6.ஆம் வகுப்பு-தமிழ்-முதல் பருவம்
இயல்-1 |
பாரதம்
அன்றைய நாற்றாங்கால்
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தேசம்
உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
அ) திருவாசகம் ஆ)
திருக்குறள் இ) திரிகடுகம் ஈ) திருப்பாவை
2.காளிதாசனின்
தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்
அ) காவிரிக்கரை ஆ) வைகைக்கரை இ) கங்கைக்கரை
ஈ) யமுனைக்ரை
3. கலைக்கூடமாகக்
காட்சி தருவது
அ ) சிற்பக்கூடம் ஆ) ஓவியக்கூடம் இ) பள்ளிக்கூடம் ஈ) சிறைக்கூடம்
4. நூலாடை
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நூல்+ஆடை ஆ)
நூலா+டை இ) நூல்+ லாடை ஈ) நூலா+ஆடை
5. எதிர்+ஒலிக்க
என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) எதிரலிக்க ஆ)
எதிர்ஒலிக்க இ) எதிரொலிக்க ஈ) எதிரொலிக்க
நயம்
அறிக
1. பாரதம்
அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
விடை: மெய்களை,மெய்யுணர்வு
அன்னை, அன்னிய
2. பாரதம்
அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள மோனைச்சொற்களை எடுத்து எழுதுக.
விடை: மெய்களை,மெய்யுணர்வு
அன்னை, அன்னிய
தெய்வ,தேசம்
3. பாரதம்
அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
விடை: நூலாடை
, மேலாடை
பூத்தொடுக்கும்,கேட்கும்
குறுவினா
1. தாராபாரதியின்
பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை: வள்ளுவர்.காளிதாசர்,கம்பர்
2. இந்தியாவின்
மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்துக் கவிஞர் காட்டும் காட்சியை
எழுதுக.
விடை: மேற்கில் தோன்றும் நதிகள் கிழக்குவரை
பாய்ந்து வளம்சேர்க்கின்றன.
சிந்தனை
வினா
நம் நாட்டின்
முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.
விடை:
ü
நாட்டுப்பற்றுடையவராக
இருத்தல்
ü
பொதுநல
நோக்கோடு செயல்படுதல்
ü
கடமைகளைச்
சரிவரச் செய்தல்
ü
பல்துறை
அறிவுபெற்று விளங்குதல்
ü
கல்வியறிவில்
சிறந்து விளங்குதல்.
பாஞ்சை
வளம்
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
ஊர்வலத்தின் முன்னால் ----அசைந்து வந்தது.
அ) தோரணம் ஆ) வானரம் இ) வாரணம்
ஈ) சந்தனம்
2.
பாஞ்சாலங்குறிச்சியில் -----நாயை
விரட்டிடும்.
அ)
முயல்
ஆ) நரி இ) பரி ஈ) புலி
3. மெத்தை
வீடு என்று குறிப்பிடப்படுவது
அ) மெத்தை
விரிக்கப்பட்ட வீடு
ஆ) படுக்கையறை உள்ள வீடு
இ)
மேட்டுப்பகுதியில் உள்ள வீடு ஈ) மாடிவீடு
4. 'பூட்டுங்கதவுகள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
அ) பூட்டு
+ கதவுகள் ஆ) பூட்டும் + கதவுகள்
இ)
பூட்டின் + கதவுகள்
ஈ) பூட்டிய + கதவுகள்
5. 'தோரணமேடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
அ)
தோரணம் + மேடை ஆ) தோரண + மேடை
இ) தோரணம்
+ ஒடை ஈ) தோரணம் + ஓடை
6. வாசல்
+ அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ)
வாசல்அவங்காரம் ஆ) வாசலங்காரம் இ) வாசலலங்காரம் ஈ)
வாசலிங்காரம்
பொருத்துக.
1.
பொக்கிஷம் –
அ. அழகு
2. சாஸ்தி
–
ஆ. செல்வம்
3. விஸ்தாரம்
–
இ. மிகுதி
4.
சிங்காரம் –
ஈ. பெரும்பரப்பு
விடை: 1 – ஆ , 2 – இ , 3 – ஈ , 4- அ
குறுவினா
1.
பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.
விடை:
ü பாஞ்சாலங்குறிச்சி
நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும்.
ü அவை
மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாக இருக்கும்.
2.
பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?
விடை:
பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும்
நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.
சிறுவினா
1.
பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?
விடை:
Ø பாஞ்சாலங்குறிச்சியில்
ஒவ்வொரு வீடுகளிலும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.
Ø வீடுகளெல்லாம்
மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும்.
Ø வீட்டுக்
கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்ததாகவும் இருக்கும்.
2.
பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக.
விடை:
வீரம் நிறைந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப்
பிடிக்கவரும் வேட்டை
நாயை எதிர்த்து விரட்டும். பசுவும் புலியும் நீர் நிலையின் ஒரே பக்கம் நின்று பால்
போன்ற தண்ணீரைக் குடிக்கும்.
சிந்தனை
வினா
1.
நாட்டுப் புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் யாது?
விடை:
Ø மாவீரன்
கட்டபொம்மன் வீரம் நிறைந்தவர். அஞ்சா நெஞ்சினர்.
Ø ஆங்கிலேய
உயர் அதிகாரிகளை நேருக்கு நேராகவே தன் நாட்டு உரிமைக்காக எதிர்த்தவர்.
Ø ஆகிய
காரணத்தினாலும், மக்கள் மனதில் வீரம்
நிறைந்தவராக இடம் பிடித்திருப்பதாலும்
Ø நாட்டுப்
புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படுகின்றார்.
தமிழ்நாட்டில் காந்தி
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காந்தியடிகளிடம்
உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் _____________
அ) கோவை ஆ) மதுரை இ) தஞ்சாவூர் ஈ)
சிதம்பரம்
2. காந்தியடிகள்
____ அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.
அ) நாமக்கல் கவிஞர்
ஆ) பாரதிதாசன் இ) உ.வே.சாமிநாதர் ஈ) பாரதியார்
பொருத்துக
1. இலக்கிய
மாநாடு – அ. பாரதியார்
2. தமிழ்நாட்டுக்
கவிஞர்_ ஆ. சென்னை
3. குற்றாலம்
– இ. ஜி.யு.போப்
4. தமிழ்க்
கையேடு – ஈ. அருவி
விடை: 1 – ஆ
, 2 – அ , 3 – ஈ , 4 - இ
சொற்றொடரில்
அமைத்து எழுதுக
1. ஆலோசனை –
பெரியோரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்பட வேண்டும்.
2. பாதுகாக்க
– இயற்கையைப் பாதுகாத்தல் நமது கடமை.
3. மாற்றம்
– வாழ்க்கையில் அவ்வப்போது மாற்றம் வந்துகொண்டே இருக்கும்.
4. ஆடம்பரம்
– நாம் ஆடம்பரம் இல்லாமல் வாழவேண்டும்.
குறுவினா
1. காந்தியடிகள்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை?
விடை: எல்லா மக்களுக்கும்
செல்ல அனுமதி இல்லாததால் நுழையவில்லை.
2. காந்தியடிகளுக்குத்
தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.
விடை: ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடும்,திருக்குறளும் காந்தியடிகளுக்குத் தமிழ்கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தின.
சிறுவினா
1. காந்தியடிகளின்
உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.
விடை:
ü
காந்தியடிகள்
தமிழகத்தில் பயணம் செய்யும்போது உழவர்கள் அரைகுறை ஆடையுடன் இருப்பதைக் கண்டார்.
ü
இந்தியாவில்
பல ஏழைகள் உடையின்றி இருக்கும்போது,தான் ஆடம்பர ஆடை அணிவதைத் தவிர்க்க வேண்டும் என எண்ணினார்.
2. காந்தியடிகளுக்கும்
தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.
ü
ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடும்,திருக்குறளும் காந்தியடிகளுக்குத்
தமிழ்கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார்.
ü
1937ல் சென்னையில் நடந்த இலக்கியவிழா ஒன்றில் உ.வே.சாவிடம் தமிழ் கற்க விரும்புவதாகக் கூறினார்.
சிந்தனை
வினா
காந்தியடிகளிடம்
காணப்படும் உயர்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை ?
விடை:
ü
எளிமை
ü
சிக்கனம்
ü
நாட்டுப்பற்று
வேலுநாச்சியார்
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டெடுத்த நிகழ்வைச்
சுருக்கமாக எழுதுக.
v வேலுநாச்சியார் சிவகங்கை
மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்.
v காளையார் கோவிலில் நடந்த
போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரிடம் போரிட்டு மரணம் அடைந்தார்.
v வேலுநாச்சியார் சிவகங்கையை
மீட்க உறுதி பூண்டார்.
v அம்முயற்சிக்கு ஐதர்
அலி படைகளை அனுப்பி உதவினார்.
v காளையார் கோவிலில் ஆங்கிலேயருக்கு
எதிராக நடைபெற்ற போரில் வேலுநாச்சியாரின் கூட்டுப்படை ஆங்கிலேயரைத் தோற்கடித்தது.
v இப்போரில் மருது சகோதரர்கள்,குயிலி,உடையாள் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர்.
v இறுதியாக அனைவரது ஒத்துழைப்புடன்
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டெடுத்தார்.
சுட்டு எழுத்துகள்,வினா எழுத்துகள்
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.
1. என் வீடு _________ உள்ளது. (அது / அங்கே )
2. தம்பி ____________ வா (இவர் / இங்கே )
3. நீர் ___________ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே
)
4. யார் ___________ தெரியுமா? (அவர் / யாது)
5. உன் வீடு ___________அமைந்துள்ளது? (எங்கே / என்ன )
குறுவினா
1. சுட்டு எழுத்துகள் என்றால்
என்ன ? அவை யாவை ?
விடை: ஒன்றைச்
சுட்டிக்காட்ட வரும் எழுத்துகளுககுச் சுட்டு எழுத்துகள் என்று பெயர். அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள்
ஆகும்.
2. அகவினா, புறவினா – வேறுபாடு யாது?
விடை:
ü
வினா
எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.
ü
வினா
எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவதுபுறவினா எனப்படும்.
சிந்தனை
வினா
1.
அகச்சுட்டு, அகவினா, புறச்சுட்டு,
புறவினா என்று பெயரிட்ட காரணத்தை எழுதுக.
விடை:
ü சொல்லின் உள்ளேயே இருந்து
சுட்டுப்பொருளைத்தருவது அகச்சுட்டு
ü
வினா
எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா.
ü சொல்லின் வெளியே இருந்து
சுட்டுப்பொருளைத்தருவது புறச்சுட்டு.
ü
வினா
எழுத்துகள் சொல்லின் புறத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது புறவினா.
மொழியை ஆள்வோம்
கீழ்க்காணும்
பத்தியைப் படித்து வினாக்க ளுக்கு விடை எழுதுக
1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை
நிறுவியவர் யார்?
விடை: வ.உ.சிதம்பரனார்
2. வ. உ.சி. சென்னைக்குச்
செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ?
விடை: பாரதியார்
3. வ. உ.சி. அவர்கள் யாருடைய
பாடல்களை விரும்பிக் கேட்பார் ?
விடை: பாரதியார்
4. வ. உ. சி. அவர்களின் பன்முகத்
தன்மைகள் யாவை ?
விடை: வழக்கறிஞர் , எழுத்தாளர் , பேச்சாளர் , தொழிற்சங்கத்
தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார் .
5. வ. உ. சி. அவர்கள் புலமை
பெற்றிருந்த மொழிகள் யாவை ?
விடை: தமிழ் ,
ஆங்கிலம்.
அகரவரிசைப்படுத்துக
பெண்கள், பாரதம், புதுமை , பீலி, பேருந்து,
பூமி, பழங்கள், பொதுக்கூட்டம்,
பையன், போக்குவரத்து, பின்னிரவு
விடை: பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம்,
போக்குவரத்து.
சுட்டுச்சொற்களை
தொடரில் அமைத்து எழுதுக
(அ) அந்த - அந்த மலை உயரமாக உள்ளது.
(ஆ) இந்த - இந்த மைதானத்தில் விளையாடக்கூடாது.
வினாச்சொற்களை
தொடரில் அமைத்து எழுதுக
அ) எங்கே - அவன்
எங்கே போனான்? ஆ) ஏன் - நேற்று ஏன் பள்ளிக்கு வரவில்லை?
இ) யார் - திருக்குறளை
யார் இயற்றினார்? ஈ) எப்படி - அவன் எப்படி
விரைந்து சென்றான்?
கீழ்க்காணும்
தலைப்பில் கட்டுரை எழுதுக.
தேசிய
ஒருமைப்பாடு
முன்னுரை:
மக்கள் அனைவரிடமும்
அமைதி, சகிப்புத்தன்மை,
மனித நேயம், மத, இன
நல்லிணக்கம் ஆகியவை இருந்தால்தான் தேசிய ஒருமைப்பாடு நிலைத்திருக்கும். தேசிய
ஒருமைப்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் காண்போம்.
வேற்றுமையில்
ஒற்றுமை:
இந்தியா
பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள்,
பல கலாச்சாரங்கள், பல சாதிகள் என்று
வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வில் ஒன்று பட்டிருக்கிறது. அனைவரையும்
இணைக்கின்ற மனிதச் சங்கிலியாக தேசிய ஒருமைப்பாடு திகழ்கிறது. இதைத்தான் பாரதி,
“ முப்பது கோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள்”
- என்று பாடினார்.
தேசிய
ஒருமைப்பாடு-சுதந்திரத்தின் அடித்தளம்:
இன்று நாம் அனுபவிக்கும்
சுதந்தரம் எளிதாகக் கிடைத்ததில்லை. ஒருமைப்பாட்டு உணர்வு என்னும் உரமிட்டு,
கண்ணீரும் செந்நீரும் சிந்தி, எண்ணற்றோர் இன்னுயிர்த்
தியாகம் செய்து சொல்ல முடியாத துன்பங்களுக்கு உள்ளாக்கிப் பெற்றதாகும். இவ்வாறு
பெற்ற விடுதலைக்கு அடித்தளமாக அமைந்தது தேசிய ஒருமைப்பாடே ஆகும்.
முடிவுரை:
நாம் ஒவ்வொருவரும் தேசிய
ஒருமைப்பாட்டையும் உலக ஒருமைப்பாட்டையும் கடைப்பிடித்து வாழ வேண்டும்.
அப்பொழுதுதான்
“எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும்
இந்நாட்டு மன்னர்” என்ற பாரதியின் கனவு நனவாகும்.
ஒருமைப்பாட்டை வளர்ப்போம்! உலக
அரங்கில் உயர்வோம்!
மொழியோடு விளையாடு
விடை: வடக்குண்டு, வடக்கில்லை
பந்துண்டு, பந்தில்லை
பாட்டுண்டு, பாட்டில்லை
விடைகள்:
·
பாரி வீட்டுக்கு
வந்தான்
·
எழிலி வீட்டுக்கு
வந்தாள்
·
மாணவர்கள் வீட்டுக்கு
வந்தார்கள்
·
மாடு வீட்டுக்கு வந்தது
·
மாடுகள் வீட்டுக்கு
வந்தன
படிப்போம்:
பயன்படுத்துவோம்
1.
நாட்டுப்பற்று – Patriotism
2.
கலைக்கூடம் – Art Gallery
3.
மெய்யுணர்வு – Knowledge of Reality
4.
இலக்கியம் - Literature
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி