9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :
மாதம் :
வாரம் :
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : பெரியாரின் சிந்தனைகள்
1.கற்றல் நோக்கங்கள் :
@ பெரியாரின் சிந்தனைகள் சமுதாய மாற்றத்திற்கு வழி வகுத்ததை உணர்ந்து கொள்ளுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# பெரியார் யார்? எனும் வினாவைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
பெரியாரின் சிந்தனைகள்:
‘பெரியார்‘ என்றவுடன் நம்முடை ய நினைவுக்கு வருவது, அவரின் பகுத்தறிவுக் கொள்கை. எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப் பி , அறிவின்வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும்.
மதங்கள் என்பன மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டன. ஆனால் , இன்று மதத்தின் நிலமை என்ன ? நன்கு சிந்தித்துப்பாருங்கள்; மனிதர்களுக்காக மதங்களா? மதங்களுக்காக மனிதர்களா? மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா ? பிரித்து வைப்பதற்காகவா?’ எனப் பெரியார் பகுத்தறிவு வினாக்களை எழுப்பினார்
5.ஆசிரியர் செயல்பாடு :
§ உரைநடைப் பகுதியை உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்.
§ நூல்வெளி பகுதியை விளக்கிக் கூறுதல்
§ பாடப்பொருளை தக்க சான்றுகளுடன் விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
பெரியாரின் சிந்தனைகள்
7.மாணவர் செயல்பாடு:
Ø முன்னேற்றத்திற்கு விடாமுயற்சி அவசியம் என்பதை உணர்தல்.
@ பகுத்தறிவுச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 9038 - மொழியில் வழங்கப்பட்டுள்ள சிந்தனை மரபுகளைப் படிப்பறிதலுடன் ஒரு சமூகக் கருத்தையொட்டி தர்க்க அடிப்படையில் கலந்துரையாடுதல். அறச் செயல்களைப் பின்பற்றி வாழும் எழுசசி பெறுதல்.
