7 TH STD TAMIL QUESTION ANSWER TERM-3 UNIT-1

 

7.ஆம் வகுப்பு-தமிழ்-முதல் பருவம்

இயல்-1

வினா விடைகள்

விருந்தோம்பல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மரம் வளர்த்தால்------பெறலாம்.

அ) மாறி  ஆ) மாரி  இ) காரி    ஈ) பாரி

2. 'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) நீரு + உலையில் ஆ) நீர் + இலையில்   இ) நீர் + உலையில்   ஈ) நீரு + இலையில்

3. மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) மாரியொன்று  ஆ) மாரிஒன்று  இ) மாரியின்று  ஈ) மாரியன்று

குறுவினா:

1. பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.

விடை: அங்கவை , சங்கவை

2. பொருள் எதும் இல்லாத வீடுகளே இல்லை' - எவ்வாறு?

விடை: உலைநீரில் பொன் இட்டு பாணர்களுக்குத் தந்ததனால் பொருள் ஏதும் இல்லாத

வீடுகளே இல்லை என்பதை அறியலாம்.

சிந்தனை வினா

1. தமிழர்களின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.

·        சமய வழிபாடு

·        தூய அன்பு

·        உயிரிரக்கம்

·        எளிய வாழ்க்கை

·        கற்புநெறி

·        அறம்

2. நீங்கள் அறிந்த விருந்தோம்பல் பற்றிய பழமொழிகளை எழுதுக.

·        உப்பிட்டவரை உள்ளளவும் நினை

·        விருந்தும் மருந்தும் மூன்று நாள்

·        மருந்தே ஆயினும் விருந்தோடு உண்

கற்பவை கற்றபின்

1.வள்ளல்கள் எழுவரின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.

1.     பாரி

2.    ஓரி

3.    காரி

4.    ஆய் அண்டிரன்

5.    அதியன்

6.    பேகன்

7.    நல்லியக்கோடன்

திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. திருநெல்வேலி------மன்னர்களோடு தொடர்பு உடையது.

அ) சேர  ஆ) சோழ  இ) பாண்டிய   ஈ) பல்லவ

2. இளங்கோவடிகள் --------மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.

) இமய  ஆ) கொல்லி  ) பொதிகை  ஈ) விந்திய

3. திருநெல்வேலி-----ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

அ) காவிரி ஆ) வைகை இ) தென்பெண்ணை  ஈ) தாமிரபரணி

பொருத்துக

1. தண்பொருதை  - (அ) பொனிநாணயங்கள் உருவாக்கும் இடம்

2. அக்கசாலை - (ஆ) குற்றாலம்

3. கொற்கை  - (இ) தாமிரபரணி

4. திரிகூடமலை - (ஈ) முத்துக் குளித்தல்

விடை : 1 – ,  2- , 3 – , 4-

குறுவினா

1. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?

·        பச்சையாறு

·        சிற்றாறு

·        சேர்வலாறு

·        மணிமுத்தாறு

·        காரையாறு

·        கடனாநதி

2. கொற்கை முத்து பற்றிக் கூறுக

·        தாமிரபரணி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கைத் துறைமுகம் அமைந்துள்ளது.

·        இங்கு, முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றது.

·        கொற்கையில் விளைந்த பாண்டிய நாட்டு முத்து உலகப்புகழ் பெற்றதாக விளங்கியது.

சிறுவினா

1. திருநெல்வேலிப் பகுதியில் நடைபெறும் உழவுத்தொழில் குறித்து எழுதுக.

·        திருநெல்வேலியில் உழவுத்தொழில் பெரும்பாலும் தாமிரபரணி ஆற்றின் மூலம் நடைபெற்று வருகிறது.

·        சிறுதானியங்கள், காய்கனிகள், எண்ணெய்வித்துகள், பருத்தி, பயிர் வகைகள் போன்றன பயிரிடப்படுகின்றன.

·        வாழை பயிரிடப்பட்டு, வாழைத்தார்கள் கேரளா மற்றும் கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

2. திருநெல்வேலி சீமைக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக.

·        பொதிகைமலையில் அகத்திய முனிவர் வாழ்ந்தார்.

·        சங்ககாலப் புலவர் பலர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

·        கால்டுவெல், ஜி.யூ.போப், வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின் மீது ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி ஆகும்.

3. திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றிக் கூறுக.

·        பொருநை என்னும் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

·        நகரின் நடுவில் நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது.

·        காவற்புரைத்தெரு அரசரால் தண்டிக்கப்பட்டவர்கள் சிறை வைக்கப்படும் சிறைச்சாலை உள்ள தெருவாகும்.

·        தானியங்கள் விற்பனை செய்யப்படும் தெரு கூலக்கடைத்தெரு ஆகும்

சிந்தனை வினா

1. மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

·        நல்ல காற்றோட்டம், அகலமான தெருக்கள் இருக்க வேண்டும்.

·        இயற்கை வளம் மிகுந்ததாக இருக்க வேண்டும்.

·        சுற்றுப்புறத் தூய்மை உடையதாக இருக்க வேண்டும்.

·        தேவைப்படும் அளவு நீர் வசதி இருக்க வேண்டும்.

திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்

டி.கே.சி குறிப்பிடும்  திருநெல்வேலிக்கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக

·        திருநெல்வேலி பகுதி கவிஞர் பெருமைக்கு பெயர் பெற்றதாகத் திகழ்கிறது.

·        எட்டையபுரம் பாரதியாரின் பிறப்பிடமாகவும், புலவர்கள் வாழ்ந்த இடமாகவும் இருந்தது. கடிகைமுத்துப் புலவர், தேசிய விநாயகனார் போன்றோர் இப்பகுதியுடன் தொடர்புடையவர்கள்.

·        நம்மாழ்வார், முத்தொள்ளாயிர ஆசிரியர், சொக்கநாதப் புலவர் போன்றோர் இப்பகுதியின் சிறப்பை வெளிப்படுத்தினர்.

·        திருச்செந்தூரில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடினார்;

·        கழுகுமலையில் அண்ணாமலையார் காவடிச்சிந்து பாடினார்.

·        திருஞானசம்பந்தர் குற்றாலத்தின் இயற்கை அழகை பாடியுள்ளார். திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலக் குறவஞ்சி இயற்றினார்.

வழக்கு

பொருத்துக

1. பந்தர்  -  (அ) முதற்போலி

2. மைஞ்சு  -  (ஆ) முற்றுப்போலி

3. அஞ்சு  -  (இ) இடைப்போலி

4. அரையர்  - (ஈ) கடைப்போலி

விடை:  1 – ஈ , 2 – அ , 3 – ஆ , 4- இ

குறுவினா

1. வழக்கு என்றால் என்ன?

முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ அந்தந்தச் சொற்களை அவ்வாறே பயன்படுத்துவது வழக்கு ஆகும்.

2. இலக்கணப்போலி என்றால் என்ன?

இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.

2. தகுதி வழக்கின் வகைகள் யாவை?

தகுதி வழக்கு மூன்று வகைப்படும். அவை:

1.     இடக்கரடக்கல்

2.    மங்கலம்

3.    குழூஉக்குறி

3. வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது.இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக.

·        போலியான சொல்  - நஞ்சு (முற்றுப்போலி

·        சரியான சொல்  - நைந்து

மொழியை ஆள்வோம்

இன் அல்லது இல் என்னும் இடைச்சொல்லைச் சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக

1. இந்தியா கிழக்கே வங்கக்கடல் உள்ளது.

விடை: இந்தியாவின் கிழக்கே வங்கக்கடல் உள்ளது.

2. அழகு சிறந்தது மயில்,

விடை: அழகில் சிறந்தது மயில்

3. சந்தக்கவிதை பாடுவது வல்லவர் அருணகிரிநாதர்

விடை: சந்தக்கவிதை பாடுவதில் வல்லவர் அருணகிரிநாதர்

4. தேன் சுவையை உடையது இக்கனி

விடை: தேனின் சுவையை உடையது இக்களி

5. மலை உயரம் இந்தப் பனைமரம்.

விடை: மலையின் உயரம் இந்தப் பனைமரம்

6. அறநூல்கள் சிறந்தது திருக்குறள்

விடை: அறநூல்களில் சிறந்தது திருக்குறள்

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

பனை மரமே பனை மரமே

ஏன் வளந்தே இத் தூரம்?

குடிக்கப் பதனியானேன்!

கொண்டு விற்க நுங்கானேன்!

தூரத்து மக்களுக்குத்

தூதோலை நானானேன்!

வினாக்கள்:

1. பனை மரம் தரும் உணவுப் பொருள்கள் யாவை?

விடை: பதனி, நுங்கு

2. பனை மரம் யாருக்குக் கிலுகிலுப்பையைத் தரும்?

விடை: பனைமரம் அழுகிற பிள்ளைகளுக்குக் கிலுகிலுப்பையைத் தரும்.

3. தூதோலை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

விடை: தூதோலை = தூது + ஓலை

4. பனைமரம் மூலம் நமக்குக் கிடைக்கும் பொருள்களைப் பட்டியலிடுக.

விடை: பதனி, நுங்கு, தூதோலை, கிலுகிலுப்பை, கயிறு, தும்பு.

5. பாடலுக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.

விடை: பனைமரம்.

பின்வரும் தலைப்பில் கட்டுரை எழுதுக : என்னைக் கவர்ந்த நூல்

என்னைக் கவர்ந்த நூல் சிலப்பதிகாரம்

முன்னுரை:

       அன்னைத் தமிழில் பல கோடி நூல்கள் இருப்பினும், என்னைக் கவர்ந்த நூல் சிலப்பதிகாரமே ஆகும். அதனைப் பற்றி விரிவாகக் கார்போம்.

சிலப்பதிகாரம் அமைப்பு:

    சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று பெரும் பிரிவுகளையும், முப்பது காதைகளாகிய சிறுபிரிவையும் கொண்டுள்ளது. இந்நூலை இளங்கோவடிகள் இயற்றியுள்ளார்.

சிலப்பதிகாரக் கதை!

         புகார் நகரத்தில் கோவலனும், கண்ணகியும் திருமணம் செய்து வாழ்கின்றனர். கண்ணகியைப் பிரிந்து கோவலன் அதவியுடன் வாழ்கின்றார். அவளைப்பிரிந்து மீனர்டும் கண்ணகியுடன் மதுரை செல்கின்றார். கண்ணகியின் சிலம்பை விற்கச் சென்ற இடத்தில் கொல்லப்படுகின்றான்.கண்ணகி நீதியை நிலைநாட்டி மதுரையை எரித்து, வானுலகம் செல்கின்றாள்.

சிறப்புகள்:

     ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.  முத்தமிழ்க் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் நூல், ன் குடிமக்களைக் கதை மாந்தராகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நூல் இது.

சுவர்ந்த காரணம்:

      மூவேந்தர்களைப் பற்றியும், முத்தமிழ் பற்றியும், முச்சுவை பற்றியும், முந்நீதிகளைப் பற்றியும் ஒரே நூலில் விளக்குவதால் சிலப்பதிகாரம் என்னை மிகவும் கவர்ந்தது. பொதுமக்களைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டதாலும் என்னைக் கவர்ந்தது இந்நூல்,

முடிவுரை:

     சிலப்பதிகாரம் மிகவும் இனிமையான நூல் என்பதை அறிந்து, நான் படித்தேன், என்னைக் கவர்ந்தது. நீங்களும் படியுங்கள்! உங்களையும் கவரும்!

மொழியோடு விளையாடு

தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.

1. என் தாயார் என்னை ______காத்து வளர்த்தார்.

(கண்ணை இமை காப்பது போல / தாயைக் கண்ட சேயைப் போல )

விடை: கண்ணை இமை காப்பது போல

2.  நானும் என் தோழியும்---------இணைத்து இருப்போம்.

(இஞ்சி தின்ற குரங்கு போல/ நகமும் சதையும் போல)

விடை: நகமும் சதையும் போல

3. திருவள்ளுவரின் புகழை-- உலகமே அறிந்துள்ளது.

(எலியும் பூனையும் போல, உள்ளங்கை நெல்லிக்கனி போல)

விடை: உள்ளங்கை நெல்லிக்கனி போல

4. அப்துல் கலாமின் புகழ்--- உலகமெங்கும் பரவியது.

(குன்றின்மேலிட்ட விளக்கு போல, குடத்துள் இட்ட விளக்கு போல)

விடை: குன்றின்மேலிட்ட விளக்கு போல

5. சிறுவயதில் நான் பார்த்த நிகழ்ச்சிகள்---- என் மனத்தில்பதிந்தன

(கிணற்றுத்தவளை போல, பசுமரத்தாணி போல).

விடை: பசுமரத்தாணி போல

கொடுக்கப்பட்டுள்ள ஊரின் பெயர்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக.                      

(எ.கா) திருநெல்வேலி - திரு, நெல், வேலி, வேல்

1. நாகப்பட்டினம்   -   விடை: நாகம், பட்டினம், பட்டி, நாடி,

2. கன்னியாகுமரி   -   விடை: கன்னி, குமரி, மரி, கனி.

3. செங்கல்பட்டு  -  விடை: செங்கல், பட்டு, கல், கட்டு.

4. உதகமண்டலம்  -  விடை: கமண்டலம், மண்டலம், உலகம், உணர்.

5. பட்டுக்கோட்டைவிடை: பட்டு, கோட்டை, படை, கோடை

படிப்போம்; பயன்படுத்துவோம்!

1.     நாகரிகம் - Civilization

2.    நீர்ப்பாசனம் - Irrigation

3.    வேளாண்மை - Agriculture

4.    பயிரிடுதல் - Cultivation


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை