10 TH STD TAMIL SLIP TEST QUESTION PAPER UNIT-7

 

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-1 (இயல்-7)

பலவுள் தெரிக.                                                                                                                 5×1=5

1. மேன்மை தரும் அறம் என்பது-

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது   ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது.

2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்

    பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?

அ) உதியன்: சேரலாதன் ஆ) அதியன்: பெருஞ்சாத்தன்

இ) பேகன் கிள்ளிவளவன்  ஈ) நெடுஞ்செழியன்: திருமுடிக்காரி

3. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?

அ) ஒரு சிறு இசை  ஆ) முன்பின்  இ) அந்நியமற்ற நதி   ஈ) உயரப் பறக்கல்

4. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ----,----- வேண்டினார்.

அ) கருணையன், எலிசபெத்துக்காக  ஆ) எலிசபெத், தமக்காக

இ) கருணையன், பூக்களுக்காக  ஈ) எலிசபெத், பூமிக்காக

5. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்-

அ) அகவற்பா  ஆ) வெண்பா  இ) வஞ்சிப்பா  ஈ) கலிப்பா

குறுவினா.                                                                                                                      4×2=8

6. குறிப்பு வரைக அவையம்.

7. காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்' - உவமை உணர்த்தும் கருத்து யாது?

8. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

9. சங்க இலக்கியத்தில் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?

நெடுவினா                                                                                                                       1×7=7

10. குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

மாணவன் கொக்கைப் போல, கோழியைப் போல - உப்பைப் போல இருக்க வேண்டும் கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் - குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் ஆசிரியர் விளக்கம் - மாணவன் மகிழ்ச்சி.

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-2 (இயல்-7)

சிறுவினா                                                                                                                                     

1. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

2 வாய்மை பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக.

3. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

4. ”நவமணி” எனத்தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதுக

குறுவினா                                                                                                                          4×2=8

5. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக           

. மனக்கோட்டை ஆ. அள்ளி இறைத்தல்  . கண்ணும் கருத்தும்  . ஆறப்போடுதல்

6. உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக

. தாமரை இலை நீர்போல ஆ. மழைமுகம் காணாப் பயிர்போல

7. பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.

            சேரர்களின் பட்டப்பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன

8. கலைச்சொல் அறிவோம்

அ. Happiness ஆ. Gratuity இ. Sceptor ஈ. Truth

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-3 (இயல்-7)

5 மதிப்பெண் வினா                                                                                                

1. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

2. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

நெடுவினா                                                                                                                     1×10=10

3. கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.

10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-4 (இயல்-7)

5 மதிப்பெண் வினா                                                                                                   4×5=20

1. கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

2. மொழி பெயர்க்க:-  

    1. Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein

    2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

    3. It is during our darkest moment that we must focus to see the light – Aristotle

    4. Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill

3. உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலை யில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

4. நயம் பாராட்டுக:-

          கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த

                        குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே

            ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே

                        உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே

            மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே

                        மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே

            ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்

                        ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.   -  வள்ளலார்.

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை