10 TH STD TAMIL SLOW LEARNERS STUDY MATERIAL UNIT-3 2025-2026

 

10.ஆம் வகுப்பு தமிழ்

மெல்லக் கற்போர் வினா விடைகள் (2025-2026)

இயல்-3

திறன் அறிவோம்

பலவுள் தெரிக.

1. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.        

2. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது

அ) சுட்டி  ஆ) கிண்கிணி இ) குழை   ஈ) சூழி

3. காசிக்காண்டம் என்பது

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்  ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்  ஈ) கரசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

4. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-

அ) நிலத்திற்கேற்ற விருந்து  ஆ) இன்மையிலும் விருந்து

இ) அல்லிலும் விருந்து  ஈ) உற்றாரின் விருந்து.

5. நன்மொழி என்பது

அ) பண்புத்தொகை  ஆ) உவமைத்தொகை  இ) அன்மொழித்தொகை  (ஈ) உம்மைத்தொகை

குறுவினா

1. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

விடை: வாருங்கள், நலமா?, நீர் அருந்துங்கள்

2. தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த கினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

விடை: இல்லை,  நன்றாக உபசரிக்க வேண்டும்

3. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

விடை:  சிலம்பு , கிண்கிணி, அரைவடம், சுட்டி, குண்டலம்.

4. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள். விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். - அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.

விடை: கல்வி செல்வம் , விருந்து ஈகை

5. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.

விடை:

ü  தண்ணீர் குடிதண்ணீரைக்குடி -இரண்டாம் வேற்றுமைத்தொகை

ü  தயிர்க்குடம்தயிரை உடைய குடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

சிறுவினா

1. 'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.

விடை:

ü  வறுமையிலும் விருந்தளித்தனர்.

ü  விதை நெல் விருந்தளித்தனர்.

ü  வாளை வைத்து விருந்தளித்தனர்.

2, வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய

நயத்தை விளக்குக.

விடை:

ü  சிலம்புகள் ஆடட்டும்.

ü  அரைவடங்கள் ஆடட்டும்.

ü  வயிறு ஆடட்டும்.

ü  நெற்றிச்சுட்டி ஆடட்டும்.

3. 'தனித்து உண்ணாமை' என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.

விடை:

ü  கொடுத்து உண்ணும் வழக்கமே குறைந்து விட்டது.

ü  நெருங்கிய உறவினர்களே விருந்தினர் என்றனர்

ü  தமிழர் இன்று கதவு மோடி உண்னுகின்றனர்.

4. மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.சிலர்மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த விட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தன் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே விடு சென்றேன்.

பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.

விடை:

1.     மார்கழித் திங்கள்இருபெயரொட்டுப் பண்புத்தொகை

2.    செங்காந்தள் மலர்கள் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

3.    செங்காந்தள்பண்புத்தொகை

4.    வீடு சென்றேன் - வேற்றுமைத்தொகை

நெடுவினா

1. சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.

குறிப்புச்சட்டகம்

·        முன்னுரை

·        தமிழர் விருந்தோம்பல்  

·        முடிவுரை

விடை:

தமிழர்களின் விருந்தோம்பல்

முன்னுரை:

            சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் இங்கே காண்போம்.

தமிழர் விருந்தோம்பல்                                                                             

தனித்து உண்ணாமை

·        விருந்தோம்பலுக்கு நேரம்,காலம் இல்லை

·        வறுமையிலும் விருந்தோம்பல் செய்தனர்

·        நிலத்திற்கேற்ற விருந்து அளித்தனர்

·        விருந்தை எதிர்கொள்ளும் தன்மை உடையவர்கள்

முடிவுரை:

சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் இங்கே கண்டோம்.

2. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்வபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

குறிப்புச்சட்டகம்

·        முன்னுரை

·        அன்னமய்யா பெயர் பொருத்தம்  

·        முடிவுரை

முன்னுரை:

அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்வபுரத்து மக்கள் கதைப்பகுதி மூலம் காண்போம்

அன்னமய்யா பெயர் பொருத்தம்  

v அன்னமய்யாவும், இளைஞனும் சந்தித்தனர்              

v  அன்னமய்யா இளைஞனின் பசியைப் போக்கினார்                

v  அன்னமய்யா மனநிறைவு அடைந்தார்

v  அன்னமய்யாவின் பெயர் பொருத்தம் உடையது

முடிவுரை:

அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்வபுரத்து மக்கள் கதைப்பகுதி மூலம் கண்டோம்

3. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

குறிப்புச்சட்டகம்

·        முன்னுரை

·        நான் செய்த விருந்தோம்பல்  

·        முடிவுரை

முன்னுரை:

          எங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நான் செய்த விருந்தோம்பலை அழகுற காண்போம்

நான் செய்த விருந்தோம்பல் :

v  விருந்தினரை வரவேற்றேன்

v  கலந்துரையாடினேன்

v  விருந்து உபசரிப்பு செய்தேன்

v  நகர்வலம் சென்றோம்           

v  இரவு விருந்துஅளித்தேன்

v  பிரியா விடை அளித்தேன்

முடிவுரை:

எங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நான் செய்த விருந்தோம்பலை அழகுற கண்டோம்.

கற்பவை கற்றபின்:

(பக்க எண்: 51)

நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக ஒரு பத்தியளவில் எழுதிப் படித்துக் காட்டுக.

விடை:  முந்தைய நெடுவினாவுக்கான விடையையே இதற்கும் எழுதலாம்

பழமொழியை நிறைவு செய்க:-                                 

1

உப்பில்லாப்

பண்டம் குப்பையிலே

2.

ஒரு பானை

சோற்றுக்கு ஒரு சோறு பதம்

3

உப்பிட்டவரை

உள்ளளவும் நினை

4

விருந்தும்

மருந்தும் மூன்று வேளை

5

அளவுக்கு

மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

 

கடிதம் எழுதுக

உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.

முறையீட்டுக் கடிதம்

அனுப்புநர்

        அ அ அ

        12,கம்பர் தெரு,

         இ இ இ

பெறுநர்

         உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,

         ஆ ஆ ஆ.

ஐயா,

    பொருள்: உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக.

             வணக்கம். அரக்கோணத்தில் உள்ள அறுசுவை உணவகத்தில் உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது அந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                                 இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள

                                                                                                                           அ அ

இடம்: ஆ ஆ ஆ

நாள்: 08-06-2025.

உறைமேல் முகவரி:

         உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,

         ஆ ஆ ஆ.

மொழியோடு விளையாடு

விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க:-

வினா

குறிப்பு

விடுபட்ட எழுத்து

நூலின் பெயர்

____கு

பறவையிடம் இருப்பது

 

 

 

திருக்குறள்

கு____தி

சிவப்பு நிறத்தில் இருக்கும்

ரு

வா____

மன்னரிடம் இருப்பது

ள்

____கா

தங்கைக்கு மூத்தவள்

க்

_____

அறிவின் மறுபெயர்

தி

பட_____

நீரில் செல்வது

கு

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-                                                       

1

சிலை - சீலை

சிலைக்கு சீலை கட்டினர்

2.

தொடு - தோடு

தோட்டினைத் தொட்டான்

3

மடு - மாடு

மடுவின்மேல் மாடு நின்றது

4

மலை - மாலை

மாலையில் மலைக்குச் சென்றான்

5

வளி - வாளி

வளியை வாளியால் அள்ள முடியாது

6

விடு - வீடு

பள்ளி விட்டதும் வீட்டிற்குச் சென்றான்

கலைச்சொற்கள்

1.     Hospitality - விருந்தோம்பல்

2.    Wealth - செல்வம்

3.    Baby shower - வளைகாப்பு

4.    House warming - புதுமனைபுகுவிழா

5.  Feast-விருந்து

குறுவினா

1. 'நச்சப் படாதவன்' செல்வம் இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

விடை: ஒருவராலும் விரும்பப் படாதவன்

2. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.

விடை:  நடுவு நிலைமையோடு இரக்கம் காட்ட வேண்டும்

3. பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

v  உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்- உயிரினும் ஓம்பப் படும்

v  ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை - ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்.

v  ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது - நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று.

4. செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கின்றார்?

விடை: முயற்சி , முயற்சி இன்மை

சிறுவினா

1. வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

   கோலொடு நின்றான் இரவு     - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

ü  இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

உவமை அணி:

உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன வெளிப்படையாக வரும்.

அணிப்பொருத்தம்:

v  உவமைவழிப்பறி செய்பவன்.

v  உவமேயம்வரிவிதிக்கும் மன்னன்

v  உவம உருபுபோலும்

2. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக

v  ஒழுக்கம் உயிரை விடச் சிறந்தது.

v  ஒழுக்கம் உள்ளவர் உயர்வு அடைவர்

v  உலகத்தோடு இணைந்து வாழாதவர் அறிவு இல்லாதவரே


 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை