7 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER WEEK-2

 7 . ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  

மாதம்          நவம்பர்

வாரம்     :                                 

வகுப்பு  :   ஏழாம் வகுப்பு          

பாடம்    :           தமிழ் 

பாடத்தலைப்பு     :   1. பூத்தொடுத்தல்  2. பேசும் ஓவியங்கள்

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø எளிய சொற்களும் கருத்துகளும் கவிதைப் பொருளாகும் திறம றிந்து தானே கற்றல்.

@ ஓவியக் கலையின் மேன்மையையும் , அது மனித வாழ்வோடு இணைந்துள்ள நுடபத்தையும் அறிந்து போற்றுதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø  சில ஹைக்கூ கவிதைகளைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

             @ ஓவியம் வரைவது யாருக்கெல்லாம் பிடிக்கும்? என்ற வினாவைக்கேட்டு, விடைகூறச்செய்து ஓவியங்களை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • செய்யுள், உரைநடைப் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

பூத்தொடுத்தல்


பேசும் ஓவியங்கள்


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • பூத்தொடுப்போரின் வாழ்வியலின் இயல்பை அறிந்து கொள்ளுதல்

  • குகை ஓவியம், கோட்டோவியம், சுவர் ஓவியம், துணி ஓவியம், கலம்கசாரி ஓவியங்கள், ஓலைச்சுவடி ஓவியம்

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1. கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் _______
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
2. குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1. தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?
9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

தமிழரின் ஓவியங்கள் பற்றிய புகைப்படங்களைத் திரட்டுதல்

12.கற்றல் விளைவு:

@ 702- ஒன்றைப் படிக்கும் போது அந்தப் படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தலும்அக்கருத்துகளைத் தமது சொந்தக் கருத்துகளுடன் அனுபவங்களுடனும் ஒப்பிட்டுதமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறிதல்

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை