9 TH STD TAMIL QUESTION AND ANSWERS UNIT-7 25-26

 

வினா விடைகள் (2025-2026)

இயல்-7

திறன் அறிவோம்

பலவுள் தெரிக

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

கூற்று: பெரியார் உயிர் எழுத்துகளில் '' என்பதனை 'அய்' எனவும் '' என்பதனை 'அவ்' எனவும் சீரமைத்தார்.

காரணம் : சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.

அ) கூற்று சரி, காரணம் தவறு  ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி

இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு ஈ) கூற்று தவறு, காரணம் சரி

2. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

    ஞாலத்தின் மாணப் பெரிது - இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு எது?

அ) நாள்  ஆ) மலர் இ) காசு  ) பிறப்பு

3. விடுபட்ட இடத்திற்கான விடை எது?

"இளையவர் கூட்டம் ஏந்தி நடக்க

------ புதியவைதாம்"

 அ) சாதியும் மதமும்   ஆ) இனமும் மொழியும்  இ) இனமும் மதமும்  ஈ) மதமும் மொழியும்

4. பெரியார் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது.

அ) ஈரோட்டுச் சிங்கம்  ஆ) பகுத்தறிவுக் கொள்கை  இ) எழுத்துச் சீர்திருத்தம் ஈ) அ. ஆ.இ அனைத்தும்

5. போக்குக என்ற சொல்லின் பகுதி -

அ) போகு  ஆ) போக்கி   இ) போக்கு   ஈ) போகி

குறுவினா

1. "பகுத்தறிவு' என்றால் என்ன?

விடை: ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி. அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும்.

2.மூவசைச் சீரில் அமைந்த பெயர்கள் இரண்டினைக் குறிப்பிடுக

விடை:  ஔவையார், திருவள்ளுவர்

3. யாருக்குப் பூமி பாரமில்லை என்று கவிஞர் குறிப்பிடுகின்றார்?

விடை:  விதைகள் முளைக்கத் துடித்தால் பூமி ஒன்றும் பாரமில்லை

4. யசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

விடை:  அவந்தி நாட்டு மன்னன் யசோதரன்

5. அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை:  அசை இரண்டு வகைப்படும்

அவை :  நேரசை , நிரையசை

சிறுவினா

1. சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துகளை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக

·        அனைவரும் சிக்கத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயம்

·        ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.

·        தேவையற்ற விழாக்களையும் சடங்குகளையும் தவிர்க்க வேண்டும்.

·        மின்சாரம், எரிபொருள், பணம் ஆகியவற்றிலும் சிக்கனம் தேவை

2. நாம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளாக யசோதர காவியம் குறிப்பிடுவன யாவை?

·        பயன்தரத்தக்க நற்செயலைச் செய்ய வேண்டும்.

·        முதலில் சினத்தை நீக்க வேண்டும்.

·        மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.

·        நன்னெறியைப் போற்றிக் காக்க வேண்டும்.

3. 'என் சமகாலத் தோழர்களே' கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?

·        முன்னோர் சொன்ன வழியில் சென்றால் துன்பம் நம்மை நெருங்காது.

·        தமிழின் பெருமைகளை அறிவியலுடன் இணைத்து கொண்டு செல்லுங்கள்.

·        கல்லணையின் சிறப்பை இணையத்தில் பதிவேற்றம் செய்யுங்கள்.

·        தமிழ் இனத்தை வீரமுடையதாக்குங்கள்.

நெடுவினா

1. மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக

v  ஒரு மொழியின் தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது.

v  இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ்மொழியாகும்.

v  அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைத் தமிழில் படைக்க வேண்டும்.

v  நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்.

v  இலக்கியம் மதம் கடவுள் தொடர்பற்று இருக்க வேண்டும்.

v  இயற்கை அறிவைத் தருவதாக இருக்க வேண்டும்.

v  திருக்குறளை மதிப்பு மிக்க நூலாகப் பெரியார் கருதினார்.

v  இந்நூலில் அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியுள்ளது.

2. மொழியின் விரல்பிடித்து நடக்கப்பழகிக் கொண்டிருக்கும் தன்மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

முன்னுரை :   

தாயுமானவனாகத் திகழ்ந்த முத்துக்குமார் அவர்கள் தம் மகனுக்கு எழுதிய கடிதத்தில் அமைந்துள்ள செய்திகளை அறிவோம்.

குழந்தைப் பருவமும்உலக வாழ்வும் :

என் செல்லப் பூங்குட்டியே! நீ குழந்தையாய் இருந்தாய்; அழுதாய்; சிரித்தாய்; குப்புறக்கவிழ்ந்து தலைநிமிர்ந்து, சாகசம் கொண்டாடினாய். தரையெல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய்; எழுந்தாய்; விழுந்தாய்; நடந்தாய்; ஓடினாய்.

       இந்த உலக வாழ்வும் இப்படித்தான். சிரிக்க வேண்டும், சிணுங்க வேண்டும், குப்புறக்கவிழ்ந்தும், தலைநிமிர்ந்தும் சாகசம் செய்தல் வேண்டும். தவழ வேண்டும், எழவேண்டும், விழவேண்டும், மீண்டும் எழ வேண்டும், இந்த நாடகத்தை நீ வெவ்வேறு வடிவங்களில் உலக வாழ்வில் நடிக்கத்தான் வேண்டும்.

அனுபவமே கல்வி :

கல்வியில் தேர்ச்சி கொள்ள வேண்டும், அதே நேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்துத் தெரிந்து கொள்வதை விட தீண்டிக் காயம் பெறு. அந்த அனுபவக் கல்வியே இவ்வுலகில் வெற்றியுடன் வாழ பயன்படும் சூத்திரம் ஆகும்.

அன்பாக இரு:

 எங்கும், எதிலும் எப்போதும் அன்பாய் இரு. அன்பை விட உயர்ந்தது இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை. உன் பேரன்பால் இந்தப் பிரபஞ்சத்தை நனைத்துக் கொண்டே இரு. உறவுகளை விட மேன்மையானது நட்பு மட்டுமே, உன் அன்பால் நல்ல நண்பர்களைச் சேர்த்துக் கொள். உன் வாழ்வு அன்பாலும், நட்பாலும் நேராகும்.

புத்தகங்களை நேசி :  

புத்தகங்களை நேசிக்கத் தவறாதே. ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய். உன் பாட்டனும் தகப்பனும் புத்தகங்களின் காட்டில் தொலைந்தவர்கள் உன் உதிரத்தில் காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்.

முடிவுரை:                                                                    
             இக்கருத்துக்கள் அனைத்தும் முத்துக்குமாரின் மகனுக்கு மட்டுமல்ல. இதனைப் படிக்கின்ற ஒவ்வொரு மாணவனுக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், வளர்வதற்கும், உயர்வதற்கும், ஏற்ற கருத்துக்கள் ஆகும் என்பதை எவராலும் மறுக்க இயலாது.

மொழி பெயர்க்க.

    Once Buddha and his disciples were thirsty. They reached a lake. But it was muddy because somebody just finished washing their clothes. Buddha asked his disciples to take a little rest there by the tree. After half an hour the disciples noticed that the water was very clear. Buddha said to them,”You let the water and the mud be settled down on its own. Your mind is also like that. When it is disturbed, just let it be. Give a little time. It will settle down on its own. We can judge and take best decisions of our life when we stay calm.”

விடை:

ஒருமுறை புத்தரும், அவருடைய சீடர்களும் மிகுந்த தாகத்துடன் இருந்தனர். ஓர் ஏரியை அடைந்தனர். யாரோ ஒருவர் தன் துணிகளைத் துவைத்திருந்தபடியால், ஏரி நீர் கலங்கி, சேருடன் காணப்பட்டது. புத்தர் தன் சீடர்களை நோக்கி சற்று நேரம் இம்மரத்தடியில் அமைதியாக இளைப்பாறுவோம் என்றார். அரைமணி நேரம் கழித்து அவருடைய சீடர்கள் ஏரியை உற்றுப் பார்த்தனர்.

அழுக்குகள் ஒதுங்கிவிட்டன. சேறும் நீரின் அடி ஆழத்திற்குச் சென்று படிந்து விட்டது. தண்ணீர் மிகவும் தெளிவாகி விட்டது. உங்கள் மனமும் இதைப்போலத்தான், ஏரியை அழுக்கும், சேறும் கலக்கியது போல உங்கள் மனத்தைக் கலக்கும் செயல்கள் நடைபெற்றால் சற்று நேரம் அமைதியாக இருங்கள். அவை கரைந்து, மறைந்து, அழிந்து போய்விடும். அதுவரை அமைதியாக இருந்துவிட்டு பின் உங்கள் முடிவுகளைச் சிந்தித்து எடுங்கள். அதுவே சிறந்த நேர்மையான வாழ்வுக்கு வழியாகும்.

சொற்றொடர்களை அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.

 1.மறுநாள் வீட்டுக்கு வருவதாக முரளி கூறினார் (நேர் கூற்றாக மாற்றுக).
விடை: நான் நாளை வீட்டுக்கு வருவேன்என்று முரளி கூறினார்.

 2.தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவை புகழ்கிறோம் என்று ஆசிரியர் கூறினார் (அயற் கூற்றாக மாற்றுக).
விடை:  தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர் கூறினார்.

3. மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள் ஹோட்டலில் சாப்பிட்டான் (பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குக)
விடை:  காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகளை உணவு விடுதியில் (உணவகத்தில்) உண்டான் (சாப்பிட்டான்).

4.அலறும் மயிலும், கூவும் ஆந்தையும், அகவும் சேவலும் போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும் (ஒலி மரபுப் பிழைகளை திருத்துக).
விடை:  அகவும் மயிலும், அலறும் ஆந்தையும், கூவும் சேவலும், போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்.

 5.கோழிக் குட்டிகளைப் பிடிக்க பூனைக் குஞ்சுகள் ஓடின (பெயர் மரபுப் பிழைகளைத் திருத்துக).
விடை:  கோழிக்குஞ்சுகளைப் பிடிக்க பூனைக்குட்டிகள் ஓடின.

நயம் பாராட்டுதல்.

       திங்கள்முடி சூடுமலை
            தென்றல் விளை யாடுமலை
       தங்குமுகில் சூழுமலை
             தமிழ்முனிவன் வாழுமலை
       அங்கயற்கண் அம்மை திரு
              அருள்சுரந்து பொழிவதெனப்
        பொங்கருவி தூங்குமலை
               பொதியமலை என்மலையே   -   குமரகுருபரர்.

திரண்ட கருத்து:

நிலவைத் தன் மணிமுடியாகச் சூடிய மலை. எப்போதும் தென்றல் தவழ்ந்து விளையாடும் மலை. அகலாது தன்னகத்தே தங்குகின்ற முகில் கூட்டங்கள் சூழ்ந்த மலை. தமிழ் முனிவன் அகத்தியன் வாழ்ந்த மலை. அங்கயற்கண்ணியாம் மீனாட்சி கண் திறந்து அருள் சுரந்து பொழிவதைப் போல் பொங்குகின்ற அருவிகள் விழுகின்ற மலை. பொதிய மலையாம் என் மலையே.

மோனை நயம்:  

செய்யுளில் அடியிலோ, சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயம் எனப்படும்.

சான்று:     ங்கு முகில்       –   மிழ் முனி
                அங்கயற்கண்ணி – ருள் சுரந்து

எதுகை நயம்:  

செய்யுளில் அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.

சான்று:         திங்கள்      ங்கு
                     ங்கயற் –  பொங்கருவி

அணி நயம்:   

        பொதிகை மலையில் விழும் அருவிஅங்கயற்கண் அம்மை திரு அருள் சுரந்து பொழிவதென்என்னும் அடியில் உவமையணி அமைந்துள்ளது.

சந்தநயம்:
      அறுசீர்ச் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று செப்பலோசையுடன் இனிமையாக அமைந்துள்ளது.

இயைபுத் தொடை:   

செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபுத் தொடை ஆகும்.

சான்று:         சூடு மலை, யாடு மலை, வாழு மலை

மொழியோடு விளையாடு

 

பொருத்தமான வாய்பாடுகளை வட்டமிடுக.

பகலவன் - காசு/கருவிளம்/கூவிளங்கனி

மலர்ச்சி - கூவிளம்/ புளிமா/ கருவிளம்

தாவோவியம் - தேமாங்கனி/ தேமா/ பிறப்பு

வெற்றிடம் - நாள்/ கூவிளம் / புளிமா

பூங்குட்டி - கருவிளங்கனி / மலர்/ தேமாங்காய்

அகராதியில் காண்க.

   (வயம், ஓதம், பொலிதல், துலக்கம், நடலை)

1.     வயம்வலிமை, வெற்றி

2.    ஓதம்ஈரம், வெள்ளம்

3.    பொலிதல்செழித்தல், பெருகுதல்.

4.    துலக்கம்விளக்கம், ஒளி

5.    நடலைவஞ்சனை, துன்பம்

வினைத்தொகைகளைப் பொருத்தி எழுதுக.

(வளர்தமிழ், விளைநிலம், குளிர்காற்று, விரிவானம், உயர்மதில், நீள்வீதி, கரைவிளக்கு, மூடுபனி, வளர்பிறை, தளிர்பூ)

1. வளர்பிறை  நிலவுடன் விரிவானம் அழகாகக் காட்சியளிக்கிறது.

2. தளிர்பூ ங்கொடிகளும் விளைநில ங்களும் மனத்தைக் கொள்ளையடிக்கின்றன.

3. மூடுபனி கள் அனைத்தும் நீள்வீதி யில்முழுகிக்கிடக்கின்றன.

4. மெல்லவீசும் குளிர்காற்று றும் வளர்தமிழ் புகழ்பாடுகின்றது.

5. தொலைவில் கலங் கரைவிளக்க த்தின் ஒளி உயர்மதில் சுவரை ஒளிரச் செய்கிறது.

                              


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை