8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 02-06-2025 முதல் 06-06-2025
மாதம் : ஜூன்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. தமிழ்மொழி வாழ்த்து 2. ஆழிக்கு இணை
1. கற்றல் நோக்கங்கள் :
@ செய்யுளைப் படித்து அதன் நயங்களைப் போற்றும் திறன் பெறுதல்
@ மொழி தனித்தும் தொடர்ந்தும் பொ ருள்தரும் நுட்பத்தை அறிந்து பயன்படுத்துதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
தமிழ்மொழி வாழ்த்து
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
- மொழி கருத்தை அறிவிக்கும் கருவி மட்டுமன்று; அது மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது; உணர்வுடன் கலந்தது.
- சிலேடை என்பதன் பொருள் உணர்த்தி பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
பாரதியார், ”தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!” , “ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ் மொழி வாழ்க!” என்று தமிழ் மொழியை வாழ்த்துகிறார்.
கடலும் ,தமிழும் இணையானவை
5.ஆசிரியர் செயல்பாடு :
@ செய்யுள் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்.
@ பாடப்பொருளை நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
- ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் மற்றும் உரைநடைப் பகுதியைப் பிரித்து சொற்களின் பொருள் விளங்குமாறு படித்தல்.
- தமிழ்மொழியின் பெருமைகளை உணர்தல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
தமிழ்மொழி வாழ்த்தை இயற்றிவர் யார்?
பாரதியாரின் இயற்பெயர் என்ன?
இரட்டுறமொழிதல் என்றால் என்ன?
தமிழ்மொழி மரபு பாடல் எந்நூலில் உள்ளது?
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 804- நமது சுற்றுப்புறத்தில் வழங்குகின்ற நாட்டுப்புறப்பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றைப் பற்றிப் பேசுதல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி