7 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -JANUARY 4 TH WEEK

  7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 20-01-2025 முதல் 25-01-2025       

மாதம்        ஜனவரி    

வாரம்     :   நான்காம் வாரம்                                                   

வகுப்பு  :   ஏழாம் வகுப்பு          

 பாடம்    :   தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   திருநெல்வேலிச் சீமையும்,கவிகளும்

1.கற்றல் நோக்கங்கள்   :

   @ திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் அறிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø நீங்கள் திருநெல்வேலிக்குச் சென்றுள்ளீர்களா? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • உரைநடைப்பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :


திருநெல்வேலிச் சீமையும்,கவிகளும்

6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • வானத்தில் விளைந்த சுடர்கள்போல இயற்கையில் விளைந்த கவிகளைத்தான் கவிகள் என்று சொல்ல வேண்டும். மின்மினிப் பூச்சியையும் ‘காக்காப்’ பொன்னையும் பார்த்து ஏமாந்து போகக் கூடாது. திருநெல்வேலி மாவட்டம் நெடுகிலும் உண்மையான கவிஞர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களுடைய பாடல்களை யும் மக்கள் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.

  • அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் மகாகவி பாரதியார், கவிமணி, கடிகைமுத்துப் புலவர், சொக்கநாதப்புலவர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், முத்தொள்ளாயிரம் ஆசிரிய,ர் சீதக்காதி ஆகியோர் ஆவர்

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

2.நெல்லையப்பர் கோவில் எங்குள்ளது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

2.நெல்லையில் புகழ்பெற்ற சில கவிஞர்களைப் பட்டியலிடுக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.திருநெல்வேலிக் கவிஞர்கள் சிலரைப்பற்றிக் குறிப்பு வரைக.

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

திருநெல்வேலிக் கவிஞர்கள் சிலரைக் குறித்து விவரித்து எழுதுக.

12.கற்றல் விளைவு:

   Ø 704- தாங்கள் படித்தவற்றைப் பற்றிச்  சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல்,  கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின்  மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை