8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JUNE WEEK-1

        8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு

நாள்        : 02-06-2025 முதல் 06-06-2025         

மாதம்         ஜூன்

வாரம்     :  முதல் வாரம்                                 

 வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                   

 பாடத்தலைப்பு     :  1. தமிழ்மொழி வாழ்த்து  2. ஆழிக்கு இணை

1. கற்றல் நோக்கங்கள்   :

       @ செய்யுளைப் படித்து அதன் நயங்களைப் போற்றும் திறன் பெறுதல்

        @ மொழி தனித்தும் தொடர்ந்தும் பொ ருள்தரும் நுட்பத்தை அறிந்து பயன்படுத்துதல். 

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

தமிழ்மொழி வாழ்த்து 


ஆழிக்கு இணை

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

  • மொழி கருத்தை அறிவிக்கும் கருவி மட்டுமன்று; அது மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது; உணர்வுடன் கலந்தது.
  • சிலேடை என்பதன் பொருள் உணர்த்தி பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

  • பாரதியார், ”தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!” , “ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ் மொழி வாழ்க!” என்று தமிழ் மொழியை வாழ்த்துகிறார்.

  • கடலும் ,தமிழும் இணையானவை

5.ஆசிரியர் செயல்பாடு :

  @   செய்யுள் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்.

@ பாடப்பொருளை நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

தமிழ்மொழி வாழ்த்து


இரட்டுற மொழிதல்


7.மாணவர் செயல்பாடு:

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் மற்றும் உரைநடைப் பகுதியைப் பிரித்து சொற்களின் பொருள் விளங்குமாறு   படித்தல்.
  • தமிழ்மொழியின் பெருமைகளை உணர்தல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

  • தமிழ்மொழி வாழ்த்தை இயற்றிவர் யார்?

  • பாரதியாரின் இயற்பெயர் என்ன?


இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

  • இரட்டுறமொழிதல் என்றால் என்ன?

  • தமிழ்மொழி மரபு பாடல் எந்நூலில் உள்ளது?


உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

      # தமிழும், ஆழியும் எவ்வாறு ஒன்றாகும்? விளக்குக

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

       @ 804நமது சுற்றுப்புறத்தில் வழங்குகின்ற நாட்டுப்புறப்பாடல்கள்நாட்டுப்புறக் கதைகள்  ஆகியவற்றைப் பற்றிப் பேசுதல்

     

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை