7 . ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :
மாதம் : அக்டோபர்
வாரம் :
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : தேயிலைத் தோட்டப்பாட்டு
1.கற்றல் நோக்கங்கள் :
Ø தமிழரின் புலம்பெயர் வாழ்வையும், அதற்கான காரணங்களையும் அறிய முற்படுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø தேயிலை விளைவதை எங்கு பார்த்துள்ளீர்கள் ? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
செய்யுட்பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாகத் தமிழர்கள் ஆங்கிலேயரின் குடியேற்ற நாடுகளுக்குப் பிழைக்கச் சென்றனர். அங்குக் கரும்புத் தோட்டத் தொழிலாளர்களாகவும் தேயிலைத் தோட்டக் கூலிகளாகவும் துன்புற்றனர்.
அவர்களது துன்பத்திற்குக் காரணம் என்ன என்பதையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் கூறும் பாடல்
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
தேயிலைத் தோட்டத்தொழில் பற்றிய புகைப்படங்களைத் திரட்டுதல்
12.கற்றல் விளைவு:
@ 702- ஒன்றைப் படிக்கும் போது அந்தப் படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தலும், அக்கருத்துகளைத் தமது சொந்தக் கருத்துகளுடன் அனுபவங்களுடனும் ஒப்பிட்டு, தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறிதல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி