9 TH STD TAMIL QUESTION AND ANSWERS UNIT-6 25-26

 


இயல்-6

9.ஆம் வகுப்பு தமிழ்

வினா விடைகள் (2025-2026)

திறன் அறிவோம்

பலவுள் தெரிக

1. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?

அ) வருக்கை – இருக்கை  ஆ) புள் தாவரம்  இ) அள்ளல் - சேறு'  ஈ) மடிவு - தொடக்கம்

2. தேமாங்கனி என்பது  ------ ஆகும்.

அ) பண்புத்தொகை  ஆ) வினைத்தொகை  இ) வேற்றுமைத் தொகை  ஈ) உவமைத்தொகை

3. தவிர்தலின்றிக் காவல் செய்யும் பாதுகாவலர் ஆயிரம் பேர் உள்ளது

அ) கோக்கிள்ளி நாடு ஆ) ஏமாங்கத நாடு   இ) திருநாடு   ஈ) கோசலைநாடு

4. கூற்று  : இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான். "இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்'' என்றார்.

காரணம் : இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.

அ) கூற்று சரி; காரணம் சரி ஆ) கூற்று சரி; காரணம் தவறு

இ) கூற்று தவறு: காரணம் சரி ஈ) கூற்று தவறுகாரணம் தவறு

5. ஆடுகளம் இச்சொல்லில் வல்லினம் மிகாது என்பதற்கான காரணம் யாது?

அ) எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது ஆ) வினாப்பெயரின் பின் வல்லினம் மிகாது

இ) வினைத்தொகையில் வல்லினம் மிகாது   ஈ) இரட்டைக்கிளவியில் வல்லினம் மிகாது.

குறுவினா

1. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?

விடை:

1.     கேப்டன் தாசன்

2.    இராமு

3.    அப்துல்காதர்

4.    ஜானகி

5.    இராஜாமணி

2. தாய்நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?

விடை: நான் இராணுவப் பணியை தாய்நாட்டுக்காக உழைக்க தேர்ந்தெடுப்பேன். ஏனெனில், தாய்நாட்டைப் பாதுகாக்கவும், இந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையைப் பேணவும் கிடைத்த வாய்ப்பாக இராணுவப் பணியைக் கருதுகிறேன்.

3. கருக்கொண்டபச்சைப்பாம்பு, எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

விடை:  நெற்பயிர்.

4. ஓம்புவார் - பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக.

ஓம்புவார் - ஓம்பு + வ் + ஆர்

ஓம்பு - பகுதி

வ் - எதிர்கால இடைநிலை

ஆர் - பலர்பால் விகுதி

5. இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான் அவர்கள் தமிழர்கள் பற்றிக் கூறியது யாது?

விடை: இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான் "இந்திய தேசியஇராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான்" என்றார்.

6. 'மகனே கொடு'-இத்தொடரில் வல்லினம் மிகுமா? விளக்கம் தருக?

விடை: மகனே கொடு என்பது விளித்தொடர் விளித் தொடரில் வல்லினம் மிகாது.

சிறுவினா

1. குறிப்பு வரைக - டோக்கியோ கேடட்ஸ்

விடை: இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பப்பட்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.

2. பனியிலும், மலையிலும் எல்லையைக் காக்கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் பள்ளிக் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக.

ü  உறைந்து போகும் கொடிய பனிப்பொழிவிலும், மலைத்துப் போகச் செய்யும் மலைச் சரிவுகளிலும் நாட்டு நலனுக்காக ஓயாது உழைக்கும் உடன்பிறவா சகோதரர்களே!

ü  தாய் மண்ணைக் காக்கத் தங்கள் இன்னுயிரையும் ஈந்த இந்தியத் தாயின் வெற்றித் திருமகள்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம்?

ü  தியாகச் செம்மல்களே! உங்கள் வீரமிக்க பணிகளைப் பாராட்டுகிறோம். உங்கள் தொண்டிற்குத் தலைவணங்குகிறோம்!

3. ஏமாங்கத நாட்டின் புகழ் உலகின் பல திசைகளிலும் எப்படிப் பரவியுள்ளது என்பதைத் திருத்தக்க தேவர் எங்ஙனம் கூறுகின்றார்?

ü  உயரமான தென்னை மரத்தின் முற்றிய காய் கீழுள்ள பாக்கு மரத்தின் உச்சியிலுள்ள தேனடையைக் கிழித்து பலாப் பழத்தினைப் பிளந்து மாங்கனியைச் சிதற வைத்து வாழைப் பழத்தை உதிர்க்கவும் செய்தது.

ü  இத்தகு வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டின் புகழ் உலகின் பல திசைகளிலும் பரவியிருந்தது.

4. ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?

ü  ஊர்களில் ஆயிரம் வகை உணவுகள் கிடைக்கின்றன.

ü  உணவளிக்கும் அறச்சாலைகள் ஆயிரம் உள்ளன.

ü  மகளிர் ஒப்பனை செய்யும் மணிமாடங்கள் ஆயிரம் உள்ளன.

ü  அங்கு நிகழும் திருமணங்கள் ஆயிரமாக உள்ளன.

ü  தொழில் செய்யும் கம்மியர்கள் ஆயிரம் பேர் உள்ளனர்.

நெடுவினா:

1. இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரை வழி நிறுவுக

ü  இந்திய தேசிய இராணுவம், இந்திய விடுதலைக்காக உருவான அமைப்பாகும்.

ü  இந்த இராணுவத்தில் தமிழர்கள் முக்கிய தூண்களாகத் திகழ்ந்தனர்.

ü  'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்' தலைமையில் பலர் சேர்ந்தனர்.

ü  தில்லான் என்பவர் இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்என புகழ்ந்தார்.

ü  இராணுவத்தில் ஜான்சி ராணி படைஎனப்படும் பெண்கள் படையிலும் டாக்டர் லட்சுமி உள்ளிட்ட தமிழ் பெண்கள் முன்னிலை வகித்தனர்.

ü  இரண்டாம் உலகப்போரின்போது தமிழர்கள் போராடியதை ஆங்கிலேய பிரதமர் சர்ச்சிலும் கண்டித்தார்.

ü  18 தமிழ் இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டபோதும், தியாகம் செய்ய இன்முகத்துடன் முனைந்தனர்.

ü  நேதாஜி, “நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்கவேண்டும்எனப் புகழ்ந்தார். நாட்டுக்காக உயிர் நீத்த தமிழ் வீரர்களின் தியாகம் நினைவுகூரப்பட வேண்டியதாகும்.

2. ஏமாங்கதநாட்டு வளம் குறித்தவருணனைகளைநும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.

முன்னுரை:
      சீவகசிந்தாமணியில் “நாமகள் இலம்பகத்தில்” நாட்டு வளம் என்னும் பகுதியில் ஏமாங்கத நாட்டின் வளம், திருத்தக்கதேவரால் நயம்பட உரைக்கப்பட்டுள்ளது. ஏமாங்கதநாட்டு வளம் போலவே எம் ஊரின் வளங்களும் உள்ளன எனில் மிகையாகாது.

வளம் மிக்க நெருங்கிய தோப்புகள்:

ஏமாங்கத நாட்டில் நிகழ்ந்த வளமான நிகழ்வு போலவே எம் ஊரிலும் அடர்ந்த தோப்புகளில் நிகழ்ந்தது. தென்னை மரத்திலிருந்து முற்றிய தேங்காய் விழுகின்றது. அத்தேங்காய் நிலத்தை வந்தடையும்முன் விழும்வேகத்தில் அருகிருந்த பாக்கு மரத்தின் உச்சியின் உள்ள தேனடையைக் கிழித்து, தேனடையோடு பலாமரத்தில் உள்ள பலாப்பழத்தினை பிளந்து, தேங்காய், தேனடை, பலாச்சுளைகளோடு, வாழைப்பழங்களையும் உதிரச்செய்கிறது.

மண் மணம்வீசும் வயல்வளம்:

நீர்நிலைகள் சூழ்ந்த வயல் பகுதிகள் உள்ளன. அந்நீர்நிலைகளில் அழகான கொம்புகளையுடைய ஆண் எருமைகளும், வலிமையான நேரிய கொம்புகளை உடைய எருதுகளும் பேரொலி எழுப்பி நீந்துகின்றன. அவ்வொலியால் அந்நீர்நிலையில் உள்ள பொறிகளையுடைய வரால் மீன் இனங்கள் கலைந்து ஓடுகின்றன.

வணங்கும் நெற்பயிர்கள்:

 கருக்கொண்ட பச்சைப்பாம்பைப்போல நெற்பயிர்கள் திரட்சியான தோற்றம் கொண்டுள்ளன. செல்வம் பெற்று பக்குவம் இல்லாது செருக்குடன் இருக்கும் மேல் அல்லார் போல, கதிர்விட்டு நிமிர்ந்துநிற்கின்றன நெற்பயிர்கள். அப்பயிர்களில் உள்ள நெற்கதிர்கள் முற்றியவுடன், தெளிந்த நூல் பல கற்றோரின் பணிவைப்போல பணிந்து, இறைஞ்சி தலைசாய்ந்து நிற்கும் கவின் மிகு காட்சியையும் எம் ஊரில் காணலாம்.

முடிவுரை:                                                                      
         இவ்வாறு ஏமாங்கத நாட்டின் வளம் போலவே, வளமும்;, சிறப்பும் கொண்டனவாய் எம் ஊரும் உள்ளது என்பதில் பெருமிதமும் மகிழ்வும் கொள்கிறேன்.

3. இந்திய விண்வெளித்துறை பற்றிய செய்திகளை விவரிக்க

விடை:

ü  இது, இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும்.

ü  இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் 'அன்தரீஷி பவன்' என்ற பெயரில் உள்ளது.

ü  இதன் முதன்மை விண்வெளி நிலையம் சதீஸ் தவன் விண்வெளிமையம்.

ü  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது.

ü  இதன் முதன்மை நோக்கமாக விண்வெளி தொழில்நுடபத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.

ü  இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் 'ஆரியப்படடா' அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது இதற்குக் காரணமானவர் விக்ரம் சாராபாய் ஆவார்

ü  1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல் செயற்கைக் கோள் 'ரோகினி' ஏவப்பட்டது. இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதற்பயணமாக "சந்திராயன்-I" ஏவப்பட்டது.

மொழி பெயர்க்க

A deer, a turtle, a crow and a rat were friends. One day the deer was caught in a hunter's trap. Friends made a plan to save him. According to the plan, the deer lay motionless as if it were dead. The crow sat on the deer and started poking. The turtle crossed the hunter's path to distract him. The hunter left the deer, assuming it dead, and went after the turtle. Meanwhile, the rat chew open the net to free the deer. The crow picked up the turtle and quickly took it away from the hunter. From this Panchatantra story, we learn that the teamwork can achieve great results.

விடை:

ஒருமான், ஓர் ஆமை,ஒரு காகம். ஓர் எலி இவையாவும் நண்பர்கள். ஒரு நாள் மான் வேடனின் பொறியில் சிக்கியது. நண்பர்கள் அதனைக் காப்பாற்றத் திட்டமிட்டனர். அதன்படி மான் செத்தது போல் கிடந்தது. காகம் அதன்மீது அமர்ந்து அதைக் கொத்தத் தொடங்கியது. ஆமை வேடனின் பாதையைத் திசை திருப்பியது. மான் இறந்ததாக எண்ணிய வேடன் அதனை விட்டுவிட்டு, ஆமையின் பின் சென்றான். அதே வேளையில் எலியும் வலையைக் கடித்தது. காகம், ஆமையைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றது. இந்தப் பஞ்ச தந்திரக் கதையின் மூலம் நாம் அறிவது 'கூட்டு முயற்சி மிகுந்த பலனைத் தரும்' என்பதாகும்.

பொருத்தமான இடங்களில் அடைமொழியிட்டு, சொற்றொடரை விரிவாக்குக.

1.புத்தகம் படிக்கலாம் (நல்ல, ஆழ்ந்து, நாளும், தேர்ந்து, மகிழ்ந்து, உணர்ந்து)
விடை:
அ) நல்ல புத்தகங்கள் படிக்கலாம்.
ஆ) நல்ல புத்தகத்தில் ஆழ்ந்த கருத்துகளைப் படிக்கலாம்.
இ) நாளும் நல்ல புத்தகம் படிக்கலாம்.
ஈ) நல்ல புத்தகங்களைத் தேர்ந்து எடுத்து படிக்கலாம்.
உ) நல்ல புத்தகங்களை நாளும் மகிழ்ந்து, உணர்ந்து படிக்கலாம்.

2.விளையாடுவது நன்று (ஓடியாடி, மாலையில், சேர்ந்து, திடலில், அனைவருடன்)
விடை:
அ) மாலையில் அனைவருடன் சேர்ந்து விளையாடுவது நன்று.
ஆ) மாலையில் திடலில் ஓடியாடி விளையாடுவது நன்று.

பிழை நீக்குக.

பெறுந்தலைவர் காமராசர் பள்ளிப்படிப்பை நிரைவு செய்யவிள்ளை எண்ராலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்கலை நாள்தோறும் படித்தது. எப்போது அரையை விட்டு வெளியே போனாலும் மின்விசிரியை நிருத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமனிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.
விடை:
            பெருந்தலைவர் காமராசர் பள்ளிப்படிப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அளவிற்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்களை நாள்தோறும் படித்தார். எப்போது அறையை விட்டு வெளியே போனாலும் மின்விசிறியை நிறுத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமணிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.

பயண அனுபவங்களை வருணித்து எழுதுக.

எனது பயணம் எனும் தலைப்பில் உங்களது பயண அனுபவங்களை வருணித்து எழுதுக.

இயற்கையின் தாய்மடி-  உதகை

         கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் உதகைக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன். அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

      அரக்கோணம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து நீலகிரி விரைவு வண்டியில் முன்பதிவு செய்து, உதகமண்டலத்தின் அடிவாரமான மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தோம். பயணத்தின் தொடக்க அனுபவமே இனிய அனுபவமாக அமைந்தது. மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு தொடர்வண்டி மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தது.

      மேட்டுப்பாளையத்திலிருந்து,தமிழகத்தின் பெருமையான நீலகிரி மலை இரயில் மூலம் பயணிக்கத் தொடங்கினோம். மலைகள்,கடுகள்,ஆறுகளைக் கடந்து, புகையைக் கக்கிக்கொண்டே அந்த தொடர்வண்டி சென்றது மெய்ம்மறக்கும் அனுபவமாக அமைந்தது.

     3 மணி நேரம் பயணத்திற்குப் பிறகு உதகமண்டலத்தை அடைந்தோம்.அங்கே நாங்கள் பார்த்த அரசு தாவரவியல் பூங்கா,மலர் கண்காட்சி,தொட்டபெட்டா சிகரம்,பைக்காரா நீர்வீழ்ச்சி,பைக்காரா படகு சவாரி,குன்னூர் உள்ளிட்ட இடங்கள் யாவுமே இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கக் கூடிய இடங்களாக அமைந்துள்ளன.

நயம் பாராட்டுக.

               வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய்
            வளைந்துசெல் கால்களால் ஆறே!

                                                   அயலுள ஓடைத் தாமரை கொட்டி
                                                            ஆம்பலின் இதழ்களை விரித்தாய்
                                                    கயலிடைச் செங்கண்கருவரால் வாளை
                                                             கரைவளர் தென்னையில் பாயப்
                                                    பெயரிடைப் பட்ட வானெனத் தோன்றும்
                                                            பெருங்குளம் நிறைந்து விட்டாயே! வாணிதாசன்

திரண்ட கருத்து:

வளைந்து செல்லும் கால்வாய்கள் மூலம் ஆறே வயல்வெளியில் புகுந்தாய் மணிபோன்ற கதிர்களை விளையச் செய்தாய். அருகில் உள்ள ஓடைகள் குளங்களை நிறைத்தாய். தாமரை கொட்டி, ஆம்பல் மலர்களின் இதழ்களை விரியச்செய்தாய். சிவந்த கண்களையுடைய கருமையுடைய வரால், வாளை மீன்கள் கரையில் ஓங்கி வளர்ந்த தென்னையில் பாய்ந்து விளையாடுகின்ற நீர் நிறைந்த பெருங்குளங்கள் நிலமெங்கும் நிறையச் செய்து, நிலத்தில் ஒரு வானம் இருப்பதுபோல தோன்றச் செய்கிறாய்.

மையக்கருத்து:

   இப்பாடலின் மையக்கருத்துஆறுஆகும்

எதுகை நயம்:

      செய்யுளில், அடியிலோ, சீரிலோ, இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.

சான்று: வலிடை                லிடை
             லுள்                   பெரிடை

மோனை நயம்:

       செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.

சான்று:       யலிடை – ளைந்து 

                   யலுள் – ம்பல்
                    பெயரிடை – பெருங்குளம்

இயைபு நயம்:  

      செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வருவது இயைபுத்தொடை ஆகும்.

சான்று:      விளைத்தாய் – விரித்தாய்

பண்புத்தொகைகளை இட்டு நிறைவு செய்க.
   (இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை]
விடை:

     மானாமதுரை ஒரு அழகான பேரூர். நீண்டவயல்களும் சிற்றோடைகளும் நிறைந்த அவ்ஊரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் செந்தாமரைப் பூக்கள் மலர்ந்துள்ளன. கதிரவனின் பேரொளி வீசிட சோலைப் பைங்கிளிகளின் இன்னோசை கேட்போரைப் பேரின்பம் அடையச் செய்கிறது.

வட்டத்திற்குள் உள்ளஎழுத்துகளைக்கொண்டு சொற்களை உருவாக்குக.

 அதிகாலை, கல், கலை, காலை, கான், அலை, புத்தி, கறி, தலை, கால், காலை

கட்டுரை:

தலைப்பு : சாலை பாதுகாப்பு

முன்னுரை:                                      

      சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. தினந்தோறும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு:

       சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர் பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

சாலை விதிகள்:

      சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:

v  சிவப்பு வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

v  போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது.

v  சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது.

v  வாகனஓட்டிகள் உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம் ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.

முடிவுரை:

     "சாலைவிதிகளை மதிப்போம்          

      விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம்"

     என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை