10.ஆம் வகுப்பு தமிழ்
விரிவானக்கட்டுரைகள் (2025-2026)
1.
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்
தொடர்களும் ஒளிக்குறிப்புச் சொற்களும் புயவில், தோணி
படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
புயலிலே ஒரு தோணி
முன்னுரை:
ப.சிங்காரம் இந்தோனேசியாவில்
இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது ஆசிரியரின் நேரடி அனுபவங்களோடு
கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி. அதைப்பற்றி இங்கு காண்போம்
விடாது பெய்த மழை:
·
கடுமையான வெயில் மறைந்தது,
·
மேகக் கூட்டங்கள் திரண்டு
மழை பெய்ய தொடங்கியது.
·
மீண்டும் மீண்டும் மழை
பெய்தது. அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
தள்ளாடிய கப்பல் (தொங்கான்):
· மழை பெய்வது அதிகரித்தது.
· பலகை அடைப்புக்குள் இருந்து கப்பித்தான் “ஓடி வாருங்கள், இங்கே ஓடி வாருங்கள்! என்று கத்துகிறான்.
· இடுக்குகளில் முடங்கிக்கிடந்த உருவங்கள்
தலைதூக்கின.
· கப்பல் தள்ளாடியது.மலைத்தொடர் போன்ற அலைகள்
தாக்கின..
பயணிகளின் தவிப்பு:
·
கப்பித்தான் மேல்தட்டு
வந்து வானையும் கடலையும் ஒரு முறை சுற்றிப்பார்த்தார்.
·
பாண்டியன் நிலவரத்தைக்
கேட்டான்.
·
கப்பித்தான் இரண்டு
நாட்களில் கரையை பார்க்கலாம் இனி பயமில்லை என்றார்.
கரையைக் காணுதல்:
· ஐந்தாம் நாள் மாலையில் சுமார் அரை மணி
நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகின் அருகில் விளக்குகள் தென்பட்டன.
·
அடுத்த நாள் கப்பல்
பினாங்கு துறைமுகத்தை அடைந்தது.
முடிவுரை:
. புயலிலே ஒரு தோணி கதையில்
இடம்பெற்றுள்ள வர்ணனைகளும் ,அடுக்குத்
தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி
படும்பாட்டை தெளிவுற விளக்கின.
2.
'பிரும்மம்’ கதை உணர்த்தும் பிற உயிர்களைத்
தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை
விவரிக்க.
பிரும்மம்
முன்னுரை:
குடும்ப உறுப்பினர்கள்
இணைந்து நட்டு வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப்
பிணைந்துவிட்டது என்பதைப் பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக்
காட்சிப்படுத்துகிறது.
புதிதாகக்
கட்டிய வீடு:
இச்சிறுகதையில் வரும்
குடும்பத்தினர் புதிதாக வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே
கிடந்த சிறிய இடத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும்
தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர்.
அப்பாவின்
முடிவு:
·
குடும்பத்தின்
தலைவரான அப்பா அந்த இடத்தில் முருங்கையை
நட்டு வளர்க்கலாம் என்று சொன்னார்.
·
இரண்டு
நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு வந்து
அவர் நட்டார்.
முருங்கை
வீட்டின் அங்கமானது:
v நாளுக்கு நாள் முருங்கையின்
வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தனர் குடும்பத்தினர்
v அது படிப்படியாக கிளை, இலை,
காய் போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
மீண்டெழுந்த
முருங்கை:
ஒரு நாள் காற்று பலமாக
வீசியதால் முருங்கை அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை
அடைந்தனர். சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து
முருங்கை துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது.
முடிவுரை:
முருங்கை என்பது வெறும்
மரமாக குடும்பத்தார் இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும்
வீடாகவும் திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கும் பண்பினை
விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல.
3.
அன்னமய்யா
என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்வபுரத்து
மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
முன்னுரை:
பசித்த
வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற மனிதநேயம்
கிராமத்து விருந்தோம்பல். அந்நிகழ்வை நமக்கு கோபல்லபுரத்து
மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற
கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.
அன்னமய்யாவும், இளைஞனும்:
·
அன்னமய்யா இளைஞனின் முகம்
பசியால் வாடி இருப்பதை உணர்ந்து கொண்டார்.
·
அந்த இளைஞரிடம் போய் அருகில் நின்று பார்த்தார்.
·
அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.
·
அன்னமய்யா அருகிலிருந்து நீச்ச தண்ணி
வாங்கி வருவதாகச்சொன்னார்
இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:
·
ஒரு வேப்பமரத்தின் இருந்த நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான்.
·
அந்த
இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று உறிஞ்சிக் குடித்தான்.
·
உறிஞ்சியபோது அவளுக்குக் கண்கள்
சொருகின.
·
அவனுள்ஜீவ ஊற்று பொங்கி, நிறைந்து வழிந்தது
அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:
இளைஞன்
எழுந்தவுடன்,” எங்கிருந்து
வருகிறீர்கள்?, எங்கே செல்லவேண்டும்?” என்று
அன்னமய்யா கேட்டார். அதற்கு அந்த இளைஞன்” மிக நீண்ட தொலைவில்
இருந்து வருகிறேன்” என்று கூறிவிட்டு,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு”
அன்னமய்யா” என்றார். அவ்வாலிபன் மனதிற்குள்
பொருத்தமான பெயர்தான் என எண்ணிக்கொண்டான்.
முடிவுரை:
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா
அன்னமிடுபவனாகவும், தன்னிடம் இருப்பதை கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான்.
4.
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே'
என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து
பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்
சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
முன்னுரை:
கல்வி என்றால் என்னவென்றே தெரியாத ஓர் இருண்ட சமூகத்தில் ஒற்றைச் சுடராகத்
தோன்றி,எண்ணற்ற சுடர்களை ஏற்றியவர் தான் மேரி.
அவரைப் பற்றி இங்கு காண்போம்.
மேரியின் குடும்பச்சூழல்:
·
மேரியின் குடும்பத்தினருக்கு
பகல் முழுவதும் பருத்திக் காட்டில் வேலைகள்.
·
பருத்திக் காட்டில்
இருந்து பகலில் அம்மா பாட்சி மட்டும் உணவு சமைப்பதற்காக வீட்டுக்குத்
திரும்புவாள்.
·
உணவு தயாரானதும்
குழந்தைகளை உணவு உண்ணக் கூப்பிடுவாள்.
மேரிக்கு நடந்த துன்பம்:
· மேரி ஒருநாள் தன் அம்மாவுடன், கூறு மாளிகைக்குச் செல்கிறாள்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது. அங்கே, ஒரு புத்தகம் அவளது கண்ணில் படுகிறது.
· அந்தப் புத்தகத்தை கையில் எடுத்து அதைப்
புரட்டத்தொடங்குகிறாள்.
·
அதைப் பார்த்துக்
கொண்டிருந்த சிறுமிகள்,” நீ
அதைத் தொடக்கூடாது, உன்னால் படிக்க முடியாது” என்று மேரியின் உள்ளம் வருந்தும் வகையில் பேசினர்.
தூண்டுகோல்- மிஸ்வில்சன் :
· ஒரு நாள் மிஸ் வில்சன் என்பவர் மேரி படிப்பதற்குத்
தான் உதவி செய்வதாக கூறினார்.
· மேரி செய்வதறியாது திகைத்து நின்றாள்.
· தான் ஒரு புதிய பெண்ணாக ஆகிவிட்டதாக உணர்ந்தாள்.
· குடும்பத்திலிருந்து முதல் பெண் படிக்கப்
போகிறாள். புதிய நம்பிக்கை பிறந்தது.
முடிவுரை:
மனதில் ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால்,
எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மேரியின் கதை ஒரு சிறந்த சான்றாகும்.உலகில்
சிலர் வரலாறாகவே இருக்கிறார்கள். இவர்கள் பாதையே இல்லாத இடத்தில்
தங்கள் காலடிகளால் ஒற்றையடிப்பாதை இட்டு அதையே பெரும்
சாலையாக உருவாக்குகிறார்கள்.
5.
பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி
எழுதுக.
முன்னுரை:
ஒரு கலைஞன் தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகின்ற போது அவன் கொள்கின்ற மகிழ்ச்சி அளப்பரியது. அவ்வாறு நிகழ்ந்த
ஒரு கதையை இங்கு காண்போம்.
அனுமார்:
· நாகசுரமும், மேளமும்
ஒன்றாக இணைந்து ஒலித்தன.
· சத்தம் கேட்ட அழகு குனிந்து பார்த்தான்.
· ஆளுயர குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து இறங்குவதைக் கண்டான்.
அனுமாரின் நெருப்பாட்டம்:
· திடீரென்று மேளமும்,நாகசுரமும் வேகமாக
ஒலிக்கத் தொடங்கின
· பெருங்குரல் எழுப்பியபடி அனுமார் பந்தல் கால்
வழியாகக் கீழே குதித்தார்.
· அனுமார் வாலில் பெரிய தீப்பந்தம் புகை விட்டு எரிந்து
கொண்டிருந்தது.
அழகுவின் உதவி:
· சிறிது நேரம் கழித்து தீ எரிவது மெல்ல மெல்லத் தணிந்தது.
· கீழே புரண்ட வாழை இவனைப் போன்ற இரண்டு பேர் தூக்கி வந்தார்கள்.
· அழகு அவர்கள் அருகில் சென்றான். அவர்கள் அந்த வாலை அழகுவிடம் ஒப்படைத்து
விட்டுச் சென்றனர்.
· அனுமார் சென்ற இடத்திற்கெல்லாம் அழகு வாலைத்
தூக்கிக் கொண்டு சென்றான்.சற்று நேரம் கழித்து ஆட்டம் முடிந்தது
அழகுவின் ஆட்டம்:
· அனுமாரின் அணிகலன்களை அணிந்து கொண்டு அனுமார் போல ஆடினான் அழகு.
· களைப்பில் இருந்த அனுமார் பார்த்தார்.
· அழகு உடனே ஆட்டத்தை நிறுத்திக் கொண்டான்.
· ஆனால் அனுமார் “பரவாயில்லை கட்டிக்கிட்டு ஆடு என்றார்”.
அவனும் நன்றாக ஆடினான்.
அனுமார் அடைந்த மகிழ்ச்சி:
·
அனுமார் அழகுக்கு ஆட்டத்தை
சொல்லிக்கொடுத்தார்.
·
அவனும் அதே போல ஆடினான்.
·
அனுமார் மிக்க மகிழ்ச்சியடைந்தார்
முடிவுரை:
“என்னலே, எனக்கே பாச்சா காட்டுற?பிடியில் சிக்காமல் நழுவுற” என்று கூறிக் கொண்டு
இருக்கும்போது அனுமாரின் கால்கள் பின்னிக் கொண்டன.
அழகு அனுமார் விழுந்ததைக் கவனிக்காமல் தன் ஆட்டத்தில்
மூழ்கிய வனாக, உற்சாகம் பொங்க வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தான்.
6.
எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால சரஸ்வதி. ராஜம்
கிருஷ்ணன். கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்,சின்னப்பிள்ளை
ஆகியோர் சமூகத்திற்கு
ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.
முன்னுரை:
சில பெண்கள் முயற்சி ஒன்றை மட்டுமே மூலதனமாகக்
கொண்டு சமுதாயத்தில் பல சாதனைகளைப் சிலரைப் பற்றி இங்கு காண்போம். புரிந்துள்ளனர்.
அவர்களில் ஒரு சிலரைப்பற்றி
இங்கு காண்போம்
எம்.எஸ்.சுப்புலட்சுமி:
·
இசைச் சூழலில் வளர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி
இசைமேதை ஆனார்.
·
17 வயதில்
கச்சேரியில் பாடி பலரின் பாராட்டைப் பெற்றார்.
·
1954 இல்
இவருக்கு "தாமரையணி” விருதும்,1974 இல் மகசேசே விருதும், இந்திய மாமணி விருதும்
கிடைத்தது.
பாலசரசுவதி:
·
இவர் பரதநாட்டியத்தில் சிறப்பு
பெற்றவர்.
·
இவர் 15 வயதில் சென்னையில் தனது
நடன நிகழ்ச்சியை நடத்தினார்.
·
நம் நாட்டுப் பண்ணாகிய
"ஜன கன மன" பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார்.
இராஜம் கிருஷ்ணன்:
·
சிக்கல்களைப் பற்றி கதைகளாகவும், புத்தகங்களாகவும் எழுதக்
கூடியவர் இவர்.
·
இவர் "பாஞ்சாலி
சபதம் பாடிய பாரதி" என்னும் வரலாற்றுப் புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டார்.
·
கரிப்பு மணிகள் , குறிஞ்சித்தேன் ,வேருக்கு நீர் எனும் ஆகியவை இவரது முக்கியப்படைப்புகள்
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்:
·
காந்தி நடத்திய பல இயக்கங்களில் பங்கு பெற்றவர்.
·
"உழுபவருக்கே நில
உரிமை இயக்கம்" என்ற அமைப்பின் மூலம், வேளாண்மை
இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார்.
மதுரை சின்னப்பிள்ளை:
·
இவர் மகளிரின் வாழ்வு மேம்பாட்டுக்காகப்
பாடுபட்டார்.
·
எல்லா பெண்களும் இணைந்து
வேலை செய்து கூலியை எல்லோருக்கும் சரிசமமாகப் பங்கிட்டவர்.
·
நம் நாட்டு நடுவண் அரசின்
"பெண் ஆற்றல்" விருதையும்,தமிழக
அரசின் "அவ்வை”விருதையும்,
பெற்றவர்.
முடிவுரை:
”இந்திய சமுதாயத்தில் பல பெண்கள் தங்களது முயற்சியையும் திறமையையும் கொண்டு
சாதித்துள்ளனர்” என்பதற்கு இவர்களே சான்றுகளாகத்
திகழ்கின்றனர்.
7.
கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த
நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.
இராமானுசர் நாடகம்
முன்னுரை
நம் தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர்களே ஞானிகள்.
அத்தகைய ஞானிகளுள் ஒருவர் இராமானுசர், அவரைப்
பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தண்டும் கொடியுமாக:
·
இராமானுசர், கூரேசர், முதலியாண்டான் ஆகிய மூவரும் பூரணர் இவ்வத்திற்கு வந்தனர்.
·
அவர்களைக் கண்ட பூரணர்
கோபம் கொண்டார்.
·
அதற்கு இராமானுசர், "தாங்கள் கூறிய தண்டு
கொடிக்கு இணையானவர்கள் இவர்கள்.
·
எனவே கோபம் கொள்ளாது
பரிவு கொண்டு திருவருள் புரிய வேண்டும்" என்று கூறினார்,
ஆசிரியரின் கட்டளை:
·
பூரணர் மூவரையும் வீட்டிற்குள்
அழைத்து மிகுந்த நிபந்தனையுடன் மந்திரத்தைக் கூறினார்.
·
பூரணர் கூறிய திருமந்திரத்தை
மூலரும் மூன்று முறை உரக்கச் சொன்னார்கள்.
திருமந்திரத்தை மக்களுக்கு உரைத்தல்:
·
இராமானுசர் மக்கள் அனைவருக்கும்
அம்மந்திரத்தைக் கூறினார்
·
அவர் சொல்லச் சொல்ல
அனைவரும் உரத்தக் குரலில் மூன்று முறை கூறினார்கள்.
குருவின் சொல்லை மீறுதல்:
·
குருவின் சொல்லை
மீறியதற்காக பூரணர் கோபம்
கொண்டார்
·
பூரணரிடம் "திருவருளின் பயன் அனைவருக்கும்
கிட்டவேண்டும்.
·
அவர்கள் பிறவிப்பிணி
நீங்கி பெரும் பேறு பெறுவர் என்று
விளக்கமளித்தார்.
குருவின் ஆசி:
இராமானுசரின் பரந்த மனத்தைக் கண்ட குரு பூரணர், அவரை மன்னித்து அருளினார்
மேலும் இறைவனின் ஆசி பெற அவரை வாழ்த்தினார்.
முடிவுரை
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற உயரிய
மந்திரத்தை வாழ்வாக்கியவர் இராமானுசர், தனக்கென வாழாது
பிறருக்காக நரகமும் செல்ல முன்வந்த பெருமகளார்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி