10.ஆம் வகுப்பு - தமிழ்
இரண்டு
மதிப்பெண் வினா விடைகள் (வினா எண் 16 முதல் 28)
(புத்தக மதிப்பீட்டு வினாக்கள்)
1. 'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
விடை:
ü வேம் + கை என்பது கையைக் குறிக்கும்
தொடர்மொழி
ü சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும்
குறித்தது ( பொதுமொழி)
2.
விடை: சீவகசிந்தாமணி,வளையாபதி,குண்டலகேசி
3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு
சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு
சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
விடை: சரியான தொடர்கள்:
* ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன
* ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
பிழை: தாற்றின் தொகுப்பு சீப்பு எனப் பிழையாக உள்ளது.
4. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண்
வற்றாகும் கீழ் – இக்குறளில் அமைந்துள்ள
அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.
விடை: இன்னிசையளபெடை – ஓசை குறையாதபோதும் இனிய ஓசைக்காக நெடில்கள் அளபெடுப்பது.
5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
தருக
விடை: காலையிலேயே மாலையும் வந்து விட்டது.(
மாலை பொழுதையும், பூவையும் குறித்தது)
6. 'நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் -
மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு
வளர்ப்போம்' - இதுபோன்று உலகக் காற்று நாள்
விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
விடை: காற்று உயிருக்கு நாற்று
, தூய காற்று அனைவரின் உரிமை
7. வசன கவிதை – குறிப்பு வரைக
விடை: செய்யுளும், உரைநடையும் கலந்து எழுதப்
பெறுவது வசனகவிதை.
8.
தயிரை உடைய குடம்: தயிரை உடைய குடம் பார்
9. பெற்றோர் வேலையிலிருந்து
திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் ஊஊரும் ஆறுதல் சொற்களை எழுதுக
விடை: தம்பி அழாதே, அப்பா இப்போது வந்துவிடுவார், தின்பண்டம் வருவார்
10. மாஅல் - பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.
விடை: பொருள்:
திருமால் இலக்கணக்குறிப்பு: செய்யுளிசை அளபெடை
11. விருந்தினரை
மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
விடை: வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள்
12. 'தானியம்
ஏதும் இல்லாத நிலை யில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து
விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச்
செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
விடை: இல்லை,விருந்தினரை நன்றாக உபசரிக்க வேண்டும் என்ற எண்ணமே தேவை.
13. 'எழுது
என்றாள் ' என்பது விரைவு காரணமாக' எழுது
எழுது என்றாள் ' என அடுக்குத் தொடரானது. 'சிரித்துப் பேசினார் ' என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?
விடை: சிரித்துச் சிரித்துப்பேசினார்.
14.'இறடிப்
பொம்மல் பெறுகுவிர்' – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
விடை: தினைச்சோற்றைப்
பெறுவீர்கள்
15. பாரதியார்
கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்?
ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும்பயனிலைகள் யாவை ?
விடை: கவிஞர்-பெயர்ப்பயனிலை , சென்றார் – வினைப்பயனிலை , யார்
- வினாப்பயனிலை
16
'நச்சப் படாதவன்' செல்வம் இத்தொடரில் நச்சப்
படாதவன் என்னும் சொல்லுக்குப் பொருள் தருக.
விடை: பிறருக்கு
உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர்.
17 கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எழுதுக
விடை: கொடுப்பதூஉம்
, துய்ப்பதூஉம் - இன்னிசை அளபெடைகள்
18. வருங்காலத்தில்
தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல்
கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக
எ.கா. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.
விடை: இயந்திரமனிதன்,
செயற்கைக்கோள்
19. வருகின்ற
கோடைவிடுமுறையில் காற்றாலை மின்உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச்
செல்கிறேன் – இத்தொடர் காலவழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
விடை: எதிர்காலம்
உறுதித் தன்மையின் காரணமாக நிகழ்காலமானது காலவழுவமைதி.
20. மருத்துவத்தில்
மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
விடை:
# மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார்
# நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார்
# அன்பும்,நம்பிக்கையும்
மருத்துவத்தில் முக்கியம்
21. உயிர்கள்
உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்த வற்றைக்
குறிப்பிடுக.
விடை:
ü ஐம்பூதங்களும்,ஒன்றனுள் ஒன்று
ஒடுங்கின.
ü நீண்ட காலத்திற்குப்
பிறகு உயிர்கள் உருவாகி வளரத்தொடங்கின.
22. "சீசர்
எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க
மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்
- இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.
விடை: "சீசர் எப்போதும் என்
சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர கடிக்காது "
என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.
23. “கழிந்த
பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன்பால் பொழிந்த
பெரும் காதல்மிகு
கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென் சொல்“
-இவ்வடிகளில்
கழிந்த பெரும் கேள்வியினான் யார் ? காதல்மிகு கேண்மை யினான்
யார் ?
விடை: குசேலபாண்டியன்,இடைக்காடனார்
24. செய்குதம்பிப்
பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.
விடை: அருளைப்பெருக்க
கல்வி கற்போம்,அறிவைத்திருத்த கல்வி கற்போம்
25. அமர்ந்தான்
- பகுபத உறுப்பிலக்கணம் தருக.
விடை: அமர்+த்(ந்)+த்+ஆன்
அமர்-பகுதி,
த்-சந்தி, ந்-விகாரம்,
த்-இறந்தகால இடைநிலை , ஆன்
- ஆண்பால் விகுதி
26. இந்த அறை
இருட்டா க இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ ... இருக்கிறதே ! சொடுக்கியைப் போட்டா லும் வெளிச்சம் வரவில்லையே !
மின்சாரம் இருக்கிறதா , இல்லையா? மேற்கண்ட
உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
விடை:
# மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? -அறியா
வினா
# மின்சாரம் இருக்கிறதா , இல்லையா? - ஐய வினா
27.காட்டில்
விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை
மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை
வகைப்படுத்தி எழுதுக.
விடை: முதற்பொருள்
நிலம்-முல்லை , பொழுது-மழைக்காலம்(பெரும்பொழுது) மாலை(சிறுபொழுது)
கருப்பொருள்:
வரகு(உணவு)
28.” கலைஞர் ,
பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல்
கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.
விடை:
கலைஞரைப் பேராசிரியர் அன்பழகனார்,
பழுமரக்கனிப் பயன்கொள்ளும் பேச்சாளர் என்றும் படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும்
பாராட்டியுள்ளார்
29. உறங்குகின்ற
கும்பகன்ன ’எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ’உறங்குவாய்
உறங்குவாய்’
கும்பகன்னனை என்ன சொல்லி
எழுப்புகிறார்கள்?
எங்கு அவனை உறங்கச்
சொல்கிறார்கள்?
விடை:
ü பொய்யான வாழ்வு முடியப்போகிறது.
ü காலனின் தூதர் கையில்
உறங்குவாய் என்கிறார்கள்
30. சாந்தமானதொரு
பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள் – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை
எழுதுக.
விடை:
ü பூ தொடுப்பவரின் எண்ணங்களை
விளக்குகிறது.
ü மலரை உலகமாக உருவகம்
செய்துள்ளனர்.
ü உலகத்தைக் கவனமாக கையாள
வேண்டும் என்று பாடலில் கூறப்பட்டுள்ளது
31. கீழ்வரும்
தொடர்களில் பொருந்தாத கருப் பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்.
முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
விடை: # உழவர் வயலில் உழுதனர்.
# நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச்
சென்றனர்.
32.
'கரப்பிடும்பை இல்லார்'
- இத்தொடரின் பொருள் கூறுக.
விடை: 'பொருளை
மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைச் செய்யாதவர்' என்பது பொருள்.
33.
தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய அசைகளையும்
வாய்பாடுகளையும் எழுதுக.
விடை:
தஞ்
/ சம் - நேர் நேர் - தேமா
எளி
/ யன் - நிரை நேர் - புளிமா
பகைக்
/ கு - நிரைபு - பிறப்பு.
34.
வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை
எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
விடை:
ஏளனம் செய்யாமல், கொடுப்பவரைக் கண்டால்,
(இரப்பவரின்) பிச்சை எடுப்பவரின் உள்ளம் மகிழும்.
35.
பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார்
கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.
பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்
விடை:
ü
உழைத்ததால் கிடைத்த ஊதியமே கூரான ஆயுதம்
ü அதுவே பகைவரின் ஆணவத்தை அழிக்கவல்லது
36. பாசவர்,
வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
விடை:
# வாசவர்- நறுமணப் பொருட்களை விற்பவர்கள்
#
# உமணர் – உப்பு விற்பவர்
37. மெய்க்கீர்த்தி
பாடப்படுவதன் நோக்கம் யாது?
விடை: மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும்
காலம் கடந்து உணர்த்த ,அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன்
நோக்கமாகும்.
38. வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
விடை: நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத
வறுமை நிலையிலும் நூல்களையே வாங்குபவர் ம.பொ.சி.
39. புறத்திணை களில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
விடை: வெட்சி-கரந்தை ,வஞ்சி-காஞ்சி ,நொச்சி-உழிஞை
40. பொருத்தமான
இடங்க ளில் நிறுத்தக் குறியிடுக.
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட
பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச்சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம்
அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்குஅடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி
விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் - ம.பொ.சி.
விடை: பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட
பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச்சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினை வூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு
அழைப்பு விடுத்திருந்தேன்,
- ம.பொ.சி.
41. ‘ கொள்வோர் கொள்க;குரைப்போர் குரைக்க!
உள்வாய்
வார்த்தை உடம்பு தொடாது’
அ) அடியெதுகையை எடுத்தெழுதுக.
விடை: கொள்வோர் ,உள்வாய் -ள்
ஆ)இலக்கணக்குறிப்பு எழுதுக- கொள்க,குரைக்க
விடை : வியங்கோள் வினைமுற்று
42. குறள் வெண்பாவின் இலக்கணம் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
விடை: வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளில் வருவது
குறள் வெண்பா
(எ-கா) வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு
நின்றான் இரவு.
43. குறிப்பு
வரைக:- அவையம்
விடை: அவையம்=மன்றம் அல்லது சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம்.
44. .காலக்கழுதை
கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
விடை: காலக்கழுதை
கட்டெறும்பானதும் இடைவிடாது
அறப்பணி செய்தல்
45. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.
விடை: வஞ்சிப்பாவிற்குத் தூங்கல் ஓசையும் , கலிப்பாவிற்குத் துள்ளல் ஓசையும் உரியது.
46. தீவக அணிகளின் வகைகள் யாவை?
விடை: முதல்நிலைத்தீவகம்,இடைநிலைத் தீவகம்,கடைநிலைத் தீவகம்
47. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.
விடை: நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு , நான் எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு
48. “ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் “ – உவமை உணர்த்தும் கருத்து யாது?
விடை: இளம்பயிர் வளர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்பே மழையின்றி வாடிக் காய்வது போல
கருணையன் தாயை இழந்து வாடினான்.
49. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும்
பயனும் அது. – இக்குறளில் பயின்று வந்துள்ள
அணியின் இலக்கணம் யாது?
விடை: நிரல்நிரையணி. சொல்லையும்,பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது.
50.
'வாழ்வில் தலைக்கனம்', 'தலைக்கனமே வாழ்வு' என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?
விடை: சித்தாளுடைய
வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி