10.ஆம் வகுப்பு – தமிழ்
நிற்க அதற்குத் தக ( 5 மதிப்பெண்கள்)
இயல் - 1.
இன்சொல் வழி | தீய சொல் வழி |
பிறர் மனம் மகிழும் அறம் வளரும் புகழ் பெருகும் நல்ல நண்பர்கள் சேருவர் அன்பு நிறையும் | பிறர் மனம் வாடும் அறம் தேயும் இகழ் பெருகும் நல்ல நண்பர்கள் விலகுவர் பகைமை நிறையும் |
இதில் நீங்கள் செல்லும் வழி யாது? உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
1. நான் செல்லும் வழி இன்சொல் வழி. 2. என் நண்பர்களை இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன். 3. தீய செயலில் ஈடுபட விடமாட்டேன் 4. பிறர் மனம் மகிழும்படி நடப்பேன் 5. பிறருக்கு நன்மை செய்வேன் |
இயல் – 2
வானொலி அறிவிப்பு....
ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
மேற்கண்ட அறிவ்ப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்துக.
1. தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன். 2. குடிநீரைச் சேமித்துக் வைத்துக்கொள்வேன். 3. உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன். 4. நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவேன். 5. வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன். |
இயல் – 3
மருத்துவர் கு.சிவராமனின் கருத்திற்கு சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?
1. நாகரிகம் கருதி நம் பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்தல் கூடாது. 2. நம் நாட்டிற்கு புழுங்கல் அரிசியே ஏற்றது. 3. பாரம்பரிய உணவுகளைத் தினமும் உட்கொள்ள வேண்டும். 4. பாரம்பரிய உணவு மிகுந்த சக்தியைக் கொடுக்கும். 5. பாரம்பரிய உணவுப்பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். |
இயல் – 4
தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை; காணொளி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன். எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட நீங்கள் செய்யும் முயற்சிகளை பட்டியலிடுக.
1.குழு விளையாட்டுகள் விளையாடுதல். 2.உலக நிகழ்வுகளைப் பற்றி கலந்துரையாடுதல். 3.விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல். 4நூல்களைப் படித்தல். 5..திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டை குறைக்கச் செய்தல். |
இயல் – 5
பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.
பள்ளியில் நான் | வீட்டில் நான் |
1. நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன் | 1. அதிகாலையில் எழுதல். |
2. ஆசிரியர் சொல்படி நடப்பேன்.. | 2. பெற்றோர் சொல்படி நடப்பேன். |
3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன். | 3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன். |
4. நண்பர்களுடன் கலந்து உரையாடுவேன். .. | 4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன். |
5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.
| 5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன் |
இயல் – 6
தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். அவர் எழுதியது தமிழின் சுவையை; அவர் எண்ணியது தமிழரின் உயர்வை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை! நீங்கள் படித்து முடித்த பின் உங்கள் துறையின் அறிவைக்கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக.
விடை:
1. என் துறையில் வல்லுநரானபின், அத்துறையினைப் பற்றிய நூல்களைத் தமிழாக்கம் செய்வேன்.
2. என் துறையில் இருக்கும் கலைச்சொற்களைத் தமிழில் மாற்றி மக்களின் பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவேன்.
3. அனைத்து விளம்பரப்பலகைகளையும் தமிழில் மாற்றச்செய்வேன்
4. நிகழ்கலைகளைப் பாதுகாக்க என்னால் இயன்ற எல்லா முயற்சிகளையும் செய்வேன்
5. முத்தமிழையும் கற்பிக்க தனித்துவமான பள்ளிகளைத் துவங்குவேன்
இயல் – 7
கல்வெட்டுகள் நம் வரலாற்றைப் புலப்படுத்துபவை. இவற்றைப் பராமரிக்கவும்,பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்களை பட்டியலிடுக.
1. கல்வெட்டுகளின் வழி அறியலாகும் செய்திகளை அனிவருக்கும் கூறுதல். 2. கல்வெட்டுகளின் மதிப்பை குறைக்கும்படி எதுவும் கூற, அனுமதிக்காமை. 3. கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம் அடையச் செய்தல். 4. கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல். 5. கல்வெட்டு மன்னர்களைப் பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம், என்பதை உணர்த்துதல். |
இயல் – 8
மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.
1. புறம் பேசாதிருத்தல் | 1. தேவையற்ற சண்டைகள் நீங்கும் |
2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல் | 2. மன அமைதிப் பெறலாம். |
3. உண்மை பேசுதல் | 3. நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம் |
4. உதவி செய்தல் | 4. மன மகிழ்ச்சி கிடைக்கும் |
5. அன்பாய் இருத்தல் | 5. அனைவரும் நண்பராகிவிடுவர் |
இயல் – 9
நீங்கள் செய்த,பார்த்த உதவிகளால் எய்திய மனநிலையைப் பட்டியலிடுக.
1. வகுப்பறையில் எழுதுகோல் கொடுத்து உதவியபோது | 1. இக்கட்டான சூழலில் செய்த உதவியால் எனக்கு மனநிறைவு, அவருக்கு மகிழ்ச்சி |
2. உறவினருக்கு என் அம்மா பணம் கொடுத்து உதவியபோது | 2. கல்லூரி படிப்பை தொடர முடிந்ததால் உறவினருக்கு ஏற்பட்ட நன்றியுணர்வு. |
3. முதியவருக்கு, பயணச்சீட்டு எடுத்து கொடுத்தேன் | 3. அவரது முகத்தில் காணப்பட்ட, மனநிறைவும், மனஅமைதியும் மகிழ்ச்சியும், என்னை மகிழச் செய்தது. |
4. ஒருவேளை உணவு வழங்கியபோது | 4. பசிப்பிணி தீர்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது |
5. மயங்கி விழுந்த முதியவருக்கு தண்ணீர் கொடுத்து உதவினேன். | 5. என்னாலும், உதவி செய்ய முடியும் என்ற உணர்வு எழுந்தது |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி