த மதிப்பெண்கள் : 100
பகுதி – I (மதிப்பெண்கள் : 15)
குறிப்பு
: (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 15x1=15
(ii)
கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத்
தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1.
'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு
நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
(அ) இலையும் சருகும் (ஆ) தோகையும் சண்டும் (இ) தாளும் ஓலையும் (ஈ) சருகும் சண்டும்
2.
'பெரிய மீசை' சிரித்தார் கோடிட்ட சொல்லுக்கான
தொகையின் வகை எது?
(அ) பண்புத் தொகை (ஆ) உவமைத் தொகை (இ) அன்மொழித் தொகை (ஈ) உம்மைத் தொகை
3.
'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரிடம் யார்
கூறியது ?
(அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
(ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
(இ) மருத்துவரிடம் நோயாளி
(ஈ) நோயாளியிடம் மருத்துவர்
4.
"அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும்
தெருளை"
என்று
இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது ?
(அ) தமிழ் (ஆ)
அறிவியல் (இ) கல்வி ஈ) செல்வம்
5.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?
(அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் (ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
(இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால் (ஈ) அங்கு வறுமை இல்லாததால்
6.
இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்:
(அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ) வெற்றி பெறுதல்
(இ) வலிமையை நிலைநாட்டல் (ஈ) கோட்டையை முற்றுகையிடல்
7.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் :
(அ) அகவற்பா (ஆ) வெண்பா (இ) வஞ்சிப்பா (ஈ) கலிப்பா
8.
வாய்மையே மழைநீராகி இத்தொடரில் வெளிப்படும் அணி :
(அ) உவமை (ஆ)
தற்குறிப்பேற்றம் (இ)
உருவகம் (ஈ) தீவகம்
9
. 'சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன்
சாம்பலும் தமிழ் மணந்து வேக
வேண்டும்' - என்று கூறியவர்
அ) பாரதியார் (ஆ) க. சச்சிதானந்தன் (இ) நம்பூதனார் (ஈ) தனிநாயக அடிகள்
10.
'மொழி ஞாயிறு' என்றழைக்கப்படுபவர் யார்?
(அ) தமிழழகனார் (ஆ) கம்பர் (இ)
தேவநேயப் பாவாணர் (ஈ)
வைரமுத்து
11.
எய்துவர் எய்தாப் பழி -இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது ?\
(அ) கூவிளம் தேமா மலர் (ஆ) கூவிளம் புளிமா நாள் (இ ) தேமா புளிமா காசு (ஈ) புளிமா தேமா பிறப்பு
பாடலைப்
படித்து பின்வரும் வினாக்களுக்கு (12,
13, 14, 15) விடை தருக
"காற்றே, வா
மகரந்தத்
தூளைச் சுமந்து கொண்டு,
மனத்தை
மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன்வா
இலைகளின்
மீதும்,
நீரலைகளின் மீதும் உராய்ந்து,
மிகுந்த
ப்ராண-ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு"
12.
'மயலுறுத்து' என்பதன் பொருள்:
(அ) விளங்கச் செய் (ஆ) மயங்கச் செய் (இ) அடங்கச் செய் (ஈ) சீராக
13.
ப்ராண ரஸம் பொருள் தருக.
(அ) உயிர் வளி (ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு (இ) ஹைட்ரோ கார்பன் ஈ) கந்தக-டை-ஆக்ஸைடு
14.
'மிகுந்த' -இலக்கணக் குறிப்பு தருக.
(அ) வினையெச்சம் (ஆ) முற்றெச்சம் (இ) பெயரெச்சம் (ஈ) வினைத்தொகை
15.
நீரலைகளின் - பிரித்தெழுதுக.
(அ) நீர் + அலைகளின் (ஆ) நீரின் + அலைகளின் (இ) நீரலை + களின் (ஈ) நீர + அலைகளின்
பிரிவு - 1
குறிப்பு
: எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண் 21- க்கு
கட்டாயமாக விடையளிக்கவும். 4x2=8
16.
"உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும்
கீழ்"
-இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன்
இலக்கணம் தருக.
17.
விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்கவும் :
(அ) சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் செய்குதம்பிப் பாவலர்.
(ஆ) பரஞ்சோதி முனிவர் திருமறைக் காட்டில் பிறந்தவர்
18.
தேம்பாவணி - குறிப்பு வரைக.
19.
தண்ணீர் குடி, தயிர்க் குடம் ஆகிய தொகைநிலைத்
தொடர்களை விரித்து எழுதுக: தொடரில் அமைக்கவும்.
20.
பாசவர், வாசவர், பல்நிண
விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்
?
21.
'பல்லார்' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு-2
குறிப்பு:
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5x2=10
23.
"ஒலித்து" - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
24.
பழமொழிகளை நிறைவு செய்க.
(அ) உப்பில்லாப்------ (ஆ) ஒரு பானை---------
22.
பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார் ? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் பயனிலைகள்
யாவை ?
25.
பா எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?
26.
கலைச்சொற்கள் தருக. அ) Vowel ஆ)
Discussion
குறிப்பு
செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
குறிப்பைப்
பயன்படுத்தி விடை தருக.
குறிப்பு
- எதிர்மறையாக மாற்றுக. (அ) மீளாத் துயர் (ஆ) பார்த்த படம்
27.
நான்
எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. இத்தொடரை இரு தொடர்களாக்குக.
28.
சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்கவும்.
(அ) பழமைக்கு எதிரானது -
எழுதுகோலில் பயன்படும்.
(ஆ) ஓரெழுத்தில் சோலை
இரண்டெழுத்தில் வனம்
பகுதி – III (மதிப்பெண்கள் : 18)
குறிப்பு
: எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2x3=6
பிரிவு -1
29.
"தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடம் சுட்டிப்
பொருள் விளக்குக.
30.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
பருப் பொருள்கள்
சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப்
பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்
தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி
வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகி, ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக நடந்த இந்தப் பெரிய உலகத்தில்,
உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது.
(அ) பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
(ஆ) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது ?
(இ) பெய்த மழை -இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
31.
ஜெயகாந்தனின் திரைப்படப் படைப்புகளைக் கூறுக.
பிரிவு - 2
குறிப்பு
: எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.வினா எண் 34- க்கு
கட்டாயமாக விடையளிக்க வேண்டும். 2x3=6
32.
பெருமாள் திருமொழி - நூற்குறிப்பு வரைக.
33.
பூவின் நிலைகளை வரிசைப்படுத்தி எழுதுக.
34.
அடிபிறழாமல் எழுதுக.
(அ) "வாளால் அறுத்துச்" எனத் தொடங்கும் குலசேகராழ்வார் பாடல்
(அல்லது)
(ஆ) "தூசும் துகிரும்" எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்.
பிரிவு -3
குறிப்பு
: எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும் 2x3=6
35.
பொருத்தமான நிறுத்தக் குறியிடுக.
சேரர்களின் பட்டப் பெயர்களில்
கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி
வெற்பன் எனவும் பிற மலைப் பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்
கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
36.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது" -இக்குறளில்
பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
37.
உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். -
இக்குறட்பாவினை
அலகிட்டு வாய்பாடு தருக.
பகுதி – IV (மதிப்பெண்கள் : 25)
குறிப்பு
: அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
5x5=25
38.
(அ) மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும்
பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை
உருவாக்குக. (அல்லது)
(ஆ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும்
அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
39.
(அ) பள்ளித் திடலில் கிடைத்த பணப் பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும்
அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக்
கடிதம் எழுதுக. (அல்லது)
(ஆ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும்
இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம்
எழுதுக.
40)
கட்சியைக்கண்டு கவினுற எழுதுக
41.
விழுப்புரம் மாவட்டம், பெரியார் நகர், கபிலன் தெரு, 32 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும்
வளவனின் மகன் அமுதன் மாவட்ட மைய நூலகத்தில் நூலக உறுப்பினராகச் சேர
விரும்புகிறார். தேர்வர் தன்னை அமுதனாக எண்ணி, கொடுக்கப்பட்ட
நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
42.
(அ) பள்ளியிலும், வீட்டிலும் நீ கடைப்பிடிக்கக்கூடிய
நற்பண்புகளைப் பட்டியலிடுக.
(அல்லது)
(ஆ) மொழிபெயர்க்க :
Kalaignar Karunanidhi is known for his
contributions to Tamil literature. His contributions cover a wide range: poems,
letters, screenplays, novels, biographies, historical novels, stage-plays,
dialogues and movie songs. He has written Kuraloviam for Thirukural,
Tholkaappiya Poonga, Poombukar, as well as many poems, essays and books. Apart
from literature, Karunanidhi has also contributed to the Tamil language through
art and architecture. Like the Kuraloviyam, in which Kalaignar wrote about
Thirukkural, through the construction of Valluvar Kottam he gave an
architectural presence to Thiruvalluvar, in Chennai. At Kanyakumari,
Karunanidhi constructed a 133-foot-high statue of Thiruvalluvar in honour of the scholar.
பகுதி – V (மதிப்பெண்கள் : 24)
குறிப்பு : அனைத்து
வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும்.
3x8=24
43.
(அ) ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ்
ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்கவும்.
(அல்லது)
(ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த
விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
44.
(அ) இராமானுசர் நாடகத்தினைச் சுருக்கி கதையாய் எழுதுக.
(அல்லது)
(ஆ) "மங்கையராய்ப் பிறப்பதற்கே" என்னும் பாடத்தில் இடம்
பெற்றுள்ள மூவர் பற்றி சுருக்கி எழுதுக.
45.
(அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதித் தலைப்பிடுக.
முன்னுரை - கல்பனா சாவ்லா
இளமைப் பருவம் - விண்வெளிப் பயணம் விண்வெளி சாதனைகள்- முடிவுரை
(அல்லது)
(ஆ) ”போதையில்லா புத்துலகைப்
படைப்போம்” என்ற தலைப்பில் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை
வரைக
முன்னுரை – பரவலான போதைப்பழக்கம்- காரணங்கள்
– போதைப்பழக்கத்தின் விளைவுகள் – விடுபடும் வழிமுறைகள்
– விழிப்புணர்வு- நமது கடமைகள் – முடிவுரை
நூலக உறுப்பினர் படிவம்
----------மாவட்ட நூலக ஆணைக்குழு
மைய / கிளை
/ ஊர்ப்புற நூலகம் --------
உறுப்பினர் சேர்க்கை
அட்டை
அட்டை எண்:
உறுப்பினர் எண்:
1. பெயர் :
2. தந்தை பெயர் :
3. பிறந்த நாள் :
4. வயது :
5. படிப்பு :
6. தொலைபேசி / அலைபேசி எண் :
7. முகவரி :
(அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
நான் --------- நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய
இத்துடன் காப்புத்தொகை ரூ. ------ சந்தா தொகை ரூ.
----- ஆக மொத்தம் ரூ. ----- செலுத்துகிறேன்.
நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.
இடம்:
நாள்:
தங்கள்
உண்மையுள்ள
திரு / திருமதி
/ செல்வி / செல்வன் ----------------- அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.
பிணையாளர் கையொப்பம்
அலுவலக முத்திரை
(பதவி மற்றும் அலுவலகம்)
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி