8.ஆம் வகுப்பு தமிழ்
வினா
விடைகள்
(2025-2026)
இயல்-5 |
வளம்
பெருகுக
சரியான
விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
தோட்டத்தில் தம்பி ஊன்றிய __________ எல்லாம்
முளைத்தன.
அ) சத்துகள் ஆ) பித்துகள் இ) முத்துகள் ஈ) வித்துகள்
2.
என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ___________ பெருகிற்று.
அ) காரி ஆ) ஓரி இ)வாரி ஈ) பாரி
3.
‘அக்களத்து‘ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.
அ) அ + களத்து ஆ) அக் + களத்து இ) அக்க+ அளத்து ஈ) அம் + களத்து
4.
கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.
அ) கதிரென ஆ) கதியீன இ) கதிரீன ஈ) கதிரின்ன
குறுவினா
1. பயிர்கள் வாட்டமின்றிக்
கிளைத்து வளரத்தேவையானது யாது?
விடை : பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து
வளரத்தேவையானது மழை
2. உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?
விடை : உழவர்கள்
அறுவடை செய்யும் காலத்தில் ஆரவார ஒலி எழுப்புவர்.
சிறுவினா
உழவுத்தொழில் பற்றித்தகடூர்
யாத்திரைகூறுவன யாவை?
ü சேரனின் நாட்டில் வருவாய் சிறந்து விளங்குகிறது.
ü அகலமான நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளை
விடுகின்றன.
ü தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள்
வாட்டம் இன்றி கிளைத்து வளர்கிறது.
ü செழித்த பயிர்கள் பால் முற்றிக் கதிர்களைப்
பெற்றிருக்கின்றன. அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும்
செல்வர்களின் களத்தில் நெற்போர் காவல் இல்லாமலே இருக்கின்றது.
ü நெற்போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும்
(எடுக்கும்) காலத்தில் உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சித் தம
பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய, சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு புது வருவாயுடன்
சிறந்து விளங்குகின்றது.
சிந்தனைவினா
உழவுத்தொழில் சிறக்கஇன்றியமையாதனவாக
நீங்கள் கருதுவன யாவை?
விடை:
உழவுத் தொழில் - உயிர் தொழில்
ü
நாகரிகம்' என்ற பெயரில் இன்று யாரும்
உழவுத் தொழில் செய்ய முன்வருவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒருவர் கட்டாயம்
உழவுத் தொழில் செய்தல் வேண்டும்.
ü
உழவுத் தொழில், அரசுப் பணிகளில் ஒன்றாகச்
சேர்க்கப்பட வேண்டும்
ü
உழவுத் தொழிலில்
சிறந்து விளங்கும் உழவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளும் பரிசுத் தொகையும் கொடுக்க
வேண்டும்.
கோணக்காத்துப்
பாட்டு
சரியான
விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வானில் கரு _____ தோன்றினால் மழைபொழியும் என்பர்.
அ) முகில் ஆ) துகில் இ) வெயில் ஈ) கயல்
2. ‘விழுந்ததங்கே’ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) விழுந்த+ அங்கே ஆ)
விழுந்த+ ஆங்கே இ) விழுந்தது + அங்கே ஈ) விழுந்தது + ஆங்கே
3. ‘செத்திறந்த’ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) செ+ திறந்த ஆ) செத்து + திறந்த இ) செ+ இறந்த ஈ) செத்து + இறந்த
4. பருத்தி + எல்லாம் என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) பருத்திஎல்லாம் ஆ) பருத்தியெல்லாம் இ) பருத்தெல்லாம் ஈ) பருத்திதெல்லாம்
குறுவினா
1. கப்பல் கவிழ்ந்ததற்குக்
காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?
விடை : பெருமழையும்,
சுழல்காற்றும்.
2. புயல்காற்றினால் தொண்டைமான்
நாட்டில் ஏற்பட்டஅழிவு யாது?
விடை: புயல்காற்றினால்
தொண்டைமான் நாட்டில் மரங்கள் யாவும் விழுந்தன.
3.
கொல்லிமலைபற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?
விடை: கொல்லிமலையில்
சித்தர்கள் வாழ்ந்ததாகப் பாடல் கூறுகிறது.
நயம் அறிக
'கோணக்காத்துப் பாட்டு' பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை,
மோனை, இயைபுச் சொற்களை எடுத்து
எழுதுக.
எதுகை:
1. தெத்துக்காடு - செத்திறந்த
2. சிங்காரமாய் - மங்காத
3. சம்பிரமுடன் - கொம்புசுத்தி
4. சின்ன - பின்னமாய்
5. ஆர்க்காடு – மார்க்கமான
மோனை:
1. உருமம் - உழன்று
2. ஆரங்கள் - அடியோடே
3. மங்காத - மாளாத
4. தாரங்களும் - தானடந்து
5. வளர்ந்தோங்கும் - வாகுடனே
6. மார்க்கமான -மயங்கி
இயைபு:
1. வின்னமாச்சுதே –
போச்சுதே
2. பின்னமாச்சுதே -
கவிழ்ந்ததே - காத்தடிச்சுதே
சிறுவினா
1. புயல் காற்றினால் மரங்களுக்கு
ஏற்பட்டநிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
·
வாங்கல் என்றும் ஊரில்
தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின,
·
தொண்டைமான் மரங்கள்
அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.
2.
கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்டபாதிப்புகள் யாவை?
·
மேகங்களால் உருவான காற்று
வேகமாக அடித்தது
·
பெரிய வீடுகளின்கூரைகள்
எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன.
·
அழகிய சுவர்களை உடைய
மாடி வீடுகள் அடியோடு விழுந்தன
சிந்தனைவினா
இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச்
செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
v எரிமலை வெடிக்கும் சூழலில், அருகில் வசிப்போர், பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தங்குதல் வேண்டும்.
v காட்டுத் தீ ஏற்படும் குழலில், அருகில் வசிப்போர்
நகர்ப்புறத்தில் வந்து தங்குதல் வேண்டும்
v கனாமி ஏற்படும் போது,. கடலை விட்டு பல கிலோ மீட்டர்
தூரத்திற்கு அப்பால் சென்று தங்குதல் வேளர்டும்.
கொங்குநாட்டு
வணிகம்
சரியான
விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
சேரர்களின் தலைநகரம் _____.
அ) காஞ்சி ஆ) வஞ்சி இ) தொண்டி ஈ) முசிறி
2.
பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது _____.
அ) புல் ஆ) நெல் இ) உப்பு ஈ) மிளகு
3.
வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்தமாவட்டம்
_____.
அ) நீலகிரி ஆ) கரூர் இ) கோயம்புத்தூர் ஈ) திண்டுக்கல்
கோடிட்டஇடங்களைநிரப்புக.
1.
‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் சேலம்
2.
சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்றஊர் சின்னாளப்பட்டி
3.
சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது.
4.
பின்னலாடைநகரமாக திருப்பூர் விளங்குகிறது.
குறுவினா
1. மூவேந்தர்களின்
காலம் குறித்து எழுதுக,
·
வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில்
மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.
·
இதனால் இவர்கள் பல
நெடுங்காலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை அறியலாம்.
2. சேர
நாடு – குறிப்பு வரைக
விடை:
·
நாடு : குடநாடு
·
தலைநகர்: வஞ்சி
·
ஆறு : பேரியாறு
·
கொடி: விற்கொடி
·
பூ: பனம்பூ
3. 'தமிழ்நாட்டின்
ஹாலந்து' என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
விடை:
·
'தமிழ்நாட்டின்
ஹாலந்து' என்று அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல்.
·
மலர் உற்பத்தியில்
முதலிடம் வகிப்பதால், தமிழ்நாட்டின்
ஹாலந்து என்று போற்றப்படுகிறது.
சிறுவினா.
1. கரூர்
மாவட்டம் பற்றிய செய்திகளைச் கருக்கி எழுதுக.
v கரூர் நகரத்திற்கு, 'வஞ்சிமா நகரம்' என்ற பெயரும் உண்டு.
v கிரேக்க அறிஞர் தாலமி கரூரைத் தமிழகத்தின்
முதன்மை உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
v நெல், சோளம்,
கேழ்வரகு, கம்பு, கரும்பு
போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன. கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன.
கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகக் கரூர் விளங்குகிறது.
நெடுவினா.
1. கொங்கு
நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் குறித்து எழுதுக
உள்நாட்டு வணிகம் :
·
சேர நாட்டில் உள்நாட்டு
வணிகமும் நன்கு வளர்ச்சியுற்று இருந்தது.
·
மக்கள் தத்தம்
பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர்.
·
நெல்லின் விலையைக்
கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர், உப்பும்
நெல்லும் ஒரே மதிப்புடையனவாக
இருந்தன
வெளிதாட்டு வணிகம்:
·
முசிறி சேர்களின் சிறந்த
துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது.
·
இங்கிருந்து நான் மற்ற
நாடுகளுக்கு மிளகு, முத்து,
யானை, தத்தங்கள், மணி
போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
·
சித்திர வேலைப்பாடுகள்
அமைத்த ஆடைகள் பவளம், செம்பு,
கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன.
சிந்தனை
வினா:
1. நாட்டு மக்களின்
நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து வேறு எவையெல்லாம் உதவும் என்று நீங்கள்
கருதுகிறீர்கள்?
·
நாட்டு மக்களின் நாகரிக
நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து ஊடகங்கள் முக்கியப் பங்காற்றும்
·
மொழிபெயர்ப்பு
முக்கியத்துவம் பெற வேண்டும்
· அறிவியல் சார்ந்த படைப்புகளை மிகுதியாக உருவாக்க வேண்டும்.
காலம்
உடன் வரும்
1. காலம் உடன் வரும்'
- கதையைச் சுருக்கி எழுதுக.
முன்னுரை:
"காலம்
உடன் வரும்" என்ற கதை நெசவுத் தொழிலில் உள்ள கஷ்டங்களையும். நெசவாளர்களின்
வறுமை நிலையையும் சித்தரிக்கிறது.
சுப்ரமணியத்தின் கவலை:
அனந்திகா
நிறுவனத்திற்குத் துணி அனுப்பும் வெள்ளக்கோயில் தினேஷ் துணியகத்தில் தறி நெய்ய ஆள்
இல்லாததால் சுப்ரமணியம் கவலைப்படுகிறார். மாணிக்கம் ஓட்டும் தறியில் பாவு
தீர்ந்துவிட்டால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்.
ரகுவின் உதவி!
நண்பர் ரகு, பாவு இணைப்பவர் யாராவது
இருப்பார்கள் என்று கூறி, மாயழகுவின் மனைவி ஒச்சம்மா பாவு
இணைக்கும் என்று சுப்ரமணியத்திற்கு உதவி செய்கிறார்.
மாயழகும் ஒச்சம்மாவும்:
ஒச்சம்மாள்
கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவள். திருமணத்திற்குப் பிறகு வெள்ளக்கோவிலில் தறி வேலை
செய்து தன் குழந்தைகளைப் படிக்க வைக்கிறாள். தறி ஓட்டுவதோடு, மற்ற தறி வேலைகளையும் கற்று
தேர்ந்தவள். I
பாவு பிணைத்தல்:
ரகு அனுப்பியதால், ஒச்சம்மாள் கைக்குழந்தையுடன்
வந்து மாணிக்கத்தின் தறியில் பாவு இணைக்கிறாள். குழந்தை விழித்தாலும், தூங்க வைத்தபடியே தன் வேலையைச் செய்கிறான். சுப்ரமணியம் இரட்டைச் சம்பளம்
கொடுத்து அவளை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.
முடிவுரை:
இக்கதை, நெசவுத் தொழிலாளர்கள் வறுமையின்
காரணமாக இரவு பகல் பாராமல் வேலை செய்வதை உணர்த்துகிறது
வினையால் அமையும் தொடர்கள்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக
1. எழுவாய் ஒரு விளையைச் செய் அது
அ) செய்யினை ஆ)
செயப்பாட்டு வினை இ) தன்வினை ஈ) பிறலினை
2. கரையில் சேர்ப்பான்' என்பது
அ) செய்யினை ஆ)
செயப்பாட்டு வினை இ) தன்வினை ஈ) பிறவினை
3. பாடல் இலக்கியாவால்
பாடப்பட்டது.' என்பது
அ) செய்விளை ஆ)
செயப்பாட்டு விளை இ) தன்வினை ஈ) பிறவினை
பொருத்துக
1.ஆடினாள் - ஆ) தன்வினை
2. திருத்தினான் - ஈ) பிறவினை
3 புத்தகம் படிக்கிறேன் - அ) செய்வினை
4 கட்டுரை அகிலனால் எழுதப்பட்டது
பின்வருவனவற்றுள்
செய்வினைத் தொடர்களைச் செயப்பாட்டுவிளைத் தொடர்களாகவும் செயப்பாட்டுவினைத்
தொடர்களைச் செய்வினைத் தொடர்களாகவும் மாற்றுக
1. மாணவர்கள் வகுப்பைத் தூய்மை
செய்தனர்
விடை: வகுப்பு மாணவர்களால் தூய்மை செய்யப்பட்டது.
2. பழம் அணிலால் கொறிக்கப்பட்டது.
விடை: அணில் பழத்தைக் கொறித்தது.
3. ஆசிரியர் இலக்கணம்
கற்பித்தார்.
விடை: இலக்கணம் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது.
4. ஓவியம் குமரனால் வரையப்பட்டது.
விடை: குமரன் ஓவியம் வரைந்தான்.
சிறுவினா:
1. தன்வினை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
விடை: எழுவாய்
ஒரு வினையைச் செய்தால் அது தனியினை ஆகும். இதில் செயலின் பயன் செய்பவரைச் சேரும். எ.கா. செல்வி கடலைக் கண்டாள்.
2. எற்றினாள்" என்பது எவ்வகை
வினை என்பதை விளக்குக.
விடை: எழுவாய்,
ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிறவினை ஆகும். ஏற்றினான் என்பது
பிறரைக் கொண்டு ஏற்றுதல் என்னும் பொருளில் வருவதால் இஃது பிறவினை ஆகும்.
3. செய்வினை, செயப்பாட்டு வினையாக மாறும்போது நிகழும் மாற்றங்கள் யாவை?
·
செயப்படுபொருள், எழுவாய், பயனிலை
என்னும் வரிசையில் அமையும்.
·
எழுவாயோடு 'ஆல்' என்ற
மூன்றாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும்.
·
பயனிலையோடு 'படு, பட்டது'
போன்ற துணை வினைகளுள் ஒன்று சேர்ந்து வரும்.
கற்பவை கற்றபின்
காலர் உடன் வரும் கதையில் இடம்பெற்றுள்ள
செய்வினைத் தொடர்களையும் செயப்பாட்டுவினைத் தொடர்களையும் எடுத்து எழுதுக
செய்வினை:
1. ஒச்சம்மா பாவு பிணைத்தாள். 2. மாயழகு கதவைத் திறந்தான்.
செயப்பாட்டு வினை:
1. பாவு ஒச்சம்மாவால்
பிணைக்கப்பட்டது. 2. கதவு மாயழகால் திறக்கப்பட்டது.
மொழியை ஆள்வோம்
சரியான
மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கோழி
(கூவும் / கொக்கரிக்கும்) விடை: கொக்கரிக்கும்.
2 பால் (குடி/பருகு) விடை: பருகு
3. சோறு
(தின் உண்)
விடை: உண்
4 .பூ (கொய்/பறி) விடை: கொய்
5. ஆ
(நிரை / மந்தை)
விடை: நிரை.
மரபுப்
பிழையை நீக்கி எழுதுக.
விடை:
சேவல் கூவும் சத்தம் கேட்டுக்கயல்கண் விழித்தாள். பூக்கொய்ய
நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள் அங்கு மரத்தில் குயில் கூவிக்
கொண்டிருந்தது. பூவைக் கொய்ததுடன் தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக்கொண்டு வீடு
திரும்பினாள் அம்மா தந்த பாலைப் பருகிவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
பின்வரும் மரபுத்தொடர்களைப் பொருளோடு
பொருத்துக
1. ஆயிரங்காலத்துப்
பயிர் - ஈ) நீண்டகாலமாக இருப்பது.
2. கல்லில் நார்
உரித்தல் - அ) இயலாத செயல்.
3. கம்பி நீட்டுதல்
- உ) விரைந்து வெளியேறுதல்.
4. கானல்நீர் - இ) இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது.
5. கண்ணை மூடிக்கொண்டு
- ஆ) ஆராய்ந்து பாராமல்
பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில்
அமைத்து எழுதுக
1. வாழையடி வாழையாக
என் குடும்பம் உழவுத் தொழிலை வாழையடி வாழையாகச் செய்து
வருகிறது.
2. முதலைக்கண்ணீர்
காவலரிடம் பிடிபட்ட திருடன் முதலைக் கண்ணீர் வடித்தான்.
3. எடுப்பார்
கைப்பிள்ளை
மணி அனைவருக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறான்.
கட்டுரை: உழவே உயர்வு
முன்னுரை:
உழவுத் தொழில் என்பது
உலகில் உள்ள தொன்மையான தொழில்களில் ஒன்று. "வளமுடைய நாடு எனில் விவசாயம்
செழிக்கும் நாடு" என்பது பழமொழி. உணவு இல்லாமல் மனிதன் வாழ முடியாது. அந்த
உணவை அளிக்கும் உன்னதமான தொழில் உழவுத் தொழிலாகும்.
உழவின்
முக்கியத்துவம்:
மனித
வாழ்க்கைக்கு அடிப்படை தேவையான உணவு, காய்கறி,
தானியம், பழம் ஆகிய அனைத்தும் உழவின்
வாயிலாகவே கிடைக்கின்றன. ஒரு நாடு உணவுப் பாதுகாப்பை பெற வேண்டுமானால், உழவுத்தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அதனால்தான்
உழவர் "உணவுத் தந்தை" எனப்
புகழப்படுகிறார்.
இயற்கையுடன்
இணைந்த தொழில்:
உழவுத்
தொழில் இயற்கையை சார்ந்தது. இது மழை, மண்,
வெப்பநிலை ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையதாகும். அதனால், உழவர் பசுமை சூழலைக் காப்பாற்றவும், சுற்றுச்சூழலின்
சமநிலையை பராமரிக்கவும் பெரும் பங்கு வகிக்கிறார்.
புதிய
மாற்றங்கள்:
இன்றைய
காலகட்டத்தில் பல நவீன கருவிகள், இயந்திரங்கள்,
தொழில்நுட்பங்கள் உழவுத் தொழிலில் பயன்படுத்தப்பட்டு, உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
முடிவுரை:
உழவுத்
தொழில் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. இது நம் நாட்டின் முதன்மைத் தொழிலாக
இருந்துவந்துள்ளது. உழவுத் தொழிலின் சிறப்பை மாணவர்கள் புரிந்து கொண்டு,
அந்நெறியில் பங்களிக்கத் தயாராக வேண்டும். நம் உழவர்களின் பணி
எப்போதும் பாராட்டுக்குரியது.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி