9 TH STD TAMIL FIRST MID TERM MODEL QUESTION PAPER

 

முதல் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள்

9. ஆம் வகுப்பு தமிழ்                            மதிப்பெண்கள்: 50                  கால அளவு: 1.30 மணி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:                                                                     8×1=8

1. தமிழ்விடு தூது ------ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

அ) தொடர்நிலைச் செய்யுள்  ஆ) புதுக்கவிதை  இ) சிற்றிலக்கியம்  ஈ) தனிப்பாடல்

2. பின்வருவனவற்றில் அளபெடை இடம்பெறாத தொடர் எது?

அ) குக்கூஉ எனக் குயில் கூவியது  ஆ) கொக்கரக்கோ எனச் சேவல் கூவியது.

இ) அண்ணாஅ என அழைத்தான்   (ஈ) ஓடி வா ஓடி வா

3.திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிடமொழி எது?

அ) தமிழ்  ஆ) தெலுங்கு   இ) மலையாளம்   ஈ) கன்னடம்

4 ."மாடு" - என்பதன் பொருள் என்ன?

அ) கீழே  ஆ) மேலே  இ) பக்கம்  ஈ) தொலைவு

5. மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

அ) மறுமை   ஆ) பூவரசு மரம்   இ) வளம்   ஈ) பெரிய

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க:

குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ - திறம்எல்லாம்

வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்

சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே

6. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ) நீதி நூல் திரட்டு ஆ) தமிழ்விடு தூது இ) முக்கூடற்பள்ளு ஈ) முத்தொள்ளாயிரம்

7. கொள்வார் -  இச்சொல்லிற்கான இலக்கண குறிப்பு

அ) பண்புத்தொகை ஆ) வினையாலணையும் பெயர்

இ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் ஈ) அன்மொழித்தொகை

8. பாடலில் இடம்பெற்ற எதுகைச் சொற்களைத் தேர்ந்தெடு

) குறம்-பள்ளு  ) குறம்உறவு  ) உறவுவந்து  ) திறம் - எல்லாம்

இரண்டு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:                                                           

9. தென்திராவிட மொழிகள் ஏதேனும் நான்கினை எழுதுக.

10. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

11 . உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளி க்க:                                              4×2=8 

12. பகுபத உறுப்பிலக்கணம் தருக: கொடுத்த.

13.  அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

14. பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் ------ (திகழ்)

2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் ------- (கலந்துகொள்)

15. தொடரைப் பழமொழி கொண்டு நிறைவு செய்க:

  1. கல்லாடம் படித்தவரோடு -------  

  2. கற்றோர்க்குச் சென்ற ------

16. ஒரு தொடரில் இரு வினைகளை அமைத்து எழுதுக:

       நண்பர்கள் ஒன்று ------மகிழ்ந்தனர் .  ஆசிரியர் எங்களையெல்லாம் ஒன்று ------ மகிழ்ந்தார்

17. கலைச்சொல் எழுதுக  அ. Irrigation Technology   ஆ. Tropical Zone

இரண்டு வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடையளி (வினா எண்: 20 கட்டாய வினா)    2×3=6

18. தமிழ்விடு தூது உணர்த்தும் தமிழின் சிறப்புகளை எழுதுக.

19. சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?   

20. ” தித்திக்கும் …” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

(அல்லது)

     ”காடெல்லாம்…” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

இரண்டு வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடையளி க்க:                                   

21. இன்னிசை அளபெடையைச் சான்றுடன் விளக்குக.

22. இறந்தகால இடைநிலைகள் யாவை? அவற்றுக்கான சான்றுகளை எழுதுக.

23. சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக:       அரிசி போடுகிறேன்.

விரிவான விடையளிக்க:                                                                                                            2×5=10

24. . பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.     (அல்லது)

. காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக

 

25. . . உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின், ‘கால் முளைத்த கதைகள்என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக

(அல்லது)

. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக

DOWNLOAD PDF

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை