10.ஆம் வகுப்பு தமிழ்
உரைநடை நெடுவினா
10.ஆம் வகுப்பு தமிழ்
உரைநடை நெடுவினாக்கள் (2025-2026)
1.
நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று
விளக்குக.
நாட்டுவளமும் சொல்வளமும்
முன்னுரை:
ஒரு நாட்டின் வளமும், அங்கு பேசப்படும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் தேவநேயப்
பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது.
தேவநேயப்பாவாணர்:
தமிழ் மொழியின் பழமையை ஆராய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார். தமிழ்ச் சொல்வளம்
பற்றிய அவரது கருத்துகள் தமிழ் மொழியின் பெருமையை மிகுதிப்படுத்துகின்றன.
சொல்வளத்திற்கான சில சான்றுகள்:
ü ஆங்கிலத்தில்
இலையைக் குறிக்க “LEAF” என்ற ஒரே வார்த்தை
பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ பலவகைப் பெயர்களாக அழைக்கப்படுகின்றன.
ü விளை பொருட்களின்
மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு.
ü பயிர்களின் பல்வேறு பகுதிகளைக் குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ்ச் சொற்கள் உள்ளன .
ü எண்ணற்ற நெல்
வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன.
ü சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும்
முடிவுரை:
சொல்வளம் நிறைந்த மொழியானது
அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன் பொருளை
கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும் உணர்த்துகிறது
எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி அறியலாம்
2.
காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
காற்று மாசுபாட்டைத்
தடுக்கும் வழிமுறைகள்
முன்னுரை:
நாம் தினமும் சுவாசிக்கின்ற
காற்று சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஆனால் இப்போது காற்று பல
இடங்களில் மாசுபடுகிறது. இதனால் மனிதர்களும்,
விலங்குகளும், மரங்களும்
பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த காற்று மாசுபாட்டை தடுக்க
நாம் என்ன செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
பசுமை பரப்புகளை
அதிகரித்தல்:
அதிகமாக மரங்களை நடுவது
காற்று மாசுபாட்டை குறைக்கும் முக்கியமான வழியாகும். மரங்களை வெட்டாமல், புதிய மரஞ்செடிகளை
நட்டு வளர்ப்பதே இதற்கான சிறந்த வழியாகும்.
பொதுப்
போக்குவரத்தை பயன்படுத்துதல்:
·
ஒவ்வொருவரும்
தனித்தனியாக வாகனங்களை பயன்படுத்துவது காற்று மாசுபாட்டை அதிகரிக்கச் செய்யும்.
·
இதற்குப்
பதிலாக பேருந்து,
ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலமாக
காற்று மாசுபாட்டைப் பெருமளவு குறைக்கலாம்.
எரிபொருள் சிக்கனமுடைய வாகனங்கள்:
·
மின்சார
வாகனங்கள் வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம்.
·
பெட்ரோல், டீசல் வாகனங்களைப்
பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது
தொழிற்சாலைகளில்
கட்டுப்பாடுகள்:
ü தொழிற்சாலைகள்
வெளியிடும் வாயுக்களைச் சுத்திகரித்து வெளியிட வேண்டும்.
ü அரசு விதிகளை கடைப்பிடிக்கச்
செய்ய வேண்டும்.
ü பசுமை
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தானாகவே காற்று மாசுபாடு குறையும்.
முடிவுரை:
காற்று மாசுபாட்டைத்
தடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையுமாகும். இயற்கையைப் பாதுகாக்கும்
முயற்சியில் நாம் ஒட்டுமொத்தமாக செயல்பட்டால் மட்டுமே, சுத்தமான
காற்றையும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற முடியும். இன்று செயல் படுத்துங்கள்,
நாளைக்கு நலமாக இருப்போம்!
3.
சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன்
விளக்குக.
தமிழர்களின் விருந்தோம்பல்
முன்னுரை:
தமிழர்கள், முன்பின்
அறியாத முதியவர்களே விருந்தினர் என்பதைத் தங்கள் வாழ்வில்
பின்பற்றி வாழ்ந்தனர். சங்க கால தமிழர்களின் விரும்பபோல் பண்பிற்குச் சில
சான்றுகளை இங்கே காண்போம்.
தனித்து உண்ணாமை:
தனித்து உண்ணாமை
என்பது தமிழன் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும் பிறருக்குக்
கொடுக்கும் நல்லோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது என்று தமிழர்கள் எண்ணினர்.
விருந்தோம்பலுக்கு நேரம்,காலம் இல்லை:
நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும்
நல்லியல்பு தமிழருக்கு உண்டு. இதனை,
”அல்லில் ஆயினும்
விருந்து வரில் உவக்கும்”
என்று நற்றிணை குறிப்பிடுகிறது.
வறுமையிலும் விருந்தோம்பல்:
ü
தமிழர்
வறுமையிலும் ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர்.
ü
விதை
நெல்லைக் குற்றியெடுத்து விருந்தளித்தனர்.
ü
வாளைப்
பணையம் வைத்து விருந்தளித்தனர்.
ü
கருங்கோட்டுச்
சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தனர்.
விருந்தை எதிர்கொள்ளும் தன்மை:
வீட்டில் பலரும் நுழையும் அளவிற்கு
உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர் உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும்
உள்ளீர்களா என்று கேட்டனர்.
முடிவுரை:
பண்டைத் தமிழர் இல்லங்களிலும்
உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு செடித்திருந்தது காலம் தோறும் தமிழர்கள்
அடையாளமாக விளங்கும் உயர் பண்பான விருந்தோம்பலை போற்றி பெருமிதம் கொள்வோம்.
4.
உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை
அழகுற விவரித்து எழுதுக.
வரவேற்பு:
எங்கள்
இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக வருக என மகிழ்ச்சியாக வரவேற்றோம்.அவர்கள்
அமர்வதற்கு இருக்கையைச் சுத்தப்படுத்திக் கொடுத்தோம். வந்தவர்களுக்கு
முதலில் குடிக்க நீர் தந்தோம்.
கலந்துரையாடல்:
நாங்கள் அனைவரும்
காலை உணவு உண்டபின்,
வரவேற்பரையில் அமர்ந்து ஒவ்வொரு உறவுகளைப் பற்றியும் நலம்
விசாரித்தோம். நலம் விசாரித்ததிலிருந்து எங்களுக்கும் எங்கள் உறவினருக்கும் இடையே
உள்ள ஆழமான அன்பு, பாசம் தெரியவந்தது.
விருந்து உபசரிப்பு :
வந்தவர்களுக்குச்
சுவையான உணவு வகைகளை வாழை இலையில் பரிமாறினோம். அவர்கள் உண்ணும்வரை அருகில்
இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து வழங்கிக் கவனித்தோம்.
நகர்வலம்:
விருந்தினருக்கு
சிறப்பான மதிய உணவு அளித்த பிறகு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை
வேளையில் எங்கள் ஊரைச் சுற்றி காண்பித்தோம் எங்கள் ஊரின் சிறப்புகள் அருமை
பெருமைகளை அவருக்கு மணமகள் வகையில் எடுத்துக் கூறினோம்
பிரியா விடை :
இரவு விருந்து
முடிந்ததும் அவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதாகக் கூறினர். எங்களுக்குப் பிரிய
மனமில்லாமல் அவர்களுடன் பேருந்து நிறுத்தம்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தோம்.
5. தமிழின்
இலக்கிய வளம்- கல்வி மொழி - பிறமொழிகளில்
உள்ள இலக்கிய வளங்கள்- அறிவியல் கருத்துகள்- பிற துறைக் கருத்துகள் - தமிழுக்குச் செழுமை. மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு
செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற
தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
முன்னுரை :
'ஒரு மொழியில்
உணர்த்தப்பட்டுள்ளதை வேறொரு மொழியில் வெளியிடுவதே மொழிபெயர்ப்பு' என்கிறார் மணவை முஸ்தபா. அம்மொழிபெயர்ப்புக் கல்வியின் தேவையை இங்கு
காண்போம்.
மொழிபெயர்ப்பு
இலக்கியங்கள்:
·
சின்னமனூர்ச்
செப்பேடு மூலம் சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு இருந்ததை அறியலாம்.
·
வடமொழியில்
வந்த இராமாயண,
மகாபாரத செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.
·
பெருங்கதை, சீவகசிந்தாமணி,
உள்ளிட்டவை வடமொழி கதைகளைத் தழுவி எழுதப்பட்டவை
மொழிபெயர்ப்பின் அவசியமும்
பயனும்:
·
மொழிபெயர்ப்பு
எல்லா காலகட்டங்களிலும் தேவையான ஒன்று.
·
மொழிபெயர்ப்பு
இல்லாவிடில் சில படைப்பாளிகள் உருவாகி இருக்க முடியாது.
·
ஜெர்மன்
மொழியில் மொழிபெயர்ப்பு மூலம் சேக்ஸ்பியர் அறிமுகமானார்.
·
ரவீந்திரநாத்
தாகூர் கூட மொழிபெயர்ப்பின் மூலமே சிறப்புப்பெற்றார்.
மொழிபெயர்ப்புக் கல்வி:
·
மொழிபெயர்ப்பைக்
கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவைப்
பெறலாம்,.
·
மனிதவளத்தை
நாமே முழுமையாகப் பயன்படுத்தலாம்
·
வேலைவாய்ப்புத்
தளத்தை உருவாக்கி பயன் பெறலாம்.
முடிவுரை :
'உலக நாகரிக வளர்ச்சிக்கும்
மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் 'எனும்
மு.கு ஜகந்நாதராஜா கருத்தினை நினைவில் நிறுத்தி செயல்படுவோம்.
6. போராட்டக் கலைஞர்
பேச்சுக் கலைஞர் நாடகக் கலைஞர் திரைக் கலைஞர் இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய
தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
முன்னுரை:
"முத்தமிழ்
அறிஞர்" "சமூகநீதி காவலர்" என்றெல்லாம் மக்களால் போற்றப்பட்டவர்
கலைஞர் கருணாநிதி
ஆவார். இவருடைய பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
போராட்டக் கலைஞர்
தன் பதினான்காம் வயதில்,
தாம் எழுதிய, "வாருங்கள் எல்லோரும்
போருக்குச் சென்றிடுவோம்!" என்று தொடங்கும் பாடலை முழங்கியபடி இந்தித்
திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித் திருவாரூர் வீதிகளில் ஊர்வலகம்
சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள் இருந்த கலைத்தன்மையை வளர்த்தது.
பேச்சுக் கலைஞர்:
v
மேடைப்பேச்சினில்
பெருவிருப்பம் கொண்ட கலைஞர்,
"நட்பு" என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும்
பாராட்டப்பட்டது.
v
பள்ளிப்
பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க பல
அமைப்புகளைத் தொடங்கினார்.
நாடகக் கலைஞர்:
v
தமக்கே
உரிய தனிநடையால் தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார்.
v
அவர்
எழுதிய முதல் நாடகமான பழநியப்பன் உட்பட பல நாடகங்களை எழுதினார்.
திரைக் கலைஞர்
v
எம்ஜிஆர்
முதன்முதலாக நடித்த”ராஜகுமாரி”படத்திற்கான முழு வசனத்தையும் கலைஞர்
எழுதினார்
v
சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி படம்
முதலான படத்திற்கும் கலைஞர் கதை வசனம் எழுதினார்
இயற்றமிழ்க் கலைஞர்
கலைஞர்
பல்வேறு புதினங்களையும், நாடகங்களையும் எழுதினார்
முடிவுரை
தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான
பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர் நெஞ்சில்
என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர்.
7.
நாட்டு விழாக்கள்- விடுதலைப் போராட்ட வரலாறு- நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு-குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க
அளவில் 'மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்' என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
முன்னுரை:
எதிர்காலத்தில்
நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உரிய நற்பண்புகளை மாணவர்கள்
இளமை முதலே பெற வேண்டும். இத்தகைய நற்பண்புகளைப் பெற்று மாணவர்கள் சிறந்துவிளங்க நாட்டுவிழாக்கள் துணைபுரிகின்றன.
அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நாட்டு விழாக்கள்:
·
விடுதலை நாள் விழாவும், குடியரசு நாள் விழாவும் விழாக்கள் அனைத்திலும் சிறந்தவையாகும்.
·
ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச்சென்ற நாள் விடுதலைநாள் விழாவாக ஆகஸ்ட்
15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வரலாறு:
·
நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள்,
குறிப்பாக ஆங்கிலேயர்கள்
பெரும்பான்மையான சிற்றரசுகளைக் கைப்பற்றி நாட்டை ஆளத்தொடங்கினர்.
·
இது பல இந்தியத் தலைவர்களை கவலைகொள்ளச் செய்தது.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக
போராடத் தூண்டினர்.
மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:
·
மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும்.
·
அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம்
தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
முடிவுரை:
என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க,
நாட்டின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. மாணவர் நாட்டு முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானது.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி