|
உரைநடை நெடுவினாக்கள் |
10.ஆம் வகுப்பு – தமிழ் (வினா எண்: 43 அ மறும் ஆ)
இயல்-1
1) தமிழின் சொல்வளம்
பற்றியும், தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவைகுறித்தும் தமிழ்மன்றத்தில்
பேசுவதற்கான உரைக்குறிப்பை உருவாக்குக.
|
'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' |
என்கிறார் மகாகவி பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில்
நீந்தித் தன்னை நிலைநிறுத்திக்
கொண்டுள்ளது தமிழ், என்ன வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு
பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும்
உண்டென்று. விடை பகர்கிறது, தமிழ்ச்சொல் வளம்.
தமிழரின்ஆழ்ந்த
சொல்லாக்கத்திற்கான சில சான்றுகள்:
தவரத்தின் அடி, இலை, காய்,
பூ, கனி எனப் பலவற்றிற்கும் அவற்றைக் குறிப்பிட,
மிகத் துல்லியமாகச் சொற்களை உருவாக்கியுள்ளனர் தமிழர்கள்.
அடி
வகைகள்:
தாள் , தண்டு, கோல், தூறு, தட்டு ,கழி, கழை, அடி முதலியன ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்களாகும்.
இவை அடிப்பகுதியின் ஒவ்வொரு பகுதிக்கேற்ப வகைப்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
பூவின்
நிலைகள்:
ü அரும்பு
– பூவின் தோற்ற நிலை
ü போது
– பூ விரியத்தொடங்கும் நிலை
ü மலர்
– பூவின் மலர்ந்த நிலை
ü வீ
– மரஞ்செடியினின்று விழுந்த நிலை
ü செம்மல்-
பூ வாடின நிலை
புதிய
சொல்லாக்கத்தின் தேவைகள்:
ü சொல்லாக்கம்
காரணமாகத் தமிழ்மொழியின் ஒலியமைப்பிலும், சொல்லமைப்பிலும்,
பொருள் புலப்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, சொல்லாக்கத்தினால் உருவாக்கப் பட்டுள்ள சொற்கள், மரபு
வழிப்பட்ட தமிழ் இலக்கணத்தில் மாற்றங்களைக் கோருகின்றன.
ü மொழியியலின்
பிற பிரிவுகளைக் காட்டிலும் இலக்கணத்துடன் நெருங்கிய தொடர்புடையது சொல்லகம்
சொல்லாக்கம் மாபிலக்கணத்துடன் வேறுபடும் இடங்களைக் கண்டறிந்து புதிய இலக்கண
விதிகளை வகுக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இது பொழியியல் அடிப்படையில்
சொல்லாக்கம் ஏற்படுத்தியுள்ள முக்கியத் தேவையாகும்.
ü சொல்லாக்க
அறிவானது அத்துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்குவதுடன்,
மொழியின் வளர்ச்சிக்கும் ஆதாரமாகும்.
முடிவுரை:
சொல்வளம்
நிறைந்த மொழியானது அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும்
உணர்த்துவதுடன் பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின்
மதிநுட்பத்தையும் உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை
இதன் வழி அறியலாம்
இயல்-2
1. காற்று
மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
காற்று
மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்
முன்னுரை:
நாம்
தினமும் சுவாசிக்கின்ற காற்று சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால்
இப்போது காற்று பல இடங்களில் மாசுபடுகிறது. இதனால் மனிதர்களும்,
விலங்குகளும், மரங்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே, இந்த காற்று மாசுபாட்டை தடுக்க நாம் என்ன செய்யலாம்
என்பதைப் பார்ப்போம்.
பசுமை
பரப்புகளை அதிகரித்தல்:
மரங்கள்
காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை இழுத்து ஆக்சிஜனை வெளியிடுகின்றன. ஆகையால்,
அதிகமாக மரங்களை நடுவது காற்று மாசுபாட்டை குறைக்கும் முக்கியமான
வழியாகும். மரங்களை வெட்டாமல், புதிய மரஞ்செடிகளை நட்டு வளர்ப்பதே
இதற்கான சிறந்த வழியாகும்.
பொதுப் போக்குவரத்தை
பயன்படுத்துதல்:
ஒவ்வொருவரும்
தனித்தனியாக வாகனங்களை பயன்படுத்துவது காற்று மாசுபாட்டை அதிகரிக்கச் செய்யும்.
இதற்குப் பதிலாக பேருந்து, ரயில் போன்ற பொதுப்
போக்குவரத்தை பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமாக காற்று மாசுபாட்டைப் பெருமளவு
குறைக்கலாம். மேலும் பள்ளி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
அவசியம்.
எரிபொருள் சிக்கனமுடைய வாகனங்கள்:
மின்சார
வாகனங்கள் மற்றும் எரிபொருள் சிக்கனமான வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம்
மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம். பெட்ரோல், டீசல்
உள்ளிட்டவற்றால் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது
தொழிற்சாலைகளில் கட்டுப்பாடுகள்:
ü தொழிற்சாலைகள்
வெளியிடும் வேதியியல் வாயுக்கள் மற்றும் புகையை சுத்திகரிக்கும் கருவிகள் (filter)
மூலம் வெளியிட வேண்டும். அரசு விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய
வேண்டும்.
ü மின்
உலைகள்,
பசுமை தொழில்நுட்பங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் தானாகவே காற்று
மாசுபாடு குறையும்.
குப்பைகளைச் சரியாக நிர்வகித்தல்:
குப்பைகளை
திறந்தவெளியில் எரிக்காமல், அதனை முறையாக
மண்ணில் புதைக்கும் அல்லது செய்வது
முக்கியம். மேலும் மட்கும் குப்பை, மட்காத குப்பை என்ற வகைகளில்
பிரித்து மறு சுழற்சி செய்வது காற்று மாசுபாட்டைக் குறைக்கும்.
முடிவுரை:
காற்று
மாசுபாட்டைத் தடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையுமாகும். இயற்கையைப்
பாதுகாக்கும் முயற்சியில் நாம் ஒட்டுமொத்தமாக செயல்பட்டால் மட்டுமே,
சுத்தமான காற்றையும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும். இன்று
செயல் படுத்துங்கள், நாளைக்கு நலமாக இருப்போம்!
இயல்-3
1. சங்ககாலத்
தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.
தமிழர்களின்
விருந்தோம்பல்
|
”காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள” - திருக்குறள் |
தன் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல்.
தமிழர் பண்பாட்டில் தலைசிறந்ததாகக் கருதப்படுவது விருந்தோம்பல்.சிலப்பதிகாரத்தில்
கண்ணகி, கோவலனைப் பிரிந்த துயரைவிட விருந்தோம்ப இயலாததால்
ஏற்பட்ட துயர் மிகவும் வருத்துவதாகக் கூறுகிறாள்.
தமிழர் விருந்து குறித்துக்கூறும்
தமிழ் இலக்கியங்கள்:
ü உறவினர்
வேறு,
விருந்தினர் வேறு. முன்பின் அறியாதவர்களே விருந்தினர்.
"விருந்தே புதுமை" என்கிறது தொல்காப்பியம். விருந்தோம்பல் எனும் தனி
அதிகாரத்தையே கொண்டுள்ளது திருக்குறள்.
ü "உண்டாலம்ம
இவ்வுலகம்" என்கிறது புறநானூறு.
ü "அல்லில்
ஆயினும் விருந்து வரின் உவக்கும்" என்று நற்றிணை கூறுகிறது.
ü விருந்தினரை
ஏழடிவரைநடந்து வழியனுப்ப வேண்டும் என்பதை, "காலின் ஏழடி பின்சென்று.." என்ற பாடலில் கூறுகிறது பொருநராற்றுப்படை என்றெல்லாம் இலக்கியங்கள்
விருந்தோம்பலைப்பற்றி உரைக்கின்றன.
தமிழர் பண்பாட்டில் விருந்து :
|
”நெருனை வந்த விருந்திற்கு
மற்றுத்தன் இரும்புப் பழவால் வைத்தனன்” - புறநானூறு |
இல்லறம் புரிவது
விருந்தோம்பல் செய்யும் பொருட்டே. முகம் வேறுபடாமல் முக மலர்ச்சியோடு விருந்தினரைத்
தமிழர் வரவேற்று உபசரிப்பர். தனித்து உண்ணாமையே தமிழரின் விருந்தோம்பல் பண்பின்
அடிப்படை.நடுஇரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிட்டு,அவர்கள் திரும்பிச் செல்லும்போது ஏழடி பின்சென்று வழியனுப்பி வைப்பர்.
தமிழர் உணவு முறை:
|
|
விருந்தோம்பல் தமிழர் பண்பாட்டின்
மகுடம்:
மருந்தே ஆயினும் விருந்தோடு
உண்டனர் தமிழர். திருமணத்தை உறுதி செய்தல், திருமணம்,
வளைகாப்பு, பிறந்த நாள், புதுமனை புகுவிழா போன்ற இல்ல விழாக்களில் மிகுதியான விருந்தினரை வரவேற்று
உணவளித்து மகிழ்ந்தனர்.
முடிவுரை:
காலப்போக்கில் வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணம் கூடங்களுக்கு இடம்
பெயர்ந்து விட்டன. பண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில் விருந்தினரை வரவேற்பது
முதல் பந்தியில் உபசரித்து வழியனுப்புவதுவரை திருமண ஏற்பாட்டாளர்களே செய்கின்றனர்.
இந்நிலை மாற வேண்டும். விருந்தோம்பலின் உன்னதத்தை உணர்த்தும் பாடங்கள் மற்றும்
கதைகளைப் பள்ளி பாடநூல்களில் இடம்பெறச் செய்யவேண்டும்
இயல் – 4
4. முன்னுரை-
மொழிபெயர்ப்பு நூல்கள் -எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் கொணர்ந்திங்கு
சேர்ப்பீர்- மொழிபெயர்ப்புக் கல்வி- முடிவுரை.
தலைப்பு:மொழிபெயர்ப்பின்
அவசியம்.
முன்னுரை
:
|
”பிறநாட்டு நல்லறிஞர்
சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்” |
மொழிபெயர்ப்பும் தொடக்கமும்:
'ஒரு மொழியில்
உணர்த்தப்பட்டுள்ளதை வேறொரு மொழியில் வெளியிடுவதே மொழிபெயர்ப்பு' என்கிறார் மணவை முஸ்தபா. 'மொழிபெயர்த்தல்' என்ற தொடரை மரபியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
|
'மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும்' |
என்று சின்னமனூர்ச்
செப்பேடு கூறுவதன் மூலம் சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை
அறியலாம். வடமொழியில் வந்த இராமாயண, மகாபாரத தொன்மை
செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பெருங்கதை, சீவகசிந்தாமணி,
கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வடமொழி
கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே.
மொழிபெயர்ப்பின் அவசியமும் பயனும்:
மொழிபெயர்ப்பு எல்லா
காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகள்
உருவாகி இருக்க முடியாது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு மூலம் சேக்ஸ்பியர்
அறிமுகமானார். கம்பனும் ரவீந்திரநாத் தாகூர் கூட மொழிபெயர்ப்பின் மூலமே சிறப்புப்பெற்றவர்கள்.
இன்றைக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு அவசியமாகின்றது.
மொழிபெயர்ப்பு இல்லாமல் உலகம் இல்லை .வானொலி, தொலைக்காட்சி,
திரைப்படம், இதழ்கள் போன்ற ஊடகங்கள்
மொழிபெயர்ப்பினால் வளர்ச்சி அடைந்துள்ளன.
மொழிபெயர்ப்பு ஒரு பயன்கலை:
வேற்று மொழி படைப்புகளால் புதுவகையான சிந்தனைகளும் மொழிக் கூறுகளும்
பரவுகின்றன. உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளையும் இலக்கியப்
படைப்புகளையும் அடையும் பயன்கலையாக மொழிபெயர்ப்பு விளங்குகிறது.
எட்டுதிக்கும் செல்வீர்:
எட்டுத்திக்கும்
கொட்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களை, மொழிபெயர்ப்பு
நிறுவங்களை அமைத்தும் மொழிபெயர்ப்புக்கு உதவும் சொற்களஞ்சியங்களை உருவாக்கியும்
பட்டறைகளை நடத்தியும் மொழிக்கு வளம்சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
மொழிபெயர்ப்புக் கல்வி:
மொழிபெயர்ப்பைக் கல்வியாக
ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் எளிதில் பெற்று, மனிதவளத்தை
நாமே முழுமையாகப் பயன்படுத்தி, வேலைவாய்ப்புத் தளத்தை
உருவாக்கி ஒருலகர் எனுந்தன்மை பெறலாம்.
முடிவுரை :
'உலக நாகரிக வளர்ச்சிக்கும்
மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் 'எனும்
மு.கு ஜகந்நாதராஜா கருத்தினை நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.
இயல் – 5
5. போரட்டக்
கலைஞர்-பேச்சுக் கலைஞர் நாடகக் கலைஞர் திரைக் கலைஞர் இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய
தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
|
பழுமரக்கனிப்
பயன்கொள்ளும் பேச்சாளர் படித்தவரைக்
கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் |
கலைஞர் பகுத்தறிவுக்
கொள்கை பரப்பும் சிந்தனையாளர். பேச்சாளர்,
எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர். "முத்தமிழ் அறிஞர்"
"சமூகநீதி காவலர்" என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். இவருடைய
பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
போராட்டக் கலைஞர்
|
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் |
பதினான்காம் வயதில்,
பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, "வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!" என்று தொடங்கும்
பாடலை முழங்கியபடி இந்தித் திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித்
திருவாரூர் வீதிகளில் ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள்
இருந்த கலைத்தன்மையை வளர்த்தது.
|
தமிழில் உண்டு
பல்வகை மொழிநடை அதில் கலைஞருக்குண்டு
தனிநடை |
v மேடைப்பேச்சினில்
பெருவிருப்பம் கொண்ட கலைஞர், "நட்பு"
என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது.
v பள்ளிப்
பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க "சிறுவர்
சீர்த்திருத்தச் சங்கம்" மற்றும் "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்"
ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார்.
நாடகக் கலைஞர்:
v தமக்கே
உரிய தனிநடையால் தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான
பழநியப்பன் மற்றும் அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன்,
மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ உட்பட பல நாடகங்களை எழுதினார்.
v தூக்குமேடை
என்னும் நாடகத்தை எழுதி அதில் மாணவர் தலைவராகக் கருணாநிதி நடித்தார்.
திரைக்
கலைஞர்
v கலைஞரின்
திறமையை நன்குணர்ந்த இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக
நடித்த ”ராஜகுமாரி” படத்திற்கான முழு வசனத்தையும் கலைஞரை எழுதச்
செய்தார்
v சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி
படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா, ராஜா ராணி முதலிய படத்திற்கும் கலைஞர் கதை வசனம் எழுதினார்
v ”மறக்க முடியுமா?” என்ற திரைப்படத்திற்காக எழுதப்பட்ட
கலைஞருடைய ”காகித ஓடம் கடல் அலை மேலே”
எனும் பாடல் காலத்தால் மறக்க முடியாத பாடல் ஆகும்
|
இயலும் இயன்றதை இவரது நூல்களே
நுவன்றன |
தமிழ் மீது திராத பற்றுகொண்ட
கலைஞர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக்
கிண்ணம், தாய்மை, புகழேந்தி, அணில் குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப் பாண்டியன்,
பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம்,
ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் கலைஞர் எழுதியுள்ளார்.
தன் வாழ்க்கை வரலாற்றை
"நெஞ்சுக்கு நீதி" என்னும் தலைப்பில் ஆறு பாகங்களாக எழுதி
வெளியிட்டுள்ளார்.
முடிவுரை:
உடல் மண்ணுக்கு உயிர்
தமிழுக்கு" என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர்.
இயல் – 6
1)
நாட்டு விழாக்கள்-
விடுதலைப் போராட்ட வரலாறு-
நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு-
குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாட்டுப்பற்று
என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
|
“இன்று ஏடு கற்போரே நாளை
நாடு காப்போர் ஆதல், இளமை அறிவோடு இயைபின் நடப்பதெல்லாம் நாட்டிற்கு நன்றேயாம்” |
என்ற
பாவேந்தரின் வாய்மொழிக்கேற்ப,எதிர்காலத்தில் நல்லவர்களாகவும்,
வல்லவர்களாகவும் உரிய நற்பண்புகளை மாணவர்கள் இளமை முதலே பெற வேண்டும்.
இத்தகைய நற்பண்புகளைப் பெற்று மாணவர்கள் சிறந்துவிளங்க நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றன. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நாட்டு விழாக்கள்:
நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும்,
விடுதலை நாள் விழாவும்,
குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும் சிறந்தவையாகும். நமது நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சிசெய்து வந்த
ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள் விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வரலாறு:
எண்ணற்றோர் சுதந்திரப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
கொடிகாத்த குமரன், தீரன்சின்னமலை,வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணிய சிவா,மருதுபாண்டியர்கள் பகத்சிங்,பால கங்காதர திலகர்,நேதாஜி ஆகியோர் அவற்றில் மிகவும்
குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களது கடுமையான போராட்டத்தாலும்,
தியாகத்தாலும் இந்தியா 1947
ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றது.
நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:
இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாய உணர்வுடன் வளர்ந்தால்தான் நாடும் வீடும்
வளம் பெறும். துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை,
சாதி மத வேறுபாடுகள்,
தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல் ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல்
மிகவும் சிறப்பு.
மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:
மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும்.
அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு
நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள
வேண்டும்.
மரம் நடுதல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, சாலை விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல் மற்றும் தேசிய விழாக்களை கொண்டாட உதவுதல் ஆகியவற்றில்
மாணவர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும்.
முடிவுரை:
|
|
என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க,
நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு
மிக முக்கியமானது. மாணவர் நாட்டு முன்னேற்றத்தில் இணைந்து
செயல்பட்டால், நாடும் முன்னேறும் வீடு முன்னேறும்,
புதிய இந்தியா உருவாகும்.
இயல் – 7
1. குறிப்புகளைக்
கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.
மாணவன்
கொக்கைப் போல, கோழியைப் போல -
உப்பைப் போல இருக்க வேண்டும் கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப்
பயன்படுத்திக்கொள்ளும் - குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே
எடுத்துக்கொள்ளும் கோழி கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும்
ஆசிரியர் விளக்கம் - மாணவன் மகிழ்ச்சி.
தலைப்பு: “மாணவன் எப்படியிருக்க
வேண்டும்?”
கதாபாத்திரங்கள்:
- ஆசிரியர்
- மாணவன் 1 (ஆனந்த்)
- மாணவன் 2 (சிவா)
- மாணவன் 3 (ரேவதி)
- மாணவர்கள் குழு
[காட்சி – வகுப்பறை. மாணவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்
வருகிறார்.]
ஆசிரியர்: (மெதுவாகச் சிரித்தபடி) இன்று நாமொரு சிறப்பான விஷயத்தைப் பேசப் போகிறோம் –
“மாணவன் எப்படியிருக்க வேண்டும்?”
ஆனந்த்: (ஆர்வமாக) அதாவது எப்படி சார்?
நல்ல மதிப்பெண் வாங்கினாலே போதுமா?
ஆசிரியர்: மதிப்பெண்களோடு நடத்தைவும் முக்கியம் அனந்த்!
மாணவன் மூன்று விஷயங்களில் இருந்து கற்றுக்கொள்ளலாம் – கொக்கு, கோழி, மற்றும் உப்பு.
சிவா: (அதிர்ச்சியுடன்) சார்! அது என்ன விசயம்? நாங்கள்
பறவைகளிடமா கற்றுக்கொள்ளணும்?
ஆசிரியர்: (சிரித்தபடி) ஆமாம்!
கொக்கைப் பாருங்கள் — அது நீண்ட நேரம் காத்திருந்து, வாய்ப்பு கிடைத்தவுடனே மீனைப் பிடித்து விடும். மாணவனும் அதுபோல
பொறுமையுடன் காத்திருந்து, வாய்ப்பு வந்தபோது
பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ரேவதி: (தலையசைத்து) அதாவது,
நாமும் எப்போதும் விழிப்புடன் இருக்கணும் சார்?
ஆசிரியர்: சரி! இப்போது கோழியைப் பாருங்கள்.
அது குப்பையைக் கிளறினாலும் தன் உணவைத்தான் எடுக்கும். அதுபோல, மாணவன் நல்லதை
மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் – கெட்டதை தவிர்க்க
வேண்டும்.
ஆனந்த்: (சிரித்து) அதான்
சார்! கோழியும் கற்பிக்குது போல இருக்கே!
ஆசிரியர்: (சிரித்தபடி) ஆமாம்
அனந்த்! கடைசியாக உப்பை நினைச்சுப்பாருங்கள். அது கண்ணுக்குத் தெரியாது, ஆனா உணவின் சுவையை அது தான் தீர்மானிக்கும். அதுபோல, மாணவன் வெளிப்படையாகப் பெருமை தேட வேண்டாம்; பணிவாக,
ஒழுக்கமாக இருந்தாலே மற்றவர்களின் மனதில் சுவை தர முடியும்.
சிவா: (மகிழ்ச்சியுடன்) சார்,
இதெல்லாம் ரொம்ப அழகா இருக்கு. நாமும் கொக்கைப் போல பொறுமையா,
கோழியைப் போல தேர்ந்தெடுக்க தெரிந்தவங்கா, உப்பைப்
போல பணிவானவங்கா இருக்கணும்!
ஆசிரியர்: அதுதான்! அப்படிப்பட்ட மாணவன்தான்
உண்மையான அறிவாளி!
மாணவர்கள்
(ஒன்றாக): நாங்கள் அப்படிப் பழகுவோம் சார்!
[காட்சி முடியும் –
ஆசிரியர் புன்னகையுடன் மாணவர்களை பார்கிறார்.]
பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்
