7 TH STD TAMIL MODEL NOTES OF LESSON MARCH WEEK-1

 7 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :       

மாதம்        

வாரம்     :                                              

வகுப்பு  :  ஏழாம் வகுப்பு          

பாடம்    :           தமிழ்  

பாடத்தலைப்பு     :  திருக்குறள் 

1.கற்றல் நோக்கங்கள்   :

   #  திருக்குறளில் கூறப்பட்ட வாழ்வியல் அறங்களைப் புரிந்துகொண்டு வாழ்வில் பின்பற்றுதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Øயாருக்கெல்லாம் அணிகலன்கள் அணிவது பிடிக்கும்? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • செய்யுட்பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • வினை செயல்வகை

  • அவை அஞ்சாமை

  • நாடு

  • அரண்

  • பெருமை

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. திருக்குறளை இயற்றியவர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1. நாட்டின் அரண்கள் யாவை?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1. திருக்குறள் அன்றாட வாழ்வில் எங்கெல்லாம் பயன்படுகிறது?

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

பாடப்பகுதியில் இடம்பெற்ற அணிகளைப்பற்றி எழுதிவரச்செய்தல்

12.கற்றல் விளைவு:

   Ø திருக்குறளில் கூறப்பட்ட வாழ்வியல் அறங்களைப் புரிந்துகொண்டு வாழ்வில் பின்பற்றுதல்

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை