8 TH STD TAMIL QUESTION AND ANSWERS UNIT-2 25-26

 

இயல்-2

8.ஆம் வகுப்பு தமிழ்

வினா விடைகள் (2025-2026)


இயற்கையைப் போற்றுவோம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கழுத்தில் சூடுவது

அ) தார்  ஆ) கணையாழி   இ) தண்டை  ஈ) மேகலை

2. கதிரவனின் மற்றொரு பெயர்

அ) புதன்   ஆ) ஞாயிறு  இ) சந்திரன்   ஈ) செவ்வாய்

3. 'வெண்குடை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) வெண் + குடை  ஆ) வெண்மை + குடை  இ) வெம் + குடை ஈ) வெம்மை + குடை

4. 'அங்கண்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) அம் + கண்   ஆ) அ + கண்  இ) அங் + கண்  ஈ) அங்கு + கண்

5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கொங்குஅலர்  ஆ) கொங்அலர்  இ) கொங்கலர்  ஈ) கொங்குலர்

6. அவன்-அளிபோல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) அவன் அளிபோல்  ஆ) அவனளிபோல்  இ) அவன்வளிபோல்  ஈ)அவனாளிபோல்

நயம் அறிக

1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

·        திங்களை- திங்களை

·        ங்கர்- ளித்தலான்

·        ஞாயிறு - ஞாயிறு

·        மாமழை - மாமழை

2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

·        திங்கள் - திங்கள்

·        கொங்கு ங்கண் - திங்களை

குறுவினா

1. சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?

விடை:  திங்கள், ஞாயிறு, மாமழை ஆகியவற்றை வாழ்த்தி தொடங்குகிறது. 

2. இயற்கை போற்றத்தக்கது ஏன்?

ü  பூமியில் அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளது.

ü  நாம் இயற்கையைப் பாதுகாக்காவிடில் இயற்கை தன் சமநிலை மாறி புவி வெப்பம் அடைந்து விடும்.

சிந்தனை வினா

இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

v  உலகம் ஐம்பூதங்களால் ஆனதாகும்.

v  பண்டைய கால மக்கள் இயற்கையோடு வாழ்ந்தனர்.

v  பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தனர்

v  அவர்கள் நிலத்திற்கு ஏற்ப தொழிலையும் செய்து வந்தனர்.

பட்ட மரம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மலர்களிலிருந்து வரும்-----வண்டுகளை ஈர்க்கும்.

அ) மந்தம்  ஆ) அந்தம்  இ) சந்தம்   ஈ) கந்தம்

2. மரத்தின் உடையாகக் குறிப்பிடப்படுவது ---- ஆகும்.

அ) சட்டை  ஆ) பட்டை  இ) மட்டை   ஈ) கட்டை

3. 'வருமென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) வரு+மென்று  ஆ) வரும் + மென்று  இ) வரும் என்று  ஈ) வரு + என்று

4. கிழிந்து எழில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கிழிந்துாழில்  ஆ) கிழிந்தெழில் இ) கிழிந்தொழில்  ஈ) கிழிந்தமிழ்

நயம் அறிக

பட்ட மரம்' பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

எதுகை:

குந்த-கந்த - வெந்து - ந்

மோனை:

குந்த கூரை

வெந்து – வெம்பி

இயைபு:

அடைந்தனையோ - குமைந்தனையோ

குறுவினா

1. பட்டமரம் எதனை நினைத்துக் கவலை அடைந்தது?

விடை: பட்ட மரம் தான் வெட்டப்படும் நாள் வருமென்று எண்ணி கவலை அடைந்தது.

2. பட்டமரம் எதனால் தனது அழகை இழந்தது?

விடை: பட்டமரம் வெந்து கரிய நிறம் பெற்றதால் தனது அழகை இழந்தது.

3. பட்டமரத்தின் கிளைகளுக்கு உவமையாகக் கூறப்படுவது எது?

விடை:  பட்டமரத்தின் கிளைகளுக்கு உவமையாக, கலங்கும் மனிதன் கைநீட்டி ஓலமிடும் காட்சி கூறப்பட்டுள்ளது.

சிறுவினா

ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்தவை எவை?

v  பட்ட மரம், தான் வெட்டப்படும் நாள் வருமென்று எண்ணி கவலை அடைந்தது.

v  நிழலையும் மணம் மிகுந்த மலர்களையும் தருவதற்காக மரத்தின் இலைகள் கூரைபோல் விரிந்திருந்தன.

v  அவை வெந்து கரிய நிறம் பெற்றதை எண்ணி வருந்தியது.

v  மரம் என்னும் பெயர் மாறி, கட்டை என்னும் பெயரைப் பெற்றது.

v  அதன் உடையாகிய பட்டை கிழிந்ததால் அழகு முழுவதும் இழந்தது.

v  சிறுவர்கள் அமர்ந்து குதிரை ஓட்டி விளையாடியது என்பன எல்லாம் ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்து விட்டன

சிந்தனை வினா

மரங்கள் பட்டுவிடாமல் காக்க, செய்ய வேண்டியவையாக நீங்கள் கருதுவன யாவை?

v  மழைநீர் மரத்தடியில் தேங்க வழிசெய்ய வேண்டும்.

v  மரங்களைக் காக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

v  நெகிழிப் பொருள்கள் மரத்தைச் சுற்றி தேங்காதவாறு காக்க வேண்டும்.

தமிழர் மருத்துவம் 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு _____ பயன்படுத்தினர்.

அ) தாவரங்களை  ஆ) விலங்குகளை இ) உலோகங்களை ஈ) மருந்துகளை

2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது.

அ) மருந்தின் ஆ) உடற்பயிற்சியின் இ) உணவின்  ஈ) வாழ்வின்

3. நோய்கள் பெருக மனிதன் ---  விட்டு விலகியதுதான் முதன்மைக் காரணமாகும்.

அ) வீட்டை ஆ) உணவை  இ) நாட்டை  ஈ) இயற்கையை

 4. சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும்.

அ) சுவைக்காக ஆ) சிக்கனத்திற்காக இ) நல்வாழ்வுக்காக  ஈ) உணவுக்காக

குறுவினா

1. மருத்துவம் எப்போது தொடங்கியது?

விடை: மனிதனுக்கு நோய் வந்தபோது மருத்துவம் தொடங்கியது.

2. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?

§  நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி

§  அளவான உணவு

§  சத்தான உணவு

3. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

விடை:   வேர்,பட்டை,இலை,பூ,கனி

சிறுவினா

1. நோய்கள் பெருகக் காரணம் என்ன?

விடை:

ü  இயற்கையை விட்டு விலகியமை

ü  மாறிப்போன உணவு முறை

ü  மாசு நிறைந்த சுற்றுச்சூழல்

ü  மன அழுத்தம்

2. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

விடை:

ü  சரியான உணவு, உடற்பயிற்சி, தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.

ü   விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.

ü  எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ü  கணினித்திரை யிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.

நெடுவினா

தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக

விடை:

v  தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.

v  நோயை இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை, சுவை இவற்றைக்கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத்தெளிவாக விளக்கினர்.

v  தமிழர் மருத்துவம் நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபுசார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.

சிந்தனை வினா

நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?

விடை:

ü  சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.

ü   விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள். எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதா னியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ü  கணினித்திரை யிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.

வெட்டுக்கிளியும் சருகுமானும்

வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையைச் சுருக்கி எழுதுக

v  ஒரு குறிஞ்சிப் புதரில் வாழ்ந்த பச்சை வெட்டுக்கிளி, வாயாடித்தனமாக ஒரு மாலை நேரம் தன்னைக் காண வந்த கூரன் சருகுமானை பேச அழைக்கிறது.

v  ஆனால் கூரன் பித்தக்கண்ணு என்ற உயிர்வாழ்க்கைக்கு ஆபத்தான மிருகத்திடமிருந்து தப்பி ஓடி, மரத்தடியில் ஒளிகிறது.

v  பித்தக்கண்ணு வந்து வெட்டுக்கிளியிடம் கூரனைப் பற்றி கேட்க, வெட்டுக்கிளி பரவசத்தில் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே தவறவசமாக குதிக்கிறது.

v  இதைக் கவனித்த பித்தக்கண்ணு அந்த இடத்துக்கு சென்று, புனுகுப் பூனையின் வாசனையை மட்டுமே உணர்ந்து கிளம்புகிறது.

v  உயிர் தப்பிய கூரன் வெட்டுக்கிளியின்மீது கோபம் கொண்டு எச்சரிக்கையாக 'இனிமேல் இப்படி நடந்தால் மிதித்து நசுக்கி விடுவேன்' எனக் கூறி ஒளியின்றிப் போகிறது.

v  அதன் பிறகு, வெட்டுக்கிளி எப்போதும் பயத்தில் வாழத் தொடங்கியது. அதனால் தான் இன்றும் வெட்டுக்கிளிகள் ஓரிடத்தில் நிலைத்திருக்க முடியாமல் குதிக்கின்றன.

மயங்கொலிகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. சிரம் என்பது -----  (தலை / தழை)

2. இலைக்கு வேறு பெயர்---  (தளை / தழை)

3. வண்டி இழுப்பது----  (காலை / காளை)

4. கடலுக்கு வேறு பெயர்----- (பரவை / பறவை)

5. பறவை வானில் (பறந்தது / பரந்தது)

6. கதவை மெல்லத்----- (திறந்தான் / திரந்தான்)

7. பூ ---    வீசும். (மனம் / மணம்)

8. புலியின்---- சிவந்து காணப்படும். (கன் / ண்)

9. குழந்தைகள் விளையாடினர். (பந்து / பன்து)

10. வீட்டு வாசலில் இட்டனர். (கோலம் / கோளம்)

தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக.

1. எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.

விடை: என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.

2. தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்.

விடை: தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்.

3. வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.

விடை: வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.

குறுவினாக்கள்

1. மயங்கொலி எழுத்துகள் யாவை?

v  , ,

v  , ,

v  ர, ற          ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

2. ண, , ந ஆகிய எழுத்துகள் (ஒலிகள்) பிறக்கும் முறையைக் கூறுக.

v  நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.

v  நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.

v  நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.

கற்பவை கற்றபின்

1. , , ழ ஆகிய எழுத்துகள் அமைந்த சொற்களைப் பொருளுடன் தொகுக்க.

உலவு  - நடமாடு

உளவு - வேவு

உழவு -  பயிர்த்தொழில்

கலி - பஞ்சம்

களி - மகிழ்ச்சி

கழி - நீக்கு

கலை - ஓவியம் முதலியன

களை - நீக்குதல்

கழை - மூங்கில்

அலி - திருநங்கை

அளி - கொடு

அழி - கெடு

கடிதம் எழுதுக.

விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றஉங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.

7, தெற்கு வீதி,

மதுரை-1

11-03-2022.

ஆருயிர் நண்பா,

        நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன.எனினும்,உன்னுடன் பழகிய நாட்கள் எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.விளையாட்டில் நீ பெரிய அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்பநாம் தொடக்க கல்வி பயிலும்போதே தெரிந்தது.நீ இதே போன்று பல வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இப்படிக்கு,

உனது ஆருயிர் நண்பன்

.தளிர்மதியன்.

உறைமேல் முகவரி:

     .கோவேந்தன்,

     12,பூங்கா வீதி,

     சேலம்-4

உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக:

 

நட

உண்

உறங்கு

ஆண்பால்

நடக்கின்றான்

உண்கின்றான்

உறங்குகிறான்

பெண்பால்

நடக்கின்றாள்

உண்கின்றாள்

உறங்குகிறாள்

பலர்பால்

நடக்கின்றனர்

உண்கின்றனர்

உறங்குகின்றனர்

ஒன்றன்பால்

நடந்தது

உண்டது

உறங்கியது

பலவின்பால்

நடந்தன

உண்டன

உறங்கின

தன்மை

நடப்பேன்

உண்டேன்

உறங்கினேன்

முன்னிலை

நடந்தாய்

உண்டாய்

உறங்கினாய்

படர்க்கை

நடந்தான்

உண்டான்

உறங்கினான்

இறந்த காலம்

நடந்தது

உண்டது

உறங்கியது

நிகழ் காலம்

நடக்கிறது

உண்கிறது

உறங்குகிறது

எதிர்காலம்

நடக்கும்

உண்ணும்

உறங்கும்

வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக.


1. நடக்கிறது  -    நட                    

2. போனான் -  போ                      

3. சென்றனர் - செல்                   

4. பேசினாள்   - பேசு

5. வருக     - வா     

6. தருகின்றனர்  - தா

திருக்குறள்

 

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது _____.

அ) அடக்கமுடைமை  ஆ) நாணுடைமை  இ) நடுவுநிலைமை  ஈ) பொருளுடைமை

2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் _____.

அ) வலிமையற்றவர்   ஆ) கல்லாதவர்   இ) ஒழுக்கமற்றவர்   ஈ) அன்பில்லாதவர்

3. ‘வல்லுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) வல் + உருவம்  ஆ) வன்மை+ உருவம்  இ) வல்ல+ உருவம்   ஈ) வல்லு + உருவம்

4. நெடுமை+ தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) நெடுதேர்   ஆ) நெடுத்தேர்   இ) நெடுந்தேர்   ஈ) நெடுமைதேர்

5. ‘கடல் ஓடா’ எனத்தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி _____.

அ) எடுத்துக்காட்டு உவமைஅணி ஆ)தற்குறிப்பேற்றஅணி இ) உவமைஅணி  ஈ) பிறிதுமொழிதல் அணி

குறுவினா

1. சான்றோர்க்கு அழகாவது எது?

விடை: சான்றோர்க்கு அழகாவது  நடுவுநிலைமை

2. பழியின்றி வாழும் வழியாகத்திருக்குறள் கூறுவது யாது?

விடை : தலைவர் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவருக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

3. 'வருமுன்னர்க் காவாதான்...' எனத் தொடங்கும் குறளில் உள்ள உவமை அணியை விளக்குக.

உவமையணி:

ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் இடம்பெற்று உவம உருபு வெளிப்படையாக வந்தால் உவமையணி ஆகும்.

உவமை:  நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் நெருப்பினால் அழிந்துவிடும்.

உவமேயம்:  பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கையும் அழியும்.

உவம உருபு : போல

4. பிறிதுமொழிதல் அணி என்பது யாது?

பிறிது மொழிதல் அணி:

உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல்

அணி எனப்படும்.

எ.கா.

கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

விளக்கம்:

காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட, யானைக்குக் குறிவைத்துத் தவறிய மூவலை ஏந்துவது பெருமை தரும் என்னும் உவமையின் மூலம் பெரிய முயற்சியே பெருமைதரும் என்னும் கருத்தை விளக்குவதால் இக்குறளில் பிறிதுமொழிதல் அணி வந்துள்ளது.

திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக.

1. தக்கார் தகவிலரென்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

தக்கார்  தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால்  காணப்  படும்.

2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்கமுற்று மிடங்கண்டபின் அல்லது.

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல்  லது.

கோடிட்டஇடத்தை நிரப்புக.

1. வலியில் நிலைமையான் வல்லுருவம்  பெற்றம்

    புலியின்தோல்  போர்த்துமேய்ந்  தற்று.


 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை